Tuesday 3 November 2009

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

Tuesday 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

Tuesday 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

Sunday 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

Wednesday 12 August 2009

இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!



இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாடு இலங்கை. சிங்கள பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில் ஹிந்துக்களும், கிறிஸ்த்தவர்களும் கூட சிறுபான்மையினரே.

அண்மையில் பேருவளை பள்ளிவாசல் எரிப்பும் அத்தோடு இடம்பெற்ற படுகொலை தொடர்பான துக்ககரமான செய்தியும் எல்லோரும் அறிந்ததே!

இந்த துக்ககரமான, இலங்கை முஸ்லிம்களை தலைகுனிய வைக்கும் நிகழ்வின் பின்னணியில் பெரியதொரு சதி இருப்பதை எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இந்த நிகழ்வு இடம்பெற முன் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி இலங்கையில் மதங்களுக்கிடையிலான ஒரு மோதலை உருவாக்கவே ஒட்டப்பட்டது.

நல்லவேளை, பேருவளை சம்பவத்தோடு இரண்டு உயிர்களைப் பலியெடுத்து தமிழ்நாடு தௌஹீத் பிரசாரம் நின்றுபோனது.

Sunday 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

Thursday 30 July 2009

சஊதி நிதியும் சதியும்




சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங்களை தோற்றுவித்து வருகிறது. 

ஒரே பள்ளிவாசல்; நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக் கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எமக்குள் பிரிவினை உருவாக்க சதி செய்த பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிதாமகன்கள் பின்னால் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

தீவிரவாதமும்;, சண்டையும், சச்சரவுகளும், ஒற்றுமையின்மையும் நோய்களாய் இந்த சமூகத்தை எப்படிப் தொற்றின? இதன் பூகோள அரசியல் பின்னணியை ஏன் நாம் புரியாமல் இருக்கின்றோம்? இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயருக்கு  காரணம் என்ன?

அறியாமையின் பக்கமும், அநியாயத்தின் பக்கமும், அட்டகாசத்தின் பக்கமும் வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் உலகை நாசத்திலிருந்து காத்து நேர்மையின் நிழலில் நிறுத்த வேண்டிய சமூகம். அல்குர்ஆனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, மனிதநேயத்தின் பால் முழு உலகையும் கொண்டு வரவேண்டும் என ஆவல் கொண்ட சமூகம் ஏன் இந்த இழி நிலைக்குத் தள்ளப்பட்டது?

எரியும் பிர்சினைகள் எவ்வளவோ இருக்க இந்த சமூகத்தை தீவிரவாதத்திலும், தீராத சர்ச்சைகளிலும், விதண்டா வாதங்களிலும் மூழ்கிக் கிடப்பதற்கு பிக்ஹ§ பிரச்சினைகளை வெறுப்புப் பேச்சுகளாய் பேசித் திரிவதே இஸ்லாத்தின் அழைப்புப் பணி  என்று அர்த்தப்படுத்திக் கொடுத்த அந்த அரசியல் சக்தி எது?

வெளிநாட்டுப் பணத்தால் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை மூளைச் சலவை செய்தது யார்? இந்தப் பிரிவினர் நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளேயே பிளவு பட்டு, கருத்து முரண்பட்டு குழுக்களாய் பிரிந்து புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் அமைத்து செயற்படுவதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

இவை எல்லாவற்றிற்கும் இருப்பது ஒரே ஒரு பதில்!
அது தான் சஊதி தஃவா பணம்!
பணத்தை வீசி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சஊதிக்கு ஏன் இப்படி ஒரு தேவை?

உட்பூசல்களைகயும், பிரிவினையையும் அது எதற்காக ஏனைய முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?

சஊதியின் மன்னர் அரசியலுக்கும், அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் உள்ள உறவின் பிறப்பே இந்த முஸ்லிம் உம்மத்தை கூறு போடும் சஊதியின் சதி!

அதை வேறுவிதமாக இப்படியும் சொல்லலாம்.

சஊதி அரேபியா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமான பூமி! ஏனைய முஸலிம்களுடனான அதன் உறவு ஈமானோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன் பிறந்த பூமி! அல்லாஹ்வின் தூதர் வளர்ந்த பூமி! அல்லாஹ்வின் தீன் எழுந்த பூமி! அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுகின்ற, பாதுகாக்கின்ற தார்மீக பொறுப்பு அந்த நாட்டிற்கு இருக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் அந்த நாட்டிற்கு தான் இருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்தின் தாத்பரியமும் இதைத்தான் சொல்கிறது. சஊதியை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆதிக்கம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு உலகையும் விழுங்கிக் கொண்டிருக் கிறது.  அது சூறையாடிய ஆபிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மரண படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றன.  மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்திற்கு கண்ணை வைத்த அமெரிக்கா தான் முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஒரு நாடுஎன்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறது. அது தனது எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்தற்காக சஊதி மன்னராட்சியை பாதுகாக்கிறது. அமெரிக்காவிற்கு சஊதி மன்னராட்சியை பாதுகாப்பதென்பது தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சமனான விடயமாகும். சஊதியில் மன்னராட்சி சரிவதென்பது அமெரிக்காவின் சரிவுக்கு சமனானதாகும்.

இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலும், இந்திய உபகண்டத்திலும்  தோற்றம் பெற்று வளர்ந்து வரும் கிலாபத் சிந்தனையும், இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தியலும்,  சஊதியின் வயிற்றில் மட்டுமல்ல அமெரிக்காவின் வயிற்றிலும் புளியைக் கரைத்து வருகிறது.

காலமெல்லாம் எண்ணெய் சூறையாடலை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் நடாத்த முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும், காலமெல்லாம் மன்னர்களாக மகுடம் சூடி அறியாமையின், ஜாஹிலிய்யத்தின் ஜாம்பவான ;களாக ஜொலிக்க முடியும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த சஊதிக்கும் இது இடையூறாகவே இருந்தது.

மத்திய கிழக்கில் எழுந்து வந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும், பலஸ்தீன் போராட்டமும், இந்திய உபகண்டத்தில் உதயமான ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமும் கிலாபத் சிந்தனையை கூர்மைப்படுத்தின. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் ஈரானில் ஏற்பட்ட மன்னராட்சியின் வீழ்ச்சியும், ஷீஆ அடிப்படைவாத ; எழுச்சியும் சஊதியை குலை நடுங்க வைத்தன.

இந்த கிலாபத் கருத்தியல்வாதிகளை, இயக்கங்களை தனது கைக்குள் வைத்திருக்கும் நோக்கில் சஊதி அரசாங்கம் ஆரம்பம் முதல் இந்த இயக்களுக்கு நிதியதவியை வழங்கி போஷித்து வளர்த்தது. தனது பெற்றோல் பணத்தின் பொறிக்குள் தான் சார்ந்த அமெரிக்க அரசியல் நலன்சார்ந்த எஜன்டாவிற்குள் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தவாதிகளை சிக்கவும் வைத்தது.

அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கையில் கொண்டு வந்து கொட்டப்பட்ட பெற்றோல் டொலர்களால்  இஸ்லாமிய அரசியல் சிந்தனையை வாயிலும் அதற்கு நேரெதிரான மன்னராட்சியை இதயத்திலும் வைத்துக்கொண்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் என தம்மைத் தாமே அழைத்துக் கொண்ட கூலிப்பட்டாளங்களின் கூட்டங்கள்  அந்த நிதிச் சதியில் பிறப்பெடுத்தன.

கிலாபா மற்றும் பித்அத் எதிர்ப்பு கருத்தியல் காவிகளான  தலைவர்களுக்கு 'மப்ஊஸ்' என்ற பட்டம் (சஊதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்) வழங்கி ஆயிரக்கணக்கில் மாதாந்த கொடுப்பனவும் வழங்கியது சஊதி அரசு. 

சஊதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களுக்கு சஊதிக்கும், அமெரிக்காவுக்கும் பாதகம் இல்லாமல் தஃவாவை வடிவமைக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. 70 களின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த பனிப்போரின் முக்கிய பாத்திரங்களாக இந்த 'பெற்றோல் டொலர் புண்ணியவான்கள்'  பாவிக்கப்பட்டார்கள்.

சஊதியின் இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடு;களையும் தமது சம்பளப் பணத்தையும் பாதுகாத்துக் கொண்டு சேவையாற்றும் சிறந்த  இஸ்லாமிய அழைப்பாளர்களாக (தாஈகளாக)  இவர்கள் உருவாகினார்கள்.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில்  கிலாபத் இயக்கங்களுக்கு போட்டியாக சஊதி அரசு தனக்கே உரிய, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பித்அத்களுக்கு எதிராக போராடும் 'வஹ்ஹாபிஸ' கருத்தியலை களம் இறக்கியது. அந்தக் காலப்பிரிவில் வளைகுடாவில் ஏற்பட்ட ஈராக், குவைத் பிரச்சினை அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் கால் பதிக்க சிறந்த காரணமாக மாறியது.

90களில் ஈராக் இராணுவம் குவைத் நாட்டை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து,அமெரிக்க படையின் குவைத் மீட்பிற்கு பிறகு வஹ்ஹாபிஸத்தையும், கிலாபத் சிந்தனையையும் இரு கூறுகளாக மாற்றி சஊதி, அமெரிக்க உளவு நிறுவனங்களின் மேற்பார்வையில் இந்த தஃவா இயக்கங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. 

பித்அத் எதிர்ப்பு வஹ்ஹாபிஸ இயக்கங்களுக்கு சஊதியும், கிலாபத் கருத்தியல் கொண்ட  இயக்கங்களுக்கு குவைத்தும் பகிரங்கமாகவே உதவியளித்து வருகின்றன. சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளை வளர்த்து, கருத்து முரண்பாடுகளுக்குள் மூழ்கி கிடக்கும் ஒரு சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி சில்லறை பிரச்சினைகளுக்குள்ளும், பிரிவினைகளுக்குள்ளும் சமூகத்தை சிக்க வைப்பதில் சஊதி வெற்றி யும் கண்டிருக்கிறது.

உண்மையில் சஊதி அரசாங்கம் இஸ்லாத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அதற்கு இருக்குமேயானால், தன்னுள் குடிகொண்டுள்ள ஜாஹிலிய்யத்தான அசிங்கங்களை அகற்றி ஓர் உண்மை முஸ்லிம் நாடாக அதற்கு முன்னுக்கு வர முடியும். உலகளாவிய இஸ்லாத்தின் தலைமைத்துவத்தை ஏற்று முழு உலகிற்கும் வழிகாட்டவும்,  முன்னுதாரணமாய்  திகழவும் அதற்கு  முடியும்.

ஆனால் சஊதி தன் தலையில் சூடிக்கொண்டிருப்பதோ மௌட்டீகத்தின் மறுபிறப்பான மன்னராட்சி அரசு ! 

ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் இருப்பதோ வலிமையாளன், எளிமைமையானவனை ஏய்த்துப் பிழைக்கும் சமூக அநீதி! அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாத்திற்கும் சஊதிக்குமான இடைவெளி  மிக  மிக  அதிகம்  என்பதே.

இஸ்லாத்தை விட்டும் தூரமாக பயணித்துக் கொண்டிருக்கும் சஊதி போன்ற ஒரு நாடு எமது நாட்டில் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்கும், துல் ஹஜ் மாதம் உழ்ஹிய்யா என்ற மாடுகளை பலியிட்டு பகிரும் செயற்பாட்டிற்கும் பல கோடிக்கணக்கான  ரூபாய்களை  தனது ஏஜன்ட்கள் மூலம் வழங்கி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த நடவடிக்ககைகள்; இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன ரீதியிலான விரிசல்களை ஏற்படுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்று என்பதை அனேகம் பேர் அறியாமல் இருக்கின்றனர்.

சஊதி நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களுக்கு பல இன்னல்கள், கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு ஒழுங்கான ஊதியம் வழங்கப்படாமல் அடிமைகள் போல நடாத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏழைகளுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்காதவர்கள்;,  அந்நிய பெண்களை பணிப்பெண்ணாய் தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களை கொடுமை செய்பவர்கள்;, அவர்களை மானபங்கப் படுத்துபவர்கள், உண்மை முஸ்லிமாக இருப்பார்களா? அவர்களிடமிருந்து உண்மையான இஸ்லாத்திற்கான உதவியைத்தான் எதிர்பார்க்க  முடியுமா? என்ற கேள்வியின் நியாயத்தன்மையை நிறைய பேர் புரியாமல் இருக்கின்றார்கள். இஸ்லாமிய பிரசாரம் என்ற போர்வையில் இலங்கை போன்ற நாடுகளில் பணத்தைக் கொண்டு வந்து கொட்டாமல், தனது நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரியும் ஏழை பெண்களுக்கு கருணை காட்டி இஸ்லாம் போதிக்கும் மனித நேயத்தை உலகிற்கு பறைசாற்ற முடியும்.

ஒரு வாதத்திற்கு எல்லா அரபுகளும் அப்படியல்ல, அந்நாட்டிலுள்ள  நல்லவர்கள் தான் எமக்கு,  எமது தஃவா இஸ்லாமிய பிரசார  பணிகளுக்கு பணம் தருகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், தனது நாட்டில் நடக்கும் இந்த கொடுமைகளை ஏன் இந்த நல்லவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? சவுதி நாட்டில் இடம்பெறும் அநீதிகளை தடுத்து நிறுத்தி இஸ்லாத்தின் பெயரை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காமல்  இலங்கை நாட்டிற்கு பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு நிதியும், ஹஜ் மாதத்தில்  மாடுகளை அறுத்து பலியிடும் உழ்ஹிய்யா கடமையை ஊக்குவிக்க பணமும், நோன்பு துறக்கும் இப்தாருக்கு ஈத்தம் பழங்களை வழங்குவதால் இவர்களின் கடைமை நீங்கு விடுமா?

வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து மீண்டு வரும் எண்ணத்தில் தனது நாட்டிற்கு வரும் தொழிலாளர்களுக்கு சஊதி கொடுக்கும் சித்திர வதையை வாயால் சொல்லித் தீர்க்கத்தான் முடியுமா? சொந்தங்களை பிரிந்து அபலைகளாய் அந்த நாட்டில் தஞ்சம் புகும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்கு அந்த நாடின் சட்டங்களால் கூட பாதுகாப்பு வழங்க முடிவதில்லையே!  சுருக்கமாக சொன்னால் அன்று இஸ்லாம் ஒழித்துக்கட்டிய அடிமைத்துவத்தை இன்றைய அரேபிய குபேரர்கள் அச்சொட்டாக உயிர்ப்பித்து இருக்கிறார்கள். அன்றைய அடிமைகள் பட்ட துன்பத்திற்கும் இன்றைய தொழிலாளர்கள் படும்   துன்புறுத்தல்களுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. 

அன்றைய ஜாஹிலிய்யா  அறியாமைக் காலத்தில் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்த நிலை மாறி இன்றைய சஊதியின் நவீன ஜாஹிலிய்யத்தில் இரண்டு அல்லது அதற்கு கூடிய வருடங்கள அடிமையாக இருக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வருட அடிமை வாழ்வில் அவர்களுக்கு ஊதியமாய் வழங்கப்படுவதோ மிகவும் சொற்ப பணம். சொற்ப பணத்திற்கு 24 மணிநேரமும் உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இத்தகைய இஸ்லாம் விரும்பாத அத்தனை செயல்களுக்கும் முன்னுதாரணமாக இந்த முடியாட்சி நாடு விளங்குகிறது.

மன்னராட்சி மூலம் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துக் கொண்டிருக்கும் சஊதி நாடு, அது செய்யும் குற்றங்களை மூடி மறைத்து உலக முஸ்லிம்களை வேறு பக்கம் திசை திருப்பவே தனது ஏஜன்டுகள் மூலம் பிக்ஹ§ என்ற இஸ்லாமிய வழிபாடுகள் சார்ந்த கருத்து முரண்பாடுகளை பிரச்சினைகளை பிரச்சாரமாக்கியிருக்கிறது. 

அல்குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற மனித நேயத்திற்கு அழைப்பு விடும்  மகத்தான பணியை அது மறைத்து வைத்திருக்கிறது. பெயரளவில் அது குர்ஆனை சட்டநூலாக வைத்திருக்கிறது.

ரசூலுல்லாஹ தொழுததைப் போன்று தொழ உலகிற்கு பிரசாரம் புரியும் சஊதி அரசு, றசூலுல்லாஹ் ஆட்சி செய்தது போல் செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது. ரசூலுல்லாஹ் மிகவும் வெறுத்த ஆடம்பரத்தை அது அணைத்து பிடித்துள்ளது. தொழுகையும் 'பித்அத்' என்ற  எதிர்ப்பு நிலை மட்டுமே இதன் தஃவாவின் அடிப்படையாக மாறியிருக்கிறது. 

ஒரு தெருவில் இரண்டு மூன்று பள்ளிவாசல்களை கட்டி சமூகத்தை கூறுபோடும் இதன் போக்கில் ஸக்காத் பெயரளவில் உச்சரிக்கப்படும் ஒன்றாகவெ இருக்கிறது. பட்டினியால் வாடும் நாடுகள் பல இருக்க இலங்கைக்கு இறைச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.

அரபுகளின் ஸக்காத் பணத்தை அறவிட்டு இலங்கை போன்றதொரு நாட்டிற்கு வழங்கினால் எத்தனை ஏழைகளை வறுமையின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கலாம்? றசூலுல்லாஹ் தொழுதது போல் தொழ மட்டும் தானா வேண்டும்? றசூலுல்லாஹ் செய்தது போல் ஸக்காத் கடமையை செய்யக் கூடாதா? பள்ளிவாசல்களை மட்டும் தான் கட்டவேண்டுமா? பாடசாலைகளை கட்டி இந்த முஸ்லிம் சமூகத்தை முன்னேற விடக் கூடாதா?

தஃவா என்ற பதம் பிக்ஹ§ பிரச்சினைகளை முன் வைத்து வாதாடும் வாய்ச்சண்டை களமாக கொச்சைப்பட்டு நிற்கிறது. உண்மையான இஸ்லாமிய தஃவாவின் மனித நேய ஒளியில் உலகம் ஒளிர வேண்டிய காலத்தில் சர்ச்சைகளை இலங்கைக்கு ஏற்றுமதி  செய்து  சஊதி  இன்பம்  காணுவதின் பின்னணியில் அமெரிக்க நலன் காக்கும் ஓர் அரசியல் இருக்கிறது.

சஊதி பணத்தில் சுவாசித்து உயிர் வாழும் அத்தனை இயக்கங்களும் இன்று ஒன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தன்னை தௌஹீத் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், மாற்றுக் கருத்துள்ள மௌலானா மௌதூதியை வழிகேடர் என்று வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

கிலாபத் சிந்தனையை கூலிக்காக பேசுகின்ற ஏனைய இயக்கங்கள் தௌஹீத்வாதிகளை திட்டித் தீர்க்கின்றனர்.  

ஒரே நாட்டின்  நிதி மூலத்திலிருந்து உதவி பெற்று பல கூறுகளாய், பல ஜமாத்களாய், பல பிரிவுகளாய் பிரிந்து நின்று இவர்கள் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள் என்று பிரசாரம் புரிகின்றனர்.  இவர்களிடம் இல்லாத ஒற்றுமை இவர்களின் பிரசங்கஙகளை கேட்பதால் மக்களுக்கு எப்படி வரும்?

இறுதியாக, இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர்  நபி (ஸல்) அவர்களும் , அவரின் உத்தம தோழர்களும் தன் சொந்த உழைப்பிலேயே இஸ்லாமிய பணி புரிந்தார்கள். அவர்களின் இஸ்லாமிய பிரசாரத்தின் பின்னணியில் எதிரிகளின் அரசியல் நலன் காக்கும் எந்த எஜன்டாக்களும் இருக்கவில்லை.  

முனாபிக்குகளின் 'முதுகு சொறியும்' அரசியலை அவர்கள் ஒரு போதும் செய்யவில்லலை.  அபூஜஹ்ல்களிடம் ஊதியம் அறவிட்டு அவர்கள் ஒரு போதும் தஃவா இஸ்லாமிய அழைப்புப் பணி  செய்யவில்லை.  அவர்கள்  தன் சொந்த உழைப்பிலே அவர்கள் இஸ்லாத்தை உயிர்ப்பித்தார்கள். மனித நேயத்தை வளர்த்தார்கள்.  

ஆனால் இன்றைய இஸ்லாமிய அழைப்புப் பணியாளர்கள் ரசூலுல்லாஹ் செய்யாத அழைப்புப் பணிக்காக ஊதியம் பெறும் அதி நவீன பித்அத்தை செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Wednesday 22 July 2009

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்


உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். 

ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. 

சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.  ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். 

 ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. 

ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று வீதம் உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போருக்கு ஜிஹாத் சாயம் பூமி ஆப்கானை அழிக்க துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி தஃவா இயக்கங்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே.

ஆப்கானை பயங்கர ஆயுத கிடங்காக மாற்றியதன் விளைவாக “இஸ்லாமிய பங்கரவாதம்” என்ற சொற்றொடரை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவே பயன்படுத்த அரம்பித்தது.

சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட “ ஜிஹாத் ” அடுத்த கட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு சஊதியும் அதன் கைக்கூலிகளும் மறைமுக உதவி பரிந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆப்கானில் இன்னும் யுத்தம் தொடர்கிறது. அன்று ஜிஹாத் பேசி மக்களின் உணர்வலைகளை உசுப்பி விட்ட உத்தம புத்திரர்கள் அமைதியாய் கிடக்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு செய்த ஒப்பந்த பணியின் வெற்றியின் களிப்பில் ஊமையாய் இருக்கின்றார்கள்.

Tuesday 21 July 2009

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!


இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...