Saturday 1 November 2014

ஜனாதிபதியை ஓட வைத்த மக்கள்...!

ஆபிரிக்க நாடான பூர்கினா பாசோவில் மக்கள் வீதியில் இறங்கி ஆா்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றாா்கள்.

பூர்கினா பாசோவின் ஜனாதிபதி பிலைஸ் கம்பரோ Blaise Compaore கடந்த 27 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறாா். 2015ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் தோ்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஆசை இவரையும் விட்டு வைக்கவில்லை.

எனவே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமென்பதற்காக அரசியல மைப்பில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்தாா். கம்பரோவின் பதவி வெறியை கடுமையாக எதிர்த்த மக்கள் பாதைகளில் இறங்கினாா்கள். போராட்டம் ஆரம்பமானது.

விளைவு வன்முறையாக வெடித்தது. சுமாா் பத்துலட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்தனா். போராட்டக்காரர்கள் நேற்றயை தினம் (31.10.2014) பாராளுமன்றத்தையே தீவதை்து கொளுத்தினாா்கள். கம்பரோவின் கட்சித் தலைமையகம் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.

போராட்டம் வலுப்பெற்றதைக் கண்ட கம்பரோ இன்று 01.11.2014 தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். 2011 ஏற்பட்ட அரபு வசந்தத்தோடு பூர்கினா பாசோவிலும் மக்கள் எழுச்சி ஆரம்பமானது.

1982ம் ஆண்டு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பூர்கினா பாசோவில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கிய ஆபிரிக்காவின் சேகுவேரா என வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி தோமஸ் சங்கராவை 15 அக்டோபர் 1987ல், பிரஞ்சு கைக்கூலிகளுடன் இணைந்து கொலை செய்துவிட்டு கம்பரோ ஆட்சிக்கு வந்தாா்.





அன்றிலிருந்து இன்றுவரை 27 வருடங்கள் கம்பரோ தொடராக ஆட்சி செய்துள்ளாா்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...