Thursday 12 April 2018

யதார்த்தம் றோனியோ கவிதை இதழ்


1984ம் ஆண்டு என்னால் 'றோனியோ' அச்சில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இதழே யதார்த்தம். 

இன்று போல் கணனி வசதிகள் இல்லாத காலத்தில் இது வெளிவந்தது.

கைகளால் எழுதப்பட்ட கோட்டோவியங்களை மட்டுமே றோனியோவில் பதிப்பிக்க முடியுமான காலத்தில் யதார்த்தம் வித்தியாசமான முறையில் பதிப்பிக்கப்பட்டது. 

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்று வெளிவரவிருக்கிறது. ராவய வாராந்த பத்திரிகையில் கடமையாற்றிய சிறந்த ஐந்து ஊடகவியலாளர்கள்; அடங்கிய ஆசிரிய பீடத்தைக் கொண்டுள்ள இந்த வாராந்த பத்திரிகை எதிர்வரும் 29ம் திகதி முதல் வெளிவரவுள்ளது.
'அனித்தா' பத்திரிகையின் பிரதம ஆசிரியராக லசன்த றுகுணகே பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட இவரது நூல் மிகவும் பிரசித்தமானது. லசன்த றுகுணகே துப்பறிந்து அரசியல் கட்டுரைகளை வழங்குவதில் மிகவும் திறமையானவர். பல விருதுகளை பெற்றவர். இவரோடு ராவய பத்திரிகையில் நீண்ட காலம் சேவையாற்றிய கே.டப்லியூ. ஜனரஞ்சன, கே.சன்ஜீவ, தரிந்து உடுவரகெதர, ரேகா நிலுக்ஷி ஹேரத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
'அனித்தா' பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, திரு காமினி வியன்கொட, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, வை. ரஞ்சித் செனரத் பத்திரன ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.

Monday 9 April 2018

மைத்திரி ஒரு விலாங்கு மீன்!


மைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
சிங்கள இனவாதிகள் மற்றும் முஸ்லிம்களுடனான இவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரியோடு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். தனது வெளிநாட்டு விஜயங்களின் போது குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கான விஜயங்களின் போது கறிவேப்பிலையாக இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பயன்படுத்தப் படுகின்றார்கள்.

வருவாய் அழகிய மரணமே ! -கலீல் ஜிப்ரான்-















வருவாய் அழகிய மரணமே !
வாஞ்சை யோடு
ஏங்கிடும் உன்னைத்தான்
என் ஆத்மா !
வா என்னை நெருங்கி !
வந்தென் வாழ்க்கையின்
இரும்புத்
தளைகளை அவிழ்த்திடு !
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !
வருவாய் இனிய மரணமே !
வந்தென்னை விடுவிப்பாய்
வழிப் போக்கனாய்
என்னை நோக்கிடும்
பக்கத்துச் சொந்த
பந்தங்களிருந்து !
என்னெனில் நான் அவருக்கு
விளக்கிச் சொல்வேன்
தேவதை களின் வாசகத்தை !
வருவாய் மௌன மரணமே !
இருட்டு மூலை
மறதியில்
விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
இந்தக் கும்பலிட மிருந்து !
எனெனில்
எளியவர் குருதியை நான்
அவரைப் போல்
பிழிந்திட மாட்டேன் !
வருவாய் சாந்த மரணமே !
இழுத்துக் கொள்
என்னை
உந்தன் வெள்ளை
இறக்கைக் குள்ளே !
ஏனெனில்
என்னாட்டு மாந்தருக்கு
இனி நான்
தேவை யில்லாதவன் !
தழுவிடு என்னை மரணமே !
முழுப் பரிவோடு அன்பு
கொண்டு !
உன் உதடுகள் தொடட்டும்
என் உதடுகளை !
அன்னையின் முத்தங்கள்
சுவைக் காதவை !
தங்கையின் கன்னத்தைத்
தடவா தவை !
அருமைக் காதலியின்
விரல் நுனிகளை
வருடா தவை !
வா வந்தென்னை
ஏற்றுக் கொள்
என்னினிய மரணக் காதலி !
-கலீல் ஜிப்ரான்-

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...