Thursday 16 December 2010

எச்சரிக்கை! சுதந்திரமாய் சுற்றித் திரிகிறான் கொலைக் குற்றவாளி!


விக்கீலீக்ஸ்  தகவல்களால் அமெரிக்கா திண்டாடி போயிருக்கிறது.

அடாவடித்தன அரசியலை ஏனைய நாடுகள் மீது திணிக்கும் சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா  இன்று உலக அரங்கில் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கிறது.

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செயற்படுகின்ற அதன் துாதுவராலயங்கள். உளவுவேலை பார்க்கின்ற அமைப்புகளாய் செயற்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

விக்கிலிக்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவல்களில் அனேகமானவை இராஜதந்திர மட்டத்தில் இடம்பெற்ற  வெறும் “சங்கதி”களாய்  இருந்தபோதும்,

2007 ம் ஆண்டு ஈராக்கில் பக்தாத் நகரில் நிராயுதபாணியான மக்கள் மீது ஹெலிகப்டர் மூலம் தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் மறைக்க முடியாதது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இது ஒன்றே அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை முழு உலகிற்கும்  எடுத்துக்காட்டிய சாட்சியுள்ள ஒரு சிறந்த ஆவணமாகும்.



இது வெறுமனே தாள்களில் பதியப்பட்ட தகவல்களாய் வராமல்,  அச்சொட்டாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றாகவே வெளிவந்தது.  அந்த ஒளிப்பதிவில் சிறுவர்களை சுட்டுக்கொன்று விட்டு கேலியாக சிரித்துக் கொண்டு   “ சிறுவர்களை ஏன் இவர்கள் யுத்தக்களத்திற்கு அழைத்து வருகிறார்கள்?”  என்று கிண்டலடித்து  ஏளனமாய் ஈராக்கிய மக்களை பார்க்கும் அமெரிக்க இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கை அந்த ஒளிப்பதிவு உலகிற்கே எடுத்துக் காட்டியது.

பக்தாத் கொலைக்களம் தொடர்பாக இந்த ஒளிப்பதிவு வெளிவந்த உடனே மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா என்ன செய்தது?

குற்றமிழைத்த இராணுவத்தைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவது ஒரு நல்ல நாட்டுக்கு அழகு. ஆனால் அமெரிக்கா என்ன செய்தது?  அந்த காணொளியை  விக்கிலீக்ஸுக்கு வழங்கினார் என்ற சந்தேகத்தில் அதன் இராணுவ உளவுப்பிரிவில்  கடமையாற்றிய  பிரட்லி மென்னிங் ( Bradley Manning)   ஐ கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.  


அமெரிக்காவின் சட்டத்தைப் பாருங்கள்.  


கொலை செய்வது குற்றமல்ல, கொலையாளியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் குற்றம். 


அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி  கொன்ற கொலையாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. அந்த க் கொலைக்காட்சிகளை  வெளியே கசிய விட்டார் என்ற குற்றத்திற்காக  பிரட்லி மென்னிங் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 


விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் மிகவும் ஆதாரபூர்மான ஆவணம் பக்தாத் கொலை வீடியோ தான்.  அது வெளிவந்ததும் ஏற்பட்ட பரபரப்பு  அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆயிரக்கணக்கான வம்புக் கதைகள் அடங்கிய ஆவணங்களோடு அப்படியே அடங்கி விட்டது. 


அந்த போர் குற்றத்திற்காக அமெரிக்காவை தட்டிக் கேட்கும் திராணி இவ்வுலகில் யாரிடமுமில்லை.


அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.  அல்லது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஓரம்கட்டப்படுகின்றார்கள். 


சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் கூட பாலியல் குற்றவாளிகளை பாய்ந்து பிடிப்பதிலுள்ள அவசரம், கொலைக் குற்றவாளிகள் விடயத்தில் அறவே இல்லை. அது  கொலைக் குற்றவாளிகளொடு கொஞ்சிக் குலாவுகிறது.


விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்ட மற்றும் வெளியிட தயாராக இருக்கும் வம்புக் கதைகளுடன் கூடிய காகித அடுக்குகளுக்குள்  ஆதாரபூர்வமான ஒளிப்பதிவாய் வெளிவந்த பக்தாத் கொலைகள் அமிழ்ந்தே போய் விடும்.


இதைப் பார்க்கும்  போது ஏற்கனவே விக்கிலீக்ஸால் வெளிவந்த ஆதார பூர்வமான போர்க்குற்றத்தை மூடி மறைக்க அமெரிக்காவே விக்கிலீக்ஸுக்கு வேண்டுமென்றே வெறும் கதைகள் அடங்கிய தகவல்களை கசிய விட்டதுவா என்று சந்தேகம் வருகிறது.

Thursday 9 December 2010

விக்கிலீக்ஸ் - சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம்

சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம் : விக்கிலீக்ஸ் _

 












சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகைய களியாட்டங்கள் சவூதி நாட்டின் இளவரசர்களிடையே தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம் http://213.251.145.96/cable/2009/11/09JEDDAH443.html

நன்றி   வீரகேசரி இணையம் 12/9/2010 12:42:13 PM

Wednesday 1 December 2010

விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!


விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது  இன்டர்போல்!

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம்   ஒன்று சர்வதேச காவல்துறையான  இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம்  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும்,  அந்த வெறித்தனத்தால்  உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும்  வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தனது சுரண்டல் அரசியலுக்காக  பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது.  குறிப்பாக  ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும்  அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக   விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,

அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.

எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

Saturday 30 October 2010

ஒரு சோகமான பாடல் ! இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.

ஒரு சோகமான  பாடல் !


இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010  அக்டோபர்  மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.  

சிங்கள இனவாதம் தமிழர்களை நசுக்கிய போது அதற்கு எதிராக எழுந்த விடுதலைப் போராட்டம் தனது பூமியில் வாழ்ந்த சகோதர சிறுபான்மையான முஸ்லிம்கள் மீது தனது அடக்கு முறையை ஆயுத ரீதியாக பிரயோகிக்க ஆரம்பித்தது.  

சிங்கள பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை அதே பாணியில் தமிழ் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு  மிக மோசமாக  இழைத்தது.

இருபது வருடங்களுக்கு  முன்  முஸ்லிம்கள் தமது  தாயக பூமியிலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்டனர். 

Sunday 17 October 2010

ஈரானோடு மோத தாலிபான்களோடு இணங்கிப்போகிறது அமெரிக்கா?



ஈரான் இஸ்லாமியக் குடியரசோடு  யுத்தம் ஒன்றுக்கு தயாராகி வரும் அமெரிக்கா அதன் கள நிலவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் இப்போது இறங்கி இருக்கிறது.

ஈரானை தாக்குவதற்காக தனது நேச நாடான சஊதி அரேபியாவிற்கு கோடிக்கணக்கான  டொலர்களுக்கு  ஆயுதங்களை விற்பனை செய்து சஊதியை இராணுவ மயப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.  ஆப்கானில் தனது வியுகத்தை தலை கீழாக மாற்றி  இருக்கிறது.  தாலிபான்கள் விடுதலை பேச்சுவார்த்தை என்ற பின்னணியில் அமரிக்காவிற்கு எதிராக இருக்கும் ஆப்கான் தளத்தை ஈரானுக்கு எதிராக திருப்பும் ஒரு முயற்சியாக இதை பார்க்க முடியும்.  
அதன் முதற் கட்ட நடவடிக்கையாக தாலிபானின்  முக்கிய  தலைவர்களில் ஒருவரான  முல்லா அப்துல் கனியை பாகிஸ்தான் அரசு மூலம் விடுதலை செய்திருக்கிறது.

 பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தாலிபான்களோடு போராடிய பாகிஸ்தான்  தற்போது அமெரிக்காவின் தேவைக்காக அந்த அமைப்போடு சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்து வருகின்றது.

தாலிபான்களை அழித்து உலகையே பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றி விட்டே ஊர் திரும்புவோம் என்று சபதமிட்டு வந்த அமெரிக்கா வின் தாலிபான்கள்தொடர்பான போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.                                                                        

அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் அண்மைய நிலைப்பாட்டில் பெரும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

அண்மைக்காலமாக  தாலிபான்களின் தாக்குதல்களுக்கு  முகம்கொடுக்க முடியாமல் நேட்டோ படைகள் திண்டாடுவது போன்ற ஒரு நிலையை  மேற்கத்தைய ஊடகங்கள் பரப்பி வருகின்றன்.

பல ஆண்டுகள் போராடி ஒழித்த தாலிபான்களின் பலம் மீண்டும் புதிய வேகத்தில் வளர்வது போன்ற ஒரு பிரமையை அமெரிக்க ஊடக்ஙகள் ஏற்படுத்தி வருகின்றன.    

எனவே அமைதியான ஆப்கான் ஒன்றின் உருவாக்கத்திற்கு  அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்ற  ஒரு மாயையை தோற்றுவித்து  தாலிபான்களின்  பயங்கரவாதத்தை உட் பிளவுகளை வைத்து  ஈரானுக்கு எதிராக திருப்பிவிடும்  ஓரு சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது.

விடுதலை செய்யப்பட்டிருக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனியை வைத்து பேச்சுவார்த்தை நாடகத்தை ஆரம்பித்து அவர்களை அமைதி படுத்தி தனது பொது எதிரியான ஈரானோடு தனது யுத்தத்தை ஆரம்பிக்கவும் அதற்கேற்ற தளமாக ஆப்கானையும் ஏனைய  முஸ்லிம் நாடுகளையும்  உருவாக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

Thursday 7 October 2010

அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ... இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!

அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ...



இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை  அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!

Tuesday 28 September 2010

கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம் ?



கத்தார் !  கிலாபத் சிந்தனையின்  கனவு ராஜ்ஜியம்?





பிரச்சாரப் பணிக்ககாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையூறு இன்றி இடம் கொடுக்கும் நாடு கத்தார் .  எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் அடிக்கடி பிரச்சாரப் பணிக்காக கத்தருக்கு சூறாவளி சுற்றுப்பயணங்களை  மேற்கொண்டு வருகின்றனர்.  

Thursday 2 September 2010

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!











MupatjpAk;  rt+jpapd;  Mzp mறைjYk;; 
KOg; g+rdpf;fhia Nrhw;wpy; kiwf;Fk; rt+jp J}jufk;!

,yq;ifg; gzpg;ngz; Mupatjpapd; clk;gpy; Vw;wg;gl;l Mzpfs; jkf;F re;Njfj;ij Vw;gLj;Jtjhf nfhOk;G rt+jp J}jufk; njuptpj;jpUg;gjhf Clfq;fs; nra;jp ntspapl;bUf;fpd;wd.

Rt+jp J}jufk; mk;gyj;jpw;F tUk; jdJ ehl;bd; mrpq;fq;fis rfpj;Jf;nfhs;s Kbahky; mtrug;gl;L ,e;j mwpf;ifia ntspapl;L ,Uf;fpwJ.

Mupatjpapd; tptfhuk; Mjhug+h;tkhdJ!
clypy; nrYj;jg;gl;bUe;j Mzpfs; mWit rpfpr;ir %yk; ntspnaLf;fg;gl;bUf;fpd;wd.  itj;jpah;fs;  mWit rpfpr;ir nra;Ak; fhl;rpfs; Clfq;fspd; %yk; KO cyfpw;Fk; fhl;lg;gl;bUf;fpd;wd.

Mupatjp xU kdNehahspah vd;W gupNrhjpj;j itj;jpau;fs; mtu; rpwe;j kdepiyapy; ,Ug;gjhf cWjpaspj;Jk; cs;sdu;. New;W rpur njhiyf;fhl;rp nra;jpapy; itj;jpaNu ,jid cWjpg;gLj;jpdhu;.

,J ,g;gbapUf;f

Saturday 28 August 2010

பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள். சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்

பணிப் பெண்ணின் உடம்பிற்குள்  23 ஆணிகள்.
சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்.





அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான்  மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும்  வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள். 

ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.




(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)


சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.





இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர்  வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர்.  இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.

Tuesday 8 June 2010

WikiLeaks இரகசிய காணொளி விவகாரம் - அமெரிக்க வீரர் கைது!


ஈராக்கில் அமெரிக்க இராணுவம் 2007ல் புரிந்த படுகொலை வீடியோ ஒன்றை WikiLeaks  இணையம் வெளியிட்டு அமெரிக்காவின் மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இணையதளத்திற்கு இந்த வீடியோவைஇரகசியமாக  வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் Bradley Manning என்ற அமெரிக்க இராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


ஈராக்கில் கடமையாற்றிய பிரேட்லி மென்னிங் கைது செய்யப்பட்டு தற்போது குவைத்தில் உள்ள அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...