Friday 5 October 2012

வீடியோ - இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து தீமூட்டிகொண்ட இளைஞன்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில்   இந்தியாவிற்கு விஜயம் செய்ததை  எதிர்த்து தமிழ்நாடு சேலத்தை  சேர்ந்த விஜயராஜ் என்ற இளைஞன் தனக்குத்தானே தீமூட்டி கொண்டான் .


வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்

வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி
கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்



அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான விளம்பரம் !


அமெரிக்காவின் நியுயோர்க் நகரின்  நிலக் கீழ் சுரங்கப்பாதைகளின் பயண தரிப்பு நிலையங்களில் இஸ்லாத்திற்கெதிரான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

American Freedom Defense Initiative (AFDI)  எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த விளம்பரங்கைளை அமெரிக்கா நீதித்துறை  கருத்துச் சுதந்திரமாக கணிக்கிறது.

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த விளம்பரங்களை அடுத்து அதே இடங்களில்  Rabbis for Human Rights – North America and the Sojourners Christian  மற்றும் united Methodist Women     என்ற அமைப்புகளால்  முஸ்லிம்களை ஆதரித்து அதற்க்கு பக்கத்தில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.


American Freedom Defense Initiative (AFDI)  எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பின  தலைவியாக தன்னை அறிமுகப்படுத்தும் Pamela Geller NBC செய்திச்சேவைக்கு கருத்துத் தெ ரிவித்திருக்கின்றார் . அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது 


Wednesday 3 October 2012

USAID சதிவலைகளின் சொந்தக்காரன்


லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA அமைப்பு , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் போர்வையில்; செயற்படும் அமெரிக்க உளவு அமைப்பான  USAID(United States Agency for International Development)என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.



அமரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயற்படாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும்  பலவீனப்படுத்தி அந்தந்த நாடுகளில் சிவில் சமூகங்களை மோதவிட்டு பிரச்சினைகளையும், உள்நாட்டுப்போர்களையும் உருவாக்கி பின்னர் அரசியல் ரீதியாக தனது நேரடியான தலையீடுகளை ஏற்படுத்தும் சூழலை USAID உருவாக்குவதாக அதன் மீது பலத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.

USAID இன் நயவஞ்சகத்தனமான மற்றும் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கரான ஜோன் பெர்கின்ஸ் தனது confessions of an economic hit-man என்ற நூலில் ஆதாரத்தோடு ஏழுதியுள்ளார்.

தன்னோடு இசைந்து போகும் மத மற்றும் ஆரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக பணத்தையும், பெண்களையும் USAID வழங்கி தனது வலையில் சிக்கவைப்பதாக  ஜோன் பெர்கின் USAID மீது தனது நூலில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பூகோள உருண்டையில் விரிக்கப்பட்டுள்ள சதிவலைகளின் சொந்தக்காரர்கள் USAID போன்ற அமெரிக்க உளவு அமைப்புகளாக செயற்படும் இத்தகைய நிறுவனங்கள்தான்.

USAID அமைப்பு அமெரிக்க ஆதிக்கத்தை உலகளவில் நிலைநிறுத்தும் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலுக்காகவே செயற்பட்டு வருகிறது.

மோசடி மிகுந்த இந்த நிறுவனத்தை தமது  உறுப்பு நாடுகளில் அனுமதிக்க  வேண்டாம்  என இந்த ALBA அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நிக்காரகுவா, கியூபா, போலிவியா, எக்குவடோர்,  வெனிசூலா,  டொமினிக்கா போன்ற  நாடுகள்  இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

வீடியோ - ஜிஹாத் என்ற போர்வையில் லிபியாவை விழுங்கிய கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸின் வாக்குமூலம்


Friday 28 September 2012

அமெரிக்க தூதரகத்தைத் தாக்கியவர்கள் சடலமாக மீட்பு?


லிபிய பெங்காஸி நகரிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தைத் தாக்கி தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் உட்பட மூன்று அமெரிக்க உளவhளிகளை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் அன்சாருல் ஷரீஆ ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஆறு பேரின் சடலங்கள் பெங்காஸியின் வயல் வெளியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதுவராலய தாக்குதலைக் கண்டித்து மற்றுமொரு ஆயுதக்குழு அன்சாருல் ஷரீஆ காரியாலயத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்தியது.

இரவு முழுவதுமாக இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அன்சாருல் ஷரீஆ அலுவலகம் முற்றாக சேதமடைந்து அதிலிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன..

மற்றுமொரு ஆயுதக் குழுவின் எதிர்ப்பைத் தொடர்ந்து துற்போது அன்சார் அல் ஷரீஆ அமைப்பினர் தலைமறைவாகி இருப்பதாக அறிய வருகிறது.

கத்தாபியியை வீழ்த்துவதற்காக மேற்குலக நாடுகளும் அவர்களின் ஏஜன்டுகளாக செயற்படும் அரபு நாடுகளும் லிபிய மக்களை ஆயுதமயப்படுத்தின.

சுமார் 40 மேற்பட்ட ஆயுதக் குழுக்களுக்கு தாராளமாக ஆயுத்ங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இந்த அத்தனைக் குழுக்களிடையேயும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருப்பதாகவும், அவற்றை மீளப்பெறுவதற்கான ஓர் ஆய்வை மேற்கொள்ளவே  அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சீஐஏ உளவாளிகள் மூவர் பெங்காஸி வந்ததாகவும் இந்த தூதுவராலய தாக்குதலில் கிறிஸடோபர் ஸ்டீவனோடு அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

கத்தாபியை கொலை செய்தவர் கடத்தப்பட்டு படுகொலை?


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் லிபியத் தலைவர் கத்தாபியைப் பிடித்து கொலை செய்து புகழ்பெற்ற ஒம்ரான் ஷhபான் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அமெரிக்க வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமாகியுள்ளார்.


1992ம் ஆண்டில் மிஸ்ராட்டா நகரில் பிறந்த ஒம்ரான் ஷhபான் மிஸ்ராடா விடுதலை அணியில் முக்கிய நபராக கருதப்பட்டவர். திரிப்போலி மற்றும் மிஸ்ராட்டா நகரங்களை லிபிய இராணுவத்திடம் இருந்து மீடபதற்காக  போராடியவர்களில் முக்கியமானவராக ஒம்ரான் கருதப்படுகிறார்.

கத்தாபி ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட ஒம்ரான் 57 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு பிரான்ஸிலுள்ள அமெரிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுpகிச்சை பலனளிக்காமல் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஓம்ரானோடு சேர்த்து இன்னும் பலர் கடத்தப்பட்டடிருப்பதாகவும் அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளிவராமல் இருப்பது  பலரை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...