Tuesday 23 March 2010

யெஹுதிகளைப் பாதுகாக்கும் சஊதியின் நிகழ்ச்சி நிரல்!

22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது.


எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண்பரொருவரின் சகோதரர் ஒருவருமான றஸீன் மாஸ்டர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சகோ. ரஸீனின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக மையவாடியில் நண்பர்களொடு காத்திருந்தேன்.

அமைதி உலாவும் இடமான அந்த மையவாடியில் அந்த காலை வேளையில்... அமைதியை சிதைத்துக்கொண்டு.. சர்ச்சையொன்று புகைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தனது சகோதரரின் ஜனாஸாவை  வழமைக்கு மாற்றமாக சுமந்து வரும் முறையில் அதிருப்தியுற்ற எனது நண்பன் ஜனாஸா ஊர்வலத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டியில் ஏறி  ஜனாஸா வருவதற்கு முன்பே மையவாடிக்கு வந்து விட்டார்.

அவரின் அதிருப்தியை விசாரித்த போது தனது சகோதரரின் ஜனாஸாவை தனது குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தையும் மீறி,  ஒரு கும்பல் “சுன்னத்தான” முறையில் அடக்கம் செய்யப்போவதாக கூறி, சந்தூக்கில் வைத்து, வழமைக்கு மாறாக சந்தூக்கை துணி ஒன்றால் மூடாமல் கபனிடப்பட்ட ஜனாஸா தெரியும் படி ஊர்வலமாக சுமந்து வருவதாக அறிய வந்தது.



ஆங்காங்கே குடும்ப அங்கத்தவர்களின் கோபாவேஷ வார்த்தைகளால் மையவாடி உஷ்ணமடைந்துக் கொண்டிருந்தது.

பேருவளையில் போன்று இந்த முரண்பாடுகளை வைத்து முஸ்லிம்களுக்குள்ளே இன்னுமொரு அசம்பாவிதத்தை ஏற்படுத்த அமெரிக்க சார்பு, அரபு நாடுகளின் பணத்தால் போஷிக்கப்படும்  விஷமிகள் போடுகின்ற ஒரு திட்டமாக இது இருக்கலாம் என்ற உணர்வு என்னுள் வலுப்பெற்றது.

ஜனாஸாவை அடக்கம் செய்கின்ற இடத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

வாக்குவாதம் சூடு பிடிப்பதைக் கண்ட உலமா சபையின் ஒரு அங்கத்தவரான மௌலவி தாஸீம் மெல்ல அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்றதையும் காணக் கூடியதாய் இருந்தது.

இங்கு, இந்த ஜனாஸா விடயத்தில்  ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் எது சரி? எது பிழை? என்று  ஆராய்வதை விட இன்றைய முஸ்லிம் சமூகம் தேசிய, சர்வதேசிய ரீதியில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை அணுவளவும் சிந்திக்காமல் முஸ்லிம் சமூகம் சின்ன சின்ன பிரச்சினைகளில் சிக்குண்டு தனது காலத்தை வெறுமனே கடத்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

இந்த ஜனாஸா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இதே கும்பல்,  நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து பலஸ்தீன் போராட்ட இயக்கமான ஹமாஸ் இயக்கத்தை தாறுமாறாக விமர்சித்த போது பெருத்த சர்ச்சை எற்பட்டு கைகலப்பில் கூட்டம் நிறைவு பெற்றது.

அன்றைய கூட்டத்தில் இஸ்ரேலின் கொடுமைகள் பற்றியோ, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது அனைத்து அதிகாரங்களையும் பிரயோகிக்கும் அமெரிக்கா பற்றியோ, அந்த அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கும் அரபு நாடுகள் பற்றியோ கதைக்கப்படாமல்,   ஹமாஸ் இயக்கம் நடாத்தும் தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்று மட்டும் பிரசாரம் செய்யப்பட்டது.



கேள்வி நேரத்தில் நான் பலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு உட்பட்டிருக்கிறதா? என்றும் ஹமாஸின் தாக்குதல்கள் இஸ்லாமிய வரையறைகளை மீறியிருந்தால், இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரித்த முறையில் இஸ்ரேலைத் தாக்கும் முறையை தெளிவு படுத்த வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டேன்.

பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கிய  இந்த சஊதி, சீ.ஐ.ஏ கூலிக்கும்பல்கள் என்னைச் சுற்றி வளைத்து என்னை மண்டபத்தில் இருந்த வெளியெறும்படி கோர நான் மறுக்க, ஒரு கைகலப்பே உருவானது.

அன்று மாளிகாவத்தை பிரதேச இளைஞர்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் இந்தக் கும்பல் துண்டைக் காணோம்  துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தது.

 ஹமாஸை கடுமையாக எதிர்க்கும் , அமெரிக்காவையும், இஸ்ரேலையும், சஊதியையும்  ஆதரிக்கும் இந்தக் கும்பல் இப்போது மீண்டும் கொழும்பில் தலைக் காட்ட ஆரம்பித்தள்ளது.

இந்த பழைய சம்பவத்தை நேற்றறைய ஜனாஸா சம்பவத்தோடுநினைத்துப் பார்ப்பதற்கு ஒரு காரணமிருக்கிறது.

இன்று அரபு நாடுகள் பார்த்திருக்க  பலஸ்தினில் அராஜகம் என்றுமில்லாத வாறு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முதல் கிப்லா முகத்தஸ் தகர்க்கப்படும் தருணத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த நிகழ்வுகளிலிருந்து ஒவ்வொரு நாட்டு முஸ்லிம்களையும் வேறுபக்கம் திருப்பும் நடவடிக்கையாகவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

இஸ்லாத்தின் எதிரிகள்,  எங்களுக்குள் இருக்கும் சில பணத்திற்காக பல்லிளிக்கும்  கோடரிக்காம்புகளுக்கு பணத்தைக் கொண்டு முக்கிய பிரச்சினைகளிலிருந்து எங்களை வேறுபக்கம் திசை திருப்பவே இந்த வழிமுறையைக் கையாளுகின்றனர்.

இதற்கு அரபு நாட்டு உளவு நிறுவனங்கள் தஃவா என்ற போர்வையில் உதவி செய்கின்றன.

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை மூடி மறைப்பதற்கு அந்த எதிரிகளே இவர்களுக்கு கூட்டத்திற்கான தலைப்பையும் குறித்துக் கொடுக்கின்றார்கள்.  அதனால் தான் இந்த கும்பல் இஸ்ரேலைப் பற்றி மூச்சு விடாமல், ஹமாஸின் தாக்குதல் பற்றி இஸ்லாத்தோடு உரசி பார்க்கின்றார்கள்.  ஹமாஸ் பற்றிய தப்பான எண்ணத்தை முஸ்லிம்களின் மனதில் விதைக்க பாடுபடுகினறனர்.

( அண்மையில் காஸாவை தனி நாடாக அறிவித்து  பலஸ்தீன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஹமாஸோடு மோதல்களை உருவாக்கி போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயன்ற ஜுன்த் அன்ஸாருல்லாஹ் என்ற ஸலபி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட  சீ.ஐ.ஏ  ஆதரவு கும்பலும் இவர்களைப் போன்று   ஸலபி குழுவினர்தான்)

இன்று பலஸ்தினீல் முதல் கிப்லா முற்றுமையிடப்பட்டு அழிவின் விளிம்பில் அநாதரவாக இருக்கிறது.

பலஸ்தீன் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.

காஸா மக்கள் தண்ணீர், மின்சாரம், உணவு, மருந்து போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு பட்டினியில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகமே எதிர்க்க ஒரு திறந்த வெளி இருப்புச் சிறைக்குள் இவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பித்அத் எதிர்ப்பு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்தக் கூலிக் கும்பல்கள் எதிரிகளின் (யெஹுதி நஸாராக்களின்) நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப  முஸ்லிம்களை முக்கிய பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி  வருகிறார்கள்.

மரணித்தவரின் ஜனாஸாவை வைத்து “நபி வழி” என்று மல்லு கட்டுகிறவர்கள். நபியின் உம்மத் துன்பத்தில் வாடும் போது,  நபியின் உம்மத்தை அநியாயக்காரர்கள் அடக்கி ஆளும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலின் கொடுமையாலும் பட்டினினியாலும்  வாடும் காஸா மக்களுக்கு ஒரு ரொட்டித் துண்டை வழங்க தயாரில்லாத இவர்கள்
இலங்கையிலுள்ள மக்களுக்கு,  உழ்ஹிய்யாவையும்,   மூக்குக் கண்ணாடியையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

காஸாவிலே பெரசிட்டமோல் மாத்திரை இல்லாமல் மக்கள் தவிக்கும் போது  அவர்களுக்கு உதவாமல் இலங்கையில்  கண் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள்.  

பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் முஸ்லிம்களைக் கொன்று அவர்களின்  உடலுறுப்புகளை திருடி விற்கும் போது அந்த பாதகச் செயலை  தனது அரபு எஜமானர்களை வைத்து தடுக்காமல் இங்கு அரபு எஜமானர்களின் பணத்தைக் கொண்டு வந்து மூக்குக் கண்ணாடி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண் சிகிச்சையும், முக்குக் கண்ணாடியும்  செய்வதும் பிழையான செயல் என்று சொல்ல வரவில்லை.  தேவையானதை தேவையானோருக்கு செய்யாமல், தேவையில்லாத இடத்திற்கு செய்யும் ஒரு சதியின் வடிவத்தை சுட்டிக்காட்டத்தான் இதனைச் சொல்கின்றேன்.

இன்று ஈராக்கில் இடம்பெறும் அத்தனைக் கொலைகளுக்கும் பொறுப்பு சொல்ல வேண்டியவை இந்த அரபு நாடுகளே. 14, 000 கி.மீ துரத்திலிருந்த ஈராக்கை தாக்க முடியாத அமெரிக்காவிற்கு தனது பூமியில் இடம்கொடுத்து அந்த நாட்டை கொலைக்களமாக்கிய பெருமை அரபு நாடுகளையெ சாரும்.

ஈராக்கில், பலஸ்தினில்  இஸ்லாமிய உம்மத் வாழ்வுரிமை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது,   அநியாயத்திலிருந்து முஸ்லிம்களை மீட்கும், பாதுகாக்கும்   நபி வழியை (சுன்னாவை) இந்தக் கும்பல்கள் மறந்து வாழ்கின்றன. மறைத்து வாழ்கின்றன.

நெஞ்சில் தக்பீர் கட்டுவதோடும், விரல் ஆட்டுவதோடும், ஜனாஸாவோடு மல்லுக் கட்டுவதோடும் இவர்களின் இஸ்லாமியப்பணி நிறைவு பெறுகிறது.

எது எப்படி இருப்பினும், 

அமெரிக்காவின் நண்பனான, யஹுதிகளைப் பாதுகாக்கும் சஊதியின் அந்த மோசமான அரசியல் நிகழ்ச்சி நிரலை அற்ப பணத்திற்காகப் பின்பற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய இந்தக் கூட்டத்தினரை முஸ்லிம்கள் நிராகரித்து விரட்டும்  காலம் வெகு தூரத்தில் இல்லை.

24 comments:

  1. "நெஞ்சில் தக்பீர் கட்டுவதோடும், விரல் ஆட்டுவதோடும், ஜனாஸாவோடு மல்லுக் கட்டுவதோடும் இவர்களின் இஸ்லாமியப்பணி நிறைவு பெறுகிறது."

    இந்த வசனங்களுக்கும் இஸ்ஸத்தீன் கஸ்ஸாம் அவர்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா அன்பரே.முஸ்லிம் சடூகத்தின் வேதனைகளை மறந்து விட்டு மஸாயில்களில் மாத்திரம் யாராவது கவனம் எடுப்பார்களாயின் அது மிகப் பெறும் தவறு.அதே நேரம் தவ்ஹீத்வாதிகள்தான் அப்படி நடக்கிறார்கள் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்த முனைந்திருப்பது மாபெறம் தவறு.அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் வேதனைகளளை ஒருவன் உள்ளத்தால் உணர்வதற்கம் தான் விளங்கிய நிலையை நடை முறைப்படுத்துவதற்கும் அல்லது நடை முறைப்படுத்தாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்

    ReplyDelete
  2. Salam! Ungal thunivukkum chindanai thelivukkum enathu parattukkal. Vaalka ungal pani.

    ReplyDelete
  3. பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம், அல்ஹம்துலில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாம்,
    அலன் நபிய் அம்மா பஃத்.,

    யஹூதிகளை பாதுகாக்கும் சவூதியின் நிகழ்ச்சி நிரல் எ‌ன்ற தலைப்பில் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சு பொட்டு பொய்களையும் அவதூறுகளையும் சுமத்தி தனது சகாவுக்கு வக்காளத்து வாங்க எத்தனித்திருக்கும்
    இந்த ஜமாத்தே இஸ்லாமி / இஹ்வாநிய கொள்கை வாதியின் பிதற்றல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது
    அவசியமாகி விட்டது.

    முத‌லி‌ல் இந்த மனிதரின் பின்னனியை அவரின் வார்த்தையின் ஊடாக கண்டு கொள்ளுங்கள்

    Qutoed >>>>>
    இந்த சஊதி, சீ.ஐ.ஏ கூலிக்கும்பல்கள் என்னைச் சுற்றி வளைத்து என்னை மண்டபத்தில் இருந்த வெளியெறும்படி கோர நான் மறுக்க, ஒரு கைகலப்பே உருவானது.

    அன்று மாளிகாவத்தை பிரதேச இளைஞர்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் இந்தக் கும்பல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தது.

    >> end of Quote

    அன்று 2005 ல் நடைபெற்ற " இஸ்ஸாமிய கண்ணோட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் " எ‌ன்ற நிகழ்ச்சியில் "
    என்னை கொல்லுங்கள் எ‌ன்று சப்தமிட்டவாறு எழுந்து கூச்சல் போட்ட இவரை வெளியேறும் படி கோர, இவர் மறுத்து
    மேடையை நோக்கி சப்தமிட்டவாறு முண்ணேற முயற்சிக்கையில் வெளியேற்றப்பட்டார். வெளியில் செ‌ன்று பாதாள
    கும்பல்களை கிரணைட் சகிதம் அழைத்து வந்தவர் தான் இந்த உளறல் வாதி. இவர் தான் சுன்னாவுக்கும், பாலஸ்தீன
    மக்களுக்கும் குரல் எ‌ன்ற பெயரில் கூச்சல் போடுகிறார்.


    காலம் சென்ற ரஸீன் மாஸ்டர் உயிரோடு இருக்கும் பொது அல்குர் ஆனையும் சுன்னாவையும் ஸஹாபா விளக்கத்தின்
    அடிப்படையில் பின்பற்றும் மனிதராகவே இருந்தார். ரஸீன் மாஸ்டரின் கொள்கையும் செயற்பாடுகளும் ஊரே
    அறிந்த உண்மை. மேலும் தா‌ன் மவ்தாகினால் யார் அடக்கம் செய்ய வேண்டும் என்பதனையும் தெளிவாக
    அறிவித்திருந்தார். இந்த அடிப்படையில் இந்த் மனிதரின் சகாவும் ரசீன மாஸ்டரின் தம்பியுமான நவ்ஸாத் என்று அழைக்கப்படும் ( தினகரன் / இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபன ) ஊழியரோடும் ராசின் மாஸ்டரின் மகன் குடுப்பத்தாரோடு பேசி தா‌ன் இந்த ஜனாஸா
    அடக்கம் செய்ய எடுத்து வரப்பட்டது. அங்கே வீட்டிலே தலையாட்டிய இந்த நபரின் சகா, மைய்யா வாடியில் இவரை போன்றே
    கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார். இவர்களின் அடாவடித் தனங்களை முன்னமே அறிந்து வைத்திருந்த படியால் சம்பந்த
    பட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றார்கள்.

    இவர்களே ரகலைகளை உண்டு பன்னி விட்டு பலியை மற்றவர்கள் தலையில்
    போட்டு அதற்கு யஹூதி நஸாரா முளாம் பூசும் வல்லவர்கள்.

    இந்த இரட்டை வேடதாரிகளை அல்லாஹ் பார்த்துக் கொள்ளட்டும்.

    அல்லாஹ் ‌மிகவு‌ம் அறிந்தவன்
    அபு யஹ்யா இசாம் ‌பி‌ன் அப்துல் காதர்

    ReplyDelete
  4. Nabi waliyai vettu vettu anniya valimurayai pinpatriyathinalthan ulakil muslimkal allahvinal sothika padukirarkal Janazahvai nabi waliyil adakkam saivathu ulakalavi muslimkaluku oru alakiya munmathiry.

    Nabiwali amulpadutha vidamal anniya wali muraikaka sandaiyai uruvakivarkalay Saithanen Thulargal Jew Chirstianiyen nanbarkal

    Nabi waliyai pinpatruvadthan moolamay Allaah muslimkaluku vettriyai tharuvan.

    idu yahoodiyin sathiyena koorubavan islamai ariyatha Madaiyanin kookural.

    Razeen Master Janazah Bayan By Shaikh Ashraf Ali http://www.youtube.com/watch?v=g95tGwbYORI

    ReplyDelete
  5. Assalamu alaikum,
    Maarka vidayangalil ungalukkulle piratchinai wandhal azatkuriya theerpu enna wennru quran aduththazu en sunnah wai paarungal enruthan Nabi sal awarhal sonnarkal. Azanai wittuwittu nengal enna izu ularuhireelhal.Allahwai payandu awan irakkiyazai mattum pinpattrugal (2.170) Appoluzu piratcinaiyum warazu.ottrumaiyum kulaiyazu.Mano ichchaipadi pesuwazai wittuwidungal.Quranaiyum sunnawaiyum padiyungal. Allah

    ReplyDelete
  6. ஸலாம்.அஸீஸ் நிஸார்டீனின் ஆய்வு பல உண்மைகளை நமக்கு வெளிச்சமாக்குகின்றது. இந்த முஸ்லிம் உம்மத்தின் மீது உள்ள கவலையை அஸீஸ் நிஸார்டீன் அவர்கள் அவருக்கு இருக்கும் எழுத்தாற்றல் மூலமும் தனது வாதத்தின் மூலமும் வெளிக்காட்டுகின்றார். அவர் கூருவது போன்று முஸ்லிம் உம்மத்தின் தற்போதைய அவல நிலையை, துர்ப்பாக்கிய நிலையை பற்றி பேசி, மாநாடு கூடி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம் உம்மத்தின் விடிவுக்காக ஏதும் ஆக்கப்பூர்வமாக செயலை செய்வதற்கு இந்த அரப இராச்சியங்கள்,உலமாக்கள், NGO க்கள்,உலமா சபைகள் ஏனோ முன்வருகின்றதில்லை? இதில் யஹ்ஊதிகளின் சதி உள்ளது என்பது உண்மைப் போன்றே தெரிகின்றது. முஸ்லிம் உம்மத்த் உரவிழந்து, வீடிழந்து,உணவிழந்து, உயிழந்து சீரழிந்து கொண்டிருக்கையில் அதற்கு ஒரு உருப்படியான காரியத்தை செய்வதை விட்டு விட்டு தக்பீர் கட்டுவது எப்படி? விரலாடடுவது எப்படி, ஹலால் சட்டிபிகேட் எதற்கு கொடுப்பது, மஹல்லா வேலையை கஸ்துவை எப்படி செய்வது.... என்பதில் தான் நமது தலைமகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் காலத்தை நகர்த்துகின்றார்கள் என்று நிஸார்டீன் கூறுவது 100 வீதம் உண்மை என்றால் அது பிழையாகாது. பலஸ்தீனத்தில் குண்டு மழை பொழிந்தால் அதற்கு எதிர்ப்பு காட்ட ஒரு உலமாவை வீதியிலோ ஊடகங்களிலோ ஏன் பள்ளி மிம்பரிலாவது காணம். மாறாக பாமர முஸ்லிம்களும் பள்ளிவாசலுக்கு ஜீம்மாவிக்கு மட்டுமே போகின்ற சில முஸ்லிம்களுடன் சில அரசியல் வாதிகள் சுலோகங்கறளுடன் ஜீம்மாவிக்குப்பிறகு தென்படுவர். இந்த சர்வாதிகார யூத அடிமரிக்க நாசகாரிகளுடன் பரம்பரை ஆட்சி செய்யும் சஊதி, குவைட் போன்ற அரபு நாடுகளின் கொடுமையைப் பற்றி அதன் இஸ்லாத்திற்கு முரணான கிலாபத்தை பற்றி இந்த ஏஜன்டுகளுக்கு கவலையில்லை.!!!!

    முஜாஹித் இங்கு என்ன கூறவருகின்றார் என்று புரியவில்லை. அவர் நிஸார்டீனின் கருத்து சரியெங்கிறாறா அல்லது இந்த ஸலபிகள் (குழப்பிகள்) செயவது சரியெங்கிறாரா?

    நிஸார்டீன் அவர்களே! இன்னும் புட்டுவைப்பீர்களாக!

    ReplyDelete
  7. சஊதி சீ.ஐ.ஏ ஏஜன்டான நுபார் பாரூக்கிற்கும், அவரின் திருப்புதல்வனான ஸில்மி யஹ்யாவிற்கும் சீடராய் பணிபுரியும் இசாம் என்பவவர் இட்டுள்ள பின்னூட்டம் தமது இஸ்ரேல் சார்பான நிலைப்பாட்டை மூடி மறைப்பதற்கு தொடுக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டாகும்.

    //அன்று 2005 ல் நடைபெற்ற " இஸ்ஸாமிய கண்ணோட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் " எ‌ன்ற நிகழ்ச்சியில் "
    என்னை கொல்லுங்கள் எ‌ன்று சப்தமிட்டவாறு எழுந்து கூச்சல் போட்ட இவரை வெளியேறும் படி கோர, இவர் மறுத்து
    மேடையை நோக்கி சப்தமிட்டவாறு முண்ணேற முயற்சிக்கையில் வெளியேற்றப்பட்டார். //

    வெளியில் செ‌ன்று பாதாள
    கும்பல்களை கிரணைட் சகிதம் அழைத்து வந்தவர் தான் இந்த உளறல் வாதி. இவர் தான் சுன்னாவுக்கும், பாலஸ்தீன
    மக்களுக்கும் குரல் எ‌ன்ற பெயரில் கூச்சல் போடுகிறார்.//

    இந்தப் போலி குற்றசாட்டையும், அன்றைய கூட்டத்தில் நான் முன்வைத்த கேள்விகளையும்
    இஸ்லாம், நிக்காஹ் என்ற போர்வையில் இந்தக் கும்பல் நிகழ்த்தி வரும் துஷ்பிரயோகங்களையும் இன்னுமொரு பதிவில் தருகின்றேன்.

    இன்ஷா அல்லாஹ்!

    சஊதி, அமெரிக்க உளவு நிறுவனங்களினால் மூளைச் சலவை செய்யப்பட்டு மாதா மாதம் அந்த நிறுவனங்களால் ஊதியம் வழங்கப்பட்டு வளர்க்கப்படும் இந்த ஸலபிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கின்றனர்.

    ReplyDelete
  8. True Sri Lankan என்ற பெயரில் முதுகெழும்பில்லாத ஒரு யூத ஆதரவாளர் புனைப்பெயரில் மறைந்து பலஸ்தீன் மக்களுக்கு எதிராக தனது கருத்துக்களை பின்னூட்டமாக அனுப்பி வருகிறார்.

    தைரியமிருந்தால்இந்த யூத ஆதரவாளர் தனது சொந்தப்பெயரில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

    அநாமதேயமாக வைக்கும் அல்லது தலைப்பிற்கு பொருந்தாத பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.

    ReplyDelete
  9. These Salafies are diverting the Muslims from the original problems faced by the Muslims Community in SL and internationaly, we have a very serious problem in Education, Housing, Cultural identity and many more, these salafies are not even talk about these burning issues here. All they want is to make a SL Muslims another Pakistan, Somaliya and Nigeriya. Very soon these Saudi-Yahudi Agents will caught with Defence authorities in SL.

    ReplyDelete
  10. அபூயஹ்யா இஸாம் பின் அப்துல் காதா் என்ற பெயரில் என்னை நிஸார்தீனின் சகாவாக சித்தரித்து தனது பித்தலாட்டத்துக்கு மெழுகு பூச எத்தனிக்கும் சகோதரரே,உங்களது இந்தப் பெயா் நீங்களே உங்களுக்கு வைத்துக்கொண்ட புதிய பெயர் என்பதையும் அது உங்கள் தாய் தந்தையர் உங்களுக்கு சூட்டிய நாமம் அல்ல என்பதையும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை,நீங்களும் உங்கள் தலைவன் Mental Silmy யும் உருவத்தையும் பெயரையும் மாற்றிக்கொண்டு உலறுவதை எல்லாம் நம்புவதற்கு நான் ஒன்றும் மடையன் அல்ல என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள் நான் ஒரு காலத்தில் பெண்களை வைத்து கள்ளக்கடத்தல் செய்து சம்பாதித்துவிட்டு இன்று பெயரையும் தோற்றத்தையும் மாற்றி மார்க்கம் பேசுபவன் அல்ல.
    நான் ஒரு நாடறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் நான் மாணவப்பருவத்தில் இருந்தே மார்க்கம் பேசி என்னுடைய சக்திக்கு எட்டியவரை அதை போதித்து முடியுமானவரை முறையாக பின்பற்றியும் வருபவன்.அன்று முதல் இன்றுவரை ஹலாலான வழிகளைத்தவிர வேறு எந்த வழியிலும் ஒரு சதமும் உழைக்காதவன்.உங்களைப்போல் வேடம் போற்று பெயரை மாற்றி உலாவரவேண்டும் என்ற தேவை எனக்கில்லை வீணாக என்பெயரை நீங்கள் இந்தக்களத்தில் இழுத்ததால்தான் உங்களைப்பற்றி நானறிந்த சில விடயங்களை எழுத வேண்டி இருந்தது.இத்தோடு நிறுத்திக்கொண்டால் உங்களுக்கு நல்லது.இல்லையேல் உங்களைப்பற்றியும் உங்கள் தலைவர் Mental Silmy பற்றியும் இன்னும் பல வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்.


    - Mohamed Naushad Mohideen
    1/4/2010

    ReplyDelete
  11. "Thadi Eduthavan Ellam Vettaikkaran".This is the situation of Muslims in Sri Lanka.May Allah forgive his sins and grant Jannatul Firdous to my dear friend Razeen.My deepest condolences to his family and friends.
    Mohamed Zarook

    ReplyDelete
  12. //ஒரு காலத்தில் பெண்களை வைத்து கள்ளக்கடத்தல் செய்து சம்பாதித்துவிட்டு இன்று பெயரையும் தோற்றத்தையும் மாற்றி மார்க்கம் பேசுபவன் அல்ல.//

    சகோதரர் நவ்சாத் மொஹிதீன்! சரியாக சொன்னீர்கள்.

    நீங்கள் சொல்வது போல் சீ.ஐ.ஏ யின் சீடன் ஸில்மியும், ஸில்மியின் சீடன் இசாமும் இஸ்லாத்தின் சட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பெண் இனத்தை கொடுமைப்படுத்தும் போக்கிரிகள்.

    ஒருவர் பெண்களைப் பயன்படுத்தி கடத்தல் புரியும் (பங்கர்) தங்கக் கடத்தல் காரன், மற்றவர் ஆறு திருமணம் புரிந்து
    தனது எஜமானர்களான காமக் கூத்தாடி சஊதி அரபுகளின் வழியைப் பின்பற்றும் மன்மதக் குஞ்சுதான் இந்த மென்டல் சில்மி.

    அவருக்கு சீடராக இருப்பதில் இந்த இசாம் பெருமைப்படுகின்றாராம். தனது கடத்தல் வியாபாரத்திற்கு பெண் பங்கர் கள் அதிகம் கிடைக்கிறது என்ற பெருமை இவருக்கு.


    நீர்கொழும்பு கொச்சிக்கடையில் ஒன்பது வயது சிறுமியை மணம்முடித்து அதற்கு சுன்னா சாயம் பூசும் இந்த சில்மி சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறையில் தள்ளப்பட வேண்டியவர்.

    சாயி பாபாவிற்கு இருக்கும் பக்த கோடிகளுக்கும், பாலியல் லீலைகள் புரியும் நித்தியானந்தா சுவாமிக்கு இருக்கும் பக்த கோடிகளுக்கும், மென்டல் சில்மியை ஏற்றுக்கொண்டு சுன்னா என்ற போர்வையில் "சில்மி"சத்தில் வாழும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

    ReplyDelete
  13. ஒன்பது வயது சிறுமியை மணமுடித்த ஹிஸ்டீரியா நோயாளி சில்மியின் சிந்தனைக்கு..

    இஸ்மாயில் ஸலபி இஸ்லாம் கல்வி. காம் ல் எழுதிய ஆக்கம்.
    பார்க்க http://www.islamkalvi.com/portal/?p=4592&utm_source=feedburner&utm_medium=email

    உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.
    சிறுவர் துஷ்பிரயோகம்:
    சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

    ReplyDelete
  14. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இஸ்மாயில் ஸலபியின் முழு ஆக்கத்தையும்
    www.islamkalvi.com/portal/?p=4592
    பார்வையிட முடியும்.

    ReplyDelete
  15. Salam.
    Oruwan muhmeena allazu yahueedi agenda enru awanukkum andha allah vukkum than theriyum. Maraiwana arivu manizanuukku illai. Azu allahvin panbu or shiphaththu.Anaal indha azeezukku izu theriyatha... Allah win panbudan wilaiyaduhirara.. Nau zi billah.. allah mannikkawendum.Islaththai wilangi eluzum penaihal eluzattum.
    Fareen

    ReplyDelete
  16. Pilai seythawan thirundha mudiyatha..Unghal aharathiyil illaiya..?

    ReplyDelete
  17. Mr.Abooyahya! It's a time to fight against zionism and the agents of capitalism in order to prtoect this mankind. The arab world has signed a security agreement with the Britsh at the time of the collapse of the Turkey empire. Later they joint hands with US. King Abdulla may be a royal friend of Joerge W Bush and the other world controllers. I dont think it is the time to contradict with petty sharia issues at the cost of Islamic brotherhood.People like you should divert your attention to identify and confront against the zionist lobby rather than criticizing your Islamic brothers. The so called Islam invented by Muhammad bin Abdul Wahhab and imposed by the soldiers of Ibn Saud cannot be the real purified form of Islam. It'll never rise as the dawn of the world. Its only a day dream. Any global religion shall not be against the reality or the nature of the human being. Prophet(S.A.W) did not ignore the arab tradition and culture when he propagated his mission.Because of that he succeeded.Fighting at the funeral house for the sunna would never satisfy either Allah or prophet. Bear this in mind. What is the reality behind the concept of "TRUE" Islam. Islam should accomodate all culture and customs regulating with spiritual norms. Muslim Umma has wasted all its time for unncessary problems for centuries. Still there are few blinking hopes. I humbly request all our brothers try to understand the global political imbalance. How certain Islamic countries are isolated from the global arena with the aids of other brother or neighbour countries. Why Us tries to associate with the arab world against our other Islamic countries? Why the west tries to induce so called Islamic terrorism in the world in order to damage the holy name of Islam? Try to find the answers. Then you may give up criticizing your brothers for those cheap allegations.

    ReplyDelete
  18. So whats the correct age of AISHA Ralialahu anha when prophet muhammed married her

    Note another thing that

    If we prove aisha RAA is more than 16 or 17 then that falsifies many hadeeth in bukaari and muslim !!!

    ReplyDelete
  19. மிக அற்புதமான ஒரு தளம்
    ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய அறிவுபூர்வமான தகவல்கள் .
    சலபிகள் வளிதவரியவர்கள் என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி . நல்ல வேலை எனது மையம் இந்த அநியாயத்தில் இருந்து பாதுகாக்கப் பட்டதாக நம்புகிறேன் .
    சாப்பாடு விஷயத்தில் எங்களை ஹலால் முறையில் வளிநடாதும் இலங்கை ஜமியதுளுலமாவுக்கு நீங்கள் சுட்டிக்காட்டும் சலபிகளின் தவறுகள் புரிவதில்லையா? பணத்தை குடுத்து அவர்களையும் யூத அரபிகள் விலைக்கு வாங்கிவிட்டார்கள? அறியத்தாருங்கள். நன்றி

    இப்படிக்கு முப்தி யூசுப் மொவ்லவி

    ReplyDelete
  20. மிக அற்புதமான ஒரு தளம்
    ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய அறிவுபூர்வமான தகவல்கள் .
    சலபிகள் வளிதவரியவர்கள் என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி . நல்ல வேலை எனது மையம் இந்த அநியாயத்தில் இருந்து பாதுகாக்கப் பட்டதாக நம்புகிறேன் .
    சாப்பாடு விஷயத்தில் எங்களை ஹலால் முறையில் வளிநடாதும் இலங்கை ஜமியதுளுலமாவுக்கு நீங்கள் சுட்டிக்காட்டும் சலபிகளின் தவறுகள் புரிவதில்லையா? பணத்தை குடுத்து அவர்களையும் யூத அரபிகள் விலைக்கு வாங்கிவிட்டார்கள? அறியத்தாருங்கள். நன்றி

    இப்படிக்கு முப்தி யூசுப் மொவ்லவி

    ReplyDelete
  21. As a one of the responsible Muslim service personal in Sri Lanka, I would like to input my comments for the interest of Muslims in Sri Lanka.

    I have been frequently monitoring couple of Islamic sites to understand some critical subjects among Muslims in Sri Lanka. But I never came a cross such a site like Badrakalam. Its providing a wide information and preventative measure to safe guard the Muslim community in Sri Lanka from Arab sponsored or funded movements’ activities in Sri Lanka. In this comments I am not going to analyze or fact finding the articles constantly appeared in this site.

    The all Communities in Sri Lanka are living very peacefully and without any fear after defeating the LTTE terrorism in this land, the whole world knows the secret of this Military victory. This victory gained without any ‘super powers’ help including USA and other developed countries.

    The well coordinated and strategic plans of the present government of Sri Lanka pledged to develop the country without any conditional foreign aid and pressures from any country. Some western and European countries are aiding or supporting to destabilize the peaceful environment in Sri Lanka.

    In our intelligence confirmed some Islamic organizations in Sri Lanka receiving millions of funds and guidance from Arab Countries since years in the pre text of propagate of Islamic fundamental teaching and other ritual including Kurban (Animal sacrifice) during the month of Haj. In this regard certain media has given high priority for their journal based on the senior commander in the armed forces in Sri Lanka.

    After the heartbreaking incidents in Beruwala last year, the intelligence sharpening the findings in these Islamic organizations with the help of some of their members. Some organizations are very close surveillance of our unit. I am unable to reveal more information in this regard.

    My kind advice to Muslims in Sri Lanka particularly those who living in Colombo and suburbs, please refrain from these Arab funding organizations even a prominent Moulavies are representing these organizations. Our main priorities are safe guard the Muslim communities as well as the security and stability of Sri Lanka.

    May God bless and protect the mother Sri Lanka and their people.

    ReplyDelete
  22. yusuf mufthi
    i need to know from you
    1. what is aqeedha?
    2. what is your thought about allah? please reply

    ReplyDelete
  23. razeen mastarda janaza muraya awar irukum poda sonnar movlave silmy avargalin jammat idam kodukum pady idan murael awargalay aleta janaza kodka pattada adil pilay irandal allah pariyawan idael sambandam illada ningal yahudy anr in the janazavai kura tagde illadwar asraf

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அழைக்கும்



    நிசார் அவர்களே நான் தற்சமயம் தான் உங்கள் ப்ளாக் பார்கிறேன் .நீங்கள் என்ன நினைகிறீர்களோ அது தான் தமிழகத்திலும் நடக்கிறது .அல்லாஹ் இதற்கு எல்லாம் கண்டிப்பாக பதில் அளிப்பன். தௌஹீத் என்ற பெயரில் பைதியகரதனமாக இங்கயும் சில முட்டாள்கள் யூத கைகூலிகளாக அலைந்து கொண்டுதான் இருகிறார்கள் .உண்மையாகவே உங்கள் ப்ளாக் நான் அறிந்திடாத தகவல்களை கொண்டுள்ளது.அல்லாஹ் உங்கள் பணிக்கு சிறந்த கூலியை தருவானாக.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...