Thursday 26 July 2012

இலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் மற்றுமொரு எதிர்ப்பு!

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடிவிடுமாறு அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கூறினோம்.

அத்துடன் அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் ௭ன்றனர். 


நன்றி வீரகேசரி

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...