Showing posts with label maligawatta burial ground. Show all posts
Showing posts with label maligawatta burial ground. Show all posts

Sunday 16 October 2016

துருக்கி உதுமானிய பேரரசின் முதலாவது இலங்கை பிரதிநிதியாக இருந்த ஹஸன் லெப்பை அவ்து கண்டு மரிக்கார் எப்பன்தி

 ஜனாஸா நல்லடக்கம் ஒன்றுக்கு சென்றிருந்த போது மாளிகாவத்தை மையவாடியில் ஒரு பழைய கல்லறை என் கண்ணில் பட்டது.
அதில் பதிக்கப்பட்டிருந்த தகவலில், துருக்கி உதுமானிய பேரரசின் The Imperial Ottoman Empire முதலாவது இலங்கை பிரதிநிதியாக இருந்த ஹஸன் லெப்பை அவ்து கண்டு மரிக்கார் எப்பன்தி ( Hassen Lebbe Avdu Candu Marikar Effendi ) என்பவரது கல்லறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
1890ம் ஆண்டு மரணித்த இவர் மாளிகாவத்தை மையவாடியின் முதலாவது நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் பற்றி இணைய தளத்தில் தேடிய போது ஒரே ஒரு இணைய தளம் கிடைக்கப்பெற்றது.
அதில் கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அருகில் இருந்த மையவாடியை சுகாதார சட்டத்தின் Sanitary Ordinance கீழ் அகற்ற வேண்டியிருந்ததால்
அதற்கு ஈடாக மாளிகாவத்தையில் 37 எக்கர் காணியை வாங்குவதற்கு நிதியை திரட்டி இவர் வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவரது பெயரோடு சேர்ந்துள்ள எப்பன்தி Effendi என்ற சொல் கௌரவ என்ற அர்த்தத்தில் துருக்கி உதுமானிய பேரரசால் வழங்கப்பட்டதாகும்.
ஆங்கிலததில் 'சேர் ' என்ற பதத்தின் அர்த்தத்தை எப்பன்தி Effendi என்ற பதம் குறிக்கிறது

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...