Tuesday 24 June 2014

மஹிந்த பிரஸ்தாபிக்கும் ”மகா லொக்கு ஹா்த்தாலய”


அளுத்கமவில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறு சம்பவமாம், இப்போது அதுவும் தீா்க்கப்பட்டு விட்டதாம். வடக்கில் புலிகளின் பிரச்சினை இருக்கும் போது யாரும் இப்படி ஹா்ததால் செய்யவில்லையாம்.

நேற்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் எண்ணெய் களஞ்சிய தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளாா்.

இந்த உரையை அஸ்வா் பேசியிருந்தால் முஸ்லிம்கள் ஆத்திரமோ, ஆச்சாியமோ படமாட்டாா்கள். ஏனென்றால் வாயைத் திறக்கும் போது மூளை ”ஓப்” ஆகும் நோய் அஸ்வருக்கு மட்டும் இருப்பதை முஸ்லிம்கள் நன்றாக அறிந்திருக்கின்றாா்கள்.

ஆனால் எங்கள் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இப்படி பேசியிருப்பது வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.

ஏழுபேரை கொலை செய்து, நூற்றுக்கும் அதிகமானோரை காயப்படுத்தி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய இந்த இனக்கலவரத்தை அதை செயற்படுத்திய இந்த சிங்கள இனவாதிகளை ஜனாதிபதி கடிந்து கொள்ளாமல், எச்சரிக்காமல் முஸ்லிம்களையே மறைமுகமாக தாக்குகின்ற பணியை செய்திருக்கின்றாா்.

அளுத்கம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறு சம்பவமே என்று ஜனாதிபதி வா்ணித்துள்ளாா்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சிலிருந்து முஸ்லிம்கள் புாிந்துக் கொள்ள வேண்டிய விடயம் என்ன?

அளுத்கமவில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவம், இப்படி கொலைகளையும், கொள்ளைகளையும் கோடிக்ணக்கான இழப்புகளையும் கொடுத்திருக்கின்றன என்றால், ஒரு பொிய ”சம்பவம்” இடம்பெற்றால் முஸ்லிம்களின் நிலையை எவ்வாறு இருக்கும்?

சிங்கள, முஸ்லிம், தமிழர் என அனைவரையும் தீவரவாதிகள் கொன்றளித்தார்கள் என்றும் காத்தான்குடியில் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது எவரும் ஆர்பாட்டம் செய்யவில்லையென்றும் ஜனாதிபதி சொல்லியிருக்கின்றாா்.

இது முற்றிலும் பொய்யான ஒரு குற்றச்சாட்டாகும். இந்நாட்டில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராடியிருக்கின்றாா்கள்.

புலிகள் இரண்டு மணித்தியாலங்கள் அவகாசம் கொடுத்து வடமாகாண முஸ்லிம்களை வெளியேற சொன்னபோது கையில் கிடைக்கும் கணக்கை எடுத்து கொண்டு வடக்கில் இருந்து விரட்டப்பட்ட போது யாரும் ஆர்பாட்டம் செய்யவுமில்லை ஹர்த்தால் பண்ணவுமில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பது ஒரு வேடிக்கையான விடயமாகும்.

அந்தக்காலத்தில் இடம் பெற்ற கறுப்பு வெள்ளிக்கிழமை ஹா்த்தால் மிகவும் பிரபலமானது. இது ஜனாதிபதிக்கு தொியாமல் இருக்க நியாயமில்லை. ஐ.தே.க ஆடசிக்காலத்தில் அன்றைய எதிா்க்கட்சியில் இருந்த ஸ்ரீ சு கட்சி கூட செயலிழந்து இருந்த தருணத்தில் முஸ்லிம்கள் போராடியிருக்கின்றாா்கள.

ஏதோ புலிகளை அழித்ததன் பின்னா்தான் முஸ்லிம்களுக்கு தைாியம் வந்திருக்கிறது என்ற தோரணையில் ஜனாதிபதி உரையாற்றியிருக்கின்றாா்.

புலியோ, சிங்கமோ முஸ்லிம்களின் உாிமைகள் விடயத்தில் எங்களுக்கு எதுவும் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. உாிமைகள் விடயத்தில் இந்த முஸ்லிம் சமூகம் எதற்கும் அச்சப்பட்டதும் இல்லை. புலிகளைக கண்டு அச்சத்தில் முஸ்லிம்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடந்ததும் இல்லை.

முஸ்லிம் பாடசாலை மாணவிகளின் ஹிஜாப் சீருடை தொடா்பாக இனவாத ரீதியில் ராஜபக்ஸ அரசின் அமைச்சராக இருக்கின்ற சம்பிக ரணவக்க கருத்து தொிவித்த போது அதனை எதிா்த்து இதே போன்றதொரு ஹா்தாலையும் அன்று ஆா்ப்பாட்டத்தையும் MRO ஒழுங்கு செய்தது.
பாா்க்க - http://lankaenews.com/English/news.php?id=6665

07.11. 2008 ம் ஆண்டு இது இடம்பெற்றது. மிக வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த ஹா்த்தாலின் பின்னா் 8ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் MRO அமைப்பிற்கும் ஜனாதிபதியின் சகோதரா் பஸில் ராஜபக்ஸ அவா்களுக்குமிடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்தரையாடலில் அப்போதைய பொலிஸ் மாஅதிபா், அமைச்சா் அதாவுத செனவிரத்ன மற்றும் பொலிஸ் உயரதிகாாிகளும் கலந்து கொண்டனா். MRO அமைப்பு பற்றியும் அதன் போராட்டங்களிலுள்ள நியாயங்கள் பற்றியும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஹா்த்தாலின் மூலம் அரசாங்கம் அசௌகாியங்களை எதிா்நோக்கியதாகவும், இந்திய, அமொிக்க தூதுவராலயங்கள் இதுபற்றி அவா்களிடம் வினவியதாகவம் பஸில் ராஜபக்ஸ எங்களிடம் கூறினாா். இனிமேல் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தம்மோடு நேரடியாக தொடா்பு கொண்டு கதைக்கும் படியும் வேண்டினாா்.

இன்று முஸ்லிம்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிட்டு ஏதோ புலிகள் அழிந்ததன் பின்னா் தான் முஸ்லிம்களுக்கு உயிா் வந்திருப்பதாக ஜனாதிபதியும், பொலிஸ் தரப்பினரும் நினைப்பது தவறானதாகும்.

இந்த வரலாற்று நிகழ்வுகளை மறந்த விட்டு பொலிஸ் மாஅதிபா் இளங்ககோன் கூட MRO என்ற ஓா் அமைப்பு கிடையாது என்று ஊடகங்களில் கூறியிருக்கின்றாா். இல்லாத அமைப்போடு 2008ல் எப்படி பஸில் ராஜபக்ஸ எப்படி பேச்சு வாா்த்தை நடாத்தினாா்?

உங்களுக்கு எவ்வளவு காலம் இந்த உண்மைகளை மறைக்க முடியும்? இது ஒரு சிறிய சம்பவமாக அளுத்கம பேருவலை சம்பவங்களை குறிப்பிடும் நீங்கள், இந்நாட்டு அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதை ஏன் மறந்து போகின்றீா்கள்?

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...