Monday 3 December 2012

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .


“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .




எ எம் எம் முஸம்மில்.
 பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர் நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும்  இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம்  என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார். இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர். எவ்வாறாயினும்  பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவேன். முஸ்லிம்களுக்கு எதிரான இவ் அசாதாரண நிலை நாடெங்கிலும் வியாபித்துள்ளது . என்று அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார் .பதுளைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தத வேளையில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் பதுளை அல் அதான் மா வி யிலும் பதுள்ளை ஜூம்மாப்பள்ளியிலும் நடைபெட்ட்ற சந்திப்புகளிள் கருத்துகளை தெரிவிக்கும் போது மேற்படி கூறிய அமைச்சர் தொடர்ந்ததும் கருத்து தெரிவிக்கும் போது, பதுளை முஸ்லிம்கள் ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடினும் பல அபிவிருத்தி நிலைகளை எட்டியுள்ளனர். ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலையை சாமர்த்தியமாக பதுளை முஸ்லிம்கள் கையாண்டுள்ளது பாராட்டுகுரயது. இன்று ஒரு முஸ்லிம் மகளிர் கல்லூரியை பெற்றுக்கொள்ளவும் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் அல் அதான் மா வி யை சேர்க்கவும் உங்களால் முடிந்துள்ளது. ஆகவே இப்பாடசாலைகளின் எதிர்கால தேவைகளுக்கு நிச்சயமாக என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
  ஜனாதிபதியவர்களுக்கு எழுத்தப்பட்ட பதுளை முளிம்கள் எதிர்நோக்கயுள்ள பொது பல சேனாவின் நெருக்குதல்கள் பற்றிய எழுத்துமூல முறைப்பாட்டின் பிரதின்றையும் அழ அதான் மா வி யின் கனிஷ்ட பிரிவிற்க்கான காணி யொன்னரின்தேவைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்ரையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.                     


Sunday 2 December 2012

இலங்கை -பதுளை முஸ்லிம்கள் இலக்கு வைக்க பட்டுள்ளார்கள் !!! , காத்திரமான தலைமைத்துவம் இன்மையே காரணம் !!!!.



கடந்த சில மாதங்களாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள்,சூழ்ச்சிகள்,இனவாத செயல்கள் கூர்மைபடுத்த பட்டுள்ளன. பொது பல சேனா என்ற  அமைப்பு நாடளாவிய ரீதியில் அதன் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஏக காலத்தில் முடுக்கி விட்டிருந்தாலும் அதன் பிரதான இலக்குகளில் ஒன்றாக பதுளை பிரதேசம் காணப்படுகிறது. இதற்கான பிரதானக் காரணம் இன்று பதுளை மாநகர எல்லையில் வாழும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு வீதம் முஸ்லிம்களாக இருந்தும், சுமார் ஒன்படயிரதிட்குமேல் வாக்களர் பலத்தை கொண்ட இரண்டாம் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருந்தும், காத்திரமான தலைமைத்துவம் ஒன்றிஇல்லாததே இந்த்நிலமைக்கு காரணம் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

       கடந்த சில மாதங்களுக்குமுன் ஊவா கொயும் மெத் சங்க்விதாணயஎனும்பவுத்த அடிப்படைவாத அமைப்பொன்றின் மூலம் ஐந்து பக்கங்களை கொண்டதொரு துண்டுப்பிரசுரத்தை தமது தொலைபேசி இலக்கங்களுடன் வெளியிட்டது . குறிப்பிட்ட இத்துண்டு பிரசுரத்தின் மூலம் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷக்கருத்துகளை வெளியிட்டிருந்தது.அதை தமிழ் மொழி மூலம் மொழிபெயர்த்து ஊடகங்களில் வெளியிட்டு உரிய சமூக தலைமைகளை தெளிவு படுத்த எடுத்த முயற்சியை ஒரு சமூக விரோத செயலாக சித்தரித்து சிலர் விமர்சித்ததுடன்  இதை மொழி பெயர்த்தன் மூலம் சமூக பிரச்சினை உருவாகலாம் என்று குற்றம் சுமத்தினர்.குறிப்பிட்ட அதே காலத்தில் பதுளை ஜும்மாபள்ளிவாயலில் தொப்பி அணிவது சுன்னத்தா இல்லையா என்ற கருப்பொருளில் கொத்துபா உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட துண்டு பிரசுரத்தின் தமிழ் ஆக்கத்தினை வாசித்தறிந்த வெளிப்பிரதேச முஸ்லிம்கள் அதிர சிக்கு உள்ளாகினர்.  நாட்டின் நாலபக்கங்களில் இருந்தும் இது பற்றி தகவல் அறிந்தவர்கள் விசாரிக்கத் தொடனங்கினர். கொழும்பில் இது விடயமாக பல முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள்   பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி ஊவா கொயும் மெத் சங்க்விதானயவிட்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிழக்கு மாகாணசபை தேர்தல் மேடைகளில் முஸ்லிம் அரசியல்   தலைமைகளால் இவ்விடயம் பிரதான பேசுபொருளாக சிலாகிக்கப்பட்டது.

    அனால் உள்ளூரில் இது விடயமாக எந்தவித எதிர் நடவடிக்கையும் காத்திரமாக மேற்கொள்ளப் படவில்லை. இந்தநிகழ்வுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பதுளை ஜும்மா பள்ளியில்  நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வில் பதுளை முதியங்கனை விகராதிபதியையும்,பதுளை மாவட்ட செயலாளரையும், இன்னும் சில சிங்கள  உள்ளூர் அரசியல் தலைவர்களையும் பங்குபெற செய்தது இதற்காகத்தான் என்று குறிப்பிட்ட இப்தார் நிகழ்வை இதற்கான பதில் நடவடிக்கையாக கூறப்பட்டது.
  மேலும் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக உலகளாவிய ரீதியில் ஒன்று திறண்டு தமது எதிப்பை காட்டி மாபெரும் எதிர்ப்பு பேரணிகளை பாரிய அளவில் மேற்கொண்டனர்.   

   இவ்வெதிர்புக்களை கண்டு உலகமே தகைத்து நின்றது. எமது நாட்டிலும் நாளா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது. ஏன் பதுளைக்கு பக்கத்தில் உள்ள சிறிய முஸ்லிம் குக்கிராமங்களான ஹாலிஎல,பஸ்சர, பண்டாரவெள, வெளிமட போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆர்பாட்டங்களை  நடத்தி தமது ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.

   அனால் பதுளையில் மட்டும் இவ்வெதிர்ப்பு ஆர்பாட்டங்கள் யாவுமே தம்மை பெயர்போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்தளுக்காக செய்வதாகக் கூறி முஸ்லிம்களின் மனவெழுச்சி கொச்சை படுத்த பட்டது. குறித்த ஆர்பட்டங்களின் போது நடைபெறும் அடவடிததனங்களை நாம் இஸ்லாத்தின் பார்வையில் வன்மையாக எதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருதில்லை. அனால் ஆர்ப்பாட்டம் என்பது தமது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய உயரிய ஊடகமாகவே கருதப்படுகிறது. அதனாலதான் இவூடகமுறையை சட்டத்தாலும் தடைசெய்ய முடியாதுள்ளது.இன்று பதுளை முஸ்லிம்களுக்கு இது சட்டப்படி குற்றமாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்யவும் முழங்காலுக்கு கீழ் சுடவும் முடியும் என்று அறிவுறுத்ததப் பட்டுள்ளது.

  நபி (ஸல்) அவர்களுக்காகவும் ,இஸ்லாதிற்க்காகவும் ஓரணியில் திரண்ட முஸ்லிம் உம்மாஹ்வின் மனவெழுச்சியை நாம் கொச்சை படுத்த முடியாது. சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் முஸ்லிம்கள் இஸ்லாதிற்க்காகவும், நபி (ஸல்) அவர்களுக்காகவும் ஓரணியில் ஒன்று திரண்ட வேளையில் பதுளை முஸ்லிம்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டிருந்ததால் முடங்கி இருந்த பதுளை முஸ்லிம்களின் பலஹீனத்தை புத்த அடிப்படைவாதிகள் கண்டுகொண்டு கொண்டதால் பதுளை மாநகரில் அடிக்கடி இரண்டு அரபட்ட பேரணிகளை பொது பல சேணாஅமைப்பு வெள்ளிக்கிழமைகளை இலக்காக கொண்டுநடத்தியது.
   “பதுளை முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்கவேண்டாம்,முஸ்லிம்கள் பவுத்தர்களின் ஊழியத்தை சுரண்டுகிறார்கள் சிங்கள யுவதிகளை திட்டமிட்டு கடததிச் சென்று அபாயாஅணிவிக்கின்றகள் ,இவர்களது ஷரியா சட்டத்தை அமுல் படுத்தி எதிர்கால எமது சந்ததிகளை கொன்றொழிக்க திட்டம் போட்டுள்ளர்கள்போன்ற கருத்துக்களை ஊவா மாகாணம் எங்கும் தீவிரமாக பரப்பிக் கொன்ன்டிருந்த வேளையில் தான்  பதுளை முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையில் புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்று விற்கப்பட்டதாக கிளப்பப்பட்ட புரளியாகும் .

   இது திட்டமிட்டு செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை  துள்ளியமாக விளங்கலாம்.  குறித்த முஸ்லிம் வியாபாரியை சந்தேகத்தில் கைதிசைய வரும் போது, பல இனம்தெரியாத முகங்களும், ஊடகவியலாளர்கள்  என கூறக்கூடியவர்களும் அங்கே ஏற்கனவே வதிருந்தது திட்டமிட்டு புகைப்படங்களை எடுத்ததும்,கைது செய்யப்பட்டவர்களை போலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது  ஊவா கொயும் மெத் சங்விதானையவினால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் குறிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தையுடைய பொல்வத்த பன்சலையின் பிரதம தேரோ சகிதம் இன்னும் பலரும் அங்கு ஏற்கனவே கூடியிருந்ததும் இச்சதியின் பின்னணியையும் சதிகாரர்களையும் கோடிட்டு காட்டுகின்றது.

   ஆனால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் போலீசில் ஆஜராவதற்கோ நியாயத்தை எடுத்துரைக்கவோ பதுளை நகரில் முஸ்லிம்கள் மத்தியில் பரந்துபட்டதொரு அமைப்போ அல்லது காதிரமனதொரு பிரதிந்திதுவ குழுவோ இயங்க வில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றது. ஏனெனில் அடுத்தநாள் வெள்ளிக்கிழமை குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று ஆர்பாட்டம் செய்தபோதும்  , ஜும்மாதொழுகையின் பின் இரு முஸ்லிம் சகோதரர்கள் போலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போதும் இதற்கெதிராக  எவ்வித பதில் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சமாதானமாகவேநிகழ்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. ஆகவே அடுத்தநாள் மீண்டும் ஒரு  துண்டு பிரசுரம் தொலை பேசி இலக்கங்கள் சகிதம்   பௌத்தர்களுக்கு மத்தியில் விநியோகிக்கப் பட்டது . அதில் தாங்கள் பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாகவும் , உண்மையான பௌத்தர்கள் மேலும் மேலும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாரும்வேண்டப்பட்டிருந்த்தது. அதை தொடர்ந்து  அடுத்தநாள் மீண்டும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று அதில் சிலதை கொன்று விட்டு தொலைவில் வீசி எறியப்பட்டிருந்தது .

  இவ்வளவு நிகழ்ந்தும் இதுவரை பதுளைவாழ முஸ்லிம்கள் ஒன்றிணைத்து சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி காத்திரமானதொரு செயற்குழு அமைக்கப்படவில்லை.  பதட்டமான நிலையலும் கூட கடந்த வெள்ளிக்கிழமை (3௦.11.2012) குத்பா உரை கூட்டு துவாவிற்கான ஆதாரங்களை அலசுவதற்காக பயன்படுத்தபடுவது எமது துரதிர்ஷ்டவசமான நிலைமையையே எடுத்துக் காட்டுகின்றது .
    முஸ்லிம்களின் வியாபாரம் இலக்கு வைக்கப்படுள்ளது, ஆனால் முஸ்லிம் வியாபாரிகளின் கூட்டமைப்பொன்று எம்மத்தியில் இல்லாத அதே வேளை ஊவா வர்த்தக சங்க முஸ்லிம் பிரதிநிதிகளின் வகிபாகம் இவ்விடயத்தில் எந்தளவு பெறப்பட்டுள்ளது என்பதை அறியமுடியாதுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பட்ட துண்டு பிரசுரத்தை மொழிபெயர்த்த போது அதற்கெதிராக வெகுண்டெழுந்தவர்கள், முஸ்லிம் வியாபார சகோதரர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்ட போது போலீசில் நியாயம் பேச எவரும் முன்வரவில்லை.

    வெள்ளிக்கிழமை ஜூம்மாவிற்குப்பிறகு பொது பல சேனாஆர்பாட்ட பேரணியின் போது தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் அப்பாவிகள் . அவர்களை போலீசில் ஆஜர் படுத்தி நியாயம் பெற்றுத்தரவோ அவர்களி வாகனதிட்கு ஏற்பட்ட சேதம் உரிய முறைப்பாடு செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் போலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆலோசனை கூறினார் என்பதற்காக நடந்த அடாவடித்தனங்களை போலீசில் எவ்வித முறைப்பாடும் செய்யாமல்,மரம் வீழ்ந்த தால்தான் முச்சக்கர வண்டி சேதமானது என்று பொலிசாரிடம் புகார் எழுதிகொடுத்து சமாதானம் பேச முன்வருகிறது முஸ்லிம்தலைமைத்துவம்.
       பல் சமுக அமைப்பை கொண்ட இலங்கை நாட்டில் முஸ்லிம்களும் கௌரவமான பிரஜைகளே. ஒரு குடிமகனின் பிரஜா உரிமை என்பது இலகுவாக மதிக்கதக்கதல்ல. இந் நாட்டில்  வாழவதற்க்கும் சாவதற்கும்,குடும்பம் நடத்தவும்,கொடுக்கல் வாங்கல் செய்யவும் , மதத்தை பின்பற்றவும் , மதத்தை துறக்கவும்,கருத்துக்களை வெளியிடவும் ,சமூகத்துடன் சேரவும் பிரியவும் மனித வாழ்வின் இன்னோரன்ன அனைத்துவிடயங்களிலும் உரிமை பெற்றவனாவான்.பிரஜா உரிமை மறுக்கப்பட்டவன்  இவ்வுரிமைகள் அனைத்தையும்  மறுக்கப்பட்டவனாவான்.    இந் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பிரஜா உரித்துடைய இந் நாட்டின் கண்ணியமிக்க குடிமக்களாவர். ஆனால் எமது உலமாக்கள் அநேகமான குத்பா உரைகளில் நாம் அந்தனிய நாட்டில் வாழுகின்றோம் ஆகவே நாம் நிதானமாகவும் எடுத்துகாட்டாகவும் வாழ வேண்டும்என்று முழங்குகின்றார்கள். இக்கருத்தானது முஸ்லிம்களை பல் சமூக அமைப்பிலிருந்து ஒதுங்கி வாழ வைக்கும். முஸ்லிம்களின் மனவெழுட்ச்சியை கீழே போட்டு மிதித்து விடும். தாமே தம்மை இரண்டாம் பிரஜையாக எண்ணவைக்கும். ஆகவே இந் நாட்டு முஸ்லிம்பிரஜைகள் இந் நாட்டு குடிமகன் என்ற வகையில் வியாபாரம் செய்யவும் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உரிதுடயவர்களே.
இந்த வகையில் அனுமதிக்கப்பட்டவொரு வியாபாரம் செய்வதற்காக  உரிய அனுமதி பத்திரங்கள் பெற்று வருமான வரிகளை உரிய முறையில் செலுத்தி இந்தநாட்டு சட்டவிதிகளுக்குஅமைய மேற்கொள்ளும் ஒரு வியாபார நிலையத்தில் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்என்பது சட்டப்படி குற்றமாகும். ஒருவன் தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்தலாம், அதேவேளையில் இன்னாரின் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று எவராவது உத்தியோகபூர்வமாக விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

ஆகவே முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள் என்று கூறுவதும் இந்தநாட்டு முஸ்லிம்களுக்கு தேவைக்கதிகமாக உரிமைகள் வழங்கப்படுள்ளது  என்று கூறுவதும், விரும்பினால் இருங்கள் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிடுங்கள் என்று கூறுவதும் எமது பிரஜாஉரிமைக்கு விடுவிக்கப்படும் அச்சுறுத்தல்களாகும். பதுளை முஸ்லிம்களை பொறுத்தவரையில் பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ பிரதிநிதித்துவம் இல்லாத சமூகம் , ஆன்மீக ரீதியாகவும் ஏகோபித்த தலைமைத்துவம் ஒன்றை பெறாத சமூகம். தலைமைதத்துவம் அற்ற சமூகம், பாதுகாப்பற்ற சமூகமாகவே கருதப்படும். இதனால் தான் பதுளை ஜும்மா பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட உள்ளூர் அரசியல் பிரமுகரான மகாண சபை உறுப்பினர் சுஜீவ ஜெயசிங்க அவர்களும், அமைச்சர் நிமல் சிறிபால தி சில்வா அவர்களின் இணைப்பு செயலாளர் பர்சி விஜெதாசே அவர்களும் இந்நிகழ்வுகளை பற்றி குறிப்பிடும் போது இது ஒரு சிறிய கும்பலின் செயற்ற்பாடு, அடையாளம் இல்லாத இவர்களின் செயற்பாடுகள் பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை, எங்களது ஜனாதிபதியும், அமைச்சரும் இனவாத அரசியல் செய்பவர்கள் அல்லர், இதுவரை செயற்பட்டது போல் நீங்கள் பொறுமையாக செயற்படுங்கள்.என்று கூறி செல்லும் போதும் கூடியிருந்தவர் ஏகோபித்த மனதாக ஆமோதித்து தலைஅசைத்து செல்ல வேண்டியிருந்தது.



    இந்தநிலையை கருத்திற்கொண்டு அண்மையில் ஜூம்மாப்பள்ளி நிர்வாக சபை மூலம் கூட்டப்பட்ட அவசர கூட்டத்தின் போது இந்த விடயத்தில் நாம் ஊடகத்தை உச்ச கட்டமாக பயன்படுத்துவதால் எமது பிரச்சனையை மேலிடத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று ஆலோசனை செய்யப்ப்ப்பட்டு ஒரு ஊடக சந்திப்பைஉள்ளூரிலோ கொழும்பிலோ செய்யலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது. அததற்கான அனுசரணையை பெற்றுத்தர உரிய அமைப்புகள் முன்வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது தேசிய அமைப்பிலும், சர்வதேச மட்டத்திலும் பல நன்மைகளை ஏற்ற்படுத்தக்கூடும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது. அனால், சபையில் இருந்தோர் இக்கருத்தை ஆதரித்தபோதும் ஒருவரின் தனிப்பட்ட முடிவால் அது நடைமுறை படுத்த முடியாது போனது.
ஆகவே......
   இன்னும் தாமதமாகவில்லை, பதுளை நகரில் மூன்று ஜும்மா பள்ளி வாசல்கள் உட்பட 20க்கும் மேற்ற்பட்ட பள்ளிகள் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளும் பல சமூக  சேவை அமைப்புகளும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஜம்மியத்துல் உலமா சபையொன்றுள்ளது. ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரயும் ஒன்றிணைத்து ஒரு சிவில் பாதுகாப்பு அமைப்பொன்றை அமைத்து இனிவரும் காலங்களில் நாம் எமது செயற்பாடுகளை முன்வைப்போம் என்றல் அதற்கு ஒத்துழைத்து செயற்ற்பட இன்றும் தயாராக உள்ளோம். அல்லது ஒரு சிலரின் தான்தொன்றித்தனத்தால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்புக்குகள்ளாகுமானால் அதன் முழு பொறுப்பையும் நிர்வாக சபையே ஏற்கவேண்டும். பதுளையில் ஏற்றப்பட்டுள்ள இந்தநிலையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் கவனத்தில் ஏற்று பதுளைக்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்!
ஏ எம் எம் முஸம்மில்,
இணை செயலாளர்,
மலையக முஸ்லிம் மாநாடு
பதுளை ,

Monday 26 November 2012

அல் பஜ்ர் - அஹமத் ஜாபர் காஸாவில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டப்படுகின்றது!


காஸா எட்டு நாள் யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்புகிறது.  இஸ்ரேலிய யுத்தம் அவர்கள் மீது திணித்த உடல் உள காயங்கள் ஒரு போதும் ஆறப்போவதில்லை.

அந்த எட்டு நாள் யுத்தத்தில் காஸா மக்களின் உறவுகள் வீழ்ந்தனர், பச்சிளம் பாலகர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். மக்களின் உடைமைகள் இடியோடு அழிந்தன.

என்றாலும் ஒருபோதும் இல்லாத புத்துணர்வு அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமிப்புச் செய்திருக்கின்றது. திருப்பித் தாக்கும் திராணி தம்மிடம் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவர்களை இடிபாடுகளிலிருந்து எழ வைத்திருக்கிறது.

திருப்பி அடித்ததின் மூலம் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எட்டே எட்டு நாட்களில் அவர்களால் முடிவுக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது.

அதுதான் அல் பஜ்ர்!  பெரும் இரைச்சலோடு பறந்து சென்று இஸ்ரேலிய நகரங்களை தொட்டுப்பார்த்த ஏவுகணை. எதிரிகளை கதிகலங்க வைத்து கண்ணாமூச்சி விளையாடிய அல் பஜ்ரை நினைத்து, நித்திரையை தொலைத்த இஸ்ரேலியர்கள்  கால்வாய், மதகுகளில் எல்லாம் கண்ணயர துவங்கினார்கள்.

தரையாலும், கடலாலும், ஆகாயத்தாலும் தாக்கி காஸாவை அழித்து விடுவோம் என்று கர்ஜித்த சிங்கங்கள் அல் பஜ்ரின் முன்னால் நாய்களாய் முடங்கிப் போனார்கள்.

காஸாவிலிருந்து சீறிப்பாய்ந்து சென்று டெல்அவிவ் நகரை பதம் பார்த்த அல் பஜ்ர் ஏவுகணைகள்.  IDF என்ற இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பு பதறிப்போனது.

டெல்அவிவ் நோக்கிப் பறந்து இடியாய் இறங்கிய அல் பஜ்ரின் அதிர்வுகளால் அதி நவீன யுத்த ஆயுத தொழிற்சாலையாய் வர்ணிக்கப்படுகின்ற இஸ்ரேலின் தலைநககரம் ஆடட்ம் கண்டது.

அனைத்து இஸ்ரேலியர்களும் எலிகளைப் போல் ஓடிச்சென்று பதுங்கு குழிகளுக்குள் படுத்துக்கொண்டனர்.

போராட்டத்திற்கும் மரணத்திற்கும் பழகிப்போன காஸா மக்களுக்கு மரணம் என்பது மகா பெரிய ஒரு விஷயமல்ல.  மழையாய் வந்து விழுந்த இஸ்ரேலிய ஏவுகணைகளைக் கண்டு அவர்கள் மிரண்டு, விரண்டு ஓடுவது என்பது அவர்களுக்கு பழக்கமில்லாத ஒன்று.

இடியைக் கூட மடியில் தாங்கும் இரும்பு இதயங்களாக அவர்கள் இன்று மாறியிருக்கின்றார்கள்.

இப்போது , காஸாவில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு பெற்றோர் அல் பஜர், அஹமத் ஜாபர் ஆகிய பெயர்களை வைத்துள்ளார்கள்.

புதிதாக பிறக்கும் பிள்ளைகளுக்கு அல் பஜ்ர் ஏவுகணையின் பெயரையும், ஹமாஸின் இராணுவ தலைவர் அஹ்மத் ஜாபர் அவர்களது பெயரையும், பல பெற்றோர் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு சூட்டி மகிழ்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் !
காஸாவை  இனிமேல் கருவறுக்க முடியாது... அஹமத் ஜாபரிகளும், அல் பஜ்ரகளும்  அதிகமாகவே இருப்பார்கள்.



இலங்கை - பதுளையில் தொடரும் பௌத்த பல சேனா தொந்தரவுகள் !


பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரண்டு வரும் பௌத்த பல சேனா என்ற அமைப்பு திட்டமிட்டு முஸ்லிம்களை சீண்டி வருவதை கடந்த பதிவுகளில் தந்திருந்தேன்.

நேற்றிரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்து ஆடுகள் களவாடப்பட்டு அவற்றில் மூன்று ஆடுகளின் கழுத்தை வெட்டி  கொன்று போடப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பௌத்த பல சேனாஅமைப்பின் முக்கிய நபர்களை பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செயதிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடாத்திய முக்கிய நபர்கள் என்று தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரங்க என்ற பெயருடைய பதுளை மீன் வியாபாரியும், தினேஷ் என்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரும், கோமஸ் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிய வருகிறது.

இவர்களின் கைதை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் பௌத்த பல சேனா பதுளை கிளையின் முன்னணி செயற்பாட்டாளருமான தயாசிரியினதும், மற்றும் இரண்டு பௌத்த பிக்குகளினதும் தலைமயில் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெறுவதாக பதுளையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்பு ஜீவகாருண்யம் தொடர்பாக பேசுகின்ற அதை வைத்து ஏனைய மதங்களை சாடுகின்ற பௌத்த இனவாத அமைப்புகள், இப்படி ஆடுகளைக் கடத்திச் சென்று கொன்று போடுவதை எப்படி அங்கீகரிக்கின்றனர்?

வீடியோ - குஜராத் கலவரம் ! ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடி ஒளியும் நரேந்திர மோடி!



 இதோ ஆயிரகணக்கான உயிர்களை பலியிட்ட நரபலி நாயகன் ,சர்வதேச பயங்கரவாதி , நரேந்திர மோடி CNN TV இல் குஜராத்தில் நடந்த கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவதையும் , காமெராவை நிறுத்த சொல்லுவதையும் பாருங்கள் ..

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகளில் மிக முக்கிய ஏழு சம்பவங்களில் ஒன்றாக ஒடே படுகொலைகள் கருதப்படுகிறது. மார்ச் 1, 2002 அன்று அஹமதாபாத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஒடே என்ற இடத்தில் கலவர நெருப்பு கொழுந்துவிட்டது. ஒரே முஸ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். மக்கள் பீதியடைகின்றனர். பிரவொலி பஹோல் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம்களை சங்பரிவாரக் கும்பல் உயிரோடு கொளுத்துகிறது. உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம்களில் 9 பேர் குழந்தைகள், 9 பேர் பெண்கள், 5 ஆண்கள். 

1500க்கும் மேற்பட் சங்பரிவார குண்டர்கள் மோடி அரசின் முழு ஒத்துழைப்போடு இப்பகுதியைச் சூறையாடினர். இச்சம்பவத்தை உச்சநீதின்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. ஆனந்த் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து ஏப்.9, 2012 அன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டோரில் 23 பேர் குற்றவாளிகள் என்று கூறியது. 23 பேரை சாட்சியமில்லாததால் விடுதலை செய்தது. ஏப்.12, 2012ல் சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என சந்தேகமற உறுதி செய்யப்பட்ட 23 பேரில், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்துள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு வலிமையாக வாதிட்டபோது, நீதிபதி பூணம் சிங் அதை ஏற்கவில்லை. மரணதண்டனை மிக அபூர்வ வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு இதற்கு முந்தைய குற்ற வரலாறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு, ரூ.5,800 அபராதமும், கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட 5 பேருக்கு ரூ.3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க சிறப்பு புலனாய்வுக்குழு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. கொடிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் போதுமானதல்ல என்ற ஆதங்கம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் பெயரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்தான். இவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய கொடிய சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி தீர்ப்பை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 1, 2002ல் நடந்த சம்பவத்துக்கு, 2009 இறுதியில்தான் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. எதிரிகள் 47 பேரில் ஒருவர் இறந்துவிட 46 பேர் மீது விசாரணை தொடர்ந்தது. 2011ம் ஆண்டு இவ்வழக்கு முடியும் தருவாயில் திடீரென நீதிபதி பதவி விலகினார்..!
இப்போது 1252 பக்கத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் இவ்வழக்குச் செய்தியை முக்கியத்துவத்தோடு வெளியிட்டன. தினமணி உள்ளிட்ட சில தமிழ் ஏடுகள் இவ்வழக்கை குட்டிச் செய்தியாக்கின.

Sunday 25 November 2012

வீடியோ - இஸ்ரேலிய பயங்கரவாதம்...!



சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க அடிவருடியான ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ( யுனிசெப்) ஆழ்ந்த உறக்கத்தில்...! எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறு குழந்தை செய்த குற்றம் பலஸ்தீனில் பிறந்ததே!

சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! மீண்டும் பதுளையில் துண்டுப்பிரசுரம்.


                                               பௌத்த பல சேனாவின் துண்டுப்பிரசுரம்

அண்மையில் இலங்கை  பதுளை நகரில் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்று குற்றஞ் சாட்டி, பதுளை பொலிஸார் அவரை  நீதி மன்றத்தில் நிறுத்தி பிணையில் அனுப்பியதை பத்ர் களம் கடந்த பதிவில் தந்தது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் பௌத்த பல சேனா அமைப்பு சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை மீண்டும் விநியோகித்து வருகின்றது.

அதன் தமிழ் வடிவம் இதோ!

இது இளைஞர்கள் நாகரீகமாக அணியும் ஒன்று (கையுறை). இதில் இருப்பது என்னவென்று பாருங்கள். புத்தரின் உருவம். இப்படி புத்தரின் படத்தை  அவமதித்து கையுறைகளில் பதித்து விற்பனை செய்வோர்  பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இருக்கின்ற டீன்ஸ் பென்ஸி பெலஸ் என்ற வர்த்தக நிலையமே.

பௌத்த பல சேனா அமைப்பின் இளைஞர் அணியின் முயற்சியால் நேற்று இந்த கடை உரிமையாளர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை பிணையில் விடுவிப்பதற்கு வெட்கம் கெட்ட அதிகாரிகள் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள் பௌத்தர்களான எமக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு எதிராக கதைப்பதற்கு யாருமே இல்லை.

எங்களுக்கு இருப்பது சிங்கள் பௌத்த மக்களான உமது ஒற்றுமையின் சக்தி மட்டுமே!

எங்கள் புத்தபெருமானை அவமதிப்போருக்கு இடமளியோம்!
நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் புத்த தர்மத்தை பாதுகாப்போம்!

நீங்கள் உண்மையான பௌத்தர்களாயிருந்தால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்!

0771090167
பௌத்த பல சேனா - பதுளை

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...