Saturday 13 February 2010

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் .... உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ....
கொழும்பில் ...உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

உலமா சபையின் ஹலால் பத்வா  விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது.  கண்மூடித்தனமாக  உலமா சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை  (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும்  நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்   இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை உலமா சபை வழங்கி வருகின்றது.



இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும்  இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு உலமா சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது.  அதற்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.

UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து உலமா சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன.  இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா  6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும்  அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக  இஸ்லாமிய ஷரீஆவை  பயன்படுத்துவதையும்  இந்த சதிக்கு உலமா சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.

அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால்  அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...