Showing posts with label yehudi. Show all posts
Showing posts with label yehudi. Show all posts

Saturday 5 June 2010

இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.


சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது .  அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என  பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.

கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

Tuesday 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

Sunday 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

Wednesday 22 July 2009

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்


உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். 

ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. 

சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.  ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். 

 ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. 

ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று வீதம் உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போருக்கு ஜிஹாத் சாயம் பூமி ஆப்கானை அழிக்க துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி தஃவா இயக்கங்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே.

ஆப்கானை பயங்கர ஆயுத கிடங்காக மாற்றியதன் விளைவாக “இஸ்லாமிய பங்கரவாதம்” என்ற சொற்றொடரை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவே பயன்படுத்த அரம்பித்தது.

சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட “ ஜிஹாத் ” அடுத்த கட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு சஊதியும் அதன் கைக்கூலிகளும் மறைமுக உதவி பரிந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆப்கானில் இன்னும் யுத்தம் தொடர்கிறது. அன்று ஜிஹாத் பேசி மக்களின் உணர்வலைகளை உசுப்பி விட்ட உத்தம புத்திரர்கள் அமைதியாய் கிடக்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு செய்த ஒப்பந்த பணியின் வெற்றியின் களிப்பில் ஊமையாய் இருக்கின்றார்கள்.

Tuesday 21 July 2009

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!


இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...