Friday 25 March 2011

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - பகுதி3



  மலேசிய தமிழ் இலக்கிய விழா கட்டுரை பகுதி 1
மலேசிய தமிழ் இலக்கிய விழா கட்டுரை பகுதி 2


அறிமுகம்


மலேசிய இலக்கிய விழா குறித்த எனது இரண்டாவது கட்டுரைக்குப் பின்னர் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இலங்கை சார்பில் நடந்திருப்பதை அறிய வந்தேன். அந்த விபரங்களைப் பதிந்து விடவேண்டும் என்பதும் இன்னும் மீளாய்வுகளும் திருத்தங்களும் தேவை என்பதைத் தெரிவிப்பதுமே நெடுங்கட்டுரையின் மூன்றாவது அங்கத்தின் நோக்கம்.
இதுவரை அச்சில் வெளிவந்து பலர் கவனத்துக்குக் கட்டுரைகள் செல்லாத போதும் அடைய வேண்டிய தளங்களைச் சர்வதேசிய ரீதியில் இணையம் மூலமாகவே எட்டியிருப்பது என்னையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அது தவிர இந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருமே கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும் வரவேற்கத் தகக்து.


இத்தொடரை 5 கட்டுரைகளுடன் நிறைவு செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் சற்று நீண்டு ஒரு நூறு அல்லது நூற்றறைம்பது பக்க நூலாகி விடும் போல் தெரிகிறது. கூடியவரை சுருக்கிக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ‘சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு’ என்றோ ‘மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா’ என்றோ அல்லது இந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல்லை வைத்து இணையங்களில் சொடுக்கித் தேடினாலும் காலாகாலமாக எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா (பகுதி2)



இந்தக் கட்டுரை மலேசிய தமிழ் இலக்கிய விழா (பாகம் 1) இன் தொடர்ச்சியாகும்

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?

மலேசியாவில் நடத்தப்படுவதாக குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினரால் “சர்வதேச மாநாடு” என்று முழக்கம் கொட்டப்படுகின்ற நிகழ்வானது ஒரு சர்வதேச மாநாட்டுக்குரிய வலுவான பின்னணிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதை மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா என்று அழைப்பதே பொருந்தும்.

Monday 21 March 2011

அரபு சுல்தான்களும் அமெரிக்க ஷைத்தான்களும் அடிவருடி மஸ்தான்களும்



அமெரிக்கா மற்றுமொரு படுகொலை ஆக்கிரமிப்பிப்பை ஆரம்பித்திருக்கிறது. சதாமை ஒழித்த அதே பாணியிலான நாடகம் லிபியாவில் அரங்கேறிவிட்டது. அந்த ஆக்கிரமிப்பிற்கான பச்சைக் கொடியை பத்வாவாக அதன் அடிவருடி களினால் வழங்கப்பட்டும் விட்டது.

லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாட எதிரிகள் அணிதிரண்டு விட்டனர். வளங்களை கொள்ளையிடும் ஆதிக்க சக்திகள் உலக ஊடகங்களை திசை திருப்ப உள்நாட்டுப் போர் ஒன்றை உடனே அங்கு உருவாக்கியும் விடுவார்கள்..

அங்கு இனி குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்களும் சகஜமாய் நடக்கும் சம்பவமாய் மாறிப்போகும்.

சொந்த நாட்டுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி ஒருவரை மற்றவர் குதறித் தின்னும் ஜிஹாதிய வெறியை ஊட்டி இரத்தத்தால் அந்த மண்ணை ஈரமாய் ஆக்கும் பத்வாக்கள் மீண்டும் மீண்டும் காற்றில் பறக்க விட பலர் காத்து நிற்கின்றார்கள்.

இதுதான் அமெரிக்காவின் எதிரிக்கு, எதிரிகள் ஆளும் நாடுகளுக்குக் கிடைக்கும் பரிசு!

ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், செச்னியாவில், பொஸ்னியாவில் நடந்து முடிந்த நரவேட்டைகளின் அடுத்த நகர்வு லிபியாவை நோக்கியிருக்கிறது. மேற்சொன்ன நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் சுரண்டலுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் துவம்சம் செய்யப்பட்ட தேசங்கள்.

ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யாவை சார்ந்திருந்து அதன் இராணுவ உதவியை வேண்டி நின்ற போது, ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. ரஷயப் படைகளுக்கு பாடம் கற்பிக்கவும், ஆப்கானை ஆக்கிரமிக்கவும் அமெரிக்கா வியூகம் வகுத்தது.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார் கைப்பிள்ளையான முல்லாக்களை வைத்து அமெரிக்கா மார்க்கத் தீர்ப்புகளை வெளியிட வைத்தது.

யூசுப் அல் கர்தாவி ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடுமாறு முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தார். அந்த நாட்டின் சிறுவர் முதல் பெரியோர் பெண்கள் உட்பட அனைவரும் இராணுவ மயப்படுத்தப்பட்டனர்.  ரஷயா விரட்டியடிக்கப்பட்டதும்.  போராளிகளுக்கிடையில் பிணக்குகளைத் தோற்றுவித்து சீ.ஐ.ஏ ஆப்கானைக் கைப்பற்றிக்கொண்டது.

கர்தாவியின் பத்வாவை நம்பி களத்தில் குதித்த முஜாஹிதீன்களுக்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. வெற்றியின் பின்னர் ஆப்கான் தேசம் அமெரிக்காவிற்கு கைமாறியது. கர்தாவி அமைதியானார்.

அன்று ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்ட கூக்குரலிட்ட கர்தாவி இன்று அங்கிருந்து அமெரிக்காவை விரட்ட ஜிஹாதை பிரகடனம் செய்யாமல் மௌனம் காக்கிறார்.

இன்று அந்நாட்டு சிவிலியன்கள் நாளுக்கு நாள் கொலை செய்யப்பட்டுக கொண்டிருக்கின்றனர்.

எகிப்தின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட கர்தாவி, பஹ்ரைன் போராட்டத்தை எற்றுக்கொள்ள மறுக்கின்றார்.  அதற்கு முக்கிய காரணம் வளைகுடாவில் அமெரிக்காவிற்கு முக்கியமான தளமாக பஹ்ரைன் திகழ்வதாகும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் பஹ்ரைனில் இருக்கிறது. பஹ்ரைனை இழக்க அமெரிக்கா ஒரு போதும் தயாரில்லை. எனவே கர்தாவி அவரது பத்வா பல்டியை மாற்றி அடித்துள்ளார். பஹ்ரைன் போராட்டம் மக்களின் போராட்டம் இல்லையென்று அமெரிக்காவை அவர் ஆறுதல் படுத்தியிருக்கிறார்.

காஸாவுக்குள் புகுந்து 1400 மக்களைக் கொன்ற இஸ்ரேலுக்கு எதிராக எதுவுமே செய்யாத சவுதி அரேபியா, இன்று தனக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும் பஹ்ரைனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அங்கு அனுப்பியிருக்கிறது. கத்தார் நாடு இஸ்ரேலோடு கொஞ்சி குலாவுவதை மௌனமாக பார்த்திருக்கும் கர்தாவி, கதாபியைப் பார்த்து கர்ஜிக்கிறார்.

சுருங்கச் சொன்னால் பூகோள அரசியல் ஒன்றிற்காக முஸ்லிம் தேசங்கள் உள்நாட்டு வெளிநாட்டு யுத்தங்களால் சிதைக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.

காட்டிக்கொடுத்து, எதிரிகளுக்கு கூஜா தூக்கும் கோடரிக்காம்புகளாக கர்தாவிகளும், அப்துல்லாஹ்க்களும் அணிவகுத்து நிற்கின்றனர்.

Monday 7 March 2011

“கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!” யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கர்தாவியின் அமெரிக்க, அரபு மன்னர்களுக்குச் சார்பான அடுத்த காய் நகர்த்தல் “பத்வா”வாக வெளிவந்திருக்கிறது.

கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!

இது லிபிய மக்களின் போராட்டத்தை ஆதரித்து கத்தாரிலே மௌட்டீக மன்னர் ஆட்சியின் நிழலிலே வாழ்கின்ற கர்ளாவி வெளியிட்ட அனல் பறக்கும் பத்வா.


இந்த பத்வாவின் இரகசியம் என்ன?

இன்று அரபுநாடுகளில் மக்கள் போராட்டம் எழுச்சிபெற்று வருவதால், பக்கத்து நாட்டு மன்னர்கள் குலை நடுங்கிப்போயுள்ளனர்.
தூனிசியாவிலிருந்து எகிப்துக்கு சென்று லிபியாவை அடைந்திருக்கிறது இந்தமக்கள் போராட்டம்.

இஹ்வான்கள் பலரைக் கொன்ற எகிப்தின் முபாரக்கிற்கும், தூனிசியாவின் பின் அலீக்கும் வழங்காதகொலைபத்வாவை கர்ளாவி ஏன் கத்தாபிக்கு மட்டும் வழங்கினார்?

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...