Friday 28 September 2012

கத்தாபியை கொலை செய்தவர் கடத்தப்பட்டு படுகொலை?


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் லிபியத் தலைவர் கத்தாபியைப் பிடித்து கொலை செய்து புகழ்பெற்ற ஒம்ரான் ஷhபான் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அமெரிக்க வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமாகியுள்ளார்.


1992ம் ஆண்டில் மிஸ்ராட்டா நகரில் பிறந்த ஒம்ரான் ஷhபான் மிஸ்ராடா விடுதலை அணியில் முக்கிய நபராக கருதப்பட்டவர். திரிப்போலி மற்றும் மிஸ்ராட்டா நகரங்களை லிபிய இராணுவத்திடம் இருந்து மீடபதற்காக  போராடியவர்களில் முக்கியமானவராக ஒம்ரான் கருதப்படுகிறார்.

கத்தாபி ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட ஒம்ரான் 57 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு பிரான்ஸிலுள்ள அமெரிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுpகிச்சை பலனளிக்காமல் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஓம்ரானோடு சேர்த்து இன்னும் பலர் கடத்தப்பட்டடிருப்பதாகவும் அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளிவராமல் இருப்பது  பலரை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...