Thursday 26 July 2012

இலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் மற்றுமொரு எதிர்ப்பு!

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடிவிடுமாறு அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கூறினோம்.

அத்துடன் அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் ௭ன்றனர். 


நன்றி வீரகேசரி

பகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrkbgBqBOttXhLztoHse2fl3lfIjiek_TWAcVCJA76WF2RLCbIpigj0zvNsQNVaCdJxbluQ09CdPrPEDi9OE2im2ELt7tx2E38DGdPmjFDD4GUvasLjpRebQQOT_JgdzYsdvBGBZmW7isU/s320/north-pole-moon2.jpg
சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvXj6NDEpN6B8o1UdYPjs23BEerqCH0wzliyKmZ3YwMK7iR3ECI9MCaAA0MpMKOAtRkPJa8Jai4hW_XvvhcfImElAzZKrYz9GGfmvwO-W_oIvL-FcWKcIlrPDJTC7S5tg0v2cQcdNergib/s320/Asad+processon.JPG
ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
டக்ஆஃப்வார்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjomvV8usi5VQkKAUuEJ6xuXo-FQLXNw06BxV9EUWzlfB4hoiKlgi5sYFST7OsmaPVZWmLdhJUdnhXxnWN8oVeeKl4ucW8L7xiCXSlFaSRLnyNRj9xHFgsOARVmFIaxzKrko8Q1JMERE1c5/s320/image.jpg
நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurC8mMgWj8Oa-Hxt3S1VkZYDln_aYkZZKfVircraYCKE846nEnvC6miqPoZFz2jwfH53q4cdqmINJNM9K7tLwYxNsXoGBIDgL0gy4Jz-CBMPqOve5AYNrcpvdPWM-d-0mbPLPiAgeJP9K/s320/islamic-jihad-commander1.jpg
உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
பயங்கரவாதிஎன்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

முஸ்லிம்என்ற
லேபிள்மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
ஜிஹாத்என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtJ-aUE8MzU9r0yMWgo0nCllRQN9VitkLtTfnSnk0QFZU8VRCDoOY4xqGagWV5t3Ox-PiVg7SVxe1V3Fx1TkCH_uXFI0Y_SwpOiyskmmPjJa6bHhSZ26B0ks8nMvTNWAt9LtpZppdr2mrH/s320/TwinTowers.jpg
முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH_gDRnlvPC0JBuMSxNHojswsAZ4yaTK7tIXWaMcxFY3D5EhwpzWPMcrlB5r3ZJWxIaiOEjn_LJLjPyMg0K_bCmfo2gXjs2m3d9WeIgc0N_TDzGArf-0K_up8LYRtBjy24MFEVkcopszn1/s320/horror_of_iraqi_invasion_6.jpg
மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
தக்வாவை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrOMTC47v7BfxT5r3gZLaMAmoTynG3k5qayvJpkVPj5lJzURaUPdparDGGhQXp4TX64vP-sWkeDwYmiS5W8Lqu79U11ouTtWD6jJ0SjXg_LwwQaK9qry_0ASnxEjDW0h5UQESVv55c9YSl/s320/58581237420643Prayer.jpg
தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்குக மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
நஜீஸ்ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ4moVxJ24tzc9Y6ri3jdcRtIiEX8E87n7KhJ6sQYjiVtFWxFuF2klL6rHqW8umY2BLr3Zz8DY70pABE1hOUi9TipW8wT7Y8nI4RYrhNNxRZcmFuP5uHKTD9KoSBEWAwIlmnkkO_BvgI8F/s320/r123101-2-26.jpg
அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா...?

நன்றி: சமவுரிமை மாத இதழில் கவிக்கோ அப்துல்ரஹ்மான்

Friday 20 July 2012

ஜோன் பெர்கின்ஸ் - ஓர் அமெரிக்க ‘தாதா' வின் வாக்குமூலம்!


”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…………….. நம்ம தலைவர் கிட்டயே மோதறியா? உன் நெஞ்சுல இருக்குற மாஞ்சா சோத்தை எடுக்காம விடமாட்டேன்….மவனே.” என்று கிடுகிடுக்க வைக்கும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?
“அடியாள்”
“நம்மாள என்னனுடா நெனச்சே? சிங்கம்டா….. தில் இருந்தா வெளிய வாடா” என்று வீட்டின் மீது சோடா பாட்டில் வீசும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?
“அடியாள்”
இறுகக்கட்டிய டை…….
போர்த்தியிருக்கும் கோட்……. மாட்டியிருக்கும் சூட்…….
நாக்கைச் சுழற்றும் ஆங்கிலத்தோடு…… ”உங்கள் நாட்டின் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெருக்குவதற்காக ஆயிரம் கோடி டாலர்களை கொடுத்து உதவலாம் என்று வந்திருக்கிறோம். எப்படி உங்க வசதி?” என்று கனிவாகக் கேட்கிற கண்ணியவானை ”அடியாள்” என்று சொன்னால் அடிக்கத்தானே வருவீர்கள்?
ஆனால்……
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்த….
அமெரிக்காவின் அதிஉயர் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…..
பொருளாதார ஆலோசனை நிறுவனமான  மெய்ன்(MAIN) என்கிற மாபெரும் வர்த்தக நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட……
”ஜான் பெர்கின்ஸ்” தன்னை ஒரு அடியாள் என்றே அழைத்துக் கொள்கிறார்.
சாதாரண அடியாள் இல்லை.
அதுவும் ”பொருளாதார அடியாள்”.
சாதாரண அடியாட்கள் கூலிக்குப் போட்டுத் தள்ளுவார்கள்….. அல்லது சோடாபாட்டில் அடிப்பார்கள்……. காட்டிக்கொடுப்பார்கள்……. தேவைப்பட்டால் கூட்டிக் கொடுப்பார்கள்…….
ஆனால் அமெரிக்கப் பல்கலையில் பொருளாதாரம் பயின்ற ஜான் பெர்கின்ஸ் எப்படியாம்?
”நானும் அப்படித்தான். ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அப்பட்டமாகத் தெருவில் நின்று செய்வதையெல்லாம் நான் படுரகசியமாக காதும் காதும் வைத்த மாதிரி செய்திருக்கிறேன் அத்தனை அட்டூழியத்தையும். நான் செய்தது அனைத்தும் ”நாட்டு நலத்தின்” பெயரால். ஆனால் அடிப்படையில் வித்தியாசம் ஒன்றுமில்லை எனக்கும் அவர்களுக்கும்.” என கடந்த காலங்களில் தான் செய்த அவ்வளவு சதிச் செயல்களையும் அப்பட்டமாகப் போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். அதுவும் தாளமுடியாத குற்ற உணர்ச்சியோடு.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அமெரிக்க உளவுக் கும்பலின் சதிகாரச் செயல்களுக்கு எந்தெந்த வகைகளில் துணை போனார் என்று துல்லியமாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் அவர் எழுதியிருக்கிற புத்தகத்தின் மூலம்.
அந்தப் புத்தகத்தின் பெயர்தான் : ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்  வாக்குமூலம்.”

புத்தகம் தமிழில் வெளிவந்து நான்காண்டுகள் ஆயிற்று. அதுவும் ஐந்து பதிப்புகளுக்கும் மேல் வந்தாயிற்று. இன்றுதான் விடிந்திருக்கிறது எனக்கு. உண்மையை ஒளிக்காது சொல்வதானால் இந்த நூலைப் படித்ததும் ஆடிப்போய்விட்டேன் நான். அமெரிக்கா அணுகுண்டு வீசும்…… படைகளை அனுப்பி கொன்று குவிக்கும்……. என்பதெல்லாம் ஊரறிந்த சமாச்சாரங்கள்தான். ஆனால் இவ்வளவு நூதனமாக நாம் விழித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தொடையில் கயறு திரிக்கும் என்பதுதான் இந்நூலில் உள்ள அதிர்ச்சிகரமான செய்திகள். விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை  மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் இளம் வழக்கறிஞராக இருக்கும் இரா.முருகவேள்.
நெருடாத வார்த்தைகள்…….
எளியோருக்கும் புரியும் வண்ணம் கைபிடித்து அழைத்துச் செல்லும் மிக மிக இலகுவான நடை……
இது ஆளின் பெயரா அல்லது நாட்டின் பெயரா என்று அனாவசியத்துக்கு குழம்பிக் கொள்ளும் என்னைப் போன்ற குழப்பவாதிகளுக்குக்கூட புரிகிற மாதிரி தமிழில் தந்திருக்கிற முருகவேள் கஞ்சத்தனமில்லாமல் மனதார பாராட்டப்பட வேண்டியவர்.
இந்த நூலை ஜான் பெர்கின்ஸ் எழுதியதை விடவும் அவர் எப்படி இன்னமும் உயிருடன் உலவ விடப்பட்டிருக்கிறார் என்பது மிக முக்கியமானது.
இதை 1982 இல் இவர் எழுத ஆரம்பித்தவுடனேயே பலபக்கமிருந்தும் கடும் எதிர்ப்புகள்………கொலை மிரட்டல்கள்……..லஞ்ச பேரங்கள்…….
மீண்டும் எழுதுவதைத் தள்ளிப் போடுகிறார்.
இப்படி ஒருமுறை அல்ல.
நான்குமுறை.
கடைசியாக அவரது ஒரே மகள்
ஜெசிகாவிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அந்தப் பெண் சொல்லிய பதில்தான் மிக அற்புதமானது.
“கவலைப்படாதீர்கள் அப்பா. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால், நீ விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத்தரப் போகும் பேரக் குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்.” இதுதான் அந்த பதில்.
சரி அதில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அந்த ஜான் பெர்கின்ஸ்? அவரை யார் எதற்காகக் கொல்ல வேண்டும்? என்று நீங்கள் கூவுவது கேட்கிறது. அதை நான் சொல்வதை விட அந்த அமெரிக்கரது வார்த்தைகளிலேயே சொல்வதுதான் சாலச் சிறந்தது. இனி நீங்களாச்சு…… அந்த ஜான் பெர்கின்ஸ் ஆச்சு…..
“பொருளாதார அடியாட்களாகிய நாங்கள் தந்திரம் மிக்கவர்கள்; வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டவர்கள். இன்று நாங்கள் வாளேந்திச் செல்வதில்லை. போர்வீரர்களுக்குரிய ஆடைகளோ, கவசங்களோ பூணுவதில்லை. ஈக்வடார், நைஜீரியா, இந்தோனேஷியாவில் நாங்கள்
உள்ளூர் பள்ளியாசிரியர்கள் அல்லது கடைக்காரர்கள் போலத்தான் உடையணிகிறோம். வாஷிங்டனிலும், பாரீசிலும் அரசு அதிகாரிகள் அல்லது வங்கிப் பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் உலவுகிறோம். அடக்கத்துடனும் இயல்பாகவும் நடந்து கொள்கிறோம்.”
அப்புறம் என்னதான் சிக்கல்? இவ்வளவு எளிமையாகவும், அடக்கமாகவும் உலவுகின்றவர்களை எதற்காக குறி வைக்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்யும்.
அது இந்தியாவாகட்டும் அல்லது ஈக்வடார் ஆகட்டும்…… உலக வங்கியோ அல்லது ஏதாவது பன்னாட்டு நிதி நிறுவனமோ கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது என்றால், அந்த நாடு பொருளாதாரத் துறையில் ”ஓகோ”ன்னு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அப்படி எவராவது நினைத்தால் அவரை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது. ஆனால் முட்டாள் என்கிற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட முடியாதபடி  கடன் வாங்க வைக்க வேண்டும். அப்படி அவர்களை பெரும் கடன்காரர்கள் ஆக்க வைப்பதற்கான டுபாக்கூர் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவதுதான் நிபுணர் ஜான் பெர்கின்ஸின் வேலை. இந்த வேலையைச் செய்வதற்காக அவர் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன திரைமறைவு வேலைகளைச் செய்தார் என்பதை மனத்துயரத்தோடும், மாபெரும் குற்ற உணர்ச்சியோடும் விளக்கும் வரிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய வரிகள்.
அவருக்கு இடப்பட்ட கட்டளை:
நாடுகளுக்கு மிகப் பெரிய அளவிற்குக் கடன் வழங்கி அதே பணத்தை பெரும் கட்டுமானத் திட்டங்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களே கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவுக்கே கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும்.
கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்கு வேலை செய்ய வேண்டும்.
அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும்.
அப்போதுதான் அமெரிக்காவுக்குத் தேவையான இராணுவத் தளங்களை அமைப்பதென்றாலோ….. அந்நாட்டில் உள்ள எண்ணெய் போன்ற இயற்கை வளங்களைச் சுரண்டுவது என்றாலோ…. ஐ.நா.சபையில் தனக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்றாலோ….. இந்தக் கடன்கார நாடுகள் உறும முடியாது….. திமிர முடியாது…… முக்க முடியாது….. முனக முடியாது.
அதற்கு முதலில் இந்நாடுகளைக் கடன் வாங்க உடன்பட வைப்பதுதான் இந்தப் பொருளாதார அடியாளின் தலையாய பணி.
கடன் வாங்காத நாடுகளின் தலைவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?
அல்லது எப்படி விமான விபத்திலோ அல்லது சாலை விபத்திலோ பரலோகம் அனுப்பி வைப்பது…..
பொன் கேட்டவர்களுக்குப் பொன்.
பெண் கேட்டவர்களுக்கு பெண்.
இப்படி தான் செய்த அநீதியான செயல்களுக்குப் பிராயச் சித்தமாக அங்கிருந்து வெளியேறி இந்நூலை எழுதியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். உலகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் ஒளிந்திருக்கும் மர்மப் பகுதிகளை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்நூல் தொட்டுச் செல்லும் சர்வதேச அரசியல் சமாச்சாரங்களையெல்லாம் எப்பாடுபட்டாலும் ஓரிரு பக்கங்களில் விளக்கி விட முடியாது. மனித குலத்தில் அக்கறை கொண்டவர்கள்…… மனித குலத் துயருக்கு விடிவு காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் நிச்சயம் இருந்தாக வேண்டிய புத்தகம் இது.
இதையே நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால்……
“நமது கடந்தகாலத் தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை மக்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும்.”
ஆம் நானும் நான்காண்டுகளாய் இந்நூலை வாசிக்காத தவறைப் புரிந்திருக்கிறேன்.


நன்றி 

எலி ஒரு தலை வலி?


எலி என்பது மனிதர்களுக்கு ஒரு தலைவலியாகத்தான் பார்க்கப்படுகின்றது.  அது தரும் தொந்தரவுகளும் தொல்லைகளும் அப்பப்பா.. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. எலி பற்றி வித்தியாசமான ஒரு தகவலை பிபிசி தமிழோசை தந்ததிருக்கின்றது படித்துப்பாருங்கள்.


மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம், செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
பொதுவாக எலி இனம் என்றாலே அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் விளைந்த பயிர்களை நாசமாக்குவது முதல் நகர்ப்புறங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று தீர்ப்பது வரை, எலி இனம் என்றாலே மனிதர்களுக்கு பெரும் வெறுப்பும், விரோதமும் தான் நிலவுகிறது.
ஆனால் இந்த எலி இனங்கள் இயற்கைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்வதாக கூறுகிறார் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜேன்சன்.
மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை, கொட்டைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம் செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக கூறுகிறார் இவர்.
தனது இந்த கருத்தை இவர் ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
இதற்காக இவர் சுமார் அரை மீட்டர் நீளமுள்ள அகவுடிஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை பெருச்சாளிகளை தேர்வு செய்தார். தென்னமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக்கருவிகளை பொருத்தினார்.
இவற்றை தொடர்ந்து மாதக்கணக்கில் கண்காணித்த பின்னர் இவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளின் படி, ஒரு குறிப்பிட்ட மரத்தின் விதைகளை, முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி அதை சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. அதை எடுத்துச்சென்ற இரண்டாவது பெருச்சாளி, ஐந்துமீட்டர் தொலைவில் புதைத்துவைத்தது. இப்படியே ஒன்றிலிருந்து ஒன்றாக 25 பெருச்சாளிகள் இந்த விதையை பறித்துச்சென்றன. முடிவில் இந்த விதை சுமார் 70 மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விளைவு, இந்த விதை அதன் தாய்மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் முளைப்பதற்கு இந்த பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்கள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இப்படி விதைகள் பரவலாக சென்று விதைக்கப்பட்டால் தான் இந்த மரம் அல்லது செடிகள், தம் இனத்தைச்சேர்ந்த மற்ற தாவரங்களுடன் இணைந்து மரபின கலப்பு உருவாக வழி பிறக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
எனவே எலி இனங்கள் மனிதர்களுக்கு வேண்டுமானால் நண்பனாக இல்லாமலிருக்கலாம், இயற்கைக்கு அது நண்பன் தான் என்கிறார் அவர்.

Thursday 19 July 2012

யாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்பது தவறானது! இராணுவத்தளபதி மறுப்பு


யாழ் குடாநாட்டில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மறுத்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் உள்ளனர். ஆனால், அங்கு 10 ஆயிரம் இராணுவ வீரர்களே உள்ளனர். இந்த நிலையில், குடாநாட்டிலுள்ள ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் உள்ளதாக கூறப்படும் தரவு முற்றிலும் தவறானது என்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை பாதுகாப்பு செயலமர்வொன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட செயலமர்வைப்போன்று இவ்வருடமும் செயலமர்வொன்று நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் என்றுமே இராணுவத்தினரையே நம்பியுள்ளனர். இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. யாழ் மாவட்ட வீதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத் தேவைகள் உள்ளிட்ட மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவேண்டுமென்ற பட்சத்திலேயே இராணுவத்தினர் உதவிக்கு வருவார்கள் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
யாழ் குடாநாட்டிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவேண்டும் என ஒருபோதும் அங்குள்ள மக்கள் கூறியதில்லை; கூறப்போவதுமில்லை. அவர்களுக்கு ஏதாவது அவசர தேவைகள் இருந்தால் அவர்கள் உடனடியாக இராணுவத்தினரையே நாடி ஓடி வருகிறார்கள். வேறு எங்கும் செல்வதில்லை யென்றும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை



இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தன.


இதில் இழுபறி நிலையே தொடர்ந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எனினும் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் தமது கட்சி தொடர்ந்து பங்கெடுக்க போவதாகவும், தேர்தலின் போதும் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு அளித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், இது தொடர்பில் தெரிவிக்கையில், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கும் முடிவை நாம் வரவேற்கிறோம். இறுதியாக ஏமாற்றப்படாது இப்போதே புத்திசாலித்தனமான முடிவை அவர்கள் எடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட தீர்மானித்த முஸ்லிம் காங்கிரஸ் தனித்து செல்லும் முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். 

உப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்


M.ரிஸ்னி முஹம்மட்: உப்புக்குளம் முஸ்லிம்கள் இருப்புக்கான பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்: மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் பரம்பரையாக பயன்படுத்திய தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மீனவர்களுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்டையில் கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களும் இடையில் முரண்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் ஒப்பந்தத்தின் அடிப்டையில் முஸ்லிம் கடற்கரை மீனவ கிராம பகுதியை பயன்படுத்திவந்த விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது . அதேவேளை  மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உப்புக்குளம் கிராம வாடியில் வைக்கபட்டிருந்த சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் விடத்தல்தீவு  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரதேசமாகும் புலிகளினால் 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்தகரிப்பு செய்யப்பட்டபோது இந்த கிராம முஸ்லிம்களும் புலிகளினால்பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் இந்த பகுதி வேறு பிரதேசத்தவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2002 ஆண்டுக்கு பின்னர் முஸ்லிம்கள் அந்த பகுதிக்கு சிறிதளவில் சென்று வந்தமையால் அந்த பகுதி பிரதேச செயலாளரின் மூலமாக ஒப்பந்த அடிபடையில் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட பின்னர் அதிகமான முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறியதால் ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட தமது   பகுதியை முஸ்லிம் மீனவர்கள்  முடியாத நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். முஸ்லிம் மீனவர்கள் தமது பகுதியை கடந்த  ஆண்டுகளாக கோரிவரும் நிலையில் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களுக்கு வழங்கப் பட்ட ஒப்பந்த காலம் பல தடவைகள் நீடிக்கப்பட்டுக்கொண்டு செல்கின்றமையை எதிர்த்து பல முயற்சிகளை முஸ்லிம் மீனவர்கள் தரப்பில் செய்யபட்டாலும் எதுவும் பயன் தராத நிலையில் நேற்று ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர். இதே போன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளையும் நடத்தப் போவதாகவும் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறை முஸ்லிம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .
தாம் நேற்று நடாத்திய ஆர்பாட்டத்தை ஊடகங்கள் பதிவு செய்தாலும் அவை இன அடிபடையில் திட்டமிட்டு மக்களுக்கு காட்சிப் படுத்தாமல் மறைத்து விட்டது என்று உப்புக்குளம்  முஸ்லிம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .








தமது பிரச்சினை தொடர்பாக அவர்கள்  ஒரு அறிக்கையையும்  அனுப்பிவிதுள்ளனர்:
உப்புக்குள பொது மக்கள் சார்பாக
மீனவர் கூட்டுறவு சங்கம்
உப்புக்குளம்
நாங்கள் செய்த குற்றம்தான் என்ன நாம் இன்று குற்றவாளி கூண்டில் நிற்க,எமது நிலம் எமக்கு வேண்டும், செய் நன்றி மறவாதே சுயநலம் பார்க்காதே,எம்மை எம்மண்ணில் வாழச் செய், உன் மண்ணில் நீ வாழ உன்னை வழிப்படுத்தச் செய், நம்பிக்கை துரோகம் உங்களுக்கு கைவந்த கலையா?. நன்றி மறப்பது உனக்கு நன்றா? உண்டவீட்டிற்கு இரண்டகமா?…உங்களை LTTE விரட்டியதாக அவர்களை காட்டிக்கொடுத்து எம்மிடம் எமது இறங்குதுறையை கேட்டீர்கள் அதற்கு முன்னர் எமது அயல்கிராம அன்புக்கத்தோலிக்க உறவினர்கள் உங்களுக்கு உதவியதற்கு நீங்கள் காட்டிய நன்றிக்கடன் நம்பிக்கை துரோகம். அதற்கு பின்னர் எம்மிடம் காட்டிய பொய் முகம் உங்கள் சமூகம் உங்களுக்கு இடம் தரவில்லை என்று அவர்களையும் காட்டிக்கொடுத்து எம்மிடம் தவம்கிடந்தீர்கள். ஆனால் எமது மண் மக்களோ வாழவைத்து பார்ப்பவர்கள் அவ்வடிப்படையிலேயே எமது மீனவர்களால் வாடிகள் அமைக்கப்பட்டு உங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு அவை வழங்கப்பட்டது.
2002 சமாதனக்கீற்று தெரிந்த போது உங்களை அரவனைத்தது நாம் இரண்டு வருடங்கள் முடிந்து 2004ல் தொடர்ந்து கடத்தொழில் உதவிப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கினங்க 2005 வரை தொடர்ந்தும் தொழிலுக்கு வழிசெய்தோம். 2005ல் உங்கள் தேவையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உங்களுக்காக 2006 வரைக்கும் கேட்டுக்கொண்டதற்கினங்க மறுபடியும் ஒரு வருடத்திற்கு வழங்கினோம். 2007ல் மன்னார் அரசாங்க அதிபரின் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு வீ. விஸ்வலிங்கம் ஐயா அவர்கள் உங்களுக்காக கேட்டுக் கொணடதற்கினங்க மறுபடியும் ஒரு வருடம் வழங்கினோம்.  2008 தொடக்கம் 2009 காலப்பகுதிகளில் விடத்தல்தீவு மீனவர்கள் மற்றும் அக்கிராம உயர்மட்டத்திலான உறுப்பினர்களின் நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி பின்னர் அவர்களின் தயவான வேண்டுகோளை மதித்து மறுபடியும் வழங்கினோம். உங்களுக்கு இவ்வாறு காலங்கள் தொடர்ச்சியாக வழங்கிய வரலாற்றில் உங்கள் இடத்திற்கு நீங்கள் செல்லவேண்டும் என்பதை வழியுறுத்தியும் வந்தோமே உங்களுக்கு அது தெரியாதா? ஞாபகம் இல்லையா அல்லது மறந்தது போல் பாசாங்கு செய்தீர்களா?உங்களுடன் இவ்வளவு நம்பகமாக நாங்கள் நம்பிய காலத்தில் நயவஞ்சகத்தனமாக நீருக்கடியில் நெருப்பை கொண்டு சென்றது போல் கீழ்த்தரமான முறையில் மனிதன் செய்யாத வடிவத்தில் நயவஞ்சகத்தனமாக எங்கள் காணியை சட்டரீதியாக உங்களது உடைமையாக்க எடுத்து எமக்கு வைத்தீர்களே ஆப்பு இது யார் உங்களுக்கு கற்றுத்தந்தது.
இது இவ்வாறு இருக்க எம்மை மதரீதியாக பிளவுபடுத்த நீங்கள் முயற்சிக்க உங்களுக்கு செல்லித்தந்தது யார்? 2011 நவம்பருடன் உங்களை எமது இறங்கு துறையிலிருந்து வெளியேர மன்னார் உதவிக்கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் நீங்கள் அங்கம் வகிக்கும் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு எடுத்தனுப்பிய தீர்மானம் உங்களுக்கு தெரிந்தும் தெரியாதவாறு இருந்தீர்களா?  நத்தாரையும் 2012 புதுவருடத்தையும் நாம் மனித நேயத்தோடு கருதி மறுபடியும் 2012 ஜனவரி வரைக்கும் தொழிலுக்கு சென்று உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வழியமைத்து துந்துதவியது ஞாபகம் வருகிறதோ?ஜனவரியுடன் செல்கின்றோம் எனச் சொல்லி எம்மை பொலிசுக்கு கொண்டு சென்றது என்ன தந்திரமோ என்ன மந்திரமோ யார் சொல்லித்தந்த மாயமோ, கொடுத்ததுக்கான கூலியாக நாம் பெற்றுக் கொண்ட வெகுமானமாகியது பொலிசுக்கு சென்றது.
பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இது உப்புக்குள மக்களின் துறைமுகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதை ஏற்று இத்துறைமுகத்திலிருந்து வெளியேருகின்றோம் எனப்பொருந்திக்கொண்டு அவர்கள் சொன்ன காலத்திற்குள் வெளியேராது வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக மீண்டும் தொழிலுக்கு செல்ல முயன்றது நியாயமா?மீண்டும் இவ்விடயம் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டப்பட்டு அங்கும் இதே பல்லவியை பாடி உடனே செல்கின்றோம் எனக்கூறி அதனையும் அவமதித்து நடந்தீர்களே உங்களுக்கு வாய்மை இல்லையா?
மீண்டும் பிரதேச செயலாளர் மட்டத்தில் அவரது காரியாலயத்தில் கடற்றொழில் உதவிப்பணிப்பாளர், ர்ஞஐஇ மாவட்ட உதவி அசாங்க அதிபர் திரு பரமதாஸ் அவர்கள் மற்றும் அவர்களது அருட்தந்தை உட்பட  எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியகமம், பனங்கட்டிக்கொட்டில், பள்ளிமுனை, உப்புக்குள மீனவ பிரதிநிதிகள் கூடி மறுபடியும் சில நாட்கள் வழங்கப்பட்டு வெளியேர எடுத்த தீர்மானத்தினையும் மதிக்காது கடலுக்கு சென்றதால் துறைமுகத்திலேயே கலவரமாகும் நிலைமையையும் உருவாக்கியவர்கள் நீங்கள்தான்.
யார் என்ன சொன்னாலும் எம்மை வழிப்படுத்துபவர்கள் சொல்வதையே நாம் செய்வோம் என்ற தோரனையில் தல்லாடி ஆமியிடம் சென்று உப்புக்குள மக்கள் எம்மை கொலை செய்வதாக மிரட்டுகின்றார்கள், தொழிலுக்கு செல்ல தடைசெய்கின்றார்கள் என்று பல பொய்யான தகவல்களை கூறி நீங்கள் தொழிலுக்கு சென்றீர்கள் ஆனால் நாம் ஆமிக்காரர்களினால் அடிவாங்கிச் சென்றோம்.

இது இவ்வாரிருக்க மறுபடியும் இதன்விளைவால் மன்னார் கச்சேரியின் ஜைக்கா கட்டிடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில், மன்னார் பட்டின பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,  கடற்றொழில் உதவிப்பணிப்பாளர் SP, ASP, HQI, Thallady Army Commander, Navy    மாவட்ட உதவி அசாங்க அதிபர் திரு பரமதாஸ், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமிய மீனவர் சங்கத் தலைவர், விடத்தல்தீவு அருட்தந்தை, அருட்சகோதரர்கள், எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியகமம், பனங்கட்டிக்கொட்டில், பள்ளிமுனை, உப்புக்குள மீனவ பிரதிநிதிகள் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தில் விடத்தல்தீவு மீனவர்கள் உப்புக்குள மக்களுக்கு நன்றி கூற வேண்டும், மேலும் அன்றைய தினத்துடன் உப்புக்குள துறைமுகத்திலிருந்து தங்களின் உபகரணங்கள் அனைத்தினையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டளை ளுP அவர்களினால் பிறப்பிக்கப்பட்டதுடன் உப்புக்குள துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்வதற்கான அனுமதியையும் வழங்கக்கூடாது என பணிக்கப்பட்டு, அவர்களுக்கான மாற்று ஒழுங்குகள் செய்து வழங்கப்பட்டது.
இவ்வளவு சந்தர்ப்பங்கள் வழங்கியும் இவர்கள் சமூக முறுகல்களை தோற்றுவிக்கும் வகையில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மறுபடியும் கடலுக்கு செல்ல, சென்றவர்களிடம் சம்பவங்களை கூறினால் வார்த்தைகளை காப்பாற்றும் மனப்பாங்கற்றவர்கள் போன்று தொடர்ந்த தொழிலுக்கு செல்வதை நீங்கள் நிறுத்தாமையினால் நாம் எமது வாடிகளை கலட்டிவிட முடிவெடுத்து எமது வாடிகளை நாம் அகற்றச் சென்றால், பொலிஸ் அதிகாரிகள் எமது மக்களை கைது செய்து இன்று எம்மக்களை நீதிமன்றுக்கு கொண்டு செல்லும் கைங்கரியம் கையாலப்பட்டுள்ளது. இது எந்த மனித நேயம் படைத்தவர்களாலும் செய்யக்கூடாத செயலாக, ஒழுங்கான மனித நேயமுடைய மக்களால் செய்ய என்னாத செயலாகவே இருக்கும் என்பது எமது பார்வை.
இன்று நாம் நீதிமன்றில் நிற்பது 2002ம் ஆண்டு முதல் நாம் உங்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய பிரதியுபகாரமா?
இங்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பான சகலவிதமான எழுத்து மூல ஆவணங்களும் எம்மிடம் தகவல்களாக இருக்கின்றதை உங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
எமது மண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை ஏனைய முஸ்லிம் கிராம மக்களுக்கோ அல்லது சகோதர தமிழ் கிராம மக்களுக்கோ ஏற்படக் கூடாது என்பது எமது பணிவான வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகின்றோம். எனவே விடத்தல்தீவு கடற்றொழில் மக்களே நீங்கள் உங்கள் இடத்திற்கு செல்வதூடாக எமது தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை இத்தீவில் தொடர்ந்து பேன உதவுங்கள், எம்மை பிளவு படுத்த என்னாதீh;கள். உங்களை வழிப்படுத்துபவா;கள் எவராக இருந்தாலும் நீங்கள் விழிப்பாக இருங்கள். வயிற்று பசி போக்க வாய்ப்பு தந்தோம் இப்போது எங்கள் வயிற்றில் கால் வைத்து உதைக்காதே.
உப்புக்குள பொது மக்கள் சார்பாக
மீனவர் கூட்டுறவு சங்கம்
உப்புக்குளம்

நன்றி Lankamuslim.org



போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...