Sunday 30 January 2011

எகிப்தில் அல் ஜஸீராவுக்குத் தடை!


மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் எகிப்திய முபாரக் அரசு தற்போது ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையை செயற்படுத்தி வருகின்றது.

இணைய வலையமைப்புகளை முற்றாக செயலிழக்கச் செய்திருக்கும் அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அல் ஜஸீரா ஊடக அமைப்பின் சகல செயற்பாடுகளையும் தடைசெய்திருக்கிறது.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா மீதான தடை கருத்துச் சுதந்திரத்தை முற்றாக மறுக்கும்  செயலாகும்.

இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கும் முபாரக் அரசின் இந்த முடிவு எகிப்திய மக்களின் எதிர்ப்புக் குரலை உலகறிய செய்யாதிருக்கும் இறுதி முயற்சியாகும்.

  

எகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெளியேற்றம்!


          
கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.

சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.

எகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு தப்பியோட்டம்!


மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)

எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும்  அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.



(மக்கள் எழுச்சியில்  சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)


எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Saturday 29 January 2011

Latest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாதிகாரம்?





மூன்று தசாப்த சர்வாதிகாரம் அதிர்ந்து போகிறது.
 அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாட்டு மன்னர்களின் ஆசிர்வாதம் அழிந்து போகிறது.
 ஹுஸ்னி முபாரக்கை  எதிர்த்து இரவு பகலாக தொடர்கிறது எகிப்திய மக்கள் எழுச்சி... 


மக்கள் எழுச்சிக்கு முன்னால் திராணியற்று நிற்கும் தாங்கிகள்


இராணுவ தாங்கிகளை தமதாக்கி்க் கொள்ளும் எகிப்திய இளைஞர்கள் 

எழுச்சிக்கு முன்னால் ஒளிந்துக் கொள்ளும் இராணுவ பலம்

தூனீசியாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அந்தத் தீ எகிப்தைின் இராணுவ தாங்கிகளை எப்படித் தாக்கியது? 
புரட்சி என்ன தொற்று நோயா? 
 மக்கள் எழுச்சிக்கு முன்னால் மண்டியிட்டிருக்கும் இராணுவ தாங்கி

தீயில் குளிக்கிறது ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சித் தலைமையகம்

 எகிப்தின் எதேச்சதிகாரமும், எழுச்சியும் சந்தித்துக்கொண்ட 
 தஹ்ரீர் சதுக்கம்

கவசங்களோடு ...மக்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் காவல் நாய்கள்.

காட்டாறு வெள்ளத்தை கைகளால் தடுக்க முடியுமா?
கண்ணீர்ப் புகை!

இராணுவத்திற்கும் இதயம் இருக்கிறதே!


புரட்சியின் பாதை ஓளிர்கிறது.


இங்கு (எகிப்தில்) பற்றி எரிவது அடக்குமுறை மட்டுமல்ல 
 இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு தலைவர்களினதும் அதன் அடிவருடிகளான பக்கத்து நாட்டு அரபு மன்னர்களின் அடிவயிறுகளும்தான்.



Sunday 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.

Wednesday 19 January 2011

சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்!

சினிமா பற்றி ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை


சினிமா பற்றி சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை சமநிலைச் சமுதாயம் ஜனவரி இதழில் ஆளுர் ஷாநவாஸ் எழுதியிருந்தார். அதன் பிரயோசனம் கருதி பத்ர் களத்தில் பதிவிடுகின்றேன்.



ண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.


இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.


ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.


வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Friday 14 January 2011

நிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!

வெள்ள நிவாரண உதவி



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அனுசரணையில் அல் அமான் நுஸ்ரத் அமைப்பும், வட கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனமும்  இணைந்து  நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.

நிர்க்கதியான மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள்!

Al Aman Nusrath Organization

Alhaj Amanullah Sharief +94 727 362075, Alhaj Faiq Makeen +94 777 703388
Alhaj Badrul Muneer +94 714 045933  F. Imraz +94 777 723733

Friday 7 January 2011

வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளும்!!

இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் பணிப்பாளர் ஹாஜிகளை வேண்டியிருந்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்படொன்றின் பிரதியொன்று நவமணி பத்திரிகைக்கும், பத்ர்களத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகயமமாக மாறிக்கொண்டிருக்கும் ஹஜ் பிரயாணம், பணத்தை குறியாக வைத்து இயங்குகின்ற ஒருசில ஹஜ் முகவர்கள், ஊடகங்களில் ஹஜ் உம்ராவிற்கு கிடைக்கின்ற அதீத விளம்பரம் போன்றவை ஹஜ்ஜின் மகத்துவத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதனை இந்த ஹாஜியின் முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.சில மோசடி ஹஜ் முகவர்கள் ஊடகங்களில் சிறப்பான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பொய் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தி ஹாஜிகளிடமிருருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.இவ்வருடம் பல இலட்சம் பணத்தை கொடுத்து ஹஜ் கடமைக்காக சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள கடிதமும், காணொளியும் (வீடியோ) சாட்சி பகர்கின்றன.




28.12.2010.
அல்ஹாஜ் வை. எல் எம் நவவி,
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களம்,
180, டீ.பீ ஜாயா மாவத்தை,
கொழும்பு.10

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஹஜ் பிரயாணத்தின் போது இடம் பெற்ற குறைபாடுகள் பற்றிய முறைப்பாடு

நான்  ஏற்கனவே இரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற அனுபவத்தையும் இம்முறை குடும்பம் சகிதம் அங்கு சென்று அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இம்முறை மினாவில் ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமும், இன்னல்களும், அவலங்களும் இதற்கு முன்னைய ஹஜ் பிரயாணங்களில் எப்போதுமே இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

சென்ற வருடங்களில் ஹஜ் முகவர்களே நேரடியாக “முதவ்வாக்”களை ஏற்பாடு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதன் போது இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் பல் வேறு “முதவ்வாக்க”ளின் கீழ் பொறுப்புக் கொடுக்கப் படுவார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை ஹஜ் கமிட்டியினரே இந்த ஏற்பாட்டை செய்யப் பொறுப்பேற்றிருந்தனர். வழமைக்கு மாற்றமாக ஹஜ் கமிட்டி இலங்கையிலிருந்து சென்ற அத்தனை ஹாஜிகளையும் ஒரே முதவ்வாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இம்முறை ஹாஜிகள் சந்தித்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஹஜ் கமிட்டியினர் செய்த இந்தத் தவறேமூல காரணமாய் மாறியது என தங்களை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத 80 வீதமான ஹஜ் முகவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

26.12.2010 அன்று ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் கமியிட்டடியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதை மறைமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இம்முறை ஹஜ் பிரயாண ஏற்பாடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்ட விரும்புறேன்.

நாம் 41ம் இலக்க முதவ்வா அலுவலகத்தினரால் வழி நடாத்தப் பட்டோம்.

• சுமார் 4000 பேர் தங்கியிருக்க வசதியுள்ள கூடாரங்களில் (வநவெ) 5800 பேரை திணித்தார்கள். இதனால் பலர் பகல் நேரங்களில் மாத்திரம் கூடாரத்துக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் பாதைகளில் தூங்கியதையும் காண நேர்ந்தது.


• இந்த 5800 பேருக்கும் சமைப்பதற்கு ஒரு சமையலறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் தண்ணீர் வசதியுட்பட மலசல கூட வசதிகளும் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவு நீர் கூட கூடாரங்களுக்குள்ளேயே வழிந்தோடியது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த அசுத்தமான (நஜீஸ்) தண்ணீர் சுமார் அரையடி வரை சமையலறைக்குள் தேங்கி நின்றது. மேற் பார்வை செய்ய வந்த சவுதி ஹஜ் கமியிட்டியினர் கூட அங்கு வைக்கப் பட்டிருந்த முறைப்பாட்டுப் புத்தகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவே குறிப்பொன்றை எழுதிவிட்டுச்சென்றார்கள்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...