Wednesday 25 May 2011

ஒசாமா - அபோதாபாத் வீடு, சீ.ஐ.ஏ., ஐ.எஸ்ஐ. யின் நண்பனான தாவுத் இப்றாஹீம் நிர்மானித்தது!

தாவுத் இப்றாஹிம்

ஒசாமா பதுங்கியிருந்ததாக அமெரிக்கா கூறிவரும் பாகிஸ்தான் அபோதாபாத் நகரத்தில் அமைந்துள்ள வீடு, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பவல்லுனர்களினால் இராணுவ கட்டட இரகசியங்களை உள்ளடக்கியதாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , மும்பாய் பாதாள உலக தலைவனான தாவுத் இப்றாஹிமின் Safari constructions என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்டதாக அறிய வருகிறது.




ஆபோதாபாத் நகரில் உள்ள இராணுவ அதிகாரிகளின் அத்தனை வீடுகளும் அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களினால் வடிவமைக்கப்பட்டவையென்றும் , இரகசிய பதுங்கு குழிகளும், குண்டு துளைக்காத ஜன்னல்களும், குண்டு தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


இந்தியாவிற்கு மிகவும் வேண்டப்படும் நபரான தாவுத் இப்றாஹீம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் உதவியுடன் சீஐஏ வோடு மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராவார்.  


இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதில் ஈடுபட்ட Safari constructions நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாவுத் இப்றாஹீமும் அவரது சகாவான சோட்டா ஷகீலுமாகும்.


தாவுத் இப்றாஹிமின் கட்டட நிறுவனமான Safari constructions பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கிலும் இராணுவ ரீதியிலான கட்டட தொழிற் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக பெயர்பெற்றிருக்கிறது.

1 comment:

  1. தமிழ் இனிது

    தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.
    http://tamilinithuthiratti.blogspot.com/

    இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...