Wednesday 19 November 2014

இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!

இன்று 19.11.2014  சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!


ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி உலகம் முழுவதும் சுமாா் 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அற்றவா்களாக இருக்கின்றாா்களாம்.

கழிப்பறை மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.
விஞ்ஞான, தொழிலநுட்ப ரீதியில் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மாா்தட்டும் இந்த மனித சமூகம், மனிதனின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் இன்னும் பூஜ்யமாகத்தான்  இருக்கிறது என்பதற்கு இந்த ஐநா புள்ளி விபரம் சிறந்த சான்று.

ஓாிரு வருடங்களுக்கு முன்னா் கொழும்பில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி பின்னடைவு பற்றிய ஒரு செயலமா்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளா் என்.எம். அமீன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டாா்.

கொழும்பு முஸ்லிம் மாணவா்களின் கல்வியின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமது வீடுகளில் மலசல கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல்  இருப்பதுதான் என்று கூறினாா்.

கொழும்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்வதால் பல வீடுகளுக்கு ஓரிரண்டு கழிப்பறைகளே இருப்பதாகவும் காலைநேரங்களில்  கழிப்பறையின் நெருக்கடி காரணமாக உாிய நேரத்தில் பிள்ளளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறினாா். தொடா்ந்து பாடசாலைக்கு சமுகமளிப்பதில் தவறும் மாணவா்களின் நிலை கல்வியில் மிகவும்  பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் அவா் கூறினாா்.

தலைநகரான கொழும்பில் மிக அதிக முஸ்லிம் ஜனத்தொகையைக் கொண்ட கொழும்பு மத்திய தொகுதியில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக உணர முடிகின்றது. கழிப்பறை போன்ற ஒரு மனிதனுக்கு தேவையான  அடிப்படை உாிமையை பெற்றுக்கொள்ள திராணியற்றவா்களாவே முஸ்லிம்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு அது சிறந்த சான்று.

எமது அண்மைய நாடான இந்தியாவில் சனத்தொகை 120 கோடி. இதில் 60 கோடி பேருக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இத்தகவலைக் கேட்டு ஐ.நா செயலாளா் பான் கீ மூன் அதிா்ச்சியடைந்ததாக தி இந்து பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தது ஞாபகம். இந்த செய்தி எனக்கும் இது அதிா்ச்சியாகவே இருந்தது.

இந்திய கழிப்பறை விவகாரம் பிராந்திய அரசியலில் கூட இது பேசு பொருளானது.

மீனவா், தமிழா், சீன ஆதிக்கம் தொடா்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அடிக்கடி சா்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் எமது அமைச்சா் சுசில் பிரேம ஜயந்த  கடந்த வருடம் “ தனது நாட்டு மக்களின் கழிப்பறை பிரச்சினையை தீா்த்துக் கொள்ள முடியாத இந்தியா எங்கள் உள்நாட்டு பிரச்சினையை தீா்கக முனைவது வேடிக்கையானது” என்று கூறினாா்.

இதற்கு எதிா்வினையாற்றிய தென் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் “ ஒரு சுண்டைக்காய் நாடு இந்தியாவை அச்சுறுத்துவதா”  என கேள்விகள் கூட எழுப்பின.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த கழிப்பறை பிரச்சினை இருக்கிறது.

இன்றைய கழிப்பறை தினம் தொடா்பாக  இன்று காலை இந்திய தொலைக்காட்சிகளில் பல செய்தி விவரணங்கள் இடம் பெற்றன. இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பல தசாப்தங்கள் ஆகும் என அறியக் கிடைத்தது.

செய்மதிகளை விண்ணுக்கு  அனுப்பி விண்ணில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் ஒரு நாடு மண்ணில் வாழும் மக்களின் பிரச்சினையை மறந்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு தீபாவளிக்கு 5000 கோடி ரூபாய்களை பட்டாசு கொளுத்துவதற்கு இந்தியா்கள் செலவிடுகின்றாா்கள். இவற்றை தவிா்த்து விட்டு மனிதனின் அடிப்படை தேவையின்பால் கவனம் செலுத்துவதே அவசரமானது அவசியமானது.

சா்வதேச கழிப்பறை தினத்தையொட்டி  பிபிஸி இணையதளம் வெளியிட்டிருந்த படங்கள் இவை -

















No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...