Sunday 20 February 2011

பஹ்ரைன் - வெளிநாட்டு கூலிப்படையின் கொடுமை!


பஹ்ரைன் விபரீதமான அரசியல் உள்ள வித்தியாசமான நாடு.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார்க் கைப்பிளள்ளைகளான மன்னர் குடும்பங்கள் 200 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.

அந்த நாட்டின் அரச நிர்வாகத்தில் சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு இடமில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் ஒரு தளமாகவே பஹ்ரைன் பாவிக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டவரின் அங்கீகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் உதவியில் ஆட்சி செய்யப்பமடும் ஒரு நாடாக பஹ்ரைனை குறிப்பிட்டால் அதில் தவறே இல்லை.

உலகில் எங்குமில்லாதவாறு முற்று முழுதாக இராணுவத்தில் வெளிநாட்டவர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

மனித உரிமைகள் முடக்கப்பட்ட ஒரு நாடாக அது மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்,

இன்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமெரிக்காவும், பிரித்தானியாவும் தான் பஹ்ரைன் என்ற ஜனநாயக விரோத நாட்டை பாலூட்டி வளர்த்து வருகின்றன.

வாக்குரிமையைப் பற்றி வாய்க்கிழிய கத்தும் இந்த நாடுகள், 80 வீதமான ஆதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு 20 வீத அதிகாரத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் கேலிக்குரிய பஹ்ரைன் பாராளுமன்ற முறையை ஆதரித்து வருகின்றன.

அண்டை நாடுகளான பஹ்ரைனுக்கும் சவுதிக்குமுள்ள உறவு மிகவும் இறுக்கமானது. ஈ என்ற அசுத்தத்தை மொய்க்கும் பிராணிக்கும் அசுத்தத்திற்கும் உள்ள உறவு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிறது.

தனது நாட்டில் இறுக்கமான சட்டங்களை வைத்துக்கொண்டுள்ள சவுதி நாடு, அதன் மன்னர் குடும்பங்களுக்கும், மேட்டுக்குடிகளான எண்ணெய் ஷேக்குகளுக்கும் மது, மாது போன்ற ஷைத்தானிய சேட்டைகளுக்கான சிறந்த தளமாக பஹ்ரைனை பாவித்து வருகிறது.

பிரித்தானியா கூலிப்படையான பஹ்ரைனின் இராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறது. அமெரிக்கா 4500 படையினரைக் கொண்ட மிகப்பெரிய கடற்படைத் தளத்தை இங்கு வைத்துள்ளது.

பஹ்ரைன் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அந்த நாட்டை நவீன ஆயுத வல்லமையுள்ள நாடாக மாற்றியிருக்கிறது.

பஹ்ரைனை நாட்டு மக்களின் ஆதரவு அறவே இன்றி பல நூறு ஆண்டுகள் தொடராக ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக இந்த சாத்தானிய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி போன்ற கூட்டுக்கம்பனிகள் அந்த நாட்டின் அராஜகங்களை கட்டிக்காத்து வருகின்றன.

இன்று அந்த நாட்டில் எழுந்து வரும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு மேல் குறித்த மூன்று சாத்தானிய சக்திகளும் முயன்று வருகின்றன.

நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கூலிப்படையான இராணுவம் செய்யும் கொலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் அனுசரணையாளர்கள் யார் என்ற விடயம் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...