Tuesday 4 March 2014

ஆப்கான் போர், அமெரிக்கா,மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்க:கர்ஸாய் குற்றச்சாட்டு!


ஆப்கான் போர், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்கவாகும் என்று அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்டிற்கு அளித்த பேட்டியில் கர்ஸாய் கூறியிருப்பது:ஆப்கானை பாதுகாக்கவோ, அங்குள்ள மக்களின் நன்மைக்காகவோ ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்காவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்பட்டது.நான் ஏமாற்றப்படுகிறேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு நாட்டிற்கு ஏற்படுத்திய நட்டங்கள் என்னை தனிப்பட்ட ரீதியாக பெருமளவு அலைக்கழித்தது.ஆப்கானில் தாலிபான் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவ்தை விட பாகிஸ்தானில் உள்ள கிராமங்களையே இலக்காக கொள்ள அமெரிக்கா முயற்சிச் செய்தது.இவ்வாறு கர்ஸாய் கூறினார்.பேட்டியில் அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்த கர்ஸாய், அமெரிக்க அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்றார்.

நன்றி - http://www.thoothuonline.com

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...