Monday 3 December 2012

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .


“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .




எ எம் எம் முஸம்மில்.
 பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர் நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும்  இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம்  என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார். இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர். எவ்வாறாயினும்  பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவேன். முஸ்லிம்களுக்கு எதிரான இவ் அசாதாரண நிலை நாடெங்கிலும் வியாபித்துள்ளது . என்று அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார் .பதுளைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தத வேளையில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் பதுளை அல் அதான் மா வி யிலும் பதுள்ளை ஜூம்மாப்பள்ளியிலும் நடைபெட்ட்ற சந்திப்புகளிள் கருத்துகளை தெரிவிக்கும் போது மேற்படி கூறிய அமைச்சர் தொடர்ந்ததும் கருத்து தெரிவிக்கும் போது, பதுளை முஸ்லிம்கள் ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடினும் பல அபிவிருத்தி நிலைகளை எட்டியுள்ளனர். ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலையை சாமர்த்தியமாக பதுளை முஸ்லிம்கள் கையாண்டுள்ளது பாராட்டுகுரயது. இன்று ஒரு முஸ்லிம் மகளிர் கல்லூரியை பெற்றுக்கொள்ளவும் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் அல் அதான் மா வி யை சேர்க்கவும் உங்களால் முடிந்துள்ளது. ஆகவே இப்பாடசாலைகளின் எதிர்கால தேவைகளுக்கு நிச்சயமாக என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
  ஜனாதிபதியவர்களுக்கு எழுத்தப்பட்ட பதுளை முளிம்கள் எதிர்நோக்கயுள்ள பொது பல சேனாவின் நெருக்குதல்கள் பற்றிய எழுத்துமூல முறைப்பாட்டின் பிரதின்றையும் அழ அதான் மா வி யின் கனிஷ்ட பிரிவிற்க்கான காணி யொன்னரின்தேவைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்ரையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.                     


No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...