Thursday 22 November 2012

அதிர்ச்சி தரும் வீடியோ - இஸ்ரேலிய இராணுவ மிருகங்களின் கொடுமை

இது மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய மிருகங்களிடம் வதை படும் பலஸ்தீன் மக்களின் கதையை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ.

வீட்டுக்குள் புகுந்து அப்பாவி பெண்களையும், சிறுவர்களையும் துன்புறுத்தும் இஸ்ரேலிய பொலிஸ் படை காட்டுமிராண்டித்தனமாக நடப்பதை இந்த வீடியோ காட்டுகின்றது.

ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் புகுந்து இப்படி மோசமாக நடக்கும் இஸ்ரேலை அமெரிக்கா பக்க பலமாக நின்று தட்டிக் கொடுக்கின்றது. வேறு நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் மனித உரிமை மீறல் என்று கொக்கரிக்கும் அமெரிக்கா இஸ்ரேல் விடயத்தில் அதற்கு மாற்றமாக நடந்து வருகின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS)  அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் 1967 முதல் இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் 750,000 பேர் தடுத்து வைக்கபட்டிருந்ததாகவும், இதில் 12,000 பெண்களும் உட்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல் தெரிவிக்கின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS) 

தகவலின் படி இன்று 6000 பலஸ்தீனிய ஆண்களும், 35 பெண்களும் 275 சிறுவர்களும்  சிறைகளில் வாடுவதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.


இன்று அநீதிக்கும் அக்கிரம்த்திற்கும் உட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத் தட்டிக் கேட்க நாதியற்ற ஒரு சமூகமாய் மாறியிருக்கிறது.


Saturday 17 November 2012

வீடியோ - இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து உலகளாவிய எதிர்ப்பலைகள்!













காணொளி- இஸ்ரேலில் இடியாய் இறங்கும் அல் பஜ்ர்

2வது தடவையாக அல்பஜ்ர் டெல்அவிவை தாக்கியது


இங்கு நீங்கள் காண்பது இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர் ஹமாஸின் ஏவுகணைக்குப் பயந்து தனது அலுவலகத்திலிருந்து விரண்டு ஓடும் காட்சி

காஸாவிலுள்ள ஹமாஸின் அமைச்சரவைக் கட்டிடம் தாக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் இயக்கம் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவை நோக்கி அல் பஜ்ர் ஏவுகணையை அனுப்பியிருக்கிறது.

அல் பஜ்ர் 5 ஏவுகணை டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் விழுந்து வெடித்துள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஆகாயத்தில் சிதறிய இஸ்ரேலிய F16 விமானம் - கஸ்ஸாம் படையணி சாதனை!


பலஸ்தீன் போராளிகளின் இராணுவ அமைப்பான் அல் கஸ்ஸாம் படையணி இஸ்ரேலிய போர் விமானமான  F16 ஐ  வீழ்த்தியிருக்கிறது.

                                                                  F16 ரக விமானம்

காஸாவின் வட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக Middle East Monitor இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தால் ஊர்ஜிதமாகியிருக்கும் இந்தச் செய்தி, முதல் தடவையாக இஸ்ரேலிய விமானத்தை தாக்கும் வல்லமை பலஸ்தீன  போராளிகளிடம் இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

போராளிகள் மீது தாக்குதல் நடாத்துவதாகக் கூறிக்கொண்டு பலஸ்தீன் சிவிலியன் நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து சிறுவர்களையும், பெண்களையும் கொடுரமாக கொலை செய்து விட்டு ஓடிமறையும் இஸ்ரேலிய விமானங்கள் இனி தப்பிப் போக முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday 16 November 2012

வீடியோ - அல் பஜ்ரும் அதிரும் இஸ்ரேலும்




தொட்டு விடும் தூரத்தில் டெல்அவிவ்


தொட்டு விடும் தூரத்தில்
டெல்அவிவ்
ஆவலாய் பறக்கிறது “ அல் பஜ்ர் 5 ”

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.


பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸின்  இராணுவ பிரிவு இஸ்ஸத்தீன்  கஸ்ஸாம் படையணி காசா மீது ஏவப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் , அந்த இஸ்ரேலிய உளவு விமானம்  "ஸ்கைலைட் பி" (“Skylight B”) என்ற பெயரிடப்பட்ட ஒன்று எனவும் அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் உளவு விமானத்தை தம் கைவசம் சிக்க வைப்பதற்கு ஹமாஸ் இயக்கம் பெற்றிருக்கின்ற தொழில் நுட்ப வளர்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.

பலஸ்தீன் போராட்ட இயக்கங்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவை நோக்கி அனுப்பிய ஈரானிய தயாரிப்பான அல் பஜ்ர் 5 என்ற ஏவுகணை,  இஸ்ரேலின் தலைநகரம் பலஸ்தீன் போராளிகளால் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற அபாய சமிக்கையை  இஸ்ரேலுக்கு உணர்த்தியிருக்கிறது.

1991ம் ஆண்டுக்குப்பிறகு முதல் தடவையாக இஸ்ரேலின் தலைநகரம் இப்போது  தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு வளைகுடா போரின் போது அன்றைய  ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர வைத்திருந்தார் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஹமாஸின் இராணுவப் பிரிவு தளபதி அஹமத் அல் ஜஃபரி அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் படலத்தை போராளிகள் ஆரம்பித்து இருக்கினறனர்.

இஸ்ரேல் தனது  நரகத்தின் வாயிலை தானே திறந்துக்கொண்டிருப்பதாக போராளிக் குழுக்கள் இஸ்ரேலை எச்சரித்திருக்கின்றன.


இலங்கை - சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இலங்கை - சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் நகர் டெல்அவிவை அதிர வைத்த அல் பஜ்ர் 5 ஏவுகணை

பலஸ்தீன் போராளிகளால் முதல் தடவையாக இஸரேலின் தலைநகர் டெல்அவிவை நோக்கி ஏவப்பட்ட அல் பஜ்ர் 5  ஏவுகணை ஸியோனிஸ ஆட்சியாளர்களை கிலிகொள்ள வைத்திருக்கிறது.






படங்கள் - காஸா தாக்குதல்


















இஸ்ரேலிய போர்க்குற்றம் !

காணொளி - காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்








Wednesday 14 November 2012

ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?



இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தாய் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
ஆட்டோவில் துப்பாக்கிகளுடன் தப்பிச்செல்ல வந்த கைதிகளை சுட்டுக்கொன்றதாக அரசு கூறுகிறது
தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய அந்த தாய் தெரிவித்தார்.

அரசு மறுக்கிறது


இதேவேளை, மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 27 கைதிகளில் சில கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
இரவு 12 மணிக்குப் பின்னரும் துப்பாக்கிகளுடன் இருந்த கைதிகளுடன் மோதல்கள் தொடர்ந்ததாகவும் காலை 4 மணிக்குப் பின்னரே நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே பிபிசியிடம் கூறினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்து தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்ட கைதிகளே இராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயுதமோதலின் போது சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ அணியினர் தற்பாதுகாப்பு என்பதையும் தாண்டி செயற்பட்டுள்ளதாகவும் அரசு இவ்வாறான அசம்பாவிதங்களின் போது இராணுவ உபாயங்களையே கையாள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சிறை வன்முறை குறித்து நாடாளுமன்ற மட்டத்திலான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.
(பிபிஸி)

துப்பாக்கி படத்திற்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.

இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tuesday 13 November 2012

வீடியோ - அமெரிக்க பயங்கரவாதம்.

அமெரிக்கா தனது பயங்கரவாத ஆக்கிரமிப்பு சார்ந்த இராணுவக் கட்டமைப்பை மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைநிறுத்தி வருகின்றது.

மத்திய கிழக்கில் புதைந்துள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையிடும் நோக்கத்தில் உலகில் மிக சக்திவாய்ந்த எண்ணெய் நிறுவன முதலாளிகளான
புஷ் வகையறாக்கள் இந்த எண்ணெய்க்கான போரை அப்பாவி மக்கள் மீது திணித்து மனித உயிர்களை காவு கொண்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த தாம் உதவி புரிவதாகக் கூறி தனக்கு தேவையான நாடுகளில் போராட்டங்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா, அந்த நாட்டு  மக்களையும், ஏனைய வெளிநாட்டுக் கூலிப்படைகளையும் ஆயுதமயமாக்கி அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களை தோற்றுவித்து வருகின்றது. ஆட்சிமாற்றம் என்ற போர்வையில் தனது தாளத்திற்கு ஆட்டம் போடுகின்ற அரபு மன்னர்களையொத்த தலைவர்களை அந்தந்த நாட்டில் தலைவர்களாக ஆக்குவதன் மூலம் தனது சுரண்டல் அரசியலை அமெரிக்கா மிகவும் கச்சிதமாக செய்து வருகின்றது.

இந்த சிறிய விவரணம் அமெரிக்காவின் இந்த பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது.

Sunday 11 November 2012

காணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் !



கற்பித்தல் சேவை காலத்தால் அழியாத கௌரவமான தொழிலாகும்.

ஆசிரியர்கள் என்போர் அனைவராலும் போற்றப்படுபவர்கள்.  காரணம் அவர்கள் இவ்வுலகில் அனைத்து அறிஞர்களையும் உருவாக்குபவர்கள்.

வர்த்தகமயமான இன்றைய சூழ்நிலை ஆசிரியர்களை மோசமான நிலைக்கு தள்ளியிருப்பதை அண்மையில் வெளியான ஊழல் சம்பந்தமான ஒரு கணிப்பீடு தெளிவு படுத்தியது.

இலஞ்சம் வாங்குவதில் இலங்கையில் பொலீஸ் உத்தியோகத்தர்களை விட ஒரு படி மேல் பாடசாலை நிர்வாகம் அதாவது அதிபர்களும், ஆசிரியர்களும் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் ஒன்றை“ ட்ரான்ஸ்பெரஸி இன்டர் நெஷனல்” வெளியிட்டது.

எதிர்கால சமுகத்தை செதுக்கின்ற சிற்பிகளாக கௌரவமான சமூகமாக கருதப்பட்ட இந்த ஆசிரியர் வர்க்கம் எதிர்கால சமூகத்தை சிதைக்கின்ற சின்னத்தனம் கொண்டர்களாக மாறி வருவதை இந்த காணொளி எடுத்துக் காட்டுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தை தனது இஷ்டம் நடாத்தும் சில அதிபர்கள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக  பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற ஓர் அநாகரீக அவதாரமாக மாற்றம் எடுக்கின்றார்கள்.

இந்த காணொளி அத்தகைய ஒரு மோசமான அதிபரைப் பற்றி பேசுகிறது.


படங்கள் - கொழும்பு வெலிக்கடை சிறை -விபரீதம்!







வெலிக்கடை சிறைச்சாலை மோதல்களுக்கு முக்கிய இடமாக குறிக்கப்படும் இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள 1880களில்  அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட சிறைச்சாலையாகும்.

 ஊடகங்களில் பேசப்பட்ட இன்றும் பேசப்படுகின்ற  ஒரு சிறைச்சாலையாக இருப்பதற்கு அதில் இடம்பெறும் கலவரங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

1983ம் ஆண்டு ஜுலைக்கலவரத்தின் போது இந்தச் சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினால் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையும் வெலிக்கடை சிறைச்சாலையின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

நேற்றைய சம்பவம் கூட மற்றுமொரு முறை வெலிக்கடையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

 நேற்றைய  மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் சந்திரசிறி கஜதீர பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் நேற்றுமாலை பயங்கர சண்டை வெடித்தது. இந்தக் கலவரத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

32 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைதிகள் கைப்பற்றி துப்பாக்கிகளை எடுத்து   விசேட அதிரடிப்படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன ஏ.கே. ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி கைதிகள் சிறைக்கூரையில் ஏறிநின்றனர்.

இந்த மோதலில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நள்ளிரவு வரை 13 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தன என்று அனில் தெரிவித்தார். அவர்களில் குறைந்தது 11 பேர் கைதிகள். தப்பிச் செல்ல முற்பட்ட போது சில கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்கள் அதிகாரிகள்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனையில் இறங்கினர். இதன் போது கைதிகளின் பெருந்தொகையான கையடக்கத்தொலைபேசிகளை அவர்கள் மீட்டனர். 

வழக்கமாக இத்தகைய தேடுதலில் சிறைக் காவலர்களே ஈடுபடுவர். கைதிகளின் கைகள் விலங்கிடப்பட்டு சோதனையிடப்பட்டதை கைதிகள் எதிர்த்ததாகவும் அதன் பிறகே இந்த முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.

ஆத்திரமடைந்த கைதிகள் முதலில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையில் சண்டை வெடித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் வெலிக்கடைச் சிறையிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றி அங்கிருந்த பெருமளவான துப்பாக்கிகளைத் தம்வசப்படுத்தினர் என்று பொலிஸார் கூறினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர். எனினும் கட்டு மீறிய சண்டையால் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

கைப்பற்றிய ஆயுதங்கள் சகிதம் சிறைச்சாலை கூரைமீது ஏறிநின்றவாறு கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் அதிரடிப் படையினரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததால் வெலிக்கடைப் பகுதி பெரும் சண்டைக்களம் போலாகியது.
கைதிகளில் தொடர் சூட்டை அடுத்து கவச வாகனங்கள் மூலம் அதிரடிப்படையின் சிறையின் சிறையினுள் போனதை சாட்சிகள் கண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 4 கைதிகள் கூரையிலிருந்து ஒரே நேரத்தில் சுட்டுள்ளனர். நிலைமை கட்டு மீறியதால் சிறைச்சாலைக்கு எதிரிலும் “பேஸ் லைன்’ பிரதான வீதியில் தெமட்டகொட வரையில் போக்குவரத்து நேற்று நள்ளிரவு வரை தடைப்பட்டிருந்தது.

நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர். ஆயுதங்களுடன் கூரையில் நின்ற கைதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்து சுடும் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கலவர நிலையைப் பயன்படுத்தி பல கைதிகள் சிறைச்சாலை மதிலை உடைத்து தப்பியோடியுள்ளனர் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஓட்டோ ஒன்றில் அவ்வாறு தப்ப முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றிரவு 9.30 மணிவரை சிறைச் சாலையினுள் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.


9.40 மணிக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சண்டையில் காயமடைந்தவர்களில் 14 பேர் விசேட அதிரடிப்படையினர் என்று பொலிஸார் கூறுகின்றனர். படுகாயமடைந்த அதிரடிப்படையினர் ஒருவருக்கு அவசரமாக இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. படையின் பிரதிப் பொறுப்பதிகாரியான ஆர்.எம். ரணவணவும் சுட்டுக்கு இலக்காகி காயமடைந்தார் .

Tuesday 6 November 2012

அமெரிக்க சுப்பர் பவர் Award-Winning Movie "SUPERPOWER": Trailer




அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சார்ந்த வெளிநாட்டு அரசியல் கொள்கையை விமர்சன ரீதியாக பார்க்கும் திரபை்படமே சுப்பர் பவர். 

பிற நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காக இராணுவ படையெடுப்புகளோடு அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களையும் ஆயுதப் போராட்டங்களையும், ஆட்சி மாற்றங்களையும் உருவாக்கி தனது  தாளத்திற்கு ஆடக் கூடிய ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தி தமது சூறையாடலை சாதூரியமாக செய்து வருகிறது.

சுப்பர் பவர் விவரண திரைப்படம் அமெரிக்காவின் இந்த அரசியலை கருப்பொருளாக கொண்டிருக்கின்றது.

அதிகமான விருதுகளைப் பெற்ற சுப்பர் பவர், நோம் சொம்ஸ்கி, மிச்சல் சொசுடொவ்ஸ்கி, பில் பிளம், சாரமர்ஸ் ஜொன்ஸன் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கருத்துரைகளோடு வந்திருக்கிறது.

சிறுபான்மை மக்களை ஆட்சி செய்வதில் இலங்கை அரசுக்கு பங்களாதேஷ் அரசின் முன்மாதிரி சிறந்த பாடமாக அமைய வேண்டும்

-PMGGயின் மாதாந்த மக்கள் சந்திப்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவிப்பு-
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவதில் பங்களாதேஷ் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதிலிருந்து இலங்கை அரசாங்கம் இன ஐக்கியத்திற்கான பாடங்களைக் கற்றுகொள்ள வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாதாந்த மக்கள் சந்திப்பு கடந்த 02ம் திகதி வெள்ளிக்கிழமை அதன் மக்கள் அரங்கில் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு “கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இன்றைய அரசியல் நிலவரம்” எனும் தலைப்பில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் உரையாற்றினார்.
அதன்போது அவர் மேலும் கூறியதாவது:
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடும் பேச்சுக்களின்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதனையும் பற்றி பேரம் பேசாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தமக்கான ஒரு வேட்பாளர் ஆசனம் குறைக்கப்பட்டதன் காரணமாக தனித்துப் போட்டியிட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும், இன, மதவாதப் போக்குகளையும் வெகுவாகக் கண்டித்து சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் வேண்டும் எனக் கோஷமெழுப்பி ஆணை கோரிய அக்கட்சி, தேர்தலின் பின் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படாமல் அனைத்தையும் மறந்து விட்டு மக்கள் அளித்த ஆணைகளின் மூலம் கிடைத்த மாபெரும் அரசியல் அதிகார பலத்தை அரசாங்கத்தின் காலடியிலேயே மீண்டும் சமர்ப்பித்து சரணாகதியடைந்தது.
முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தைக் காக்கவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மண்ணில் நிலை நிறுத்தவும் ஆணை கேட்டு வந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவை வழங்கி “தங்கத் தாம்பாளத்தை” அதன் கைகளில் கொடுத்திருந்த போதிலும், பதவிக்கும், பவுசு வாழ்வுக்கும் அடிமைப்பட்டுப்போன அக்கட்சி அந்தத் “தங்கத் தாம்பாளத்தை” கையிலெடுத்துக் கொண்டு இப்போது பேரின சமூகத்திடம் பிச்சை பெற்று தன் காலத்தைக் கழித்து வருகின்றது.
இதனை “சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு” என்றும், “மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட முஸ்லிம் முதலமைச்சர் கனவை நனவாக்கிய சாதனை” என்றும் அக்கட்சித் தலைவர் இப்போது கருத்துத் தெரிவித்து மக்களைச் சமாளிக்க முற்பட்டு வருகின்றார்.
மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கனவு கண்ட முஸ்லிம் முதலமைச்சர், அரசாங்கத்தின் கட்டளைக்குப் பணிந்து கைப்பொம்மையாகச் செயற்படும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரையல்ல. இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படும்போது முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகொன்றைப் பெற்று அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும், செயற்படவும் சக்திபெற்ற முஸ்லிம் முதலமைச்சரையே அவர் கருதியிருந்தார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மாத்திரமல்ல, தேர்தல் பிரச்சார காலத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளையும் போக்குகளையும் காரசாரமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சியூட்டி வாக்குகளைப் பெற்றதன் மூலம் கிழக்கு மாகாண அரசாங்கத்தைத்  தீர்மானிக்கும் சக்தியாக அக்கட்சியை நிலை நிறுத்திய வாக்காளர்களையோ அல்லது பிரதேச மத்திய குழு முக்கியஸ்தர்களையோ சந்தித்து கலந்துரையாடி முடிவெடுக்காமல் கொழும்பில் இருந்தவாறே நாட்களை நகர்த்திச் சென்று இறுதியில் மீண்டும் இந்த அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்கும் தீர்மானத்தையும் அவர்கள் எடுத்தனர்.
அரசாங்கம் என்ன விலை கொடுத்தாயினும் கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தில் இருப்பதை நன்குணர்ந்த நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து எதுவும் பேசாது “கட்சியைப் பாதுகாக்க” என்ற வழமையான பல்லவியைக் கூறி அரசுடன் இணைந்ததன் மூலம் இன்று அக்கட்சி அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் பார்வையிலும் “சுயமரியாதை இழந்து” நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
தேர்தல் முடிவின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸை தம்முடன் இணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக ஆட்சியமைக்க வருமாறு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக முதலமைச்சர் பதவியுட்பட முஸ்லிம் சமூகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும் அவர்கள் உலகறியத் தெரிவித்தனர். எனினும் “சுயமரியாதையுடன் கூடிய” அந்த நல்ல வாய்ப்பை ஸ்ரீ.ல.மு.கா. தலைமை தவறவிட்டு விட்டது.
கிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் “முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தி” அத்தியாவசியமாகத் தேவைப்பட்டிருந்த அந்த வேளையில் அந்த சக்தியைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இரு தரப்புக்களுடனும் தனது சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியிருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்று அரசாங்கத்தினாலோ அல்லது உலக நாடுகளின் அழுத்தங்களுக்கமையவோ ஏற்படும்போது அந்தப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் அந்தஸ்த்து என்ன? அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் பங்கு என்ன? என்பது குறித்து இவர்கள் இருதரப்புடனும் பேசியிருக்க வேண்டும்.
மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களையென்றாலும் சுதந்திரமாகவும் மக்களுக்குப் பயனள்ளதாகவும் அமுல்படுத்துவதற்கான உத்தரவாதம் குறித்து பேசியிருக்க வேண்டும்.
வட கிழக்கிலுள்ள காணிகளில் முஸ்லிம் சமூகத்திற்கான நிலப்பகிர்வு குறித்து பேசியிருக்க வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்துடன் பேசுவதை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவையே முஸ்லிம் சமூகத்திற்கு அதிகமுள்ளது.
முஸ்லிம் சமூகத்துடைய மீள் குடியேற்றம் குறித்து பேசியிருக்க வேண்டும். இனப்பிரச்சனைக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 33 கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதுபோலவே திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும், வடக்கில் பல பிரதேசங்களிலுமாக ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களின் மீள்குடியேற்றம் பற்றியும் அரசாங்கத்துடனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேசியிருக்க வேண்டும்.
நிர்வாக ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்திற்கான நிர்வாக பங்கீடுகள் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.
 ஆனால் அவ்வாறெல்லாம் பேசாமல்தான் நாட்களைக் கடத்தி வந்து இறுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருந்தது. முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கவெனத் தோற்றுவிக்கப்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளால் வளர்த்தெடுக்கப்பட்டு பேரம் பேசும் சக்தி மிக்கதாகத் திகழ்ந்த முஸ்லிம் காங்கிரஸ், மக்களை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டு விட்டு தனது “கட்சியைப் பாதுகாக்கும்” காரணத்தைக் கூறி அரசுக்கு முட்டுக்கொடுத்திருப்பதை எந்த வகையிலும் முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்லாது சிங்கள சமூகமும், தமிழ்ச் சமூகமும், தமிழர் தரப்பு அரசியல் சக்திகளும் அவர்களின் அச்சுறுத்தல்களுக்கும், அடக்கு முறைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உட்பட்டிருந்த யதார்த்தத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோடு தேர்தலுக்கு முன்னர் நாம் நடாத்திய பேச்சு வார்த்தைகளின்போது அவர்கள் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டிருந்ததுடன் அக்காலப் பகுதியில் இடம்பெற்ற வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புகளுக்கான தமது கவலைகளையும் அவர்கள் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தனர்.
இப்போது அத்தகைய அச்சுறுத்தல் எதுவுமில்லாத காலத்தில் தமிழ்ச் சமூகத்தோடு முஸ்லிம் சமூகமும் இணைந்து சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும், இருப்பையும் பேணுவதற்கு முன்வர வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களின் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியான ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறெல்லாம் தமிழர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கௌரவமிக்க அழைப்புக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறியே அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து கிழக்கின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் அரசாங்கத்தின் கைகளுக்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை தாரை வார்த்து அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் முதலாவது பிரேரணையாக முன்வைக்கப்பட்ட ‘திவிநெகும’ சட்டமூலத்திற்கும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவை வழங்கி சிறுபான்மை சமூகங்களின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆணை வழங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூப்பாடு போட்டு முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கோரிய ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அரச சுகபோகங்களுக்காகவும் “கட்சியைப் பாதுகாக்கும்” பல்லவியைப் பாடிக் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து 18வது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி துரோகமிழைத்தது.
இந்த 18வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு போன்ற நல்லாட்சிக்கான அத்திவாரங்கள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் மூலம் கிடைத்த அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் அதிகாரத்தைப் பறித்து வீட்டுக்கு அனுப்புவோம் என்று விமர்சித்த ஜனாதிபதி தொடர்ந்தும் பல்லாண்டு காலம் அதே நிறைவேற்று அதிகாரத்துடன் நாட்டை ஆட்சி செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 18வது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் கண்மூடித்தனமாக ஆதரவளித்ததன்விளைவும், பலாபலன்களும்தான் இப்போது மகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிப்பதற்கும், 13வது அரசியல் திருத்தத்தை இல்லாமல் செய்து மாகாண ஆட்சி முறைமையையே இல்லாதொழிப்பதற்கும், நீதித்துறையில் அரச அதிகாரத்தை பிரயோகிப்பதற்கும் வழி வகுத்துள்ளது.
“திவி நெகும” சட்டமூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதன் காரணமாகவே மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றே நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதை மிக எளிதாக அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். மாகாண சபைகளுக்கு 13வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட ஒரு சில  அதிகாரங்களையும் அச்சட்ட மூலம் பறிப்பதாக அமைந்திருக்கவில்லை என்றிருந்தால் உயர்நீதிமன்றம் அவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கத் தேவையில்லை.
நிலைமை இவ்வளவு தெளிவாக இருக்கையிலும் அச்சட்ட மூலத்தை ஆராய வேண்டும், பரிசீலிக்க வேண்டும் என்றெல்லாம் மு.கா. தலைமைகள் கருத்து வெளியிட்டது மக்களை ஏமாற்றும் முயற்சியின் ஒரு வடிவமாகும். கிழக்கு மாகாண சபையில் அச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும்போது கால அவகாசம் கோருவோம் என அக்கட்சியின் செயலாளர் கூறியிருக்கையில், அமெரிக்காவில் இருந்து தலைவர் அதனை ஆதரிக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியதன் காரணமாகவே தாம் அச்சட்ட மூலத்தை ஆதரித்ததாக மாகாண சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதுபோலவே நமது காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து மாகாண சபைக்குச் சென்றுள்ள உறுப்பினர், அவரது அரசியல் வழிகாட்டியான பிரதியமைச்சர் அச்சட்ட மூலத்தை ஆதரிக்கச் சொன்னதற்காக தான் ஆதரித்ததாக விளக்கமளித்துள்ளார். இப்படி அச்சட்ட மூலத்தின் தாற்பரியம் என்ன? அதன் சாதக பாதகம் என்ன? என்பதெல்லாம் தெரியாமல், தமக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படாமல் தம்மை அரசியல் பதவிகளில் அமர்த்திய தலைவர்களின் விருப்பங்களுக்கமைவாக அவர்களுக்கு விசுவாசமாகவே கிழக்கு மாகாண சபையிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் அச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.
“திவிநெகும” சட்ட மூலம் பற்றியும், அதிலுள்ள பாதகமான அம்சங்கள் பற்றியும் ஏற்கனவே நாம் தெளிவான விபரங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து அச்சட்ட மூலத்தை ஆதரிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தோம். எனினும் அவர்கள் அதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கட்சி அரசியல் கண்ணோட்டத்துடன் அதனைப் புறந்தள்ளி மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர்.
“திவி நெகும” சட்ட மூலத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அதிகாரப் பறிப்புக்கு அங்கீகாரமளித்துள்ள ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ், எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுக்களில் எவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கான அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்போகிறது? அவ்வாறு அதிகாரப் பகிர்வைக் கோருவதற்கு அக்கட்சிக்கு என்ன அருகதையும், யோக்கியதையும் இருக்கின்றது?
அந்த “திவி நெகும” என்ற சுழிக்காற்றின் ஒரு புயலாக மாறி இப்போது 13வது அரசியல் திருத்தத்தை நீக்கி மாகாண ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்ற சூறாவளியாக மாறியிருக்கின்றது மாத்திரமல்ல, அரசாங்கம் விரும்பிய மாதிரி அனுசரித்துச் செயற்படாமல் சட்டத்திற்கும், நீதிக்கும் மதிப்பளித்து முன்சொன்னவாறு ஒரு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தீர்ப்பொன்றை அளித்தமைக்காகவே இன்று பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகவும் அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள இக்குற்றப்பத்திரிகையை எந்த வகையிலும் முஸ்லிம் சமூகம் ஆதரிக்க முடியாது.
ஏனெனில், இந்த நாட்டில் நீதிமன்றங்களினூடாக நீதியை மிக அதிகமாக எதிர்பார்க்க வேண்டிய மூன்றாவது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம் சமூகமே இருந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தினாலும்,நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியினாலும், சிங்கள – தமிழ் பெரும்பான்மைச் சமூகங்களினாலும் முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்படுகின்ற பல்வேறு அடிப்படை உரிமைகளையும், பிணக்குகளுக்கான தீர்வுகளையும் சுதந்திர நீதித்துறை மூலமாகவே நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய நிலையில் நீதித்துறையையும் அரசியல் அதிகாரத்துக்குட்படுத்தும் வகையில் பிரதம நீதியரசருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கைக்கு எமது முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களும் ஆதரவளித்திருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் நிர்க்கதியான நிலைக்கு வழிவகுப்பதாகவே அமையும்.
நாம் முஸ்லிம்கள் என்கிற அடிப்படையில் எந்தவொரு விடயத்தையும் முதலில் மார்க்க ரீதியாகவும், பின்னர் சமூக ரீதியாகவும் பார்க்க வேண்டும். இறுதியாகவே தமது அரசியல் கட்சி, அதன் கொள்கை என்ற பார்வையில் நோக்க வேண்டும். எனினும் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவ்வாறு மார்க்கத்தையும், சமூகத்தையும் முன்னிலைப்படுத்தி எந்தவொரு விடயத்தையும் பரிசீலிப்பதாக இல்லை. தமது கட்சி நலன்களையும், தமது அரசியல் இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதையுமே முன்னிலைப்படுத்தி அதற்காகவே தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலைமை இனிமேலும் நீடித்தால் எதிர்வரும் காலங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் மோசமான கையறு நிலைமையையே இந்நாட்டில் ஏற்படுத்தும். எமது சமூகத்திற்கான இழப்புக்கள் பற்றியும், அநீதிகள் பற்றியும் எங்கும் எவரும் வாய் திறந்து பேச முடியாத அடிமைச் சூழலை வலிந்து உருவாக்கும். எமது கைவிரல்களைக் கொண்டே எமது கண்களைக் குருடாக்கிக் கொண்ட அவலத்துக்கு எமது சமூகம் உள்ளாகுவதை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது போகும். எனவே இன்றைய அரசியல் நிலவரம் குறித்து முஸ்லிம் சமூகத்திலுள்ள சகல தரப்பினரும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவதில் பங்களாதேஷ் அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமான செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதை இந்த இடத்தில் நாம் கவனித்தாக வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழுகின்ற பௌத்த மக்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட அதிரடியான நடவடிக்கைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பாடங்களைக் கற்றுகொள்ள வேண்டும்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உடனடியாக் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி தாக்குதல்தாரிகளெனச் சந்தேகிக்கப்பட்ட 160க்கும் அதிகமானவர்களை கைது செய்து, தனது அமைச்சர் ஒருவரையும் அப்பகுதிக்கு அனுப்பி வைத்து அங்கு வாழும் சிறுபான்மையினரான பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது மாத்திரமல்லாமல் சிறுபான்மை பௌத்த மக்களிடம் மன்னிப்பும் கோரியது மாத்திரமன்றி இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என்ற சகல பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பங்களாதேஷ் அரசு வழங்கி இருந்தது. அந்த நாட்டு அரசாங்கம் அங்கு சிறுபான்மையாக வாழுகின்ற பௌத்த மக்களின் பாதுகாப்பையும் மத உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொண்ட  பொறுப்புமிக்க நடவடிக்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் துரதிர்ஷ்டம், நமது நாட்டிலோ சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழும் நமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் எல்லாம் அரசுக்கு முட்டுக்கொடுத்து ஆதரவளித்து அமைச்சுப் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பேரின மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கின்ற போதிலும் இன்று வரை ஒருவரைத்தானும் இலங்கை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியதாக வரலாறில்லை. அந்தளவுக்கு செல்வாக்கு இழந்த நிலையில்தான் எமது முஸ்லிம் சமூகம் அரசுக்கு விசுவாசமாக இன்றும் ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றது.
ஒரு நாட்டில் ஜனநாயகம் நிறைந்த நல்லாட்சி நடப்பதற்கு நிறைவேற்றதிகாரம், நீதித்துறை, சட்டவாக்க சபை என்ற மூன்று அம்சங்களும் ஒன்றையொன்று அதிகார ஆக்கிரமிப்புச் செய்யாமல் செம்மையாகச் செயற்பட வேண்டும் உனபது பொதுவானதொரு கோட்பாடாகும். ஆனால் நமது நாட்டில் நிறைவேற்றதிகாரமானது சட்டவாக்க சபையை மூன்றிலிரு பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சிக்கான அதிகார ஆடுதளமாக்கிக் கொண்டிருப்பதுடன் இப்போது நீதித்துறையையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது.
இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். சுதந்திரமான நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஈமான் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் மார்க்கத்தின் பெயரால் கடமையாகும். ஆட்சியதிகாரத்துக்குப் பயந்து அல்லது அரச சலுகைகளுக்கு சோரம்போய் நீதித்துறையை ஆட்சியாளர்களிடம் மண்டியிடச் செய்யும் அநியாயத்திற்கு முஸ்லிம் சமூகம் துணை போகக் கூடாது.
இதுதொடர்பாகவும், இன்றைய சமூக விரோத அரசியல் செயற்பாடுகளை விளக்கியும் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எதிர்வரும் நாட்களில் பல்வேறு மட்டத்திலும் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்தவுள்ளது – இவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி அவர்களும் முன்னதாக நகர சபை நிலவரங்கள் குறித்து உரையாற்றினார்.
நன்றி -  http://pmgg.org/?p=14415

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...