Tuesday 8 June 2010

WikiLeaks இரகசிய காணொளி விவகாரம் - அமெரிக்க வீரர் கைது!


ஈராக்கில் அமெரிக்க இராணுவம் 2007ல் புரிந்த படுகொலை வீடியோ ஒன்றை WikiLeaks  இணையம் வெளியிட்டு அமெரிக்காவின் மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இணையதளத்திற்கு இந்த வீடியோவைஇரகசியமாக  வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் Bradley Manning என்ற அமெரிக்க இராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


ஈராக்கில் கடமையாற்றிய பிரேட்லி மென்னிங் கைது செய்யப்பட்டு தற்போது குவைத்தில் உள்ள அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Saturday 5 June 2010

இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.


சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது .  அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என  பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.

கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

Thursday 3 June 2010

இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

Freedom Flotilla  என்ற  பெயரில் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற  துருக்கியின் மனிதாபிமான நடவடிக்கை கப்பல் மீது தொடுக்கப்பட்ட  இஸ்ரேலின்  காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து 04.06.2010 அன்று கொழும்பில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு  எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையிலுள்ள சமூக நல இயக்கங்கங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தவிருக்கின்றன.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...