Sunday 2 March 2014

அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் மோடி பெயர் நீக்கம்




வாஷிங்டன்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மோடிக்கு விசா வழங்க அமெரிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், சென்ற மாதம் காந்தி நகரில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் டெல்லியில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், அமெரிக்க மனித உரிமை அறிக்கை-2013ஐ அமெரிக்கா நேற்று வெளியிட்டது. அதில் மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜென் பாஸ்கி நேற்று வாஷிங்டனில் கூறுகையில், குஜராத் மாநில முதல்வரும் பா.ஜ. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் மீதான குற்றச்சாட்டு குறித்தான அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் இயற்கை சூழல் மற்றும் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு ஒவ்வொருவருக்கும் மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன என்று எங்களது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம். அமெரிக்க மனித உரிமை அறிக்கை-2013ல் மோடியின் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும், அவர் மீதான எங்களது கொள்கையில் எந்த மாற்றம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...