Wednesday 25 May 2011

ஒசாமா - அபோதாபாத் வீடு, சீ.ஐ.ஏ., ஐ.எஸ்ஐ. யின் நண்பனான தாவுத் இப்றாஹீம் நிர்மானித்தது!

தாவுத் இப்றாஹிம்

ஒசாமா பதுங்கியிருந்ததாக அமெரிக்கா கூறிவரும் பாகிஸ்தான் அபோதாபாத் நகரத்தில் அமைந்துள்ள வீடு, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பவல்லுனர்களினால் இராணுவ கட்டட இரகசியங்களை உள்ளடக்கியதாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , மும்பாய் பாதாள உலக தலைவனான தாவுத் இப்றாஹிமின் Safari constructions என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்டதாக அறிய வருகிறது.




ஆபோதாபாத் நகரில் உள்ள இராணுவ அதிகாரிகளின் அத்தனை வீடுகளும் அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களினால் வடிவமைக்கப்பட்டவையென்றும் , இரகசிய பதுங்கு குழிகளும், குண்டு துளைக்காத ஜன்னல்களும், குண்டு தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


இந்தியாவிற்கு மிகவும் வேண்டப்படும் நபரான தாவுத் இப்றாஹீம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் உதவியுடன் சீஐஏ வோடு மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராவார்.  


இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதில் ஈடுபட்ட Safari constructions நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாவுத் இப்றாஹீமும் அவரது சகாவான சோட்டா ஷகீலுமாகும்.


தாவுத் இப்றாஹிமின் கட்டட நிறுவனமான Safari constructions பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கிலும் இராணுவ ரீதியிலான கட்டட தொழிற் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக பெயர்பெற்றிருக்கிறது.

Monday 23 May 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)



எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Sunday 22 May 2011

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு


மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
                      இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


                                              இவை உண்மையான படங்கள்



                                           
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.

அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.

வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.

புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?

ஒன்று மட்டும் தெளிவு

தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.

சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!

Saturday 21 May 2011

ஒசாமா இறந்தது 2006-06-26 அன்று செச்னிய சீ.ஐ.ஏ உளவாளி தகவல்!


ஒசாமாவை அபோத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொன்று உடலத்தை கடலில் எரிந்து விட்டதாக அமெரிக்க கூறியிருக்கும் நிலையில் செச்னிய சீஐஏ உளவாளியான பெர்கன் அஷர் Berkan Ashar  ரஷ்ய தொலைக்காட்சியான Channel One Russia விற்கு ஒசாமா 2006 ம் ஆண்டு இறந்ததாகவும் அவரது உடலம் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

Friday 20 May 2011

நரேந்திர மோடியும் குஜராத்தும்!! வெளிவரும் உண்மைகள்!!


 

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 


இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.

தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.

Thursday 19 May 2011

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!


மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.
சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!


இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவை சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இராணுவத் தளங்களுக்கு பெண் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புவதை, அந்தத் தளங்களில் பிள்ளைகளைத் தங்க வைப்பதை நினைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல இன பெற்றோரும் அச்சமுற்று இருக்கின்றனர்.

இந்த இராணுவப் பயிற்சி இஸ்லாமிய சமூகத்திற்கோ பெரும் இடியாக வந்திறங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களின் கலாசாரம் இதற்குக் காரணமாகும்.

உயர் கல்வியில் கீழ் நிலையில் இருந்த இந்த சமூகம் தவழ்ந்து வந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இடையுறாக தடையாக இந்த இராணுவப் பயிற்சி வந்திருக்கிறது.

Wednesday 18 May 2011

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!



இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.


இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday 17 May 2011

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.


கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உயிர் வாழும் ஒசாமா?


இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள்.  இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.

Wednesday 11 May 2011

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை


(ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்)



(80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்)

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

Tuesday 10 May 2011

புனித மக்காவில் போலி ஸம்ஸம் தண்ணீர்?


உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் மனித உணர்வுகளை மலினப்படுத்தி இருக்கிறது.

நீதி, நியாயத்தை ஓரம்கட்டிவிட்டு பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இன்றைய பொருளாதார முறை, எதையும் விற்று பணமாக்கும் மனநிலையை மனிதர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகங்களில் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகள் பணத்தைக் குறியாய்க் கொண்ட முகவர்களினால் இன்று முற்றாக வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது  ஸம்ஸம் தண்ணீரும் சேர்ந்திருக்கின்றது.

ஸம்ஸம் தண்ணீர்என்று கூறி புனித மக்கா வீதிகளில் போலியாக தண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் விற்கப்படுவதாக அரப் நிவுஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
http://arabnews.com/saudiarabia/article388908.ece

Monday 9 May 2011

எதிரி (?) இஸ்ரேலுக்கு எரி வாயு (Gas) கத்தார் நாட்டின் கைங்கரியம்!

இஸ்ரேல் கத்தார் உறவு - இஸரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஸிபி லிவினிக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னர்


இஸ்ரேல் கத்தார் உறவு - இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னரும் அவர் மனைவியும்


இஸ்ரேல் கத்தார் உறவும் - கர்ளாவி கத்தார் உறவும் 
இஸ்ரேலோடு நெருக்கமான உறவு வைத்திருக்கும் கத்தார் மன்னனின் மனைவிக்கு கர்ளாவி கை கொடுக்கிறார்

கிலாபத் சிந்தனையாளர்களின் கனவு இராஜ்யமான கத்தார் நாடு இரத்த வெறி பிடித்த இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற முறையில் எரி வாயு வழங்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரேலிய இணையதளமான Ynet  http://www.ynetnews.com/articles/0,7340,L-4064547,00.html செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் எகிப்தே இஸ்ரேலுக்கான எரிவாயுவை வழங்கி வந்தது. இஸ்ரேல் ஆதரவாளரான முபாரக் அந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேலுக்கான எரிவாயு வழங்கல் தடைப்பட்டிருந்தது.

எனவே இஸ்ரேலுக்கு அடுத்த நேச நாடாக திகழும் கத்தார் நாடு, சந்தை விலையை விட குறைந்த விலையில் இஸ்ரேலுக்கு எரிவாயுவை வழங்க முடிவு செய்திருக்கிறது.

பல வருடங்களாக பலஸ்தீன் காஸா மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள இஸ்ரேல், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைத் தடுத்து வருகிறது. காஸா மக்கள் திறந்த வெளி சிறை ஒன்றில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு போலியாக உலகிற்கே அறிக்கை விடும் கத்தார் நாட்டின் ஆஸ்தான உலமாக்கள் வழமைபோல மௌனமாக இதற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அறிய வந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் 

இஸ்ரேலின் நேச நாடான கத்தார்,  இஸ்ரேலுக்கு உதவி செய்வதைப் போல்  இஸ்லாமிய வாதிகளுக்கும் உதவி செய்து வருகிறது. 

குறிப்பாக இலங்கையிலிருந்து கத்தார் செல்லும் தாஈகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கிறது. 

கத்தார் ஒரு கையினால இஸ்ரேலையும்,  மறு கையினால் இலங்கையின் இந்த இஸ்லாமிய வாதிகளையும் பற்றியிருக்கிறது.

இஸ்ரேலின் அனுசரணையில் கத்தாரில் ஏற்படப்போகும் இஸ்லாமிய எழுச்சிக்காக தளம் அமைக்கின்ற பணியில் இலங்கையிலிருந்து இஸ்லாமிய வாதிகளும், புகழ்பெற்ற அறிஞர்களும் (?) அடிக்கடி சென்று களம் அமைத்து வருகின்றார்கள்.

1980 களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யாவை விரட்டும் ஜிஹாத் களத்தை சூடேற்ற அடிக்கடி பாகிஸ்தானுக்கு தஃவா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த தாஈகள், தாலிபான்கள் போன்ற பிற்போக்குவாத சக்திகளை உருவாக்க பின்னணியில் நின்றார்கள்.

இவர்கள் இப்போது இஸ்ரேலுக்குச் சார்பான கத்தாரில் கால் பதிருக்கின்றார்கள்.  கத்தாரில் கிலாபத்தை உருவாக்க அதனை வழிநடாத்த புதியதொரு ''காலிபான்''களை உருவாக்கவும் இவர்களால் முடியும்.

அமெரிக்காவை ஆதரித்து ஆப்கானில் ஆரம்பமான தாலிபான் அரசு போல இஸ்ரேலை ஆதரித்து கத்தாரில் அமையவிருக்கின்ற ''இஸ்ரேலிய இஸ்லாமிய கிலாபத்" எப்படி அமையுமோ? 

பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Sunday 8 May 2011

ஒசாமாவின் மரணமும் ஒபாமாவின் கரணமும்!

ஒசாமாவின் மறைவும் 10 ஆண்டு நிறைவும்?
ஓபாமாவின் அரசியல் காய் நகர்த்தல்
மே 3ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்கள்



ஒபாமா அரசியல் சாகச விளையாட்டில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்றவொரு பழமொழி இருக்கிறதே! ஒபாமாவின் சாகச விளையாட்டைப் பார்க்கும் போது அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

கொஞ்சம் சறுக்கினால் அவர் தனது அரசியல் சாகச விளையாட்டிலிருந்து கீழே விழுந்து நொருங்கி விடும் அபாயம் நெருங்கியே இருக்கிறது.

ஒசாமாவை வைத்து அமெரிக்கா அதிகம் லாபமீட்டியது.

ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்டியது முதல் ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பு வரை அதன் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஆதாரமாக ஒசாமாவின் செயற்பாடுகளைத்தான் காரணமாக முன்வைத்தது.

புஷ்ஷின் அடிச்சுவட்டை அதே பாணியில் பின்பற்றும் ஒபாமா இன்று சரிந்துக்கொண்டிருக்கும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒசாமாவின் மரணத்தை(?) ஓர் ஆயுதமாக பாவிக்கும் தந்திரத்திற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒசாமாவின் மரணத்தைப் பற்றி கருத்துத்தெரிவிக்கும் போது இது ஒசாமாவின் இரண்டாவது மரணம் என்று குறிப்பிட்டதோடல்லாமல் ஒசாமாவின் மரணச் செய்தி ஏப்ரல் 1ம் திகதி வந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கர்களின் அரசியலுக்காக, அதன் வெளிநாட்டு சுரண்டல் கொள்கைக்காக உலகம் எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்து இருக்கிறது.

ஒரு நாட்டின் வளங்களைச் சுரண்ட திட்டமிட்டால் அது எத்தகைய அநீதிகளையும் அந்நாட்டின் மீது கட்டவிழ்த்து விடும்.

மத்திய கிழக்கு தொடர்பான அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆயுதமாக  இஸ்லாத்தை பயன்படுத்திக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் ஹிக்மதியார், ரப்பானி முதல் ஒசாமா வரை அதன் தூண்டிலில் சிக்கி சிதைந்து போனவர்களே.

இன்று பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத்தின் பண்ணை யாக உருமாறுவதற்கு  அமெரிக்காவின் கைகள் பக்கபலமாக இருந்திருக்கின்றன.

தாலிபான்கள் போன்ற பாமரத்தனமான ஆன்மிகவாதிகளான பிற்போக்குவாதிகளை உருவாக்கி அவர்களை மறைமுகமாக நிர்வகிப்பதின் மூலம் பயங்கரவாதத்திற்கெதிரான போரை தேவையான காலத்திற்கு நீடிக்க முடியும் என்பதே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்

ஒபாமாவிற்கு அடுத்து வரும் தேர்தலில் வெற்றிக்குத் தடையாக இருப்பது
பயங்கரவாதத்திற்கெதிரான இந்த யுத்தம்தான்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தை வேறு நாடுகளில் யுத்தத்திற்காகவும், தமது அரசியல் அபிலாஷைகளுக்காகவும் கொட்டுவதை இப்போது அந்த மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

எனவே திடீரென்று ஒபாமா நிகழ்ச்சி நிரலை மாற்றி தனது பயணத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார். தனது அரசியல் சாகச விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

எதிர் வரும் செப்டம்பர் 11 திகதி இரட்டைக் கோபுர தாக்குதல் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகினறன. அந்த நிகழ்வை முன்வைத்து தனது சரிந்து போகும் பெயரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவே அவரின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

ஒசாமாவைத் தாக்கியதாக சொல்லப்படும் மே 2ம் திகதியின் சூடு தணிவதற்கு முன் , மே மாதம் 3ம் திகதி செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்ட தீயணைப்பு படையினரின் குடும்பத்தினரோடு ஞாபகார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

எச்சரிக்கைமிகுந்த ஒரு சாகச விளையாட்டில் ஒபாமா ஈடுபட்டிருப்பதை அமெரிக்க மக்கள் தற்போது புரிந்து வருகிறார்கள் என்பதை அவர்களின் ஊடகங்கள் ஊடாக புரிந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இரட்டைக் கோபுர சரிவிலிருந்து அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்திற்கான ஒரு புதிய முகமூடியைத் தேடிக்கொண்டது. யாருக்கும் கட்டுப்படாத ஏகாதிபத்திய சக்தியாய் எழுந்துக் கொண்டது.

இன்று ஒபாமா விழுந்த இரட்டைக் கோபுரத்தின் நிகழ்வை வைத்து எழுந்து நிற்க முயற்சி செய்கிறார்.

ஒசாமாவை வீழ்த்தியதாகச் சொல்லி ஒபாமா தனது அரசியல் சாகசத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

ஒபாமா ! ஜாக்கிரதை கரணம் தப்பினால் மரணம்!

Saturday 7 May 2011

ஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள் (வீடியோக்கள்)!


பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)!



ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி?

* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே?

* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்?

* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, "பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன?
* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உறைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உறைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?

* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே? அது எப்படி?
* உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா? ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை?

* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா?

பின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
இரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை? எந்த அறிவிப்பு பொய்? இருவரில் யார் பொய்யர்?
பின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா? இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.
இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.

ஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.

அமெரிக்க அரசு வெளியிட்ட ஒசாமாவின் பொய் வீடியோக்களில் சில:
பின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன?

இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது!

எது எப்படியோ, இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்!

அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!"

Thursday 5 May 2011

ஒபாமாவின் ஒசாமா வேட்டை.. கசிந்துள்ள புகைப்படங்கள்!

எச்சரிக்கை !  கொடுரமான காட்சிகள் இளகிய மனமுள்ளவர்கள் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.




ஒசாமாவின் இருப்பிடம் என்று கூறப்படும் அபோத்தாபாத்தில் உள்ள வீட்டின் மீது அமெரிக்க படை தாக்கியதில் இறந்த மூவரின் உடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதல் இடம்பெற்று சரியாக ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் இவை.

பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் இந்தப் படங்களை எடுத்துள்ளனர். நிராயுத பாணிகளான இவர்கள் மீது பயங்கரமாக சுட்டு தள்ளியிருப்பது இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள இவர்களது உடலங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வீடியோ : ஒசாமா உண்மையில் கொல்லப்பட்டாரா? சந்தேகம் வலுக்கிறது




ஒசாமா வாழ்ந்ததாக கூறப்படும் அப்போதாபாத் பிரதேச மக்களின் கருத்தை பிரஸ் ரிவி ஒளிபரப்பியது.  அப்பிரதேச மக்கள் ஒசாமா அங்கு வாழவில்லை என்று கூறுகின்றார்கள்.

இது விடயமாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருகிறது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருவதாக 04.05.2011 அன்று இரவு பிபிஸி தமிழோசை செய்தி வெளியிட்டது.

இதுதான் அந்த செய்தி:

பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது. அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.
        அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால்          விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

Wednesday 4 May 2011

ஒசாமா விவகாரம்- வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் படங்கள்!


ஒசாமா மீதான தாக்குதல் விவகாரமும், அது தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகளும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருக்கும் இந்நிலையில்
வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் படங்கள் சில ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.


இது ஒசாமா வாழ்ந்ததாக அமெரிக்க கூறும் உயர் பாதுகாப்பு வலய வீடு


இராணுவ நடவடிக்கையின் போது விழுந்து நொருங்கிய ஹெலிகப்படர் சிதைவுகள் வண்டியில்....


ஒசாமா தாக்குதலுக்கு இலக்கான அறை


இராணுவ நடவடிக்கையின் போது விழுந்து நொருங்கிய ஹெலிகப்படர் 


தாக்குதல் இடம் பெற்ற அந்த இரவு










Tuesday 3 May 2011

ஒசாமா கொலை! இன்றல்ல அன்று...?




ஒசாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாஸிர் பூட்டோ 2007ம் ஆண்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஒசாமாவின் கொலை தொடர்பாக அமெரிக்கா சொல்கின்ற “கதை”கள் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.  பாகிஸ்தானில் எவ்வித பாதுகாப்பும் (?) இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை தாக்கியழித்தாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாதுகாப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை உயிருடன் பிடித்து நிறைய தகவல்களை பெற முடியுமான நிலையை அமெரிக்கா உளவு நிறுவனம் ஏன் அவசரப்பட்டு இல்லாமல் செய்து கொண்டது என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது.

ஒசாமாவைப் பிடிக்கச் சென்ற களநிலவரங்களைப் பார்த்தால் அவரை ஒரு எலியைப் பிடிப்பது போன்று இலகுவாக உயிருடன் பிடித்திருக்க முடியும்.

அமெரிக்க சீ.ஐ.ஏ வடிவமைத்த நிகழ்ச்சி நிரல் என்பதால் ஒசாமாவின் போராட்டம் பல சிக்கல்களையும், சந்தேகங்களையும் கொண்ட  ஒரு புதிராகவே இன்றுவரை இருந்து வருகிறது.

ஒசாமா அமெரிக்க சீ.ஐ.ஏ என்ற உளவு நிறுவனத்தினால் பயிற்றப்பட்ட ஒரு தீவிர உளவாளி!. அவர் அமெரிக்காவோடு நேசம் வைத்திருந்த காலத்தில் அவரால் எத்தகைய பிரயோசனங்களைப் பெற்றதோ அதற்கும் அதிகமான பலனை அவரை எதிரியாக்கி அமெரிக்கா பெற்றுக்கொண்டது.

ஒசாமாவைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ...

அமெரிக்காவிற்கு ஒசாமா இருந்தாலும் ஆயிரம் பலன், இறந்தாலும் ஆயிரம் பலன்.

நண்பனாகவும், எதிரியாகவும் இருந்து அமெரிக்காவிற்கு அதிக லாபங்களை ஈட்டுக் கொடுத்தவர்.

இன்றைய அமெரிக்காவின் மோசமான ஜனநாயக விரோத செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் ஒன்றே காரணமாக இருக்கிறது.

இரண்டு வல்லாதிக்க சக்திகளாக எழுந்து, பனிப்போர் ஒன்றுக்குள் புதைதந்திருந்தன அமெரிக்காவும், ரஷ்யாவும்.  ரஷ்யாவை ஆப்கானிஸ்தானில் நிஜமான யுத்தக் களமொன்றில் தோற்கடிப்பதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் தேவையாக இருந்தது.


அமெரிக்கா தானே திட்டமிட்டு நடாத்தியதாக அமெரிக்கர்களாலேயே குற்றஞ்சாட்டப்படுகின்ற செப். 11 தாக்குதலை நடாத்தி விட்டடு ஒசாமாவை குற்றஞ்சாட்ட முடியாது போயிருக்கும்.

செப். 11 தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு யுத்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளைத் தேடி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது போயிருக்கும்.


ஒசாமா என்ற ஒரு நபரும் அவரது “ஜிஹாதும்” இல்லையென்றிருந்தால் இன்றைய அமெரிக்காவின் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாமல் போயிருக்கும்.

ஒசாமா இல்லையென்றிருந்தால் அரபு நாடுகளுக்கு பாதுகாப்பை காரணம் காட்டி தனது புதுப்புது ஆயுதங்களை அமெரிக்காவினால் சந்தைப்படுத்த முடியாது போயிருக்கும்.


ஒசாமாவும், அவர் உருவாக்கிய தாலிபானும் இல்லாதுபோனால் தற்கொலைக் குண்டு என்ற போர்வையில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்க முடியாது போகும்.

ஒசாமா இல்லையென்றிருந்தால் இஸ்லாத்தை தீவிரவாதம், பிற்போக்குவாதம், பழமைவாதம் என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்ட முடியாமல் போயிருக்கும்.

அமெரிக்கா தனது அரசியல் தேவைக்காக பயங்கரவாதத்தை பிறப்பித்து, வளர்ர்து, பாதுகாக்கும் ஒரு நாடு.

சுரண்டல் முதலாளியத்தை அடிப்படைக் கொள்கையாக பின்பற்றும் அந்த நாடு தனக்கு எதிரான சோஷலிஸத்தை இல்லாதொழிக்க 80களில் இஸ்லாமிய வாதிகளை திட்டமிட்டுப் பயன்படுத்தியது.

முற்போக்கு சிந்தனையற்ற முல்லாக் கூட்டம் இந்த சதிவலையில் நல்லாவே மாட்டிக்கொண்டது.

விளைவு அமெரிக்கா மூட்டிய ஜிஹாத் நெருப்பு அமெரிக்காவிற்கு எதிராக இருந்த ரஷ்ய சார்பு நாடுகளில் பற்றத்தொடங்கியது.

அமெரிக்காவின் சதியினால் ஆப்கானிஸ்தானில் ஹிக்மத்தியார், ரப்பானி வகையறாக்களால் (யுத்தப் பிரபுகளால்) கொள்ளி வைக்கப்பட்ட ஜிஹாதிய நெருப்பு சர்வதேச மட்டங்களில் மட்டுமல்லாது அரபு நாடுகளையும் ஏன் இலங்கையைக் கூட உஷ்ணப்படுத்தியது என்றால் அதன் பாரிய தாக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கா வடிவமைத்த இந்த ஜிஹாதிய அனலில் இலங்கையின் இஸ்லாமிய இயக்க முல்லாக்களின் நரம்புகள் கூட விம்மிப் புடைத்தன.

மத்ரஸாக்கள் என்ற போர்வையில் பாகிஸ்தானில் ஜிஹாதிய பண்ணைகள் உருவாக்கப்பட்டன.  தாலிபான்களும், தற்கொலைப்போராளிகளும் கொத்துக் கொத்தாக யுத்தக் களங்களில் குவிக்கப்பட்டார்கள்.

ஆப்கானின் விடுதலைப் போராட்டம் என்பது இடது சாரகளான  இறைமறுப்பாளர்களுக்கு எதிரான போராட்டமாகவும் அல்லாஹ்வால் இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய உம்மாவிற்குக் கிடைத்த போராட்டக்களமாகவும் இன்றைய புகழ்பெற்ற “அஷ்ஷெய்க்” மார்கள் அடித்துச் சொல்லினர். அன்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றி மகிழ்ந்தனர்.

அமெரிக்க அரசியல் உலக முஸ்லிம்களின் ஆன்மீகத்தை எவ்வாறு தனது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்ள இந்நிகழ்வுகள் சிறந்த சான்றுகளாக திகழ்கின்றன.

இப்போது விஷயத்திற்கு வருவோம். பெனாஸிர் பூட்டோ ஒசாமா பற்றி, அவரது கொலைப் பற்றி தகவல்களை வெளியட்ட சிறிது காலத்தில் அவரும் கொலை செய்யப்படுகிறார்.

பெனாஸிரின் கருத்து உண்மையாக இருந்தால், இன்று ஒசாமாவைக் கொன்று விட்டதாகக் ஒபாமா நிருவாகம் சொல்வது வெறும் நடிப்பாக இருக்கலாம்.

அமெரிக்கர்களின் வரிப்பணம் வெளிநாட்டு யுத்தங்களுக்காக செலவிடப்படுவதை இப்போது அந்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர்.  தனது நாட்டுப் பிரஜைகள்வேறுநாடுகளில் மரணப்பொறியில் சிக்கியிருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.

செப். 11 தாக்குதலை புஷ் நிர்வாகமே திட்டமிட்டு செய்ததாக அந்நாட்டு புத்தி ஜீவிகள் பலத்த குற்றத்தைச் சுமத்தி வருகின்றனர்.   அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகுந்த விஞ்ஙான, தொழில் நுட்ப ஆதாரங்களை அவர்கள் ஊடகங்கள் மூலம் நிரூபித்தும் வருகின்றனர்.

இந்த இக்கட்டான அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதன் நிகழ்ச்சி நிரலில் அவசர மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது.

அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டு வரும் மக்கள் அழுத்தங்களை குறைக்க வெண்டும் என்றிருந்தால் வெளிநாட்டு அக்கிரமிப்பு யுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒசாமாவைத் தேடி ஆரம்பித்த பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒசாமாவை ஒழிக்க வேண்டும். அது இன்று நிகழ்ந்திருக்கிறது.

அரபு, மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஆதிக்கத்திற்கான, ஆக்கிரமிப்பிற்கான தனது புதிய நிகழ்ச்சி நிரலை வெள்ளை மாளிகை வெகு விரைவில் வெளியிட இடமிருக்கிறது.

அதை இப்படியும் யூகிக்கலாம்...!

இறந்த ஒசாமாவை அரசியலுக்காக உயிர் வாழ வைத்திருந்ததை மாற்றி
மீண்டும் இறக்க வைப்பது..!

எங்கள் நாட்டில் யானைக்கு சொல்லும் ஒரு பழமொழி ஒன்றிருக்கிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் இறந்தாலும் ஆயிரம்!

ஒசாமாவைப் பொறுத்தவரை

அமெரிக்காவிற்கு இருந்த போதும் ஆயிரம்
இறந்த போதும் ஆயிரம்.!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...