Tuesday 17 May 2011

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.


கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.



மிகவும் பிரமாண்டமான முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டன.


சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஸல்மான் ருஷ்தி, நபி (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக பல நூல்களை எழுதியதால் முஸ்லிம்களின் கடுங்கோபத்திற்கு இலக்கானவர்.
அவரின் நாவல் ஒன்றுதான் இலங்கையில் தற்போது படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.


Winds of Change என்ற பெயரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் பிறந்து கனடாவில் வசித்து வரும் பிரபல தயாரிப்பாளரான தீபா மேத்தா தயாரிக்கின்றார்.


இவர் தயாரித்த Water என்ற திரைப்படம் இந்தியாவில் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பலையினால் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் இலங்கையில் படமாக்கப்பட்டது.


1990களில் சல்மான் ருஸ்தியின் 'Midnight's Children' என்ற இந்தக் கதையை பிபிஸி நிறுவனம் இலங்கையில் படமாக்க முயற்சி எடுத்தபோது முஸ்லிம்கள் காட்டிய எதிர்ப்பினால் அன்று இந்த முயற்சி கைவிடப்பட்டது.


இன்று தீபா மேத்தாவினால் கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலேயே இது வெற்றிகரமாக படமாக்கப்பட்டு வருகிறது.


Winds of Change என்ற திரைப்படம் இந்திய சுதந்திர காலத்தில் ஏற்பட்ட பிரிவினையை மையமாக வைத்து சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்தியால் எழுதப்பட்ட கதையை கருப்பொருளாக கொண்டிருக்கிறது.

2 comments:

  1. இதுல என்னங்க அதிசயம்னு கேட்கறேன். இஸரேல் மினிஸ்டர் வந்துட்டூப்போனாங்க. ஹ்ம்..னு கூட முஸ்லிம் தலைகளோ இயக்கங்ளோ ஒரு மூச்சு கூட விடல்ல. சல்மான் ருஸ்தியே வந்தாலும் பாதுகாப்புக்கு நம்ப ஊட்டு பக்கம் வந்தாலும் பாவம் சாப்பிட்டிட்டுப்போப்பா என்று கரணை காட்டினாலும் அதிசயம் இல்லை. இப்படி ஒரு மானம்கெட்ட சமுதாயத்துல ஆம்பளேங்களே இல்லியா. ஏதோ நீங்களாவது நாலு வாத்தசொன்னீங்க. பரவாயில்லடா.

    ReplyDelete
  2. எந்த விதமான ஆர்ப்பட்டமுமில்லாமல் மிக கட்சிதமாக வேலை நடக்குகிறது போல் இருக்கிறது?
    சந்திரிகா அம்மையாருக்கு குறை சொல்லக்கூடாது முஸ்லிம்களின் அபிலாஷைகளை மதித்து நடந்தார்
    அன்று. அனால் இன்று, ஹூம் !

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...