Saturday 2 June 2012

பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு



முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு  பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது.

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை கோரியுள்ளனர்.

இந்த தரவுகள் திரட்டல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே இடம்பெறுகின்றது என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி நிராகரித்தார்.

இது தொடர்பில்  புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் கசியொன் ஹேரத்தை தொடர்புகொண்டு வினவிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஜயம் குறித்து தாம் அறியவில்லை என்றார்.

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை தன்னை சந்தித்தபோது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமை இதன் மூலம் மீறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.


பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோருவதனால் எந்த பிரச்சினையுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் தெரிவித்தார்.

அனைத்து சமயங்;களினதும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோர வேண்டும். மாறாக, பள்ளிவாசல்கள் தொடர்பான தகவல்களை  மாத்தரம் கோருவது முஸ்லிம் சமூகத்திற்கு வருத்த்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

தமிழ் மிரர்

Friday 1 June 2012

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் இணங்கிச் செல்லுமாறு ரிஸ்வி முஃப்தியின் வேண்டுகோள்! காடைத்தனத்திற்கு சன்மானமும் சமுதாயத்தை விலை பேசலும்

-லத்தீஃப் ஃபாரூக் -


(இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது அவரோடு மகிழ்சிகரமாக உரையாடும் ரிஸ்வி முப்தியும், தாஸீம் மௌலவியும்)

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி தம்புள்ள பள்ளவாசல் விவகாரம் பற்றி 2012 மே 4ம் திகதி ரியாதில் பேசிய பேச்சு இலங்கை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிவாசலை நிர்மூலம் செய்வதற்கு ஆதரவு திரட்டுவதற்காக, குண்டர் கும்பல் தலைவர் இனாமலுவே சுமங்கள தேரரினால் இவர் அனுப்பி வைக்கப்பட்டாரோ என ஒரு கணம் நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்.

ரியாதின் அரப்நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு டெயிலி மிரர், சிலோன் டுடே ஆகிய இலங்கைத் தினசரிகளில் 2012 மே 7ம் திகதி மீள்பிரசுரிக்கப்பட்டிருந்த அவருடைய உரையில், முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையினால்  திணிக்கப்பட்ட தம்புள்ள விவகாரத்தை சகிப்புத் தன்மையுடனும் இணக்கப்பாட்டுடனும் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிககையை நியாயப்படுத்துமுகமாக, கண்டி லைன் பள்ளிவாசல், சமூக அபிவிருத்தித் திட்டத்திற்காக இடிக்கப்பட்டதென்றும், பம்பலப்பிட்டியிலுள்ள நிமால் ரோட் பள்ளிவாசல், அறுகாமையில் நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலைக்கு இடங்கொடுப்பதற்காக இடிக்கப்பட்டு, தூரத்தில் கட்டப்பட்டதென்றும் கூறியுள்ளார்.
இது, தவறான வழியில் இட்டுச் செல்வதாகும். லைன் பள்ளிவாசல் உட்பட கண்டியில் எந்தப் பள்ளிவாசலும், ஒருபோதும் இடிக்கப்படுவோ அல்லது இடம்மாற்றப்படவோ இல்லையென, கண்டியிலுள்ள முஸ்லிம்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நிமால் ரோட் பள்ளிவாசல் விடயத்திலும்கூட, அது தூரத்தில் கட்டப்பட்டவில்லையென, காணிச்சொந்தக்காரர்கள் கூறினார்கள். மாறாக, பழைய  பள்ளிவாசல் இருந்த அதே இடத்திலேயே, சில யார் தூரம் தள்ளி  புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். இரயில் பாதைக்கு சில யார் தூரத்தில் பழைய  பள்ளிவாசல் அமைந்திருந்ததாகவும், அஹதியா வகுப்புக்கள் நடாத்துவதற்காக, பழைய  பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டதாகவும் அவர்கள் விபரித்தார்கள். மெரைன் ட்ரைவ் (கரையோரப்) பாதையின் நிர்மாணத்திற்கு வழி செய்து, சில யார்கள் பின் தள்ளி, தற்போதைய பள்ளிவாசல் கட்டப்பட்டது. வித்தியாசம் என்னவெனில், இது அமைதிவழியில் மேற்கொள்ளப்பட்டதேயன்றி,  கட்டறுந்த குண்டர் கும்பலின் தூண்டுதலினால் அல்ல என்பதாகும்.
சுமரச தீர்வொன்றுக்கான ஆலோசனையை முன்வைத்துள்ள ரிஸ்வி முஃப்தி,  'இணக்கப்பாடு'க்கான தேவை பற்றியம் பேசியுள்ளார். இது தம்புள்ளை பள்ளிவாசலை இடித்துத் தள்ளுவதையே குறிக்கின்றது. இதுதான் அவருடைய கருத்தாக இருந்தால், அது, காடைத்தனத்துக்கு பரிசளிப்பதாகவே அமையும். தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பதற்கான கோரிக்கையானது, தம்புள்ளைவாழ் சிங்கள மக்களினாலோ அல்லது காவி காடைத்தனத்தையிட்டு வெட்கம் அடைந்துள்ள இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சிங்கள சமூகத்தினாலோ விடுக்கப்பட்டதொன்றல்ல என்பதை குறித்துக்காட்ட அவர் தவறிவிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் மௌனம் காக்கும் அதே வேளை, இதற்கும் பௌத்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கூறியுள்ளார். இதே நேரம், தம்புள்ள பள்ளவாசல் மீதான தாக்குதல், ஓர் ஈனச் செயல் என சிங்கள பத்திரிகையாளர்கள் கண்டித்துள்ளதோடு, ஒரு பத்திரிகையாளர், அக்குண்டர்கள் கூட்டத்தை 'தம்புள்ளையின் பைத்தியக்காரர்கள்' என்று கூட வர்ணித்துள்ளார்.

இந்தக் காடைத்தனமான செயல், ஏதோவகையில் அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க அந்தஸ்துகளைப் பெற்றுக்கொண்டுள்ள சொற்ப எண்ணிக்கையான தீவிர தேசியவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகினறது. எல்.டீ.டீ.ஈ. இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது முதற்கொண்டு, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பெறும்பான்மையினரைத் தூண்டி விடும் வகையில் இந்தத் தீவிர தேசியவாதிகள்  கடும் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
பத்து சிங்கள மொழி இணையத் தளங்களையும், ஒன்பது ஆங்கில மொழி இணையத் தளங்களையும் பிரயோகித்து இப்பிரச்சாரம் தொடக்கி வைக்கப்பட்டது. குராகல, தஃப்தர் ஜெய்லானியைப் பற்றிய விவரணப்படமொன்றையும் இவர்கள் தயாரித்து, சிங்களவர்களுக்கு சொந்தமான இந்தக் காணியை அபகரித்துக் கொண்டதாக முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.

சமூக நல்லிணக்கத்தின் மீது இது ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கருதி, 2011 செப்டம்பரில், சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் இதனைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். வழமை போலவே, முஸ்லிம் அரசியல் வாதிகளும், மார்க்க அறிஞர்களும் ஏனையோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில், வெளியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குண்டர்கள் கோஷ்டியொன்று, அனுராதபுரத்தில் முஸ்லிம் அடக்கஸ்தளமொன்றை நிர்மூலம் செய்தது. இங்கும் கூட  பௌத்த மத குருக்களே குண்டர்கள் கோஷ்டிக்கு தலைமை தாங்கினார்கள். இப்போது, தம்புள்ளை பள்ளிவாசலை இடித்துத்தள்ளுவதற்கான செயல் ஆரம்பிக்கின்றது. இங்கும் கூட குண்டர்களுக்குத் தலைமை தாங்கியவர் உள்ளூர் பௌத்த மத குருவானாலும், இப்பிரதேசத்துக்கு வெளியிலிருந்தே குண்டர்கள் கொண்டுவரப்பட்டனர்.

மூன்று தசாப்த கொடூர இனப் பேரழிவிலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கும் நாட்டை, இந்த நாசகார முஸ்லிம் விரோத பிரச்சாரம் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை இந்தக் கட்டறுந்த சக்திகள் உணர்ந்து கொள்வதில்லை.

இந்தக் கருத்தை பின்புலமாகக் கொண்டே, ரிஸ்வி முஃப்தியின் இணக்கப்பாட்டுக்கான அழைப்பு நோக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் அரசியல் வாதிகளும், மார்க்க விற்பன்னர்களும் முன்னணிக்கு வருவதற்கு வெகுமுன்பே,   தம்புள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற காடைத்தனத்திற்கு முழு முஸ்லிம் சமூகத்தினதும் உடனடி பிரதிக்கிரியை 'அமைதியானதாகவும் கண்ணியமானதாகவுமே'    அமைந்திருந்தது.
குண்டர் கும்பலின் தாக்குதலுக்குப் பின்னர், 24 மணித்தியாலங்களுக்குள் பள்ளிவாசல் உடைக்கப்பட வேண்டுமென்று பிரதமர் டீ.எம்.ஜயரத்னவின் காரியாலயம் கட்டளை பிறப்பித்ததைப் போன்றே, ரிஸ்வி முஃப்தி கோருவதைப் போன்று இவ்விடயத்தில், இணக்கப்பாடு என்பது, அராஜகத்துக்கு வெகுமதி அளிப்பது என்றே அர்த்தப்படும். இது மிகவும் ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும்.

குண்டர்களுடன் அல்லாது, சமூகங்களுக்கிடையிலான எந்தப் பிணக்குகளும், நாட்டின் சட்டவரையறைகளுக்குள் பண்பாட்டுடன் தீர்க்கப்பட வேண்டும்.  முழு முஸ்லிம் சமூகமும், ஏகோபித்த குரலில் இதனையே வலியுறுத்தி நின்றது.

சிங்கள அரச அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினால் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த அகோர பிரச்சினை ஆறு மாதத்துக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்வதில் எந்த முஸ்லிமும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த நிலைமையில், முஸ்லிம்களின் உரிமைகளை தாரைவார்க்கக் கூடிய தீர்வுகளை முன்வைப்பதை விடவும், முஃப்தி ரிஸ்வி, மக்கள் முன் உண்மைகளை முன்வைப்பதே பொறுத்தமானது.

முஃப்தி ரிஸ்வி, எல்லை மீறியுள்ளதாகவே தோன்றுகின்றது. வத்திக்கானின் பாப்பாண்டவரைப் போல் அல்லாது, அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவின் தலைவர் என்ற வகையில், மார்க்க அடிப்படைகளுக்கு ஏற்ப சமூகத்துக்கு வழிகாட்டுவதே அவரது வேலையாகும். ஆனால், இங்கு அவர் ஊழல்மிக்க, குற்றம் நிரம்பிய, வர்த்தகமயமாக்கப்பட்ட அரசியலுள் பிரவேசித்துள்ளார். இது ஆபத்தானது.

ஓர் அரசியல் ஸ்தாபனமாக அல்லாது, ஒரு மார்க்க ஸ்தாபனமாக ஜமிய்யத்துல் உலமாவின் பங்காற்றலை தெளிவாக வரையறுக்க வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் ஏற்கனவே பேச ஆரம்பித்து விட்டனர்.
சமூகத்தின் சார்பாக தீர்மானம் எதனையும் எடுக்குமுன், ஜமிய்யத்துல் உலமா, சமூகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்ற கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கி வருகின்றது.

ரிஸ்வி முஃப்தி, சமூகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்புடையவராக இருக்கின்றார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...