Saturday, 9 April 2011

அரபு மக்கள் எழுச்சியும் அமோக ஆயுத விற்பனையும்!


அரபு நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, அந்த நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Commons Committees on Arms Export Controls  அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பிரிததானிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறிய ரக ஆயுதங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றை லிபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் விநியோகிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டடிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு பிரித்தானியா அரசு ஆயதங்களை ஏற்றுமதி செய்து உதவி புரிவதை  Commons Committees on Arms Export Controls    அமைப்பின் தலைவர் ஸர் ஜோன் ஸ்டன்லி வன்மையாக கண்டித்துள்ளார்.


அரபு நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் பிரித்தானியா, அதன் ஆயுதத் தொழில்துறையில் 3 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.  35 பில்லியன் பவுன்களை வருடமொன்றுக்கு இலாபமாக பெறுகிறது.

No comments:

Post a Comment

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...