Saturday 19 February 2011

எழுச்சியில் பஹ்ரைன் - அதிர்ச்சியில் அமெரிக்காவும் அரபுநாடுகளும்


எகிப்தின் எழுச்சியை வரவேற்று அந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பஹ்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. பஹ்ரைனின் எல்லை நாடான சவுதி நாட்டின் மன்னன் அப்துல்லாஹ்வின் வயிற்றிலும் இது புளியைக் கரைத்திருக்கிறது.

புரட்சி தனது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் சவுதி மன்னர் குடும்பங்கள் நடுநடுங்கிப்போயுள்ளன.

Thursday 17 February 2011

பஹ்ரைன் எழுச்சி- நான்கு பேர் மரணம் 60 பேரைக் காணவில்லை!


பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பேர்ல் சதுக்கத்தில் அரசாங்கத்திற்கெதிராக திரண்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படை தாக்கியதில் 4 பேர் மரணமாகியுள்ளதாகவும், 60 பேர் காணமாகியுள்ளதாகவும் பிரஸ் ரிவி இணையதளம் தெரிவிக்கிறது.

நகரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ கவச வாகனங்கள் மக்கள் பேர்ல் சதுக்கத்தில் ஒன்று கூடுவதை தடுத்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் அந்நாட்டின் அந்நாட்டு மன்னரின் உறவினரான கலீபா பின் ஸல்மான் அல் கலீபாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டுமக்கள் கோரி வருகின்றனர்.

எகிப்தின் முபாரக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, பஹ்ரைன் மக்கள் கடந்த திங்கட் கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கடந்த 200 வருடங்களாக பஹ்ரைனை ஆளும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். மன்னர் ஆட்சியை தமது நாட்டிலிருந்து துடைத்தெறிநந்து விட்டு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற அரசு ஒன்று உருவாக வேண்டுமென்று அவர்கள் கோரி வருகின்றனர்.

25 அமைச்சர்களைக் கொண்ட பஹ்ரைன் அரச சபையில் 80 வீதமானவர்கள் அரச குடும்பத்தினால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 20 வீதமானவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா


இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான நண்பர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா பற்றியதொரு ஆக்கம் கிடைக்கப்பெற்றது. அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 01

அறிமுகம்
 இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம். 

லிபியா - நாற்பதாண்டு ஆட்சியும் நடுங்கும் கதாபியும்


தூனீசியா, எகிப்து போராட்ட வரிசையில் லிபியாவும் இணைந்து கொள்கிறது.

நாற்பதாண்டுகளாக லிபிபாவை ஆண்டு வரும் அந்நாட்டின் ஜனாதிபதி கதாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபிய மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸியில் மக்கள் அணிதிரண்டு இருக்கின்றார்கள்.

மனித உரிமை சட்டத்தரணி ஒருவரின் கைதையும், கதாபியின் ஊழல், மோசடி மிகுந்த ஜனநாயகமில்லாத ஆட்சியையும் எதிர்த்து மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு பெங்காஸி நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் சண்டை மூண்டது.

Monday 14 February 2011

காலித் சயீத்! புரட்சிக்காக புதைந்து போன ஒரு விதை!


காலித் சயீத்!

எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.

கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே'  இலிருந்து கைது செய்தனர்.

அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.

அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக  இழுத்துச் சென்று,  வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.

இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.

காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?


பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.

அவன் செய்த குற்றம் அதுதான்.

இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.

கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.

எகிப்து, தூனிசியா - எனது ஹைக்கூ கவிதை




எழுந்திடுங்கள்
விழுந்து விடும்
எதேச்சதிகாரம்!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...