Friday, 4 February 2011

ஹுஸ்னி முபாரக் - இது வெளியேறும் வெள்ளிக் கிழமை




(பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் பொதுமக்களை தாக்குகின்றனர்)

எகிப்தின் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் வெள்ளிக்கிழமை உதயமாகி விட்டது.

இன்று ஜும்ஆ தொழுகைக்காக கூடும் பல லட்சம் மக்கள் முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி படையெடுக்கவிருக்கின்றனர்.

இதே நேரம் இராணுவம் பொதுமக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடாத்தாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது.  எகிப்தில் ஒரு அரசியல் மாற்றம் உருவாவதை இராணுவம் விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்து நாட்களை எட்டியிருக்கும் எகிப்தின் போராட்டம் கடந்த புதன் கிழமை வேறு வடிவில் திசை திரும்பியது.

பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் சாதாரண மக்கள் போல் உடையணிந்து பேரணி இடம் பெறும் தஹரீர் சதுக்கத்திற்குள் நுழைந்து பொது மக்களை தாறுமாறாக தாக்கினர். இதில் பத்து பொதுமக்கள் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடாத்தியதன் மூலம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் முபாரக் அரசு மீண்டுமொரு முறை உலகளாவிய ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளானது.


No comments:

Post a Comment

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...