Tuesday 22 February 2011

லிபிய கொலைக்களம் - குண்டு மழை பொழியும் கதாபி!


லிபியாவில் ஆர்ப்பாட்டம் செய்து வரும் பொதுமக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு மிருகத்தனமான தாக்குதல்களை கதாபி நடாத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

திரிப்பொலி நகரம் பிணக்காடாய் மாறி இருப்பதாகவும், 400க்கு மேற்பட்டோர் இதுவரை பலியாகியிருப்பதாகவும், நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான இந்த உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்.

இதேவேளை கதாபியின் ஆதரவாளர்களும், இராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படிப்படியாக மக்களோடு இணைந்து வருவதாக அறியவருகிறது.

கதாபியின் மகன் ஸைபுல் இஸ்லாம், ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றால் லிபியாவில் இரத்த ஆறு ஓடும் என்று அச்சுறுதத்தல் விட்டிருக்கின்றார்.

தனது தந்தையின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கடைசி ஆண், ஒரு கடைசி பெண், கடைசி தோட்டா இருக்கும் வரை போராடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

லிபியாவின் ஒவ்வொரு நகரங்களும் மக்களிடம் வீழ்ச்சியடைந்து வருவதைப் பார்க்கும் போது கதாபி பதுங்குவதற்கு இடம்தேடி ஓட்டமெடுக்கும் நாள் விரைரவில் வரத்தான் போகிறது.


No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...