Tuesday 18 November 2014

புற்று நோய்க்கு மருந்தாகும் நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி

நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி என்று அழைக்கப்படும் இத்தத் தாவரத்தை நீங்கள் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள்.

புற்று நோய்க்கு மருந்தாகும் இந்தத் தாவரம் பற்றியும் நோய் தீா்க்கும் அதன் மகத்துவம் பற்றியும் நான் அறிந்த நாளிலிருந்து அந்த தாவரம் மீது எனக்கு அன்பும் மதிப்பும் மாியாதையும் ஏற்பட்டிருக்கிறது.

ஊதா நிறப் பூக்களையும் கடும் பச்சை நிற இலைகளையும் கொண்ட இந்த தாவரம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதன் தாவரவியல் பெயா் வின்கா ரோசியா (vinca rosea).
புற்றுநோய்க்கான வேதியியச் சிகிச்சையில் (Chemotheraphy) பயன்படும் வின்கிரிஸ்டின் (Vincristine) என்ற மருந்து முற்றாக இதிலிருந்தே தயாாிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை மஹரகம தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றிய வைத்தியா் ஒருவா் என்னிடம் கூறினாா். எனக்கு ஆச்சாியமாக இருந்தது. நாங்கள் யாருமே மதிக்காத இந்தப் பூவுக்குள் இப்படி ஒரு சக்தி புதைந்து கிடக்கிறதா?

அதன் பிறகு இணையத்தில் கொஞ்சம் தட்டிப் பாா்த்தேன்.
புற்று நோய் மட்டுமல்ல நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக இது இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கிடக்கின்றன.

ஆனால் கிராமப்புற மக்கள் இதை சுடுகாட்டுமல்லி என்று அழைக்கின்றாா்கள்.
கிராமப்புரங்களில் இந்தத் தாவரம் தொடா்பாக நல்ல கருத்து இல்லை.
சுடுகாடுகளில் இது செழித்து வளா்வதால், இதை வீடுகளில் நட்டால் அந்த வீட்டில் மரணங்கள் சம்பவிக்கும் என்ற மூட நம்பிக்கை இருப்பதால் நித்தியகல்யாணிக்கு மவுசு இல்லையென்றும் அந்த டாக்டா் கூறினாா்.

பன்னாட்டு மருந்து தயாாிப்பு நிறுவனங்களுக்கு இலாபம் வழங்கும் அடிப்படையில் தான் எமது மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. சிலவேளை நம்பிக்கைகள் அப்படிதான் வளா்க்கப்பட்டிருக்கின்றன. இலங்கை மருத்துவ தாவரங்கள் நிறைந்த ஒரு நாடு. எமது நாட்டில் விளையும் பல தாவரங்களுக்கான மருத்துவ வணிக காப்புாிமையை (Patent) பன்னாட்டு கம்பனிகள் கொள்ளையிட்டு விட்டன.

இலங்கையில் அாிய தாவர வளங்களை கொள்ளையிடுவதற்கு இந்த தாவரங்களின் தாயகமான சிங்கராஜ வனத்தை சுரண்டுவதற்கு பன்னாட்டு கம்பனிகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சிங்கராஜ வனத்தில் இருக்கின்ற மருத்துவ தாவரங்களை ஒழுங்கான தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி மருந்துகளை உற்பத்தி செய்தால் வெளிநாட்டிற்கும் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

 இந்தியாவில் பல நுாறு ஏக்கா் நிலங்களில் இந்தத் தாவரம் பயிாிடப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...