Monday 26 November 2012

அல் பஜ்ர் - அஹமத் ஜாபர் காஸாவில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டப்படுகின்றது!


காஸா எட்டு நாள் யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்புகிறது.  இஸ்ரேலிய யுத்தம் அவர்கள் மீது திணித்த உடல் உள காயங்கள் ஒரு போதும் ஆறப்போவதில்லை.

அந்த எட்டு நாள் யுத்தத்தில் காஸா மக்களின் உறவுகள் வீழ்ந்தனர், பச்சிளம் பாலகர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். மக்களின் உடைமைகள் இடியோடு அழிந்தன.

என்றாலும் ஒருபோதும் இல்லாத புத்துணர்வு அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமிப்புச் செய்திருக்கின்றது. திருப்பித் தாக்கும் திராணி தம்மிடம் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவர்களை இடிபாடுகளிலிருந்து எழ வைத்திருக்கிறது.

திருப்பி அடித்ததின் மூலம் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எட்டே எட்டு நாட்களில் அவர்களால் முடிவுக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது.

அதுதான் அல் பஜ்ர்!  பெரும் இரைச்சலோடு பறந்து சென்று இஸ்ரேலிய நகரங்களை தொட்டுப்பார்த்த ஏவுகணை. எதிரிகளை கதிகலங்க வைத்து கண்ணாமூச்சி விளையாடிய அல் பஜ்ரை நினைத்து, நித்திரையை தொலைத்த இஸ்ரேலியர்கள்  கால்வாய், மதகுகளில் எல்லாம் கண்ணயர துவங்கினார்கள்.

தரையாலும், கடலாலும், ஆகாயத்தாலும் தாக்கி காஸாவை அழித்து விடுவோம் என்று கர்ஜித்த சிங்கங்கள் அல் பஜ்ரின் முன்னால் நாய்களாய் முடங்கிப் போனார்கள்.

காஸாவிலிருந்து சீறிப்பாய்ந்து சென்று டெல்அவிவ் நகரை பதம் பார்த்த அல் பஜ்ர் ஏவுகணைகள்.  IDF என்ற இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பு பதறிப்போனது.

டெல்அவிவ் நோக்கிப் பறந்து இடியாய் இறங்கிய அல் பஜ்ரின் அதிர்வுகளால் அதி நவீன யுத்த ஆயுத தொழிற்சாலையாய் வர்ணிக்கப்படுகின்ற இஸ்ரேலின் தலைநககரம் ஆடட்ம் கண்டது.

அனைத்து இஸ்ரேலியர்களும் எலிகளைப் போல் ஓடிச்சென்று பதுங்கு குழிகளுக்குள் படுத்துக்கொண்டனர்.

போராட்டத்திற்கும் மரணத்திற்கும் பழகிப்போன காஸா மக்களுக்கு மரணம் என்பது மகா பெரிய ஒரு விஷயமல்ல.  மழையாய் வந்து விழுந்த இஸ்ரேலிய ஏவுகணைகளைக் கண்டு அவர்கள் மிரண்டு, விரண்டு ஓடுவது என்பது அவர்களுக்கு பழக்கமில்லாத ஒன்று.

இடியைக் கூட மடியில் தாங்கும் இரும்பு இதயங்களாக அவர்கள் இன்று மாறியிருக்கின்றார்கள்.

இப்போது , காஸாவில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு பெற்றோர் அல் பஜர், அஹமத் ஜாபர் ஆகிய பெயர்களை வைத்துள்ளார்கள்.

புதிதாக பிறக்கும் பிள்ளைகளுக்கு அல் பஜ்ர் ஏவுகணையின் பெயரையும், ஹமாஸின் இராணுவ தலைவர் அஹ்மத் ஜாபர் அவர்களது பெயரையும், பல பெற்றோர் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு சூட்டி மகிழ்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் !
காஸாவை  இனிமேல் கருவறுக்க முடியாது... அஹமத் ஜாபரிகளும், அல் பஜ்ரகளும்  அதிகமாகவே இருப்பார்கள்.



இலங்கை - பதுளையில் தொடரும் பௌத்த பல சேனா தொந்தரவுகள் !


பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரண்டு வரும் பௌத்த பல சேனா என்ற அமைப்பு திட்டமிட்டு முஸ்லிம்களை சீண்டி வருவதை கடந்த பதிவுகளில் தந்திருந்தேன்.

நேற்றிரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்து ஆடுகள் களவாடப்பட்டு அவற்றில் மூன்று ஆடுகளின் கழுத்தை வெட்டி  கொன்று போடப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பௌத்த பல சேனாஅமைப்பின் முக்கிய நபர்களை பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செயதிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடாத்திய முக்கிய நபர்கள் என்று தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரங்க என்ற பெயருடைய பதுளை மீன் வியாபாரியும், தினேஷ் என்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரும், கோமஸ் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிய வருகிறது.

இவர்களின் கைதை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் பௌத்த பல சேனா பதுளை கிளையின் முன்னணி செயற்பாட்டாளருமான தயாசிரியினதும், மற்றும் இரண்டு பௌத்த பிக்குகளினதும் தலைமயில் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெறுவதாக பதுளையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்பு ஜீவகாருண்யம் தொடர்பாக பேசுகின்ற அதை வைத்து ஏனைய மதங்களை சாடுகின்ற பௌத்த இனவாத அமைப்புகள், இப்படி ஆடுகளைக் கடத்திச் சென்று கொன்று போடுவதை எப்படி அங்கீகரிக்கின்றனர்?

வீடியோ - குஜராத் கலவரம் ! ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடி ஒளியும் நரேந்திர மோடி!



 இதோ ஆயிரகணக்கான உயிர்களை பலியிட்ட நரபலி நாயகன் ,சர்வதேச பயங்கரவாதி , நரேந்திர மோடி CNN TV இல் குஜராத்தில் நடந்த கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவதையும் , காமெராவை நிறுத்த சொல்லுவதையும் பாருங்கள் ..

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகளில் மிக முக்கிய ஏழு சம்பவங்களில் ஒன்றாக ஒடே படுகொலைகள் கருதப்படுகிறது. மார்ச் 1, 2002 அன்று அஹமதாபாத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஒடே என்ற இடத்தில் கலவர நெருப்பு கொழுந்துவிட்டது. ஒரே முஸ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். மக்கள் பீதியடைகின்றனர். பிரவொலி பஹோல் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம்களை சங்பரிவாரக் கும்பல் உயிரோடு கொளுத்துகிறது. உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம்களில் 9 பேர் குழந்தைகள், 9 பேர் பெண்கள், 5 ஆண்கள். 

1500க்கும் மேற்பட் சங்பரிவார குண்டர்கள் மோடி அரசின் முழு ஒத்துழைப்போடு இப்பகுதியைச் சூறையாடினர். இச்சம்பவத்தை உச்சநீதின்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. ஆனந்த் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து ஏப்.9, 2012 அன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டோரில் 23 பேர் குற்றவாளிகள் என்று கூறியது. 23 பேரை சாட்சியமில்லாததால் விடுதலை செய்தது. ஏப்.12, 2012ல் சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என சந்தேகமற உறுதி செய்யப்பட்ட 23 பேரில், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்துள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு வலிமையாக வாதிட்டபோது, நீதிபதி பூணம் சிங் அதை ஏற்கவில்லை. மரணதண்டனை மிக அபூர்வ வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு இதற்கு முந்தைய குற்ற வரலாறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு, ரூ.5,800 அபராதமும், கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட 5 பேருக்கு ரூ.3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க சிறப்பு புலனாய்வுக்குழு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. கொடிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் போதுமானதல்ல என்ற ஆதங்கம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் பெயரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்தான். இவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய கொடிய சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி தீர்ப்பை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 1, 2002ல் நடந்த சம்பவத்துக்கு, 2009 இறுதியில்தான் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. எதிரிகள் 47 பேரில் ஒருவர் இறந்துவிட 46 பேர் மீது விசாரணை தொடர்ந்தது. 2011ம் ஆண்டு இவ்வழக்கு முடியும் தருவாயில் திடீரென நீதிபதி பதவி விலகினார்..!
இப்போது 1252 பக்கத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் இவ்வழக்குச் செய்தியை முக்கியத்துவத்தோடு வெளியிட்டன. தினமணி உள்ளிட்ட சில தமிழ் ஏடுகள் இவ்வழக்கை குட்டிச் செய்தியாக்கின.

Sunday 25 November 2012

வீடியோ - இஸ்ரேலிய பயங்கரவாதம்...!



சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க அடிவருடியான ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ( யுனிசெப்) ஆழ்ந்த உறக்கத்தில்...! எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறு குழந்தை செய்த குற்றம் பலஸ்தீனில் பிறந்ததே!

சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! மீண்டும் பதுளையில் துண்டுப்பிரசுரம்.


                                               பௌத்த பல சேனாவின் துண்டுப்பிரசுரம்

அண்மையில் இலங்கை  பதுளை நகரில் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்று குற்றஞ் சாட்டி, பதுளை பொலிஸார் அவரை  நீதி மன்றத்தில் நிறுத்தி பிணையில் அனுப்பியதை பத்ர் களம் கடந்த பதிவில் தந்தது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் பௌத்த பல சேனா அமைப்பு சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை மீண்டும் விநியோகித்து வருகின்றது.

அதன் தமிழ் வடிவம் இதோ!

இது இளைஞர்கள் நாகரீகமாக அணியும் ஒன்று (கையுறை). இதில் இருப்பது என்னவென்று பாருங்கள். புத்தரின் உருவம். இப்படி புத்தரின் படத்தை  அவமதித்து கையுறைகளில் பதித்து விற்பனை செய்வோர்  பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இருக்கின்ற டீன்ஸ் பென்ஸி பெலஸ் என்ற வர்த்தக நிலையமே.

பௌத்த பல சேனா அமைப்பின் இளைஞர் அணியின் முயற்சியால் நேற்று இந்த கடை உரிமையாளர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை பிணையில் விடுவிப்பதற்கு வெட்கம் கெட்ட அதிகாரிகள் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள் பௌத்தர்களான எமக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு எதிராக கதைப்பதற்கு யாருமே இல்லை.

எங்களுக்கு இருப்பது சிங்கள் பௌத்த மக்களான உமது ஒற்றுமையின் சக்தி மட்டுமே!

எங்கள் புத்தபெருமானை அவமதிப்போருக்கு இடமளியோம்!
நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் புத்த தர்மத்தை பாதுகாப்போம்!

நீங்கள் உண்மையான பௌத்தர்களாயிருந்தால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்!

0771090167
பௌத்த பல சேனா - பதுளை

Saturday 24 November 2012

இலங்கை - பதுளை இனவாதமும் பௌத்த பல சேனாவும்!










இலங்கையின் பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறிக்கப்ட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்ற குற்றஞ்சாட்டி குறித்த கடை உரிமையாளரும் அந்தக் கடை ஊழியர் ஒருவரும்   கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பாக நேற்று பதுளை நகரில் முஸ்லிம்களை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.

முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரியின் கைதை ஆதரித்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை பொது (பௌத்த) பல சேனா என்ற அமைப்பு பதுளை நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை குறித்த கடையின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

அவரிடம் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறைகளும் இருக்கவில்லை என்றும் அப்படி பௌத்தர்களின் மனதை நோகடிக்கும் வகையிலான வியாபாரத்தை செய்வதற்கு தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென்றும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முயற்சிகளை சிறுபான்மை சமூகங்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

வியாழக்கிழமை அன்று கடைக்கு கையுறை ஒன்றை வாங்க வந்த வாலிபர் ஒருவர் கையுறை ஒன்றை  160.00 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டு தன்னிடம் அதற்கான பற்றுச் சீட்டு ஒன்றை கேட்டதாகவும், அதற்கான விலையை ஒரு தாளில் குறி்ப்பிட்டு தான் கொடுத்ததாகவும்  கூறினார்.

ஓர்  அரை மணித்தியாலம் தாமதித்து அவரின் கடைக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்,

கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் கையுறைகளை சோதனையிட வேண்டும் என்று வேண்டியதாகவும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அந்த வகையான புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகளை காட்டுமாறும் கடை உரிமையாளரை நிர்ப்ந்தித்திருக்கின்றனர்.

அதனை மறுத்த கடை உரிமையாளர் தாம் அப்படி புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறையையும் யாருக்கும் விற்க வில்லையென்றும் கூறியிருககின்றார்.

உடனே பொலிஸார் வெளியே நின்றுக்கொண்டிருந்த  ஏற்கனவே கடைக்கு வந்து கையுறை வாங்கிய இளைஞரை அழைத்து அவரின் கையிலிருந்த கையுறையை கடை உரிமையாளருக்கு காட்டியிருக்கின்றனர். அந்தக் கையுறை ஜோடியில் ஒன்றில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.

தான் இப்படியான கையுறையை யாருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும்  தனது கடையில் இத்தகைய கையுறைகள் கிடையவே கிடையாது என்றும் அடித்துக் கூறியிருக்கின்றார.

இதனை ஏற்க மறுத்த பொலிஸார் கடை உரிமையாளரை பொலிஸுக்கு வருமாறு அழைத்திருக்கின்றனர். கடைக்கு வெளியே வரும் போது பல ஊடகவியலாளர்கள் கடைக்கு வெளியே காத்துக் கிடப்பதையும் பல கோணங்களிலிருந்தும் கடையையும், கடை உரிமையாளரையும் படமெடுப்பதையும் அவதானித்திருக்கின்றார்.

இதைப்படிக்கும் போதே ஏதோ திட்டமிட்டு நடக்கும் நாடகம் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.

பொலிஸார்  கடை உரிமையாளர் கைது செய்து பதுளை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது இது விடயமாக முறைப்பாடு செய்வதற்கு ஏற்கனவே ஒரு பௌத்த தேரர் பொலிஸ் நிலையத்தில் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கடை உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தமே படாத இந்த பௌத்த தேரருக்கு எவ்வித உரிமையுமில்லை. இதற்கான முறைப்பாட்டை அந்த கையுறையை வாங்கிய இளைஞனே வழங்க வேண்டும். ஆனால் எதற்கும் சம்பந்தம் இல்லாத  இந்த பௌத்த பிக்குவின் முறைப்பாடே இதன் பின்னணியில் இருக்கின்ற முஸ்லிம் இனவாத நாடகத்தை எடுத்துக்காட்டுகின்றது.

அண்மைக்காலமாக பதுளையில் உருவாகிவரும் முஸ்லிம் களுக்கு எதிரான இனவாத வேலைத்திட்டங்களின்  பின்னணியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.  ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தயாசிரி எனபவர் இந்த பௌத்த பல சேனா என்ற அமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு சார்பாக எந்த சட்டத்தரணியும் ஆஜராக முன்வரக் கூடாது என்று சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இருந்த போதிலும் பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் ஆறு பேர், (அதில் ஒருவர் பெண் சட்டத்தரணியாவார்) சுயேச்சையாகவே கடை உரிமையாளருக்காக நீதிமன்றில் ஆஜரானதாக தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக இந்த பௌத்த பல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு சிங்கள மககளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி வரும் மோசமான செயலை செய்து வருகின்றது. அரசியல் ரீதியாக இந்த அமைப்பிற்கு கிடைக்கும் ஆதரவிற்கு அஞ்சி முஸ்லிமகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை பதுளை பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக சென்ற இரண்டு முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.  தமக்கு எதிராக தாக்குதல் நடாத்தியவர்களை  பொலீசில் முறைப்பாடு செய்வதற்கும் முடியாதவர்களாக , பயந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஆளும் தரப்பில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இப்பிரச்சினையை மூடி மறைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பதுளையில் வளர்ந்து வரும் இந்த இனவாத செயற்பாட்டை தடுப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ யாருமே முன்வராத நிலையில் பதுளை முஸ்லிம்கள் அனாதரவாக மாறியிருக்கின்றார்கள்.

பதுளை பள்ளிவாசல் நிர்வாகம் கூட இந்த ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.


Thursday 22 November 2012

அதிர்ச்சி தரும் வீடியோ - இஸ்ரேலிய இராணுவ மிருகங்களின் கொடுமை

இது மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய மிருகங்களிடம் வதை படும் பலஸ்தீன் மக்களின் கதையை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ.

வீட்டுக்குள் புகுந்து அப்பாவி பெண்களையும், சிறுவர்களையும் துன்புறுத்தும் இஸ்ரேலிய பொலிஸ் படை காட்டுமிராண்டித்தனமாக நடப்பதை இந்த வீடியோ காட்டுகின்றது.

ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் புகுந்து இப்படி மோசமாக நடக்கும் இஸ்ரேலை அமெரிக்கா பக்க பலமாக நின்று தட்டிக் கொடுக்கின்றது. வேறு நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் மனித உரிமை மீறல் என்று கொக்கரிக்கும் அமெரிக்கா இஸ்ரேல் விடயத்தில் அதற்கு மாற்றமாக நடந்து வருகின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS)  அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் 1967 முதல் இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் 750,000 பேர் தடுத்து வைக்கபட்டிருந்ததாகவும், இதில் 12,000 பெண்களும் உட்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல் தெரிவிக்கின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS) 

தகவலின் படி இன்று 6000 பலஸ்தீனிய ஆண்களும், 35 பெண்களும் 275 சிறுவர்களும்  சிறைகளில் வாடுவதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.


இன்று அநீதிக்கும் அக்கிரம்த்திற்கும் உட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத் தட்டிக் கேட்க நாதியற்ற ஒரு சமூகமாய் மாறியிருக்கிறது.


Saturday 17 November 2012

வீடியோ - இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து உலகளாவிய எதிர்ப்பலைகள்!













காணொளி- இஸ்ரேலில் இடியாய் இறங்கும் அல் பஜ்ர்

2வது தடவையாக அல்பஜ்ர் டெல்அவிவை தாக்கியது


இங்கு நீங்கள் காண்பது இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர் ஹமாஸின் ஏவுகணைக்குப் பயந்து தனது அலுவலகத்திலிருந்து விரண்டு ஓடும் காட்சி

காஸாவிலுள்ள ஹமாஸின் அமைச்சரவைக் கட்டிடம் தாக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் இயக்கம் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவை நோக்கி அல் பஜ்ர் ஏவுகணையை அனுப்பியிருக்கிறது.

அல் பஜ்ர் 5 ஏவுகணை டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் விழுந்து வெடித்துள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஆகாயத்தில் சிதறிய இஸ்ரேலிய F16 விமானம் - கஸ்ஸாம் படையணி சாதனை!


பலஸ்தீன் போராளிகளின் இராணுவ அமைப்பான் அல் கஸ்ஸாம் படையணி இஸ்ரேலிய போர் விமானமான  F16 ஐ  வீழ்த்தியிருக்கிறது.

                                                                  F16 ரக விமானம்

காஸாவின் வட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக Middle East Monitor இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தால் ஊர்ஜிதமாகியிருக்கும் இந்தச் செய்தி, முதல் தடவையாக இஸ்ரேலிய விமானத்தை தாக்கும் வல்லமை பலஸ்தீன  போராளிகளிடம் இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

போராளிகள் மீது தாக்குதல் நடாத்துவதாகக் கூறிக்கொண்டு பலஸ்தீன் சிவிலியன் நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து சிறுவர்களையும், பெண்களையும் கொடுரமாக கொலை செய்து விட்டு ஓடிமறையும் இஸ்ரேலிய விமானங்கள் இனி தப்பிப் போக முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday 16 November 2012

வீடியோ - அல் பஜ்ரும் அதிரும் இஸ்ரேலும்




தொட்டு விடும் தூரத்தில் டெல்அவிவ்


தொட்டு விடும் தூரத்தில்
டெல்அவிவ்
ஆவலாய் பறக்கிறது “ அல் பஜ்ர் 5 ”

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.


பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸின்  இராணுவ பிரிவு இஸ்ஸத்தீன்  கஸ்ஸாம் படையணி காசா மீது ஏவப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் , அந்த இஸ்ரேலிய உளவு விமானம்  "ஸ்கைலைட் பி" (“Skylight B”) என்ற பெயரிடப்பட்ட ஒன்று எனவும் அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் உளவு விமானத்தை தம் கைவசம் சிக்க வைப்பதற்கு ஹமாஸ் இயக்கம் பெற்றிருக்கின்ற தொழில் நுட்ப வளர்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.

பலஸ்தீன் போராட்ட இயக்கங்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவை நோக்கி அனுப்பிய ஈரானிய தயாரிப்பான அல் பஜ்ர் 5 என்ற ஏவுகணை,  இஸ்ரேலின் தலைநகரம் பலஸ்தீன் போராளிகளால் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற அபாய சமிக்கையை  இஸ்ரேலுக்கு உணர்த்தியிருக்கிறது.

1991ம் ஆண்டுக்குப்பிறகு முதல் தடவையாக இஸ்ரேலின் தலைநகரம் இப்போது  தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு வளைகுடா போரின் போது அன்றைய  ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர வைத்திருந்தார் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஹமாஸின் இராணுவப் பிரிவு தளபதி அஹமத் அல் ஜஃபரி அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் படலத்தை போராளிகள் ஆரம்பித்து இருக்கினறனர்.

இஸ்ரேல் தனது  நரகத்தின் வாயிலை தானே திறந்துக்கொண்டிருப்பதாக போராளிக் குழுக்கள் இஸ்ரேலை எச்சரித்திருக்கின்றன.


இலங்கை - சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இலங்கை - சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நகர் டெல்அவிவை அதிர வைத்த அல் பஜ்ர் 5 ஏவுகணை

பலஸ்தீன் போராளிகளால் முதல் தடவையாக இஸரேலின் தலைநகர் டெல்அவிவை நோக்கி ஏவப்பட்ட அல் பஜ்ர் 5  ஏவுகணை ஸியோனிஸ ஆட்சியாளர்களை கிலிகொள்ள வைத்திருக்கிறது.






படங்கள் - காஸா தாக்குதல்


















இஸ்ரேலிய போர்க்குற்றம் !

காணொளி - காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்








Wednesday 14 November 2012

ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?



இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தாய் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
ஆட்டோவில் துப்பாக்கிகளுடன் தப்பிச்செல்ல வந்த கைதிகளை சுட்டுக்கொன்றதாக அரசு கூறுகிறது
தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய அந்த தாய் தெரிவித்தார்.

அரசு மறுக்கிறது


இதேவேளை, மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 27 கைதிகளில் சில கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
இரவு 12 மணிக்குப் பின்னரும் துப்பாக்கிகளுடன் இருந்த கைதிகளுடன் மோதல்கள் தொடர்ந்ததாகவும் காலை 4 மணிக்குப் பின்னரே நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே பிபிசியிடம் கூறினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்து தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்ட கைதிகளே இராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயுதமோதலின் போது சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ அணியினர் தற்பாதுகாப்பு என்பதையும் தாண்டி செயற்பட்டுள்ளதாகவும் அரசு இவ்வாறான அசம்பாவிதங்களின் போது இராணுவ உபாயங்களையே கையாள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சிறை வன்முறை குறித்து நாடாளுமன்ற மட்டத்திலான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.
(பிபிஸி)

துப்பாக்கி படத்திற்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.

இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tuesday 13 November 2012

வீடியோ - அமெரிக்க பயங்கரவாதம்.

அமெரிக்கா தனது பயங்கரவாத ஆக்கிரமிப்பு சார்ந்த இராணுவக் கட்டமைப்பை மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைநிறுத்தி வருகின்றது.

மத்திய கிழக்கில் புதைந்துள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையிடும் நோக்கத்தில் உலகில் மிக சக்திவாய்ந்த எண்ணெய் நிறுவன முதலாளிகளான
புஷ் வகையறாக்கள் இந்த எண்ணெய்க்கான போரை அப்பாவி மக்கள் மீது திணித்து மனித உயிர்களை காவு கொண்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த தாம் உதவி புரிவதாகக் கூறி தனக்கு தேவையான நாடுகளில் போராட்டங்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா, அந்த நாட்டு  மக்களையும், ஏனைய வெளிநாட்டுக் கூலிப்படைகளையும் ஆயுதமயமாக்கி அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களை தோற்றுவித்து வருகின்றது. ஆட்சிமாற்றம் என்ற போர்வையில் தனது தாளத்திற்கு ஆட்டம் போடுகின்ற அரபு மன்னர்களையொத்த தலைவர்களை அந்தந்த நாட்டில் தலைவர்களாக ஆக்குவதன் மூலம் தனது சுரண்டல் அரசியலை அமெரிக்கா மிகவும் கச்சிதமாக செய்து வருகின்றது.

இந்த சிறிய விவரணம் அமெரிக்காவின் இந்த பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது.

Sunday 11 November 2012

காணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் !



கற்பித்தல் சேவை காலத்தால் அழியாத கௌரவமான தொழிலாகும்.

ஆசிரியர்கள் என்போர் அனைவராலும் போற்றப்படுபவர்கள்.  காரணம் அவர்கள் இவ்வுலகில் அனைத்து அறிஞர்களையும் உருவாக்குபவர்கள்.

வர்த்தகமயமான இன்றைய சூழ்நிலை ஆசிரியர்களை மோசமான நிலைக்கு தள்ளியிருப்பதை அண்மையில் வெளியான ஊழல் சம்பந்தமான ஒரு கணிப்பீடு தெளிவு படுத்தியது.

இலஞ்சம் வாங்குவதில் இலங்கையில் பொலீஸ் உத்தியோகத்தர்களை விட ஒரு படி மேல் பாடசாலை நிர்வாகம் அதாவது அதிபர்களும், ஆசிரியர்களும் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் ஒன்றை“ ட்ரான்ஸ்பெரஸி இன்டர் நெஷனல்” வெளியிட்டது.

எதிர்கால சமுகத்தை செதுக்கின்ற சிற்பிகளாக கௌரவமான சமூகமாக கருதப்பட்ட இந்த ஆசிரியர் வர்க்கம் எதிர்கால சமூகத்தை சிதைக்கின்ற சின்னத்தனம் கொண்டர்களாக மாறி வருவதை இந்த காணொளி எடுத்துக் காட்டுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தை தனது இஷ்டம் நடாத்தும் சில அதிபர்கள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக  பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற ஓர் அநாகரீக அவதாரமாக மாற்றம் எடுக்கின்றார்கள்.

இந்த காணொளி அத்தகைய ஒரு மோசமான அதிபரைப் பற்றி பேசுகிறது.


படங்கள் - கொழும்பு வெலிக்கடை சிறை -விபரீதம்!







வெலிக்கடை சிறைச்சாலை மோதல்களுக்கு முக்கிய இடமாக குறிக்கப்படும் இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள 1880களில்  அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட சிறைச்சாலையாகும்.

 ஊடகங்களில் பேசப்பட்ட இன்றும் பேசப்படுகின்ற  ஒரு சிறைச்சாலையாக இருப்பதற்கு அதில் இடம்பெறும் கலவரங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

1983ம் ஆண்டு ஜுலைக்கலவரத்தின் போது இந்தச் சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினால் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையும் வெலிக்கடை சிறைச்சாலையின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

நேற்றைய சம்பவம் கூட மற்றுமொரு முறை வெலிக்கடையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

 நேற்றைய  மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் சந்திரசிறி கஜதீர பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் நேற்றுமாலை பயங்கர சண்டை வெடித்தது. இந்தக் கலவரத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

32 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைதிகள் கைப்பற்றி துப்பாக்கிகளை எடுத்து   விசேட அதிரடிப்படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன ஏ.கே. ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி கைதிகள் சிறைக்கூரையில் ஏறிநின்றனர்.

இந்த மோதலில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நள்ளிரவு வரை 13 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தன என்று அனில் தெரிவித்தார். அவர்களில் குறைந்தது 11 பேர் கைதிகள். தப்பிச் செல்ல முற்பட்ட போது சில கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்கள் அதிகாரிகள்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனையில் இறங்கினர். இதன் போது கைதிகளின் பெருந்தொகையான கையடக்கத்தொலைபேசிகளை அவர்கள் மீட்டனர். 

வழக்கமாக இத்தகைய தேடுதலில் சிறைக் காவலர்களே ஈடுபடுவர். கைதிகளின் கைகள் விலங்கிடப்பட்டு சோதனையிடப்பட்டதை கைதிகள் எதிர்த்ததாகவும் அதன் பிறகே இந்த முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.

ஆத்திரமடைந்த கைதிகள் முதலில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையில் சண்டை வெடித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் வெலிக்கடைச் சிறையிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றி அங்கிருந்த பெருமளவான துப்பாக்கிகளைத் தம்வசப்படுத்தினர் என்று பொலிஸார் கூறினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர். எனினும் கட்டு மீறிய சண்டையால் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

கைப்பற்றிய ஆயுதங்கள் சகிதம் சிறைச்சாலை கூரைமீது ஏறிநின்றவாறு கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் அதிரடிப் படையினரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததால் வெலிக்கடைப் பகுதி பெரும் சண்டைக்களம் போலாகியது.
கைதிகளில் தொடர் சூட்டை அடுத்து கவச வாகனங்கள் மூலம் அதிரடிப்படையின் சிறையின் சிறையினுள் போனதை சாட்சிகள் கண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 4 கைதிகள் கூரையிலிருந்து ஒரே நேரத்தில் சுட்டுள்ளனர். நிலைமை கட்டு மீறியதால் சிறைச்சாலைக்கு எதிரிலும் “பேஸ் லைன்’ பிரதான வீதியில் தெமட்டகொட வரையில் போக்குவரத்து நேற்று நள்ளிரவு வரை தடைப்பட்டிருந்தது.

நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர். ஆயுதங்களுடன் கூரையில் நின்ற கைதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்து சுடும் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கலவர நிலையைப் பயன்படுத்தி பல கைதிகள் சிறைச்சாலை மதிலை உடைத்து தப்பியோடியுள்ளனர் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஓட்டோ ஒன்றில் அவ்வாறு தப்ப முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றிரவு 9.30 மணிவரை சிறைச் சாலையினுள் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.


9.40 மணிக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சண்டையில் காயமடைந்தவர்களில் 14 பேர் விசேட அதிரடிப்படையினர் என்று பொலிஸார் கூறுகின்றனர். படுகாயமடைந்த அதிரடிப்படையினர் ஒருவருக்கு அவசரமாக இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. படையின் பிரதிப் பொறுப்பதிகாரியான ஆர்.எம். ரணவணவும் சுட்டுக்கு இலக்காகி காயமடைந்தார் .

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...