Showing posts with label muslims. Show all posts
Showing posts with label muslims. Show all posts

Friday 20 April 2012

காணொளி - இனவாத பிக்குகளின் வெறியாட்டம்! இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் தகர்ப்பு!




இலங்கையில் தம்புள்ளையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலை உடைக்கக் கோரி பௌத்த பிக்குகள் ஆரம்பித்த ஆா்ப்பாட்டம் கூர்மையடைந்து வரும் இலங்கையின் இனவாத அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அரசாங்கம் புண்ணிய பூமியாய் பிரகடனப்படுத்தியிருக்கும் தம்புள்ளைப் போன்ற பிரதேசங்களில் மாற்று மதத்தினரின் எவ்வித வணக்கஸ்தலங்களோ அடையாளங்களோ இருக்கக் கூடாதென பௌத்த தீவிரவாதிகள் அண்மைக்காலமாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த இனவாத செயற்பாடு இதுவரை அனுராதபுரத்திலுள்ள ஒரு தர்காவையும், தம்புள்ளையிலுள்ள ஒரு பள்ளிவாசலையும் பதம் பார்த்திருக்கிறது.

நாளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இந்த இனவாத நோய் பரவக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

அரசாங்கமும் இனவாத சக்திகளின் இந்த மோசமான நிலைப்பாட்டை  ஆதரிக்கும் நிலையில் இருப்பது, இந்த நாட்டின் எதிர்காலத்தை மீண்டுமொரு முறை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பதில் எவ்வித சந்ததேகமுமில்லை.

அரசியல் ரீதியாக இடம்பெறும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை தமது இராணுவ பொலிஸ் படைகளை வைத்து கடுமையாக சனநாயக உரிமைகளை மீறி கண்ணிர்ப்புகை,  குண்டாந்தடி பிரயோகம் போன்றவற்றால் அடக்கும் அரசாங்கம் இந்த தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் நேர்மாற்றமாக நடந்துக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தம்புள்ளையில் ஏனைய மத வணக்கத்தலங்களை இல்லாதொழித்து புண்ணிய பூமியாக மாற்ற திட்டமிடும் அரசும் இனவாத சக்திகளும் கங்கனம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் இவ்வேளையில்  தம்புள்ளையில் இவர்கள் கூறுகின்ற புண்ணிய பூமியில் இருக்கின்ற உல்லாச பிரயாண விடுதிகளில் இடம்பெறும் அனாச்சாரங்களை இந்த பௌத்த தீவிரவாதிகள் அங்கீகரித்தே இருக்கின்றனா்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சக்திகளை பயங்கரவாதம் என வர்ணித்து அவர்களை அழித்து ஒழிக்கும் அரசாங்கம் இந்த பௌத்த பிக்குகள் சட்டத்தை தம் கையிலெடுத்து பள்ளிவாசலை உடைத்த போது அதற்கு அவகாசம் அளித்திருக்கிறது.

Dambulla, Mosque, Sri Lanka

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...