Tuesday 8 February 2011

எகிப்தின் ஒமர் சுலைமான் ஒரு மொசாட் ஏஜன்ட் ! விக்கிலீக் அம்பலம்


எகிப்தின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள ஒமர் சுலைமான் 2008ம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த எஹுத் பராக் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் முபாரக்கிற்கு அடுத்தபடியாக எகிப்தின் தலைமைத்துவத்தை ஏற்க இவர் தகுதியானவர் என்று இஸ்ரேல் இவரை சிபார்சு செய்திருப்பதாகவும் விக்கிலீக் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானிய டெய்லி டெலிகிராப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

Monday 7 February 2011

எகிப்தை நோக்கி விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல்!

800 படையினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எகிப்தை நோக்கி விரைவதாக பிரஸ் ரீவி இணைய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.

எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது,  மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.

அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன. 

Sunday 6 February 2011

காஸா எல்லையில் எகிப்து இராணுவம் பட்டினியில்

காஸா எகிப்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் ஒன்று

பன்னிரெண்டு நாட்களாக தொடரும் மக்கள் போராட்டத்தினால் எகிப்தின் அனைத்து நிர்வாக செயற்பாடும் முடங்கி நிற்கின்றன.

காஸா எல்லையில் கடமையிலிருக்கின்ற எகிப்திய இராணுவத்திற்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டிருப்பதால் காஸா மக்கள் தமது சுரங்கப்பாதை ஊடாக வந்து உணவுப்பொருட்களை இராணுவத்திற்கு வழங்கி வருகின்றனர்.

2006ம் ஆண்டு முதல் காஸாவிற்கு இஸ்ரேல் தரை, கடல் வழிகளை மூடி  பொருளாதார த் தடையை விதித்திருக்கிறது.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஆதரவாக செயற்பட்ட முபாரக் எகிப்து காஸா எல்லையான ரபா வாயிலைமூடி இஸ்ரேலின் பொருளாதாரத் தடைக்கு உதவினார்.

இந்தத் தடையை சமாளிக்க காஸா மக்கள் சுரங்கப் பாதைகளை உருவாக்கி எகிப்துக்குள் நுழைந்து தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதனூடாக எடுத்துச் சென்றனர்.

காஸா மக்களுக்கு இந்தச் சுரங்கப் பாதைகள் இஸ்ரேலின் பொருளாதார தடைக்கு முகம் கொடுக்கும் மாற்று வழிகளாக மாற்றம் பெற்றன.

இன்று அந்தச் சுரங்கப் பாதைகளின் செயற்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கின்றன.

கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் வாழும் காஸா மக்கள் இன்று எகிப்தின் காஸா எல்லையில் நிர்க்கதியாக இருக்கும் இராணுவத்தினருக்குஉணவுப்பொருட்களை சுரங்கப்பாதையுடாக கொண்டு வந்து விநியோகித்து வருகின்றனர்.

சவுதி அரேபியா : சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அணிதிரளும் பெண்கள்


சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

 மனித உரிமை அமைப்பான Human Rights Watch  தனது வருடாந்த அறிக்கையில்  சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான்  போன்ற அமைப்புகள்  நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.

இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!

எகிப்து : ஊமையாக நிர்ப்பந்திக்கப்டும் ஊடகங்கள்!


எகிப்தின் அல் தாவுன் பத்திரிகையின் படப்பிடிப்பாளர் 36 வயதான அஹ்மத் முஹம்மத் மஹ்மூத் ஸ்னைப்பர் தாக்குதலுக்குள்ளாகி நான்கு தினங்களின் பின்னர் நேற்று மரணமானதாக அரச செய்திப் பத்திரிகையான அல் அஹ்ரம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

முபாரக்கின் கையாட்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலை படம் பிடித்துக்கொண்டிருந்த போதே இவர் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானார். எகிப்தின் போராட்டத்தில் மரணமான முதல் ஊடகவிலாளர் இவராகும்.

எகிப்தின் போராட்டம் தொடர்பான செய்திகள் வெளியுலகிற்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக முபாரக் அரசு பலத்த கெடுபிடிகளை ஊடகங்கள் மீது திணித்து வருகிறது. சகல இணைய தள சமூக வலைப்பின்னல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

பிரேஸில், பிரான்ஸ், போலந்து, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாட்டின் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வியாழக்கிழமையன்று கத்திக்குத்துக்கு இலக்கான சுவீடன் நாட்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெய்ரோ வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

போலந்து தொலைக்காட்சி நிறுவனமான ரிவிபி தனது நிருபர்களை பாதுகாப்புக் கருதி மீள அழைத்துக்கொண்டது.

Saturday 5 February 2011

ஜோர்ஜ் புஷ் கைது செய்யப்படலாம் - ஜெனீவா பயணம் ரத்து!

          
ஈராக் மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷும் அந்த கொலைகளுக்கு சவூதியை தளமாக  அமைத்துக்கொடுத்த அப்துல்லாஹ்வும்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அடுத்த வார ஜெனீவா பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக BBC இன் சிங்கள சேவையான 'சந்தேஷய' தெரிவித்துள்ளது.

ஜெனீவா செல்லவிருந்த ஜோர்ஜ் புஷ்ஷை கைது செய்யுமாரு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இப்பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஜ் புஷ்ஷிற்குஅழைப்பு விடுத்த யூத அமைப்பு அறிவித்துள்ளது


                                                                   குவாண்டனாமோ வதைமுகாம்


ஜோர்ஜ் புஷ் ஈராக், ஆப்கானிஸ்தான் மக்களை சித்தரவதை செய்வதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கும் தகவல்கள் வெளிவந்திருப்பதால் புஷ்ஷிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு கடந்த வாரம் சுவிஸ் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.

எண்ணெய் வளங்களை கொள்ளையிட ஜோர்ஜ் புஷ் தொடுத்த ஈராக் மீதான யுத்தத்தில் சுமார் 14 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எகிப்து - இஸ்ரேல் இயற்கை வாயுக் குழாய் தகர்க்கப்பட்டது



எகிப்தில் அல் எரிசா பகுதியில் உள்ள எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கான இயற்கை வாயு குழாய், இனம் தெரியாதோரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குழாயில் அங்காங்கே வெடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளதுமாக எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவத்துள்ளது. எகிப்திய இராணுவம் குழாயின் பிரதான இடங்களை அடைத்து தீப்பற்றி எரிதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. தீச்சுவாலை வானில் 20 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

1979 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் எகிப்து, இஸ்ரேலின் 40 சதவீத இயற்கை வாயுத் தேவையை நிறைவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-PressTV

Friday 4 February 2011

ஹுஸ்னி முபாரக் - இது வெளியேறும் வெள்ளிக் கிழமை




(பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் பொதுமக்களை தாக்குகின்றனர்)

எகிப்தின் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் வெள்ளிக்கிழமை உதயமாகி விட்டது.

இன்று ஜும்ஆ தொழுகைக்காக கூடும் பல லட்சம் மக்கள் முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி படையெடுக்கவிருக்கின்றனர்.

இதே நேரம் இராணுவம் பொதுமக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடாத்தாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது.  எகிப்தில் ஒரு அரசியல் மாற்றம் உருவாவதை இராணுவம் விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்து நாட்களை எட்டியிருக்கும் எகிப்தின் போராட்டம் கடந்த புதன் கிழமை வேறு வடிவில் திசை திரும்பியது.

பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் சாதாரண மக்கள் போல் உடையணிந்து பேரணி இடம் பெறும் தஹரீர் சதுக்கத்திற்குள் நுழைந்து பொது மக்களை தாறுமாறாக தாக்கினர். இதில் பத்து பொதுமக்கள் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடாத்தியதன் மூலம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் முபாரக் அரசு மீண்டுமொரு முறை உலகளாவிய ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளானது.


எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!


சர்வதேச மன்னிப்புச் சபையின்( Amnesty International )முக்கியஸ்தர்கள் மூவரை எகிப்தின் இராணுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

அடக்கு முறைக்கு எதிரான மக்களின் போராட்டம் எகிப்தில் வலுப்பெற்று வரும் இத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்காமல் நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வீழ்ந்துக் கொண்டிருக்கும் முபாரக் அரசிடம்வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய உறுப்பினரோடு ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch)அமைப்பைபின் பிரதிநிதியான ஸைபுல் இஸ்லாம் காலித் அலீயும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரை தமக்கு தெரியாமல் இருப்பதாகவும் மேற்படி சபை அறிவித்திருக்கிறது.

 சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சலில் ஷெட்டி (Salil Shetty )தமது உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையூறாகசெயற்படவேண்டாமென்றும் எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Thursday 3 February 2011

எரிபொருள் தடை ! மனமுடைந்திருக்கிறது இஸ்ரேல்!


அமெரிக்க, இஸ்ரேலின் நேச நாடுகளான அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும்  எதிர்ப்புப் போராட்டங்களினால் தனது நாட்டுக்கு தேவையான எரி சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் குறையலாம் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.

”மத்திய கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் நிலை எங்களின் எதிர்கால எரிசக்தி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. எரி சக்தி பயன்பாட்டில் மற்றவர்களை தங்கியிராத ஒரு நிலைக்கு நாங்கள் நகர வேண்டும்” இப்படி கூறியிருக்கிறார்  இஸ்ரேலிய தேசிய உட்கட்டமைப்பு அமைச்சரான  உஸிலந்தோ. ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேல் தனது எரிபொருள் தேவையின் 40 வீதத்தை எகிப்திலிருந்து பெற்று வருகிறது.  எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் தடுமாறிப் போயிருக்கும் இஸ்ரேல் தனது நாட்டின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக கடும் பீதியில் திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிஸம்பர் மாதம் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் எகிப்தோடு பல பில்லியன் டொலர்களுக்கான எரிவாயு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு மிகவும் துணையான நேசமான  நாடாக எகிப்தை அமெரிக்கா  உருவாக்கியிருக்கிறது.  இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அமெரிக்காவின் நிதி உதவி பெறும் நாடாக எகிப்து திகழ்கிறது.

Wednesday 2 February 2011

எகிப்து எனது நாடு! ஹுஸ்னி முபாரக் சூளுரை!


                                             சவூதியின் நண்பனாக முபாரக்

எகிப்து எனது நாடு ! இது எனது பிறந்த பூமி! இது நான் போராடி பாதுகாத்த நாடு இதை விட்டு விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். நான் மரணிப்பதுவும் இந்த பூமியில்தான் என்று ஹுஸ்னி முபாரக் சூளுரைத்திருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது
.

                                          
                                           யெஹுதியின் நண்பனாக முபாரக்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை தான் பதவியிலிருக்கப் போவதாகவும்  முபாரக் உறுதியளித்திருக்கின்றார்.

முபாரக்கின் உரைக்கு பதிலளித்த போராட்ட அணியினர், முபாரக் எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமையை முபாரக்கின் வெளியெறும் நாளாக  “Friday of departure”  அறிவித்திருப்பதுடன், அன்றைய தினம் முபாரக்கின் மாளிகையில் தாம் அணி திரளவிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.

எகிப்து எழுகிறது - இஸ்ரேல் அழுகிறது!




எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும்அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது.  சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி முபாரக்கை எகிப்தை விட்டு வெளியேறும் படி அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தும் , இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் முபாரக் தயார் என அறிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் முனவரவில்லை.

இதேவேளை தனது சகாவான முபாரக்குக்கு ஆதரவு திரட்டி இஸ்ரேல் ஐப்ரோபிய நாடுகளில் தனது தூதரகங்கள் ஊடாக பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக்கும் படி அந்தந்த நாட்டிலுள்ள இஸ்ரேலர்களுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.

எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி பலஸ்தீனின் ஹமாஸை வலுவான சக்தியாக மாற்றும் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.  அதேவேளை தான் வளர்த்த முபாரக்கை கைவிட்டது போல் நடிக்கும் அமெரிக்க சந்தேகத்திடமான ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. எகிப்து தொடர்பாக அமெரிக்காவின் அண்மைய நிலைப்பாடு மாறுபட்டிருக்கிறது. 

எகிப்தின் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், 

"எகிப்து மக்கள் அமெரிக்கா முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திடீரென நியாயத்தின் பக்கம், மக்கள் பக்கம் சாய்ந்தது போன்ற அதன் நிலைப்பாட்டில் விபரீதம் ஒன்று மறைந்திருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் உணர முடிகின்றது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை  இஸ்ரேல் கடுமையாக சாடியுமுள்ளது. "முபாரக்கின் அரசு கவிழ்ந்தால் எகிப்தின் முஸ்லிம் சுசகோதரத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் பிரச்னை அதிகரிக்கும்" என இஸ்ரேல் அமைச்சர் அயூப்கரா அச்சம் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் இந்த கலக்கத்தைப் பார்க்கும் போது மத்தியக்கிழக்கில் அதன் சண்டித்தனத்திற்கு துணை போனவர்களாக இந்த அரபுத் தலைவர்கள்   திகழ்ந்திருக்கின்றார்கள என்ற உண்மையை புரியக் கூடியதாக இருக்கிறது.


இதேவேளை Gulf Civil Society Forum (GCSF) என்ற அமைப்பு ஹுஸ்னி முபாரக்கிற்கு உதவி புரியும் அரபு தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளது.  தொடர்ந்தும் இத்தகைய அடக்கு முறையாளர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

அரபு உலகிற்கு ஜோர்ஜ் கெல்லோவேயின் அறைகூவல்!




ஹுஸ்னி முபாரக் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும் அவரை தூக்கியெறிய திரண்டிருக்கும் எகிப்திய மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கெல்லோவே George Gallowayஅவர்கள் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.

இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் உறுதுணையோடு பலஸ்தீன் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற கொலைகளுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் பக்கபலமாக நின்று செயல்பட்டவர்தான்இந்த ஹுஸ்னி முபாரக்.

இவரை ஒரு கிரிமினல் குற்றவாளி என்று வர்ணித்த ஜோர்ஜ் கெல்லோவே அவரை துடைத்தெறிவதற்கு எகிப்திய மக்களோடு சேர்ந்து அதன் இராணுவமும் முன்வரவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இஸ்ரேல்- பலஸ்தீன் விவகாரத்தில்இஸ்ரேலுக்கு பக்கபலமாகசெயற்பட்டு வருபவர்தான் இந்த முபாரக்.

காஸா, எகிப்து எல்லையான ரபா எல்லைக் கதவை மூடி இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள பொருளாதார தடைக்கு ஆதரவாக தனது பூரண ஆதரவை வழங்கியவர்தான் ஹுஸ்னி முபாரக். இதன்மூலம் பலஸ்தீன் மக்களை மருத்துவம், உணவு மற்றும்அடிப்படை வசதிகளை எகிப்திலிருந்து பெற்றுக்கொள்ளாமல் காஸா மக்களை பட்டினிச் சாவிற்கு தள்ளியவர்.

பலஸ்தீன் விவகாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வரும் ஜோர்ஜ் கெல்லோவே அரபு நாடுகளின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த அரசியலை மிகவும் வன்மையாக கண்டிப்பவர். விமர்சிப்பவர். மனிதநேயம் மிக்கவர். பணம், பட்டம், பதவிகளுக்கு விலைபோகாதவர்.

இங்கு ஜோர்ஜ் கெல்லோவே பற்றி எழுத, அவரைப் பற்றி அறியத் தர, அவரின் உரையை பதிவிலிட இன்னொரு முக்கிய காரணம் எனக்கு இருக்கிறது.

அது என்னவென்றால்,

சமகாலத்தில் வர்த்தகமயமான எமது தஃவா தளத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும், எமது புத்தி (?) ஜீவிகள் பலருக்கு ஜோர்ஜ் கெல்லோவே இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டுவதற்கு சிறந்த தருணமாக இது எனக்குத் தோன்றியது.

இன்று அரபுகளின் பணத்திற்காக அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை செயற்பாட்டைப் பாதுகாக்கின்ற “படித்தவர்கள்” நிறைய பேர் உருவாகியிருக்கின்றார்கள்.

அரபுகளின் அராஜகங்களை முழுமனதோடு ஆதரிக்கின்ற, அவர்களை விமர்சிப்பதை எப்போதும் விரும்பாத புகழ்பூத்த புத்திஜீவிகள் (?)  பலர் பிறந்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அரபுகளிடம் கையேந்துவதை தொழிலாகக் கொண்ட இவர்கள் , ஏகாதிபத்திய நலன் சார்ந்தஅரபுகளின் தூதுவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கைக்கூலிகளாக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு அரபுகள் மீதான விமர்சனம் அடிக்கடி அஜீரணமாகின்றது.

இந்த அஜீரணத்தை இல்லாமலாக்க இவர்களிடம் இருக்கும் அரு மருந்து, மற்றவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகள் போடுவது.  அரபுகள் மீதான விமர்சனம் கையேந்தும் போது குறுக்காக வந்து தடையேற்படுத்திவிடும் என்று தயங்கிப்போய் நிற்கிறார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு இஸ்லாம் பேசும் இவர்கள், இன்று ஆரோக்கியமான திறந்த “கருத்துத் தளத்தை” தமது கழிப்பறைகளாக்க மாற்றும் வெட்கம் கெட்ட தந்திரத்தையும் கையாண்டு வருகின்றனர்.

அரபுகளின் ஏஜன்டுகளாக இருக்கும் இந்த புத்திஜீவிகள் பிற்போக்குவாதத்தில் பிழைப்பு நடாத்துபவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உலகம் நேசிக்கின்ற புரட்சி இவர்கள் அறியாமலேயே வெடித்துக் கொண்டிருக்கிறது.

அரபுகளின் பிற்போக்குவாத பணத்தினால் போஷிக்கப்படும் இவர்கள் புரட்சியின் கனவுகளோடு போர்த்திப் படுத்துக்கொண்டிருக்கும் போது, இவர்களின் கதவுகளைத் தட்டி குறட்டைகளைக் களைத்தவர்கள் யார் தெரியுமா?

அவர்கள் யாரிடமும் பணம் வாங்காத பொது மக்கள். காசுக்காக கொள்கைகளை விற்காத அந்த பொது மக்களின் பின்னால் போராட்டத்திற்கு அணிதிரள வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போராட்டம் இவர்களை நீண்ட துயிலிலிருந்து உசுப்பி எழுப்பி இருக்கிறது.
இன்றைய தூனீசியாவும், எகிப்தும் இதற்கு சிறந்த சான்றுகள்.

அரபுகளின் அரசியலை நேசிக்கின்ற, இவர்களின் கதையாடலில் இருக்கின்ற இஸ்லாமிய எழுச்சி போலி என்பது உலகிற்கே இன்று புலனாகியிருக்கிறது.

இவர்களின் கனவு எழுச்சிக்கு பணத்தை வாரி வழங்கி இவர்களைப் பாதுகாத்த அதே அரபு அரசியல்.  தூனீசியாவில் இஸ்லாமிய ஏழுச்சியை காலா காலமாய்  நசுக்கிக்கொண்டிருந்த , நாட்டை விட்டு தப்பியோடிய துரோகியான தூனீசிய தலைவர் பின் அலியையும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.

பின் அலியை பாதுகாத்த விஷயத்தில்

இந்த அரபு தேசம் எழுச்சிக்கும்,  வீழ்ச்சிக்கும் உதவி புரிகின்ற ஒரு நாசத்தை செய்து வருகின்றது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறத.

இன்று அடக்குமுறை ஆட்சியாளன் பின் அலியினதும், அந்த அடக்கு முறைக்கு எதிராக போராடிய இந்த இஸ்லாமிய வாதிகளினதும் அனுசரணையாளர் யார் என்ற விபரம் திரை கிழிந்து தெரியவந்திருக்கின்றது.

இந்த அடிப்படையில்பார்க்கும்போது அரபுகளின் வாக்குகளை அல்லாஹ்வின் வாக்காக மதிக்கின்ற ,ஆதாயத்திற்காகஅரபுகளைப் பாதுகாக்கின்ற இந்த ஒருசில “ஷெய்க்கு”களை விட ஜோர்ஜ் கெல்லோவே எவ்வளவோ மேலானவர்.

அநீதிக்கு எதிராக போராடுவது, அதற்காக குரல் கொடுப்பது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் சிறந்த செயலாகும்.  இதை எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காது ஜோர்ஜ் கெல்லோவே செய்தும் வருகிறார்.

இந்த “ஷெய்க்கு” களோ  அல்லாஹ்வின் திருப்தியை விட தனக்கு ஊதியம் வழங்கும் எஜமானர்களின் திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர்களை திருப்தி படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட இந்த புத்தி(?) ஜீவிகளின் கதையை பார்க்கும் போது ..

நா. காமராசன் விலைமாதர்கள் பற்றிய ஒரு கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது.

“அவர்கள்
நிர்வாணத்தை விற்கிறார்கள்
ஆடை வாங்குவதற்காக..”

அரபுகளின் பணத்துக்காக இஸ்லாம் பேசுபவர்களுக்கும் இந்தக் கவிதைக்கும் நிறையவே தொடர்பிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியலை நேசிப்பவர்களை, அந்த நிதியின் மூலம் இஸ்லாத்தையும் தனது வயிற்றையும் வளர்க்க முயல்பவர்களை
இப்படியும் நோக்கலாம்

அவர்கள்
ஆடைகளை விற்கிறார்கள்
நிர்வாணத்தை வாங்குவதற்காக.
.....?



Sunday 30 January 2011

எகிப்தில் அல் ஜஸீராவுக்குத் தடை!


மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் எகிப்திய முபாரக் அரசு தற்போது ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையை செயற்படுத்தி வருகின்றது.

இணைய வலையமைப்புகளை முற்றாக செயலிழக்கச் செய்திருக்கும் அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அல் ஜஸீரா ஊடக அமைப்பின் சகல செயற்பாடுகளையும் தடைசெய்திருக்கிறது.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா மீதான தடை கருத்துச் சுதந்திரத்தை முற்றாக மறுக்கும்  செயலாகும்.

இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கும் முபாரக் அரசின் இந்த முடிவு எகிப்திய மக்களின் எதிர்ப்புக் குரலை உலகறிய செய்யாதிருக்கும் இறுதி முயற்சியாகும்.

  

எகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெளியேற்றம்!


          
கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.

சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.

எகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு தப்பியோட்டம்!


மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)

எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும்  அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.



(மக்கள் எழுச்சியில்  சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)


எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Saturday 29 January 2011

Latest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாதிகாரம்?





மூன்று தசாப்த சர்வாதிகாரம் அதிர்ந்து போகிறது.
 அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாட்டு மன்னர்களின் ஆசிர்வாதம் அழிந்து போகிறது.
 ஹுஸ்னி முபாரக்கை  எதிர்த்து இரவு பகலாக தொடர்கிறது எகிப்திய மக்கள் எழுச்சி... 


மக்கள் எழுச்சிக்கு முன்னால் திராணியற்று நிற்கும் தாங்கிகள்


இராணுவ தாங்கிகளை தமதாக்கி்க் கொள்ளும் எகிப்திய இளைஞர்கள் 

எழுச்சிக்கு முன்னால் ஒளிந்துக் கொள்ளும் இராணுவ பலம்

தூனீசியாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அந்தத் தீ எகிப்தைின் இராணுவ தாங்கிகளை எப்படித் தாக்கியது? 
புரட்சி என்ன தொற்று நோயா? 
 மக்கள் எழுச்சிக்கு முன்னால் மண்டியிட்டிருக்கும் இராணுவ தாங்கி

தீயில் குளிக்கிறது ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சித் தலைமையகம்

 எகிப்தின் எதேச்சதிகாரமும், எழுச்சியும் சந்தித்துக்கொண்ட 
 தஹ்ரீர் சதுக்கம்

கவசங்களோடு ...மக்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் காவல் நாய்கள்.

காட்டாறு வெள்ளத்தை கைகளால் தடுக்க முடியுமா?
கண்ணீர்ப் புகை!

இராணுவத்திற்கும் இதயம் இருக்கிறதே!


புரட்சியின் பாதை ஓளிர்கிறது.


இங்கு (எகிப்தில்) பற்றி எரிவது அடக்குமுறை மட்டுமல்ல 
 இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு தலைவர்களினதும் அதன் அடிவருடிகளான பக்கத்து நாட்டு அரபு மன்னர்களின் அடிவயிறுகளும்தான்.



Sunday 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.

Wednesday 19 January 2011

சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்!

சினிமா பற்றி ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை


சினிமா பற்றி சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை சமநிலைச் சமுதாயம் ஜனவரி இதழில் ஆளுர் ஷாநவாஸ் எழுதியிருந்தார். அதன் பிரயோசனம் கருதி பத்ர் களத்தில் பதிவிடுகின்றேன்.



ண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.


இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.


ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.


வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Friday 14 January 2011

நிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!

வெள்ள நிவாரண உதவி



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அனுசரணையில் அல் அமான் நுஸ்ரத் அமைப்பும், வட கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனமும்  இணைந்து  நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.

நிர்க்கதியான மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள்!

Al Aman Nusrath Organization

Alhaj Amanullah Sharief +94 727 362075, Alhaj Faiq Makeen +94 777 703388
Alhaj Badrul Muneer +94 714 045933  F. Imraz +94 777 723733

Friday 7 January 2011

வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளும்!!

இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் பணிப்பாளர் ஹாஜிகளை வேண்டியிருந்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்படொன்றின் பிரதியொன்று நவமணி பத்திரிகைக்கும், பத்ர்களத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகயமமாக மாறிக்கொண்டிருக்கும் ஹஜ் பிரயாணம், பணத்தை குறியாக வைத்து இயங்குகின்ற ஒருசில ஹஜ் முகவர்கள், ஊடகங்களில் ஹஜ் உம்ராவிற்கு கிடைக்கின்ற அதீத விளம்பரம் போன்றவை ஹஜ்ஜின் மகத்துவத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதனை இந்த ஹாஜியின் முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.சில மோசடி ஹஜ் முகவர்கள் ஊடகங்களில் சிறப்பான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பொய் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தி ஹாஜிகளிடமிருருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.இவ்வருடம் பல இலட்சம் பணத்தை கொடுத்து ஹஜ் கடமைக்காக சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள கடிதமும், காணொளியும் (வீடியோ) சாட்சி பகர்கின்றன.




28.12.2010.
அல்ஹாஜ் வை. எல் எம் நவவி,
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களம்,
180, டீ.பீ ஜாயா மாவத்தை,
கொழும்பு.10

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஹஜ் பிரயாணத்தின் போது இடம் பெற்ற குறைபாடுகள் பற்றிய முறைப்பாடு

நான்  ஏற்கனவே இரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற அனுபவத்தையும் இம்முறை குடும்பம் சகிதம் அங்கு சென்று அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இம்முறை மினாவில் ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமும், இன்னல்களும், அவலங்களும் இதற்கு முன்னைய ஹஜ் பிரயாணங்களில் எப்போதுமே இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

சென்ற வருடங்களில் ஹஜ் முகவர்களே நேரடியாக “முதவ்வாக்”களை ஏற்பாடு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதன் போது இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் பல் வேறு “முதவ்வாக்க”ளின் கீழ் பொறுப்புக் கொடுக்கப் படுவார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை ஹஜ் கமிட்டியினரே இந்த ஏற்பாட்டை செய்யப் பொறுப்பேற்றிருந்தனர். வழமைக்கு மாற்றமாக ஹஜ் கமிட்டி இலங்கையிலிருந்து சென்ற அத்தனை ஹாஜிகளையும் ஒரே முதவ்வாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இம்முறை ஹாஜிகள் சந்தித்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஹஜ் கமிட்டியினர் செய்த இந்தத் தவறேமூல காரணமாய் மாறியது என தங்களை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத 80 வீதமான ஹஜ் முகவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

26.12.2010 அன்று ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் கமியிட்டடியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதை மறைமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இம்முறை ஹஜ் பிரயாண ஏற்பாடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்ட விரும்புறேன்.

நாம் 41ம் இலக்க முதவ்வா அலுவலகத்தினரால் வழி நடாத்தப் பட்டோம்.

• சுமார் 4000 பேர் தங்கியிருக்க வசதியுள்ள கூடாரங்களில் (வநவெ) 5800 பேரை திணித்தார்கள். இதனால் பலர் பகல் நேரங்களில் மாத்திரம் கூடாரத்துக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் பாதைகளில் தூங்கியதையும் காண நேர்ந்தது.


• இந்த 5800 பேருக்கும் சமைப்பதற்கு ஒரு சமையலறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் தண்ணீர் வசதியுட்பட மலசல கூட வசதிகளும் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவு நீர் கூட கூடாரங்களுக்குள்ளேயே வழிந்தோடியது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த அசுத்தமான (நஜீஸ்) தண்ணீர் சுமார் அரையடி வரை சமையலறைக்குள் தேங்கி நின்றது. மேற் பார்வை செய்ய வந்த சவுதி ஹஜ் கமியிட்டியினர் கூட அங்கு வைக்கப் பட்டிருந்த முறைப்பாட்டுப் புத்தகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவே குறிப்பொன்றை எழுதிவிட்டுச்சென்றார்கள்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...