Thursday 5 May 2011

வீடியோ : ஒசாமா உண்மையில் கொல்லப்பட்டாரா? சந்தேகம் வலுக்கிறது




ஒசாமா வாழ்ந்ததாக கூறப்படும் அப்போதாபாத் பிரதேச மக்களின் கருத்தை பிரஸ் ரிவி ஒளிபரப்பியது.  அப்பிரதேச மக்கள் ஒசாமா அங்கு வாழவில்லை என்று கூறுகின்றார்கள்.

இது விடயமாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருகிறது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருவதாக 04.05.2011 அன்று இரவு பிபிஸி தமிழோசை செய்தி வெளியிட்டது.

இதுதான் அந்த செய்தி:

பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது. அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.
        அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால்          விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.


ஒசாமா தொடர்பாக அமெரிக்க வெளியிட்டு வரும் கருத்துக்கள் பெரும் குழப்பத்தை உண்டுபண்ணி வருவருகிறது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

மேலே உள்ள முரண்பாடான தகவல்களை தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல ஒபாமாவின் ஊடகத்துறை செயலரான ஜே. கோர்னி ஆகும்.

ஒசாமாவின் சம்பவத்தை அமெரிக்கா வெறும் கேள்விப் பட்ட சம்பவமாக கூறவில்லை. தாம் நேரில் பார்த்த சம்பவமாகத் சொன்னது.

நேரில் பார்த்துஊடகங்களுக்கு சொன்னஒரு ஒரு சம்பவம் அடுத்த நாள் எப்படி மாற்றம் பெற்றது?

பிபிஸிக்கு கருத்துத் தெரிவித்த ஜே. கார்னியும் ஒபாமாவோடு சேர்ந்து  இந்த நடவடிக்கையை நேரில் பார்த்தவராவார். நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை அடுத்த நாள் மாற்றிக் கூறியது இதன் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

ஒசாமா மீதான தாக்குதல் விடயமாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முழு உலகும் அமெரிக்கா வெளியிடப் போகும் தகவலுக்காக காத்திருந்தன.  இந்தத் தகவலைத்தயாரித்து வெளியிட ஒபாமா பல மணி நேரங்களைச் செலவிட்டதாக அறிய வருகிறது.

அப்படி திட்டமிட்டு வழங்கப்பட்ட தகவலில் மாற்றம் நிகழ்ந்தது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

ஒசாமாவை அழிக்கச் செல்லும் இராணுவ நடவடிக்கையை வெள்ளை மாளிகையிலிருந்து நேரடியாக ஒபாமாவும் அவரின் முக்கிய அதிகாரிகளும் அவதானித்துக் கொண்டிருந்ததாக செய்திகளும் படங்களும் வெளிவந்திருக்கின்றன.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்ட 'கெமரா' வின் மூலம் இந்தக் காட்சிகளை அவர்கள் நேரடியாகப் பார்த்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தக் காட்சியை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கும் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்?

ஒரு ஹொலிவ+ட் திரைப்படத்தைப் பார்ப்பது போன்று விறுவிறுப்பாக இருக்குமே!

ஆனால் ஒசாமாவை தனது இராணுவம் கொல்லும் வீர நடவடிக்கையைப் பார்த்து ஒபாமாவிற்கோ ஏனைய அவரின் எடுபிடிகளுக்கோ எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பார்ப்பது போல் தான் தெரிகிறது.



இவர்களின் முகத்தில் வெற்றிக்களிப்பு அறவே இல்லை.
ஓர் அச்சம் தெரிகிறது.
கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள்

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...