Showing posts with label israel. Show all posts
Showing posts with label israel. Show all posts

Thursday, 12 June 2025

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

 


குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது.


ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் Popular Forces என்ற புதிய கூலிப்படை ஒன்றை இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் காஸாவில் களமிறக்கி இருக்கிறது.

இந்த பொப்பியுலர் ஃபோர்ஸஸின் தலைவர் யாஸிர் அபூ ஷபாப்!


சீஐஏ மற்றும் மொசாட்டுக்கு மிகவும் பிரியமான “அபூ” என்ற அடைமொழியை வைத்தே இந்த அநியாயக்காரனை இஸ்ரேலிய ஊடகங்கள் போற்றிப் புகழ்ந்து வருகின்றன.


யாஸிர் அபூ ஷபாப் என்பவன், ஒரு முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரன். அதுமட்டுமல்லாமல், பல கிரிமினல் வேலைகளுக்கு சொந்தக்காரன். பலமுறை ஹமாஸினால் தண்டிக்கப்பட்டவன்.

பசியால் வாடிக்கொண்டிருக்கும், காஸா மக்களுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை இடைமறித்து, அபகரித்துச் செல்லும் “கொந்தராத்து“ வேலை இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று, காஸாவின் தெற்கு ரஃபா எல்லையின் கட்டுப்பாடு, இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவத்தின் உதவியுடன் இவனது கைகளுக்கு சென்றிருக்கிறது.


கடந்த 2024 மே மாதத்தில், யாஸிர் அபூ ஷபாபின்  கும்பல்  தனக்கு பொப்பியுலர் ஃபோஸஸ்  என்ற பெயரை சூடிக்கொண்டது.  ஹமாஸ் காசாவை தவறாக நிர்வகித்து  வருவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டு களத்தில் குதித்தது. குறுகிய காலத்தில் இஸ்ரேல் இராணுவத்துடனான  இந்த கும்பலுக்குள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.  காசா மக்கள் இந்த கும்பல்   இஸ்ரேலின் நாடகத்தை அரங்கேற்றும்  துரோகிகள் மற்றும் திருடர்கள் என்று குறிப்பிட்டனர். அவனது சொந்த குடும்பத்தினர் கூட அவனைத் துரோகி என்று வெளிப்படையாக தூற்றினர்..


யாஸிர் அபூ ஷபாபும் அவனது 300 பேர் கொண்ட கூலிப்படை கும்பலும், காஸாவுக்கு செல்லும் உணவு விநியோகத் திட்டத்தை இடைமறித்து தடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

பட்டினியால் வாடும் மக்களுக்குச் செல்ல வேண்டிய உதவிப்பொருட்களை கொள்ளையிட்டு அதிக விலைக்கு இந்த கூலிப்படை விற்பனை செய்தும் வருகிறது.


பட்டினியால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்கள் இந்த உதவிப் பொருட்களை பெற ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த போது, இந்த கூலிப்படை கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றுள்ளது.

காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் என்ற இந்த கூலிப்படைக்கு பூரண அனுசரணையை வழங்கி வருகின்றன.


காஸாவிற்கான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை இந்த கூலிப்படை கொள்ளையடித்து வருகிறது.

உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன சங்கத்தின் தலைவர் நஹிதார் என்பவா் கூறுகையில், "யாஸிர் அபூ ஷபாபின் அடியாட்கள் டிரக்குகளைத் தடுத்து, டிரைவர்களை மிரட்டுகின்றனர். எதிர்ப்பு காட்டினால், வாகனத்தின் டயர்களை குண்டு வீசி சேதப்படுத்துகின்றனர் " என்று குற்றம் சாட்டுகிறார்.

ஐ.நா.வின் ஆவணங்களும், யாஸிர் அபூ ஷபாபை "மனிதாபிமான உதவிகளை முறையாக கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவர்" என்று வர்ணித்திருப்பதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


"ஹமாஸை பலவீனப்படுத்த, காஸாவில் உருவாகும் மாற்று சக்திகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவுகளை வழங்குவோம்!" என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக இந்த கூலிப்படை தொடர்பாக குறிப்பிட்டுள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன.


ஜூன் 5 ஆம் திகதி, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவரும்,  வலதுசாரி இஸ்ரேல் கட்சியின் தலைவருமான அவிக்டோர் லிபர்மன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை காசாவில் குற்றம் செய்யும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். அடுத்த நாள், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நெதன்யாஹு  இந்த நடவடிக்கை இஸ்ரேலிய வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு வழியாகும் என்று கூறினார்.


"காஸாவில் எங்களுக்கு வேறு ஒரு அதிகாரம் தேவை, அங்கு வேறு ஒரு நிர்வாகம் தேவை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்  ஹமாஸைத் தோற்கடிப்பதே எமது முதல் பணியாக இருக்க வேண்டும்," என்று இஸ்ரேல் பிரதமர்  நெதன்யாஹு கூறியுள்ளார்.


2005 இல் காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய பிறகு ஹமாஸுக்கு எதிராக மக்களைத் திருப்புவதற்கான முயற்சியில் இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.   இந்த உத்தி இஸ்ரேலுக்கு புதிதல்ல. பாலஸ்தீனர்களைப் பிளவுபடுத்தி, ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதில் இஸ்ரேல் கடந்த காலங்களில் வெற்றி பெற்று வந்தும் உள்ளது.


அது மட்டுமல்லாமல், இஸ்ரேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் உணர்வுகள் மழுங்கிய ஒரு அரபு சமூகத்தை உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டு ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களில் அந்த சமூகம்  காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.


காஸாவில் வரலாறு காணாத அட்டகாசங்களை அரங்கேற்றி, ஐம்பதாயிரம் பேருக்கு அதிகமானோரை கொலை செய்து விட்டு, அந்த மக்களை பட்டினியால் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் உதவிப்பொருட்கள் விநியோகத்தில் அரங்கேற்றும் இந்த அரசியல் விளையாட்டு மற்றுமொரு மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்ற போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

 

அஸீஸ் நிஸாருத்தீன் 


Monday, 6 June 2011

போர்க் குற்ற அறிக்கை - உலமா சபையும் இஸ்ரேலும் ஒரே நிலைப்பாட்டில்?


               இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் (Mark Sofer )

ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் Mark Sofer  கொழும்பு பிளஸ் பார்க் ஸ்டீட் ஹோட்டலில் plush Park Street Hotel நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா நிபுணர் குழுவினால் (தருஸ்மான் அறிக்கை)Darusman report முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையை மனித உரிமை என்ற போர்வையில் வெறும் அரசியல் சுய லாபங்களுக்காக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று சாடியுள்ளார்.


இதேமாதிரியான ஒரு அறிக்கையை இலங்கையில் உலமாக்களின் சபையான ஜம்இய்யதுல் உலமாவும் அண்மையில் வெளியிட்டது. 


இந்த ஐநாவின் அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் கருத்தும், ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்தும் ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன.


இஸ்ரேலின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன் உலமா சபையின் முக்கிய அங்கத்தவரான பிரபலமான மார்க்கமேதையும், நவீன சிந்தனையாளர் என்று சிலரால் போற்றப்படுகின்ற அகார்முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலமா சபையின் அறிக்கை தொடர்பாக தெளிவு பெற முயற்சித்தேன். 


அவர் பதிலளிக்கவில்லை. எனது தொலைபேசி இலக்கத்தை இனம் கண்டுகொண்ட அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் மேல்மாகாண சபை அங்கத்தவர் சகோதரர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் தொலைபேசியில் கதைத்த போது அவரின் இலக்கம் அகார் முஹம்மதின் தொலைபேசியில் இல்லாமல் இருந்ததன் காரணமாக அவர் பதிலளித்தார்.


நான் அறிஞர் அகார் முஹம்மதிடம் 2009 ம் ஆண்டு இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கொடிய யுத்தத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக இதேமாதிரியிலான ஒரு அறிக்கையை கோல்ட் ஸ்டோன் அறிக்கை  Goldstone Report  என்ற பெயரில் கொண்டு வந்ததை ஞாபகப்படுத்தி அது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டேன்.

Saturday, 5 June 2010

இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.


சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது .  அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என  பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.

கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

Tuesday, 6 April 2010

இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!

அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும் படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும்  இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..




Tuesday, 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

Sunday, 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

Sunday, 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

Wednesday, 22 July 2009

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்


உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். 

ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. 

சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.  ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். 

 ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. 

ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று வீதம் உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போருக்கு ஜிஹாத் சாயம் பூமி ஆப்கானை அழிக்க துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி தஃவா இயக்கங்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே.

ஆப்கானை பயங்கர ஆயுத கிடங்காக மாற்றியதன் விளைவாக “இஸ்லாமிய பங்கரவாதம்” என்ற சொற்றொடரை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவே பயன்படுத்த அரம்பித்தது.

சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட “ ஜிஹாத் ” அடுத்த கட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு சஊதியும் அதன் கைக்கூலிகளும் மறைமுக உதவி பரிந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆப்கானில் இன்னும் யுத்தம் தொடர்கிறது. அன்று ஜிஹாத் பேசி மக்களின் உணர்வலைகளை உசுப்பி விட்ட உத்தம புத்திரர்கள் அமைதியாய் கிடக்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு செய்த ஒப்பந்த பணியின் வெற்றியின் களிப்பில் ஊமையாய் இருக்கின்றார்கள்.

Tuesday, 21 July 2009

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!


இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.


இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...