Sunday 25 November 2012

சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! மீண்டும் பதுளையில் துண்டுப்பிரசுரம்.


                                               பௌத்த பல சேனாவின் துண்டுப்பிரசுரம்

அண்மையில் இலங்கை  பதுளை நகரில் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்று குற்றஞ் சாட்டி, பதுளை பொலிஸார் அவரை  நீதி மன்றத்தில் நிறுத்தி பிணையில் அனுப்பியதை பத்ர் களம் கடந்த பதிவில் தந்தது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் பௌத்த பல சேனா அமைப்பு சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை மீண்டும் விநியோகித்து வருகின்றது.

அதன் தமிழ் வடிவம் இதோ!

இது இளைஞர்கள் நாகரீகமாக அணியும் ஒன்று (கையுறை). இதில் இருப்பது என்னவென்று பாருங்கள். புத்தரின் உருவம். இப்படி புத்தரின் படத்தை  அவமதித்து கையுறைகளில் பதித்து விற்பனை செய்வோர்  பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இருக்கின்ற டீன்ஸ் பென்ஸி பெலஸ் என்ற வர்த்தக நிலையமே.

பௌத்த பல சேனா அமைப்பின் இளைஞர் அணியின் முயற்சியால் நேற்று இந்த கடை உரிமையாளர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை பிணையில் விடுவிப்பதற்கு வெட்கம் கெட்ட அதிகாரிகள் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள் பௌத்தர்களான எமக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு எதிராக கதைப்பதற்கு யாருமே இல்லை.

எங்களுக்கு இருப்பது சிங்கள் பௌத்த மக்களான உமது ஒற்றுமையின் சக்தி மட்டுமே!

எங்கள் புத்தபெருமானை அவமதிப்போருக்கு இடமளியோம்!
நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் புத்த தர்மத்தை பாதுகாப்போம்!

நீங்கள் உண்மையான பௌத்தர்களாயிருந்தால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்!

0771090167
பௌத்த பல சேனா - பதுளை

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...