Saturday 31 December 2011

இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்!


அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள் என்ற எனது இணையதள ஆக்கத்தை யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிரசுருத்திருந்தது. உண்மையில் இந்த இணையதளம் யாரால் நடாத்தப்படுகின்றது என்று எனக்கும் தெரியாது. ஆனால் அவரகள் இதனை பிரசுரித்தன் மூலம் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக இன்று என்க்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிறகே இந்த இணைய பக்கத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிரசுரித்துள்ள கருத்தையும், இஸ்ரேல் தொடர்பாக நான் எழுதியுள்ள கருத்தை ஜீரணிக்க முடியாமல் குழம்பிப் போயுள்ள நளீமி ஒருவரின் கருத்தையும் இந்த தளம் பிரசுரித்திருக்கின்றது.


கர்ளாவியாலும் ஹிலாரி கிளின்டனாலும் கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட கதாபியின் நிதியுதவியினால் நிர்மானிக்கப்பட்ட நளீமியா கேட்போர் கூடம்

அகன்ற இஸ்ரேல் தொடர்பாக நான் முன் வைத்திருக்கும் கருத்து பிழையானது என்றால் அதனை சுட்டிக்காட்டும் உரிமை இந்த நளீமிக்கு இருக்கிறது. அவா் சரியான நடுநிலையான ஒருவராக இருந்தால் எனது பத்ர்கள ஆக்கத்தைப்பார்த்து விட்டு தனது எதிர்ப்பை நேரடியாக எனக்குத் தெரிவித்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை.

இன்றைய உலக ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும் விரித்துள்ள சதி வலையையும், உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கும் சவால்களையும். இந்த சதி வலையில் வீழ்ந்துள்ள இவர்களால் மகா மேதைகள் என்று போற்றப்படுகின்ற கர்ளாவி பற்றியும் நான் எழுதியுள்ளேன்.  கர்ளாவிக்கும் கத்தாருக்கும் உள்ள உறவையும், கத்தாருக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள உறவையும் நான் தோலுரித்துக் காட்டினேன்.

இஸ்ரேலை நேசிக்கும் கத்தாரும், கத்தாரை நேசிக்கும் கர்ளாவியும், கர்ளாவியை நேசிக்கும் இவர்களும் ஓரணியில்தான் நிற்கின்றார்கள். 


இஸ்ரேல் பற்றி எழுதும் போதும், இஸ்ரேலினதும், அரபுகளினதும் பாதுகாவலன் அமெரிக்கா பற்றி எழுதும் போதும் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆடிப்போகிறார்கள்.
                                                             
                                                              பேசும் படங்கள் 

- கத்தாருக்கும் கர்ளாவிக்கும் உள்ளநட்பு


கத்தாருக்கும் இஸ்ரேல் தலைவர்களுக்கும் உள்ள நட்பு

எனது கருத்து தவறானதாக இருந்தால் அதற்கு ஆதாரத்தோடு மறுக்கின்ற உரிமை இந்த நளீமிக்கு இருக்கிறது. மாறாக கர்ளாவியை ஏற்றுக்கொள்வது ஈமானின் ஒர் அம்சம் என்ற நிலையில் இன்று இவர்கள் கர்ளாவிக்கு எதிராக கதைத்தால் பதற்றப்பட்டு போகிறார்கள்.

இவர்களின்செயற்பாட்டைப் பார்க்கும் போது கர்ளாவியை என்னவோ கடைசி நபியாக ஏற்றுக்கொண்டவர்கள் போல்தான் தெரிகிறது.  தவறுகள் பிழைகள் செய்யாமல் இருப்பதற்கு கர்ளாவி என்ன கடைசி நபியா?இவர் என்ன அல்லாஹ்விடமிருந்து ஒளியாக வழிகாட்ட வஹீயை பெறுகின்றாரா?

முன்மாதிரியாய் பின்பற்றுவதற்கு கர்ளாவி என்ன அல்லாஹ்வால் உலகிற்கு அருளப்பட்ட அருட்கொடையா?

பாவங்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடை அல்லாஹ்வின் இறுதித் துாதர் றசூலுல்லாஹ் (ஸல்)  அவர்களுக்கு இணையாக வைத்து அல்லவா இவர்கள் இந்த கர்ளாவியை பார்க்கின்றார்கள்?


கர்ளாவி ஐ நா படை சிரியாவிற்குள் வர வேண்டுமென்று கோரிக்கை விட்டதை நான் விமர்சித்திருக்கிறேன். இதை கர்ளாவியின் பாஷையில் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் உதவியை விட்டு விட்டு ஐநா போன்ற தாகூத்களின் தயவை இவர் நாடியிருக்கிறார். நீதி நியாயம் வேண்டி தாகூத்களிடம் சரணாகதியடைந்த கர்ளாவியின் அறிவு நிலையை கடைந்தெடுத்த முட்டாள் தனம் என்றே குறிக்க முடியும்.

கதாபியை சுட்டுக்கொல்லுங்கள் என்று பத்வா விட்டதை நான் எதிர்த்திருக்கிறேன். இதே பத்வாவை அவர் அமெரிக்காவின் நண்பர்களான ஹுஸ்னி முபாரக்கிற்கும், பின் அலீக்கும் ஏன் வழங்கவில்லை என நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். இந்த பத்வாவின் பின்னணியில் உள்ள அமெரிக்க அரசியல் நலனை நான் விளக்கியிருக்கின்றேன்.  சகோதரரே! கர்ளாவியை விடுங்கள் இதற்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன?  கர்ளாவி சொல்வது சரியா? கதாபிக்கு மட்டும் என் இந்த பத்வாவை வெளியிட்டார்?

கதாபி கொலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்ளாவியோடு சேர்ந்து அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்டனும் முன்வைத்தார். கதாபியை கொலை செய்வதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் லிபியாவிற்கு விஜயம் செய்த கிளின்டன் வெகுவிரைவில் கதாபி கொலை செய்யப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

கிளின்டனின் அரசியலில் ஒரு கைதியை கொலை செய்வது ஒரு பெரிய விவகாரமல்ல. வெள்ளை மாளிகையின் கொள்ளை அரசியல் அதற்கு இடம் கொடுக்கிறது.

 கர்ளாவினதும் ஹிலாரி கிளின்டனினதும் வேண்டுகோளின் பேரில் 
ஒரு கைதிக்கு கொலை தண்டனை நிறைவேற்றப்படுகிறது




ஆனால் இஸ்லாமிய ஷரீஆ இதற்கு இடம் கொடுக்கிறதா? ஆடு மாடுகளை அறுப்பது போல் ஒரு கைதியை கதறக் கதற தக்பீர் முழங்கி குதறி எடுப்பதை இந்தக் கர்ளாவியின் அமெரிக்க சார்பு 'கர்ளாவி இஸ்லாம்' அங்கீகரிக்கின்றது.
றசூலுல்லாஹ்வின் வழிமுறை இதனை வெறுக்கிறது. இந்தக் கொடூர செயல் ஷரீஆவிற்கு மட்டும் முரணானதல்ல, மனித பண்பாட்டுக்கும், நாகரீகத்திற்கும் எதிரானது.  மனித உரிமைக்கு எதிரானது. கர்ளாவி பக்தர்கள் இது விடயத்தில் மௌனம் காக்கின்றார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் சட்டம், றசூலுல்லாஹ்வின் வழிமுறை இதற்கு மாற்றமானது. ஒரு கைதி அவன் சரணடைந்தாலோ, பிடிபட்டாலோ அவனை பாதுகாக்கின்ற பொறுப்பு வெற்றியாளர்களுக்குச் சேர்கிறது. இதுதான் இஸ்லாத்தின் போதனை.   இந்தப் போதனையை நேட்டோ படையோடு சேர்ந்து நிராகித்த கர்ளாவிக்கும், கர்ளாவியின் பக்தர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதற்கு இனியும் இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவர்களின் கருத்துப்படி கதாபி ஒரு காபிராக இருந்தால் அவரிடம் உதவி பெற்று நளீமியாவில் கட்டப்பட்டிருக்கும் மாநாட்டு மண்டபத்தை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும். கர்ளாவியினதும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டனினதும் கருத்தப்படி கொலை செய்யப்படக் கூடிய ஒரு பாவியிடமிருந்தல்லவா அந்தக் கட்டிடத்திற்கு பண உதவி பெற்றிருக்கின்றீா்கள். கதாபியை உங்களைப் போன்ற கர்ளாவியின் பக்தர்களின் கொலை செய்வதற்கு சிறிது காலத்தின் முன் நளீமியாவின் மாநாட்டு மண்டபத்தை மறுசீரமைக்க நிதி உதவி வழங்கினாரே? அந்த உதவி கிடைக்கும் போது நளீமியாவின் ஆசான்களாக இருக்கும் கர்ளாவிக் குஞ்சுகள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார்கள்?

சகோதரரே, உங்கள் தேடலை கர்ளாவியோடு மட்டும் கட்டுப்படுத்திக்கொள்ளாமல், பூகோள அரசியலையும், அதன் நகர்வுகளையும் கொஞ்சம் தேடிப்படியுங்கள். இஸ்லாமிய இயக்கங்களின் வெற்றி தோல்வியில் இந்த பூகோள அரசியல் எப்படி பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது என்பதைப் பாருங்கள். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யாமல் இஸ்ரேலுக்கு எதிராக எழுதப்பட்ட ஆக்கத்தை அதாவது 'இந்த அகன்ற இஸ்ரேல் விவகாரம்'' த்தை பிரசுரித்ததன் மூலம் யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிட்டதாக கடிந்துக் கொண்டுள்ளீர்கள்.

இந்தக் கட்டுரை வெளிவந்ததன் பின்னர் உங்களைப் போன்று பலர் இப்படி குழம்பிப் போயிருப்பதாக நான் உணர்ந்தேன். அரபு நாடுகளில் போன்று எதிர்வரும் காலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா தொடர்பான எந்தவித கருத்தையும் உச்சரிக்க முடியாத ஒரு நிலை இலங்கையிலும் உருவாகலாம்.  உலக ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்ற அரபு அரசியலின் தாக்கம் இலங்கையில் வேர்விட்டிருக்கிறது. உங்கள் கருத்தும் இந்த அச்சுறுத்தலைத்தான் விடுக்கிறது.

இந்த நளீமி யாழ் முஸ்லிம் தளத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் அளவிற்கு எனது கட்டுரையில் என்ன இருந்தது என்பதை கூறவில்லை. நான் உலகப் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரை அமெரிக்காவின் ஏஜன்ட் என்று கூறியதுதான் கலங்கமாக இருந்தால். நான் முன்வைதிருக்கும் கருத்துக்கு, தர்க்கத்திற்கு அவர் பதிலளித்து தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் முழுப்பூசணிக்காயை சொற்றில் மறைக்கும் சொத்தை வாதத்தை முன் வைத்திருக்கினறார்.

இன்று நளீமிகளில் சிலர் இந்த அறிவுத்தரத்தில் தான் இருக்கின்றார்கள். இவர்களின் இந்த போக்கு தொடர்பாக எனது மனதிலுள்ளதை இங்கு பதிவது அவசியம் என நினைக்கிறேன்.

சமூகத்தில் அறிவியல் ரீதியிலான பாரிய மாற்றம் ஒன்றை வேண்டியே இந்த நளீமியா உருவாக்கப்பட்டது. நளீம் ஹாஜியாரின் நிய்யத்தும் அது ஒன்றாகவே இருந்தது.

நளீமிகள் நவீன சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும். சாரம் அணிந்துக்கொண்டிருந்த மௌலவிகளுக்கு காற்சட்டை அணிவிக்க வேண்டும் என்ற நோககத்தில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் நளீமியாவை உருவாக்கவில்லை.  

நவீன சிந்தனையாளர்களை உருவாக்கும் நோக்கில் உதயமான இந்த கலாபீடத்தில் இன்று என்ன நிகழ்கின்றது?

சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் கருத்துக்களை காவித்திரியும், சொல்லித்திரியும் செல்லக்கிளிகளாக இவர்கள் இன்று மாற்றம் பெற்று வருகின்றார்கள்.  இவர்கள் அறிஞர்களாக மாறாமல் குறிப்பிட்ட சில அறிஞர்களின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் பீரங்கிகளாக இருக்கின்றார்கள்.


இன்று நளீமிகள் சில எகிப்திய அறிஞர்கள் கருத்துக்களின் காவிகளாகவே இருக்கின்றார்கள். ஒரு காலத்தில் நளீமியாவில் இருந்த ஒரு சில மேல் வகுப்பு மாணவர்களால் நாங்களும் அப்படி வழி நடாத்தப்பட்டடோம். பெற்ற தாய் தந்தையரை காபிர்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்த எகிப்திய அறிஞர்களின் தாக்கத்தால் நாங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டோம்.


அன்றிருந்த நளீமியா நிர்வாகம் எங்களுக்கு தகுந்த பதிலை தந்து எங்களை இந்த மோசமான கருத்திலிருந்து நீக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. இன்றொ நளீமியாவின் நிலை வேறு உலக ஏகாதிபத்தியத்தினதும், அதைப்பாதுகாக்கின்ற அரபு அரசியலினதும் வாரிசுகள் இன்று நளீமியாவை ஆட்சி செய்கின்றார்கள். அவர்களினால் மூளைச் சலவை செய்யப்படுகின்ற நளீமிகள் குறுகிய மட்டத்தில் சிந்திக்கின்றார்கள். இந்த இஸ்ரேல் தொடர்பான எனது கருத்தைக் கண்டு கலங்கிப் போயிருக்கும் இந்த சகோதரரும் அந்த இனத்தைச் சார்ந்தராக இருக்க முடியும் என்பதே எனது கணிப்பு.

இன்றைய பல நளீமிகள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள்.  

நான் எனது கருத்தை யாருக்கும் அச்சமின்றி எடுத்துச் சொல்கின்றேன். அல்லாஹ்வினது தீனுக்கும் அவனது தூதர் நபிஸல்) அவர்களினது றிஸாலத்திற்கும் எதிரிகள் செய்கின்ற சதிகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற அவாவில் எனது தேடலில் கிடைக்கும் தகவல்களை நான் எழுதி வருகின்றறேன். நான் புனைப்பெயருக்குள் புகுந்து விளையாடுபவனும் அல்ல.  எனது தளத்திற்கு வருகின்ற பின்னூட்டங்களை நான் அப்படியே பிரசுரிக்கின்றேன்.  அநாகரீகமாக வருகின்ற அல்லது நான் எழுதிய கருத்துக்குப் பொருந்தாதவற்றை நான் நீக்கிவிடுகின்றேன்.

அகன்ற இஸ்ரேல் தொடர்பாக நான் எழுதிய ஆக்க்ம், சமகால அரபு அரசியலை நேசிப்பவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆத்திரப் படுவதற்கு உங்களுக்குள்ள உரிமையை நான் மறுப்பதற்கில்லை.  ஆனால் நீங்கள் ஆத்திரப்படுவதற்கான நியாயத்தை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு உலகப் புகழ்பெற்ற அறிஞரை(?)  நான் குற்றம் சாட்டுவது தான் பிழையென்று நீங்கள் சொல்ல முயல்வது அறிவில் உங்களுக்குள்ள குறையே தவிர வேறொன்றுமில்லை.

பத்ர்களத்தின் வாசகர்களுக்காக இந்த நளீமி, யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அகன்ற இஸ்ரேல் மீதுள்ள மறைமுக பற்றினால் வழங்கியதாக நான் உணரும்அவரின் உபதேசத்தை அப்படியே கீழே பதிவிடுகின்றேன்.

நன்றி!
ஏ.அஸீஸ் நிஸாருத்தீன்
0094 777 636 138

உங்களுடைய வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாகச் செய்யும் போது சில ஆக்கங்களினால் உங்களுடைய வலைத்தளத்தின் நற்பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. 
                                                                                          இது நளீமியின் குற்றச்சாட்டு


யாழ் முஸ்லிம் வலைத்தளம் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆரோக்கியமானதொரு பார்வை நிலவுவதை நாம் அறிவோம். பலர் தமது கருத்துக்களையும் எழுதி அனுப்புவார்கள். சிலர் விமர்சனங்களையும் முன்வைப்பார்கள். சிலவேளைகளில் சிலருடைய ஆக்கங்களை நாம் பதிவேற்றம் செய்யும்போது, அந்த ஆக்கத்தில் சொல்லப்பட்ட கருத்துநிலையில்தான் யாழ் முஸ்லிம் பயணிக்கிறது என்று அபிப்பிராயம் கொள்வோரும் உள்ளனர்.

அந்தவகையில் அண்மையில் நாம் அஸீஸ் நிஸாருத்தீன் என்பவருடைய கட்டுரையொன்றை பதிவிட்டோம். அக்கட்டுரை சில சர்ச்சைகளை எற்படுத்தியது. சிலர் அதுபற்றி எம்முடன் தொடர்புகொண்டு விளக்கம் கோரினர். நாமும் அவர்களுக்கு விளக்கினோம். அவ்வாறு எமது விளக்கத்தையடுத்து எம்மை வந்தடைந்த ஈமெயில் கடிதமொன்றை இங்கு பதிவிடுகிறோம்.

ஹாலிக் அல் அர்ஷத் (நளீமி)

உங்களுடைய வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாகச் செய்யும் போது சில ஆக்கங்களினால் உங்களுடைய வலைத்தளத்தின் நற்பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அஸீஸ் நிஸார்தீன் பற்றி எதுவும் தெரியாது. நான் நேரடியாக இதுவரை அவரை சந்தித்ததும் இல்லை. அண்மையில் அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போதுதான் அவர் பற்றிய சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஒரு முன்னணி இஸ்லாமிய அறிஞ்சரை அமெரிக்காவின் நண்பன் என்று விமர்சித்து எழுதும் அளவுக்கு அவரின் எழுத்துக்கள் உள்ளது. 

அஸீஸ் நிசாருதீன் ஒருவிடயத்தை எழுதவும், பதிவிடவும் உரிமை பெற்றுள்ளார். அவருக்குள்ள உரிமையை மதிக்கிறேன். என்ற யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் கருத்தை  நானும் ஏற்றுக்கொள்கிறேன்.


உண்மையில் நீங்கள் தவறுதலாகத்தான் இந்த ஆக்கத்தை பிரசுரித்திருப்பீர்கள் என்றே நான் எண்ணினேன்.  உங்களுடைய வலைத்தளம் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆக்கபூர்வமான ஆக்கங்களை உங்களது வலைத்தளத்தில் நான் வாசித்திருக்கிறேன். உங்கள் பணியைத் தொடருங்கள்.

யாழ் முஸ்லிம் வலைத்தளம் என்று பெயரை வைத்து யாழ் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடாமல் பொதுவான ஆக்கங்கள், செய்திகளை நீங்கள் பிரசுரிப்பதால் உங்களுடைய வலைத்தளம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பலராலும் வாசிக்கப்படும் ஒரு வலைத்தளமாக மாறியுள்ளது. அதன் மூலம் யாழ் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் (உ.ம். மீள் குடியேற்றம்) போன்ற பிரச்சினைகளை உங்களால் மக்கள் மயப்படுத்த முடிந்திருக்கிறது. 

முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை மாற்று மத தமிழ் சகோதரர்களும் அறிந்து கொள்வதற்கான சூழலை இதன் மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தின் வெற்றிக்கான போதுமான சான்றென நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தை blogspot இலிருந்து .com / .lk க்கு மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஏனெனில், சொந்த வலைத்தளம் நடாத்துவதற்குத் தேவையான போதுமான வாசகர்களை உங்களுடைய வலைத்தளம் கொண்டுள்ளது. நிர்வாகச்செலவுகளை நிவர்த்தி செய்ய விளம்பரங்களைப் பிரசுரிக்கலாம்.

உங்களது முயற்சிகள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.


ஹாலிக் அல் அர்ஷத் (நளீமி



அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.


Thursday 29 December 2011

பயங்கரவாதியை போராளியாக மாற்றும், போராளியை பயங்கரவாதியாக மாற்றும் அமெரிக்காவின் அவல அரசியல்!



தேவையான போது அரவணைப்பது, தேவையில்லாத போது அழிப்பது,
இதுதான் வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் கொள்கை!

தனது ஆதிக்க அரசியலை நிலைநாட்டுவதற்காக ஜிஹாத் என்ற போலி முலாம் பூசி, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை உருவாக்கியது.
 .
அல்காயிதாவையும் ஏனைய தீவிரவாத இயக்கங்களையும் பாலூட்டி வளர்த்த அமொிக்கா,  ஹமீத் கர்ஸாயி என்ற தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பொம்மை ஒன்றின் தலைமையில்அந்த நாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆப்கானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடிய, தன்னால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அல்காயிதா உட்பட அனைத்து அமைப்புகளினதும் குரல்வளையை அமெரிக்கா அதன் கைகளாலேயே நெரித்தும் வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கானின் போரை மையப்படுத்தி  பாகிஸ்தானின் பெஷாவர் நகரை பயங்கரவாதத்தின் பண்ணையாக அமொிக்கா மாற்றியது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞா்கள் தீவிரவாதிகளாக தோற்றம் பெற்றனா்.

அது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்து  இஸ்லாமிய இளைஞர்கள்  இந்த ஜிஹாதிய முலாம் பூசப்பட்ட “போலி கூலிப்படை” களுக்காக அணி திரட்டப்பட்டனா். 

அமெரிக்காவின் நலன் சாா்ந்த இந்த யுத்தத்திற்காக ஆள்பலத்தை சோ்ப்பதிலும், அணி திரட்டுவதிலும், அமெரிக்க உளவு நிறுவனமான சீஐஏ, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான  ஐஎஸ்ஐ மற்றும் அரபு நாட்டு உளவு நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய இஸ்லாமிய அமைப்புகளும் அயராது உழைத்தன.

அமெரிக்காவால் தூண்டி விடப்பட்ட  ஆப்கான் போரும் அதன் பின்விளைவுகளுமே சமகாலத்தின் இஸ்லாத்தின் மீதான மோசமான தோற்றப்பாட்டை உருவாக்க காரணமாகியிருக்கின்றன. 

தீவிரவாதிகளை உருவாக்கி இஸ்லாத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்துவதற்கும், அரபு தேசங்களின் வளங்களை கொள்ளையிடுவதற்கும்  அமெரிக்கா வகுத்த வியூகம் ஆப்கானில் “ஜிஹாத்” ஆக அரங்கேற்றப்பட்டது. ஒரு கல்லைக் கொண்டு அமெரிக்கா இரண்டு பழங்களை பறித்துக் கொண்டது.

உலக அரசியலில் தலை கீழான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும்,  சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னா் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கைகள் ஓங்குவதற்கும்  இந்த ஆப்கான் போா் ஒரு விதத்தில் வழி வகுத்தது எனலாம்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இராணுவ அக்கிரமிப்பிற்கும் ஓர் உந்து சக்தியை இந்த “ஆப்கான் ஜிஹாத்”  அமைத்துக் கொடுத்தது. பிற்காலத்தில், இந்தப் போரின்  கதாநாயகர்களைத்  தேடி ஒழிப்பதாகக் கூறிக் கொண்ட அமெரிக்கா பல  முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து, குண்டு வீசி அழித்து துவம்சம் செய்தது.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு, சுரண்டல்  அரசியலை நிலை நாட்டுவதற்காகவே, 1980களில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டிலாக அமெரிக்கா மாற்றியது.   இந்த விளைவின் பாதிப்பை பாகிஸ்தான் இன்று  நன்றாகவே உணா்ந்து வருகிறது. உலக பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக பாகிஸ்தான் மாற்றம் பெறுவதற்கு அமெரிக்கா வடிவமைத்த ஆப்கான் போரே அடிப்படைக் காரணமானது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி பாகிஸ்தானுக்கு இன்று சரியாக பொருந்திப் போகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் ஏகாதிபத்திய அரசியல் தேவைகளுக்காக, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக விதைக்கப்பட்ட  தீவிரவாதம், இன்று ஒரு விஷ விருட்சமாக பாகிஸ்தானில்  வளா்ந்திருக்கிறது.   ஜனநாயகத்தின்  அடிப்படைகளை தகா்க்கும் அளவிற்கு அங்கு  தீவிரவாதம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

பாகிஸ்தான் மக்களுக்கு தீவிரவாதத்தை அரசியல் பாலாக ஊட்டிய  அதன் ஆட்சியாளா்களையே இன்று பதம் பாா்க்கும்  அளவிற்கு அது மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்,  ஏகாதிபத்தியத்தின் எடுப்பாா் கைப்பிள்ளையாக இருந்த பாகிஸ்தானை  அமொிக்காவும் சோ்ந்து இப்போது பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவால் எந்த நேரத்திலும் எதுவும் செய்ய முடியுமான ஓர் இறையாண்மையற்ற ஒரு நாடாக பாகிஸ்தான் சீர்குலைந்திருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் 'வெளியுறவு' அரசியல் அகராதியில் நீண்ட நாள் நண்பனுமில்லை, நீண்ட நாள் எதிரியுமில்லை என்ற நியதி நேர்த்தியாக பின்பற்றப்படுகிறது. 

பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட,  அமெரிக்க அரசியல் நலன் சாா்ந்த ஜிஹாதிய பண்ணையில் புடம் போடப்பட்ட உஸாமா பின் லாதின், லிபியாவின் ஹாகிம் பில் ஹஜ் போன்றோா்  அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் காய் நகர்த்தலுக்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் இன்னும் உணராமலேயே இருக்கிறோம்.

அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக லிபியாவை சின்னாபின்னப்படுத்திய  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் என்பவரைப் பற்றி எங்களில் எத்தனைப் பேருக்குத் தொியும்?

அப்துல் ஹாகிம் பில் ஹஜ்!

கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு திரிப்போலியின் இராணுவ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த பில் ஹஜ் லிபியாவின் அல்காயிதா அமைப்பின் தற்போதைய தலைவர் ஆவாா். இவர் 1966ம் ஆண்டு  திரிப்பொலியில் பிறந்தவர்.

அல்காயிதா அமைப்பின் முக்கிய உறுப்பினராக அறியப்பட்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ். ஆப்கான் போராட்டத்திற்காக பாகிஸ்தான் பெஷாவரைத் தளமாகக் கொண்டு இயங்கிய “ஜிஹாதிய பண்ணையில்” அமெரிக்கா சீஐஏ மற்றும் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இனால் மிகவும் திட்டமிட்டு  வளர்த்தெடுக்கப்பட்ட  ஒரு தீவிரவாதி!.

1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டுவதற்காக வேண்டி சவூதி அரேபிய “பெட்ரோ டொலா்” நிதி மூலங்களால் நிர்வகிப்பபடுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் உதவியினால், 'ஜிஹாத்' போராட்டப் பயிற்சிக்காக,  பாகிஸ்தானுக்கு பலி கடாவாக கொண்டு வரப்பட்ட  ஒருவர்தான் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் .

சவுதி முதலாளியத்தின் அடையாளமாகவும்,  கட்டட வணிகத்தின் பெரு விருட்ஷமாகவும், அமெரிக்க ஜனாதிபதிகளான புஷ் குடும்பத்தின் நெருங்கிய சகாவாகவும் இருந்த பின் லாதீன் குடும்பத்திலிருந்து உருவான  ஒசாமா பின் லாதீனுக்கும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜுக்கும் இடையிலான  தொடர்பு பாகிஸ்தானில் தான் ஏற்பட்டது.

இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள , அல்காயிதாவுடன் தொடா்புடைய  Libyan Islamic Fighting Group (LIFG)  லிபிய இஸ்லாமிய போராட்டக் குழுவின் தலைவராவார்.

அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடுத்ததாக 28 வது வரிசையில் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் உடைய லிபிய போராட்டக்குழுவின் Libyan Islamic Fighting Group (LIFG) பெயரே குறிக்கப்பட்டு இருக்கிறது.

தனது நாட்டினால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரான ஹாகிம் பில் ஹஜ்ஜை, லிபிய போராட்டத்தில் முன்னணி வீரராக  இன்று அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிராக யுத்தம் செய்கின்ற நேட்டோ படைகள், லிபியாவில் அல்காயிதாவோடு ஓரணியில் இணைந்து கதாபிக்கு எதிராக யுத்தம் செய்து வருகின்றன.

இதிலிருந்து அல்காயிதா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு போலி அரசியல் நாடகம் என்பது தெளிவாகப் புரிகின்றது.

சதாம் ஹுஸைனுக்கும், கதாபிக்கும் எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

2001 செப்டம்பா் 11 தாக்குதலுக்குப் பின்னா் லிபியாவும், ஈராக்கும் அல்காயிதா தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக,  அமெரிக்கா மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போடும் ஒரு போலி குற்றச்சாட்டை முன் வைத்து அந்த இரண்டு நாடுகளையும் அச்சுறுத்தியது. 

இரட்டைக் கோபுர தாக்குதலில் கலந்து கொண்ட 19 பேரில் ஈராக்கிய, லிபிய பிரஜைகள் யாரும் இருக்கவில்லை. ஆனால் தாக்குதலில் நேரடியாக தொடா்பு பட்டவா்களில்  15 பேர் சவுதி பிரஜைகளாவா்.  வேடிக்கை என்னவென்றால், இது விடயமாக சவுதியை கண்டிக்காத அமெரிக்கா ஈராக்கையும், லிபியாவையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன் வந்தது. 

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே அந்நாடுகளுக்கான ஆக்கிரமிப்பை ஐ.நா சபையும் நியாயப்படுத்தியது.

ஆனால் அல்காயிதா என்ற அமைப்பிற்கும் சதாம் ஹுஸைனுக்கோ, லிபிய தலைவா் முஅம்மா் அல் கதாபிக்கோ எவ்வித உறவும் இருந்தில்லை. எதிரும் புதிருமான அரசியல் தளங்களைக் கொண்ட அல்காயிதாவையும், கதாபி - சதாம் அணியையும் ஒன்றிணைத்து முடிச்சுப் போடுவதில் மேற்குலக ஊடகங்கள் வெற்றி கண்டன.

சதாமும், கதாபியும் அல்காயிதா அமைப்பின் பரம எதிரிகளாவர். அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அல் காயிதா போன்ற தீவிரவாத கொலைக்கும்பல்களை அழிக்கின்ற, ஒடுக்குகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டிலேயே கடந்த காலங்களில் சதாமும், கதாபியும்  இருந்திருக்கின்றார்கள்.

அல்காயிதாவோடு தொடா்பு வைத்திருப்பதாய் யாரையெல்லாம் அமெரிக்கா போலியாக குற்றம் சாட்டியதோ, அந்த நாடுகளை வீழ்த்துவதற்கு,  இன்று அல்கைதாவையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஓர் அவல அரசியலை அமொிக்கா செய்து வருகின்றது.

சமகால நிகழ்வுகளைப் பார்க்கும் போது அல்காயிதாவுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள அடிப்படை உறவு அம்பலத்திற்கு  வந்திருக்கிறது.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஆப்கானின் போராட்டத்தின் பின்னர் அதே நிகழ்ச்சி நிரலோடு லிபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  லிபியாவில் அல்காயிதாவின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அமெரிக்காவோடு முறுகல் நிலையிலிருந்த கதாபிக்கு எதிரான போராட்டத்தை இவர் ஆரம்பித்தார். மூன்று தடவை கதாபியை கொல்ல இவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அல்காயிதாவை கடுமையான முறையில் அடக்குவதற்கு கதாபி முடிவெடுத்தார். கதாபியின் கடுமையான நெருக்குதல் காரணமாக அல்காயிதா உறுப்பினர்கள் லிபியாவை விட்டு ஓட்டமெடுத்தனா். அவா்களை ஏவி விட்ட அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் தேடினர்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசியல் தஞ்சமடைவதற்காக பிரித்தானியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்த போது மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ. இடமும், பிரித்தானிய உளவு நிறுவனமான எம். 16 இடமும் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரண்டு உளவு நிறுவனங்களும் பில் ஹஜ்ஜை லிபியாவிடம் ஒப்படைத்தது. லிபியாவில் மூன்று நாட்டு உளவாளிகளினாலும் பலத்த சித்திர வதைகளுக்கு ஆளானதாக அண்மையில் ஹாகிம் பில் ஹஜ்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அல்கைாயிதா உறுப்பினர்களை காட்டிக்கொடுக்குமாறு லிபியாவின் உளவுத் துறை தலைவரான தற்போது பிரித்தானியாவில் இருக்கும் மூஸா கூஸா தன்னிடம் வேண்டியதாகவும், அப்படிக் கூறும் பட்சத்தில் தனக்கு சித்திரவதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவருக்குக் கூறப்பட்டதாகவும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பல ஆண்டுகள் லிபிய சிறையிலிருந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் கதாபியின் மகன் சைபுல் இஸ்லாம்  விடுதலை செய்தாா். இதன் போது 700 அல்கைதா உறுப்பினர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.   விடுதலையின் பின்னர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தமது விடுதலைக்கு ஒத்துழைத்த கதாபியின் மகன் சைபுல் இஸ்லாத்திற்கு நன்றி பாராட்டுவதாக பில் ஹஜ் கூறினார்.

இது தொடர்பாக சைபுல் இஸ்லாமும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது “  இந்த அல்கைதா அங்கத்தவர்களால் இனியும் நாட்டிற்கு தீங்கு கிடையாது என்று தாம் நம்புவதால் அவர்களை விடுதலை செய்ததாக” அறிவித்தார்.

ஆனால் இவர்களின் விடுதலையின் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் லிபியாவின் தலையெழுத்தையே மாற்றுவதாய் இந்நிகழ்வு அமையும் என்று கதாபியோ, அவரின் மகன் சைபுல் இஸ்லாமோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியொடு எழுந்து கொண்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் திரிப்பொலியில் ஆரம்பமான கதாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மெதுவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவினால் பயங்கரவாதியாக லிபியாவிற்கு பிடித்துக் கொடுக்கப்பட்ட அதே அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை வைத்து லிபிய போராட்டத்தை மேற்குலகு மக்கள் மயப்படுத்தியது. 

தனது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதியாக இருந்த இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை சுதந்திர போராளியாக மேற்கின் ஊடகங்கள் சித்தரித்துக் காட்டின.

மக்கள் எழுச்சியை தனது வழமையான அடக்குமுறை அணுகுமுறையால் நசுக்க முயன்ற கதாபிக்கு எதிராக தருணம் பார்த்திருந்த மேற்குலக நாடுகள் தடைகளுக்கு மேல் தடைகளை விதித்தன.   நேட்டோ படைகளின் வான் படைத்தாக்குதல்களைத் தொடுக்கப்பட்டன. 

இந்த நேட்டோவின் உதவியின் மூலம் திரிப்போலி நகரை  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் கைப்பற்றினார்.   லிபியாவின் வீழ்ச்சிக்கு மேற்குலகின் உதவியும், அல்கைதா உறுப்பினர்களினது போராட்டமும் காரணமாக அமைந்தன. 

பலஸ்தீன் பூமியை அபகரித்து ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அக்கிரமம் புரியும்,  இஸ்ரேலுக்குக் காட்டாத எதிர்ப்பை கதாபிக்கு காட்டும் அளவிற்கு முஸ்லிம்கள் மேற்குலக ஊடகங்களினாலும், பெட்றோ டொலா்களினால் போஷிக்கபடும் இஸ்லாமிய இயக்கங்களினாலும்,  எகாதிபத்தியத்தின் எடுபிடிகள் வழங்கிய  மாா்க்கத் தீா்ப்புகளினாலும்  மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்.

கதாபியின் சர்வாதிகார தன்மை தொடா்பில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் அவரை  ஒத்த அடக்குமுறை ஆட்சியாளர்கள் மத்திய கிழக்கில் அதிகம்  பேர் இருக்கும் நிலையில் கதாபியை மட்டும் கொடுமைக்காரராகவும், சா்வாதிகாரியாகவும்  சித்தரிக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் இப்போது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் லிபியாவின் ஒரு விடுதலைப் போராளி!   

நாளை.....?  வெள்ளை மாளிகை என்ன சொல்லப் போகிறதோ..!
பொறுத்திருந்து பாா்ப்போம்!

Saturday 24 December 2011

அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லாவிட்டால் ஆத்திரமாக இருக்கிறதா?

இஸ்ரேல் அதன் கொள்கையிலுள்ள 'அகன்ற இஸ்ரேல்' என்று சொல்லக் கூடிய,  மக்கா மதீனா புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய ஓர் அகன்ற இஸ்ரேல் இராஜ்யத்தை மத்திய கிழக்கில் உருவாக்கும் கருத்திட்டத்தை மையமாக வைத்து செயலாற்றி வருகின்றது.


இஸ்ரேலின் விரோதிகளான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளிப்பதா?
அது நடக்கவே நடக்காது! என்று நீங்கள் என்னோடு சண்டைக்கு வரலாம்.

ஆனால் எங்களையறியாமல் அது நடக்கின்றது. எங்களையறியாமல் நாம் சிலரால் அந்த இலக்கை நோக்கி வழி நடாத்தப்படுகின்றோம்.
அது எப்படி என்பதை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம் .

அரசியல்,கட்சி,  இயக்கம், ஜமாத்து, பிளவுகள் , பிரிவுகள் என்ற முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சிந்தித்தால் இந்த உண்மையை உங்களால் உணர முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக்... லிபியா அடுத்த படியாக...சிரியா .. ஈரான்..!

அரபுலகின் பூரண ஆதரவோடு , இஸ்லாம் விரோத மேற்குலக அணியான நேட்டோவின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் லிபியாவின் தலையெழுத்தும் மாற்றப்பட்டு விட்டது.

லிபியாவில் அமெரிக்கப் பிரஜையான, சீஐஏயின் வாரிசான மஹ்மூத் ஜிப்ரீல் லிபியாவின் காப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜிப்ரீல் இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இனி  ஒருபோதும் இருக்கமாட்டார்.

இனி, இஸ்ரேலின் வாக்களிக்கப்பட்ட 'அகன்ற இஸ்ரேல்' என்ற வாதத்திற்கும், அமெரிக்காவின் எண்ணெய் கொள்ளையிடலுக்கும் அடுத்த தடையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான். இந்த இரண்டு தடைகளையும் தகர்க்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது.

நேட்டோவின் அடுத்த இலக்கு சிரியாவையும் ஈரானையும் நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போது அந்தக் களத்தையும், தளத்தையும் அமைக்கின்ற பணியில் "இஸ்ரேலிய, அமெரிக்க, அரபு முக்கூட்டு லொபி" (Lobby) கச்சிதமாக இயங்க ஆரம்பித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இந்த முக்கூட்டு லொபி ஜிஹாதை ஜனரஞ்சகப் படுத்தி கம்யூனிஸம் தொடர்பான மிக மோசமான கருத்தாடலை மக்கள் மயப்படுத்தியது.

ஓர் இணைபிரியாத இயங்கு நிலையைக் கொண்ட அமெரிக்க முதலாளியத்திற்கும், அரபு வஹாபிஸத்திற்கும் உள்ள உறவு,  இந்த இரு சக்திகளுக்கும் ஊடகங்களில் உள்ள ஆதிக்கம் இக்கருத்தை உலக ரீதியில் மக்கள் மயப்படுத்துவதில் வெற்றியளித்து வருகிறது.

ஜிஹாத் என்ற சொல்லாடலை வெள்ளை மாளிகையின் வெறுப்பிற்கு ஆளானோர் மீது தொடுக்கப்படுகின்ற தூய போராட்டமாக அரபு வஹாபிஸம் அர்த்தப்படுத்தி காட்டி வருகிறது. தேவையான போது மாற்றமான கருத்து பெறும் இந்த ஜிஹாத் சொல்லாடல், அமெரிக்காவிற்கு எதிராக இருந்த லிபியாவிற்கு ஒரு விதமாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் பஹ்ரைனுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தப்படுவதை அவதானிக்க முடியும்.

இன்று நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாக இஸ்ரேலையும் ஆதரிக்கின்ற மத்திய கிழக்கின் வஹாபிய அரபு ராஜாக்களின் அரசியல் தலைமைத்துவங்கள்,  அடுத்த கட்டமாக சிரியா, ஈரான் இரண்டு நாடுகளுக்கும் எதிராக தனது பிரசார வியூகத்தை இப்போதே ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் பூராவும் இயங்குகின்ற, அரபுகளின் பெற்றோல் டொலர்களால் உயிர்வாழும், பிற்போக்குவாதிகளால் போஷிக்கப்படுகின்ற இயக்கங்களான தனது "ஏஜன்ட்"களை வைத்து இந்த அரபு அரசியல் தளம் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பிரசார நடவடிக்கைகளை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது.  இது இந்த தீய சக்திகளின் பிரசார யுத்த நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கையாக லிபியாவில் கதாபிக்கு எதிராக போர்தொடுத்த அல்காயிதா உறுப்பினர்களையும், ஏனைய பிறநாட்டு ஜிஹாதிய கூலிப்படைகளையும், அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனம் சிரியாவிற்குள் நகர்த்தி வருவதாக அமெரிக்க எப்.பி.ஐ. உளவு பிரிவில் துருக்கிய மொழி பெயர்ப்பாளராககடமையாற்றிய சீபல் எட்மன்ட்  Russia Today (RT) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

துருக்கி சிரிய எல்லையில் நேட்டோ படையின் முக்கிய புள்ளிகளால் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

தற்போதைய லிபியாவின்,  திரிப்போலியின் இராணுவ கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அல்காயிதாவின் லிபியத் தலைவரான இருந்த ஹாகிம் பில் ஹஜ் தற்போது சிரியாவிற்குள் புகுந்திருப்பதாகவும் ஏனைய அரபு நாடுகளிலிருந்து போராட்டக்காரர்களை சிரியாவிற்கு கொண்டு வரும் வேலையை ஹாகிம் பில் ஹஜ்ஜோடு இணைந்து சீஐஏ திட்டமிட்டு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் நேட்டோவின் தலைமையிலான இந்த அகன்ற இஸ்ரேலுக்குக்கான அமெரிக்க அக்கிரமிப்பிற்கு அரபு லீக் என்ற பொம்மைக் கூட்டம் அனுசரணை வழங்கியும் வருகிறது.

கடந்த திங்கட் கிழமை டமஸ்கஸ்ஸில் சிரியா விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அனுசரணையில் அரபு லீக் தயாரித்துள்ள இந்நத ஒப்பந்தத்தில் சிரியாவிற்குள் சென்று அரபு லீக் உறுப்பினர்கள் சிரிய நிலைமைகளை அவதானிக்க முடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்வதில் அரபு லீக் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே இருக்கிறது.

கடந்த கால வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள்.
அமெரிக்க,  இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மெய் சிலிர்க்கின்ற மனித உரிமை மீறல்கள் நிகழும் போது எவ்வித கரிசனையும் காட்டாத இந்த அமெரிக்க பொம்மைகளான அரபு லீக், சிரிய விவகாரத்தில் மாத்திரம் "சீரியஸாக" சிந்திப்பது சீஐஏயின் வழிகாட்டலில்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல் நலன் காக்கின்ற உளவாளிகளுக்கு இலகுவாக சிரியாவிற்குள் நுழைகின்ற அனுமதி கிடைத்திருக்கின்றது.

உண்மையை திரிபுபடுத்தும் மேற்குலகின் ஊடகங்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும்.  இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் அரபு எண்ணெய் 'ஷெய்க்கு'களின் ஊதுகுழலான அல் ஜஸீராவும் சிரியாவின் மீது நேட்டோ தாக்குதல் ஒன்றிற்கான நியாயத்தை ஏற்படுத்தும் பக்கச்சார்பான செய்திகளை திட்டமிட்டு பரப்பி, உளவியல் ரீதியிலான ஒரு யுத்தத்தை நடாத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமான, கத்தார் மன்னரின் ஆஸ்த்தான முப்தியான கர்ளாவியும் சிரியாவின் மீது நேட்டோவின் காருண்ய படை கால் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


ஆனால், சிரியாவின் வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது தொடுக்கப்பட தயாராகியிருக்கும் அமெரிக்க ஆதரவிலான படை நடவடிக்கையை ஐநா சபையில் ரஷ்யா கண்டித்திருக்கிறது.

லிபியாவின் பாணியில் சிரியாவை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இஸ்ரேல் அமெரிக்க நட்பாளர்களான சவூதி, கத்தார், குவைத் அரபு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஓர்அச்சுறுத்தலாக ரஷ்யாவின் கோரிக்கை அமைந்திருக்கிறது.

ரஷ்யாவின் பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் இகோர் பெனரின்  Professor Igor Panarin இஸ்ரேல் பிரித்தானிய அமெரிக்க ஆதரவு சக்திகள் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் பெரும் பங்காற்றி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 



அரபு லீக்கிலிருந்த சிரியாவை தள்ளிவைத்தல் தீர்மானம்  முற்றாக இஸ்ரேலின் தேவைக் கருதி கொண்டுவரப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறியிருக்கின்றார்.


இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் பாதுகாவலராய் இருக்கும் அமெரிக்க முதலாளியம் தான், சவூதி அரேபிய வஹாபிஸத்தின் பாதுகாவலராய் இருக்கின்றது. 


சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காதான் மத்திய கிழக்கின் இரு பெரும் சக்திகளான சவூதியையும், இஸ்ரேலையும் பாதுகாக்கிறது. எனவே சவூதியால் பணம் வழங்கி பாதுகாக்கப்படுகின்ற ''இஸ்லாமிய வாதி(?)'' களுக்கு இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தங்கள் (மறைமுகமாக) நிறையவே இருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது.




இந்த அடிப்படையில் தான் கர்ளாவியின் பத்வாக்கள் அமெரிக்க முதலாளியத்தினதும் அரபு வஹாபிஸத்தினதும் அரசியல் திருப்திக்கு ஏற்றவாறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.


இஸ்ரேலை அமெரிக்கா நேசிக்கிறது. அமெரிக்காவை அரபு நாடுகள் நேசிக்கின்றன. அரபு நாடுகளை இஸ்லாமிய வாதிகள் (?) நேசிக்கின்றார்கள்.
உறவில் இவர்கள் ஓரணியில்தான். இலக்கில் மட்டும் எப்படி வித்திசாப்படுவார்கள்???.


எல்லோரினதும் இலக்கு ஒன்றுதான்.


அதுதான் மத்திய கிழக்கு முழுவதையும் ஒன்றிணைத்த அகன்ற இஸ்ரேல்!
அது அமைய தடையாக இருப்பவர்களை தட்டி வீழ்த்துவது தான் அமெரிக்க ஜிஹாத்!


ஆப்கானிஸ்தான்...ஈராக்...லிபியா விடயத்தில் இஸ்ரேலின் கனவு நனவாகிவிட்டது. இனி சிரியாவும் ஈரானும் தான்.!


எங்கே? இஸ்லாமியவாதிகளே! (?) 80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டி அந்த பூமியை அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுக்க அன்று போட்ட அந்த பழைய கோஷங்களை மீண்டும் முழங்குவோமே!
ஸபீலுனா... ஸபீலுனா... அல் (அமெரிக்கா) ஜிஹாத்!  
அல் (அமெரிக்கா) ஜிஹாத்!

Sunday 18 December 2011

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!


முஅம்மர் அல் கதாபி கொலை செய்யப்பட்ட நாளை கத்தாரில் வாழும் கர்ளாவி அல்லாஹ்வின் தினமாக பிரகடனப்படுத்தினார்.

லிபியாவில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது கர்ளாவி அமெரிக்காவின் தினத்தைத் தான் வேறு வார்த்ததையில் அல்லாஹ்வின் தினம் என்று கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 17.12.2011 அன்று லிபியாவிற்கு விஐயம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் லியோன் பெனெட்டா லிபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு இருக்குமென்றும் லிபியாவை பாதுகாக்கும் நண்பனாக இனிமேல் அமெரிக்கா இருக்கும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தினத்தில் உதயமான லிபியாவின் விடுதலைக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்குவது பொருத்தமா?

இப்படி நீங்கள் நினைக்கலாம். கர்ளாவி போன்றவர்களுக்கு அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது என்பதைத்தான் அந்த வார்த்தை தெளிவுபடுத்துகிறது.

கிலாபத் சிந்தனையில் கட்டிஎழுப்பப்படவிருக்கும் லிபியாவிற்கு

 ''நாங்கள் உங்கள் நண்பனாகவும் பங்காளியாகவும் இருப்போம் '' என்று லிபியாவின் பிரதம அமைச்சர் அப்துல் றஹீம் அல் கிப் அவர்களை நோக்கி கூறியிருக்கிறார் லியோன் பெனெட்டா .

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன் வைத்திருக்கிறார்.

கர்ளாவியின் அமெரிக்கபா சார்பபான கிலாபத் கனவு லிபியாவிலும் நனவாகவிருக்கிறது. ஆப்கானைப் போல.

80களில் அமெரிக்காவினால் வடிவமைப்பட்ட ஆப்கான் பேராட்டம் வெற்றியடைந்த போது இதே நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருந்தது. தற்போதைய ஆப்கானின் நிலையை புரிந்து கொண்ட ஒருவரால் நாளை லிபியாவில் என்ன நிகழவிருக்கின்றது என்பதை அனுமானிக்க முடியும்.

லிபியாவைப் போன்றே, ரஷ்ய சார்பான ஆப்கனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து இயங்கிய உளவு நிறுவனங்களினால் ஐிஹாதிய வெறி ஊட்டப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அரபு, முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளிலிருந்து ஆப்கானுக்குள் கொண்டு சென்றது.

Monday 12 December 2011

அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் அறிஞர்(?) கர்ளாவி.


அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் அறிஞர் கர்ளாவி.

சிரியா அரசை வீழ்த்துவதற்கு ஐநா படையின் உதவியை சிரிய மக்கள் நாட வேண்டுமென்று அண்மையில் கர்ளாவி அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுததுள்ளார்.

 இணையத்தில் இந்தச் செய்தியைப் பார்த்த போது

சிங்கள மொழியில் இருக்கின்ற ஒரு பழமொழியே எனக்கு |ஞாபகத்திற்கு வந்தது.

யாருக்கும் தெரியாமல் பையில் மறைத்து வைத்திருந்த பூனை வெளியே பாய்ந்தது என்பதுதான் அந்த பழமொழி.

கர்ளாவியின் இஸ்லாமிய பிரசாரம் என்ற பையிலிருந்த மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் அரசியல் நலன் காக்கின்ற அரபு அரசியலை பாதுகாக்கும் பூனை வெளியே பாய்ந்து விட்டது.

சிரியாவின் மக்கள் போராட்டத்தை ஏகாதிபத்திய மாற்றுச் சக்திகளின் கைகளுக்கு மாற்றுவதற்கு கர்ளாவி கடும் முயற்சி எடுப்பது தெளிவாக தெரிகிறது.

Tuesday 7 June 2011

உலகமயமாக்கலும் எதிர்ப்பும்: நோம் சொம்ஸ்கியுடனான உரையாடல்




INTERVIEW: TRANSLATION BY GIFFRY HASSAN


உலகில் பலராலும் அறியப்பட்ட சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மொழியியற்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்காவின் ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விரோதப் போக்குகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருபவர். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர். பல்துறைசார்ந்த அறிவுஜீவியான இவர் அண்மையில் சீனாவுக்குச் சென்றபோது ளுழரவாநசn ஆநவசழிழடவையn னுயடைல  என்ற சீனப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணலை நமது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். இப்பேட்டியில் அவர் சர்வதேச அரசியலில் சீனா பெற்று வரும் முக்கியத்துவம், அமெரிக்கா மற்றும் உலகமயமாக்கல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.
தமிழில்: ஜிஃப்றி ஹாஸன்
———————————————————————————————————————-
SMD– அதிகமான சீனர்கள் உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில், குறிப்பாக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் (றுவுழு) சீனா இணைந்ததையடுத்து அநேகமான சீனர்கள் அதிகம் நன்மையடைந்தார்கள். ஆனால், நீங்களோ ஓர் மங்கிய ஒளியில் உலகமயமாக்கலைப் பார்ப்பதாகத் தோன்றுகின்றதே.

சொம்ஸ்கி – சீனாவின் பொருளாதார அடைவென்பது உலகமயமாக்கலோடு குறைந்தளவிலேயே தொடர்பு கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துடனேயே தொடர்புபட்டுள்ளது. சீனா ஒரு ஏற்றுமதி மைய நாடாக படிப்படியாக மாறி வருகிறது. நான் உட்பட எவரும் இந்த ஏற்றுமதிகளுக்கு எதிரானவர்களல்ல் ஆனால் இதுவல்ல உலகமயமாக்கல், உண்மையில் சீனா வட-கிழக்காசிய உற்பத்தி முறையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. முழுப்பிராந்தியத்தையும் நீங்கள் எடுத்து நோக்கினால், நீங்கள் ஒரு பாரிய சக்தியைக் காண்பீர்கள.; சீனாவின் ஏற்றுமதி அளவு அளவிட முடியாததாகவுள்ளது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விடயமொன்றும் இங்குள்ளது. சீனாவுடைய ஏற்றுமதி பாரியளவில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா  போன்ற நாடுகளின் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்நாடுகள் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்குகின்றன. சீனா இத்தொழில்நுட்ப உற்பத்தியில் இங்கு வெறும் ஒன்றியமாகத்தான் செயற்படுகின்றது. இவைகளைப் பயன்படுத்தி அது மேற்கொள்ளும் இறுதி உற்பத்தியில் ‘அயனந in உhiயெ’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது அவ்வளவுதான்!
அறிவுபூர்வமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனா வேகமாக அபிவிருத்தி அடைகின்றது. மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்ற போதிலும் சூழலியல் அழிவு போன்ற இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. பொருளியலாளர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் இறுதியில் இந்த இழப்புகளுக்காக சிலர் விலை கொடுக்க வேண்டியுள்ளது. அது உங்களுடைய பிள்ளையாக அல்லது பேரப்பிள்ளையாக இருக்கலாம். இது உலகமயமாக்கலுடனோ அல்லது றுவுழு உடனோ  எந்த விதத்திலும் தொடர்புபட்டதல்ல.

Monday 6 June 2011

போர்க் குற்ற அறிக்கை - உலமா சபையும் இஸ்ரேலும் ஒரே நிலைப்பாட்டில்?


               இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் (Mark Sofer )

ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் Mark Sofer  கொழும்பு பிளஸ் பார்க் ஸ்டீட் ஹோட்டலில் plush Park Street Hotel நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா நிபுணர் குழுவினால் (தருஸ்மான் அறிக்கை)Darusman report முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையை மனித உரிமை என்ற போர்வையில் வெறும் அரசியல் சுய லாபங்களுக்காக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று சாடியுள்ளார்.


இதேமாதிரியான ஒரு அறிக்கையை இலங்கையில் உலமாக்களின் சபையான ஜம்இய்யதுல் உலமாவும் அண்மையில் வெளியிட்டது. 


இந்த ஐநாவின் அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் கருத்தும், ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்தும் ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன.


இஸ்ரேலின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன் உலமா சபையின் முக்கிய அங்கத்தவரான பிரபலமான மார்க்கமேதையும், நவீன சிந்தனையாளர் என்று சிலரால் போற்றப்படுகின்ற அகார்முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலமா சபையின் அறிக்கை தொடர்பாக தெளிவு பெற முயற்சித்தேன். 


அவர் பதிலளிக்கவில்லை. எனது தொலைபேசி இலக்கத்தை இனம் கண்டுகொண்ட அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் மேல்மாகாண சபை அங்கத்தவர் சகோதரர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் தொலைபேசியில் கதைத்த போது அவரின் இலக்கம் அகார் முஹம்மதின் தொலைபேசியில் இல்லாமல் இருந்ததன் காரணமாக அவர் பதிலளித்தார்.


நான் அறிஞர் அகார் முஹம்மதிடம் 2009 ம் ஆண்டு இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கொடிய யுத்தத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக இதேமாதிரியிலான ஒரு அறிக்கையை கோல்ட் ஸ்டோன் அறிக்கை  Goldstone Report  என்ற பெயரில் கொண்டு வந்ததை ஞாபகப்படுத்தி அது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டேன்.

Sunday 5 June 2011

அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கிய அடுத்த பலிகடா இலியாஸ் காஷ்மீரி!


பாகிஸதானும், அமெரிக்காவும் தனது அரசியல் தேவைக்காக உருவாக்கிய அடுத்த பலிகடாவான இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிஙது.

ஆம் ! இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க உளவு விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

அமெரிக்காவின் கைக்கூலியும் இஸ்லாமிய ஜிஹாதின் (?) முன்னோடியுமான பாகிஸ்தான் வழமைப் போல தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது என்று கையை விரித்திருக்கிறது.

மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவரும், பாகிஸ்தானின் பயங்கரவாத முக்கியத் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானின் பிராந்திய அரசியலுக்காக ஜிஹாதிய பாலுாட்டி வளர்க்கப்பட்டவர்.

Friday 3 June 2011

பின் லாடன் – பிரபாகரன் : ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல்

                                                                                              யமுனா ராஜேந்திரன்-



விநோதமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஓசாமா பின்லேடனும், பிரபாகரனும் ஒன்றுதான் என்கிறார் ரோபர்ட் பிளாக். உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதிகள் பின்லாடனும் பிரபாகனும் என இலங்கை மண்ணில் வைத்து அதிகாரபூர்வமாகப் பேசியிருக்கிறார் ரோபர்ட் பிளேக். ஆமாம், ஆமாம் ஒன்றுதான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எனும் அளவி மௌலானா பின் லேடனின் யுத்தம் புனித யுத்தம் என்கிறார். பிரபாகரன் வெறும் பயங்கரவாதி என்கிறார்.
இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அபத்தம் நமக்குப் புரிகிற அதே பொழுதில், இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாறுபாடுகள், கருத்தியல், இலக்குகள் என்பதனைத் தாண்டிய வகையில் நிச்சயமாகவே சே குவேரா-பின் லாடன்- பிரபாகரன் போன்றோரின் ‘படுகொலைகள் நிகழ்ந்த விதம்’ ஒப்பீட்டுக்கு உகந்ததும் ஒற்றுமை கொண்டதும்தான் என்பதை நாம் திட்டவட்டமாக நிறுவ முடியும்.

Wednesday 25 May 2011

ஒசாமா - அபோதாபாத் வீடு, சீ.ஐ.ஏ., ஐ.எஸ்ஐ. யின் நண்பனான தாவுத் இப்றாஹீம் நிர்மானித்தது!

தாவுத் இப்றாஹிம்

ஒசாமா பதுங்கியிருந்ததாக அமெரிக்கா கூறிவரும் பாகிஸ்தான் அபோதாபாத் நகரத்தில் அமைந்துள்ள வீடு, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பவல்லுனர்களினால் இராணுவ கட்டட இரகசியங்களை உள்ளடக்கியதாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , மும்பாய் பாதாள உலக தலைவனான தாவுத் இப்றாஹிமின் Safari constructions என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்டதாக அறிய வருகிறது.




ஆபோதாபாத் நகரில் உள்ள இராணுவ அதிகாரிகளின் அத்தனை வீடுகளும் அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களினால் வடிவமைக்கப்பட்டவையென்றும் , இரகசிய பதுங்கு குழிகளும், குண்டு துளைக்காத ஜன்னல்களும், குண்டு தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


இந்தியாவிற்கு மிகவும் வேண்டப்படும் நபரான தாவுத் இப்றாஹீம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் உதவியுடன் சீஐஏ வோடு மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராவார்.  


இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதில் ஈடுபட்ட Safari constructions நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாவுத் இப்றாஹீமும் அவரது சகாவான சோட்டா ஷகீலுமாகும்.


தாவுத் இப்றாஹிமின் கட்டட நிறுவனமான Safari constructions பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கிலும் இராணுவ ரீதியிலான கட்டட தொழிற் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக பெயர்பெற்றிருக்கிறது.

Monday 23 May 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)



எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Sunday 22 May 2011

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு


மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
                      இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


                                              இவை உண்மையான படங்கள்



                                           
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.

அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.

வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.

புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?

ஒன்று மட்டும் தெளிவு

தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.

சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...