Sunday 6 February 2011

சவுதி அரேபியா : சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அணிதிரளும் பெண்கள்


சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

 மனித உரிமை அமைப்பான Human Rights Watch  தனது வருடாந்த அறிக்கையில்  சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான்  போன்ற அமைப்புகள்  நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.

இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!

எகிப்து : ஊமையாக நிர்ப்பந்திக்கப்டும் ஊடகங்கள்!


எகிப்தின் அல் தாவுன் பத்திரிகையின் படப்பிடிப்பாளர் 36 வயதான அஹ்மத் முஹம்மத் மஹ்மூத் ஸ்னைப்பர் தாக்குதலுக்குள்ளாகி நான்கு தினங்களின் பின்னர் நேற்று மரணமானதாக அரச செய்திப் பத்திரிகையான அல் அஹ்ரம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

முபாரக்கின் கையாட்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலை படம் பிடித்துக்கொண்டிருந்த போதே இவர் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானார். எகிப்தின் போராட்டத்தில் மரணமான முதல் ஊடகவிலாளர் இவராகும்.

எகிப்தின் போராட்டம் தொடர்பான செய்திகள் வெளியுலகிற்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக முபாரக் அரசு பலத்த கெடுபிடிகளை ஊடகங்கள் மீது திணித்து வருகிறது. சகல இணைய தள சமூக வலைப்பின்னல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

பிரேஸில், பிரான்ஸ், போலந்து, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாட்டின் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

வியாழக்கிழமையன்று கத்திக்குத்துக்கு இலக்கான சுவீடன் நாட்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெய்ரோ வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

போலந்து தொலைக்காட்சி நிறுவனமான ரிவிபி தனது நிருபர்களை பாதுகாப்புக் கருதி மீள அழைத்துக்கொண்டது.

Saturday 5 February 2011

ஜோர்ஜ் புஷ் கைது செய்யப்படலாம் - ஜெனீவா பயணம் ரத்து!

          
ஈராக் மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷும் அந்த கொலைகளுக்கு சவூதியை தளமாக  அமைத்துக்கொடுத்த அப்துல்லாஹ்வும்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அடுத்த வார ஜெனீவா பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக BBC இன் சிங்கள சேவையான 'சந்தேஷய' தெரிவித்துள்ளது.

ஜெனீவா செல்லவிருந்த ஜோர்ஜ் புஷ்ஷை கைது செய்யுமாரு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இப்பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஜ் புஷ்ஷிற்குஅழைப்பு விடுத்த யூத அமைப்பு அறிவித்துள்ளது


                                                                   குவாண்டனாமோ வதைமுகாம்


ஜோர்ஜ் புஷ் ஈராக், ஆப்கானிஸ்தான் மக்களை சித்தரவதை செய்வதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கும் தகவல்கள் வெளிவந்திருப்பதால் புஷ்ஷிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு கடந்த வாரம் சுவிஸ் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.

எண்ணெய் வளங்களை கொள்ளையிட ஜோர்ஜ் புஷ் தொடுத்த ஈராக் மீதான யுத்தத்தில் சுமார் 14 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எகிப்து - இஸ்ரேல் இயற்கை வாயுக் குழாய் தகர்க்கப்பட்டது



எகிப்தில் அல் எரிசா பகுதியில் உள்ள எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கான இயற்கை வாயு குழாய், இனம் தெரியாதோரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குழாயில் அங்காங்கே வெடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளதுமாக எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவத்துள்ளது. எகிப்திய இராணுவம் குழாயின் பிரதான இடங்களை அடைத்து தீப்பற்றி எரிதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. தீச்சுவாலை வானில் 20 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

1979 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் எகிப்து, இஸ்ரேலின் 40 சதவீத இயற்கை வாயுத் தேவையை நிறைவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-PressTV

Friday 4 February 2011

ஹுஸ்னி முபாரக் - இது வெளியேறும் வெள்ளிக் கிழமை




(பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் பொதுமக்களை தாக்குகின்றனர்)

எகிப்தின் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் வெள்ளிக்கிழமை உதயமாகி விட்டது.

இன்று ஜும்ஆ தொழுகைக்காக கூடும் பல லட்சம் மக்கள் முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி படையெடுக்கவிருக்கின்றனர்.

இதே நேரம் இராணுவம் பொதுமக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடாத்தாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது.  எகிப்தில் ஒரு அரசியல் மாற்றம் உருவாவதை இராணுவம் விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்து நாட்களை எட்டியிருக்கும் எகிப்தின் போராட்டம் கடந்த புதன் கிழமை வேறு வடிவில் திசை திரும்பியது.

பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் சாதாரண மக்கள் போல் உடையணிந்து பேரணி இடம் பெறும் தஹரீர் சதுக்கத்திற்குள் நுழைந்து பொது மக்களை தாறுமாறாக தாக்கினர். இதில் பத்து பொதுமக்கள் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடாத்தியதன் மூலம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் முபாரக் அரசு மீண்டுமொரு முறை உலகளாவிய ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளானது.


எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!


சர்வதேச மன்னிப்புச் சபையின்( Amnesty International )முக்கியஸ்தர்கள் மூவரை எகிப்தின் இராணுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

அடக்கு முறைக்கு எதிரான மக்களின் போராட்டம் எகிப்தில் வலுப்பெற்று வரும் இத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்காமல் நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வீழ்ந்துக் கொண்டிருக்கும் முபாரக் அரசிடம்வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய உறுப்பினரோடு ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch)அமைப்பைபின் பிரதிநிதியான ஸைபுல் இஸ்லாம் காலித் அலீயும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரை தமக்கு தெரியாமல் இருப்பதாகவும் மேற்படி சபை அறிவித்திருக்கிறது.

 சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சலில் ஷெட்டி (Salil Shetty )தமது உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையூறாகசெயற்படவேண்டாமென்றும் எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Thursday 3 February 2011

எரிபொருள் தடை ! மனமுடைந்திருக்கிறது இஸ்ரேல்!


அமெரிக்க, இஸ்ரேலின் நேச நாடுகளான அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும்  எதிர்ப்புப் போராட்டங்களினால் தனது நாட்டுக்கு தேவையான எரி சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் குறையலாம் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.

”மத்திய கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் நிலை எங்களின் எதிர்கால எரிசக்தி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. எரி சக்தி பயன்பாட்டில் மற்றவர்களை தங்கியிராத ஒரு நிலைக்கு நாங்கள் நகர வேண்டும்” இப்படி கூறியிருக்கிறார்  இஸ்ரேலிய தேசிய உட்கட்டமைப்பு அமைச்சரான  உஸிலந்தோ. ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேல் தனது எரிபொருள் தேவையின் 40 வீதத்தை எகிப்திலிருந்து பெற்று வருகிறது.  எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் தடுமாறிப் போயிருக்கும் இஸ்ரேல் தனது நாட்டின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக கடும் பீதியில் திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிஸம்பர் மாதம் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் எகிப்தோடு பல பில்லியன் டொலர்களுக்கான எரிவாயு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு மிகவும் துணையான நேசமான  நாடாக எகிப்தை அமெரிக்கா  உருவாக்கியிருக்கிறது.  இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அமெரிக்காவின் நிதி உதவி பெறும் நாடாக எகிப்து திகழ்கிறது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...