Wednesday, 20 June 2018

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்திருக்கினறனர்.
எந்த சிறுபான்மை இனங்களுடனும் தொடர்பு படாத குறித்த பிரச்சினை நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை மையமாக வைத்து உருவானது.
ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விட்டது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்த வழக்கிலேயே ஞானசார தேரருக்கு இந்த சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த பேரினவாத சக்திகள் நாட்டைக் காப்பதற்கு குரல் கொடுத்த ஒரு பௌத்த பிக்குவை அநியாயமாக சிறை வைத்திருப்பது போன்றதொரு பிம்பத்தை கட்டமைத்து வருவதுடன். கைதிகள் அணியும் ஆடையை பௌத்த பிக்குகளுக்கு அணிவதற்கு கொடுக்கக் கூடாது என்றும் கோஷமிட்டு வருகின்றன.

Thursday, 12 April 2018

யதார்த்தம் றோனியோ கவிதை இதழ்


1984ம் ஆண்டு என்னால் 'றோனியோ' அச்சில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இதழே யதார்த்தம். 

இன்று போல் கணனி வசதிகள் இல்லாத காலத்தில் இது வெளிவந்தது.

கைகளால் எழுதப்பட்ட கோட்டோவியங்களை மட்டுமே றோனியோவில் பதிப்பிக்க முடியுமான காலத்தில் யதார்த்தம் வித்தியாசமான முறையில் பதிப்பிக்கப்பட்டது. 

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்று வெளிவரவிருக்கிறது. ராவய வாராந்த பத்திரிகையில் கடமையாற்றிய சிறந்த ஐந்து ஊடகவியலாளர்கள்; அடங்கிய ஆசிரிய பீடத்தைக் கொண்டுள்ள இந்த வாராந்த பத்திரிகை எதிர்வரும் 29ம் திகதி முதல் வெளிவரவுள்ளது.
'அனித்தா' பத்திரிகையின் பிரதம ஆசிரியராக லசன்த றுகுணகே பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட இவரது நூல் மிகவும் பிரசித்தமானது. லசன்த றுகுணகே துப்பறிந்து அரசியல் கட்டுரைகளை வழங்குவதில் மிகவும் திறமையானவர். பல விருதுகளை பெற்றவர். இவரோடு ராவய பத்திரிகையில் நீண்ட காலம் சேவையாற்றிய கே.டப்லியூ. ஜனரஞ்சன, கே.சன்ஜீவ, தரிந்து உடுவரகெதர, ரேகா நிலுக்ஷி ஹேரத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
'அனித்தா' பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, திரு காமினி வியன்கொட, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, வை. ரஞ்சித் செனரத் பத்திரன ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...