Saturday 15 May 2010

இஸ்ரேலின் பாதையில்..... இலங்கை?

இஸ்ரேலின் பாதையில் ... இலங்கை?


பலஸ்தீன் மேற்குக்கரையில் சட்டவிரோதக் குடியிருப்புகள் என்ற போர்வையில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பலஸ்தீனில்


அண்மையில் இலங்கையில் அரங்கேறிவரும் அரச அட்டசாகங்களைப் பார்க்கும் போது மற்றுமொரு இஸ்ரேலாக இது மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு மிவ்ஸ் வீதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திலிருந்து பலாத்கதரமாக பாதுகாப்பு தரப்பினரால் அடித்து உதைத்து வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டு அவர்களின் கண் முன்னாலேயே அவர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.

இலங்கையில்




பாதுகாப்பு,  பொலிஸ் படைகளின் உதவியினால் நடாத்தப் பட்ட இந்த வேட்டையை எந்த ஊடகமும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தேர்தல்களின் போது கொழும்பு முஸ்லிம்கள் ஆளும் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது வாக்குகளை அளித்து வந்திருக்கின்றனர். தமது தேர்தல் பிரசார காலங்களில் ஆளும் தரப்பினரும், அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும்  முஸ்லிம்களும் இதை அடிக்கடி பல இடங்களில் குற்றச்சாட்டாய் முன் வைத்தும் இருந்தனர்.

இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.


அண்மைய இலங்கையின் இந்த நகர்விற்கு பின்னணியில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் செயற்படுகிறதா  என்ற அச்சமும்  ஏற்பட்டு வருகிறது.

இதற்குச் சான்றாக கடந்த 12ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டின் 62வது சுதந்திர தின விழாவை குறிப்பிடலாம். காலி முகத்திடலிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இந்த விழா இடம்பெற்றது.  இஸ்ரேல் நாடு பகிரங்கமாக இலங்கையில் கொண்டாடிய ஒரு விழாவாக இதனை சுட்டிக்காட்ட முடியும்.
2010 மே மாதம் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இஸ்ரேலிய சுதந்திர தின விழாவிற்காக  மேற்படி ஹோட்டல் வாசலில் ஏற்றப்பட்டிருந்த இஸ்ரேலிய தேசிய கொடி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இந்த இஸ்ரேலிய சுதந்திர விழா இலங்கையில் அவரது ஜனாதிபதி அலுவலகத்திற்கு மிக அண்மையில் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

காரணம் பலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்று ஜனாதிபதி தன்னை அடிக்கடி சொல்லி வருபவர்.

பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ  இலங்கை பலஸ்தீன் நட்புறவு கமிட்டியில் பல ஆண்டுகளாக தலைமை வகித்தவர். இத்தகைய பின்னணிகளுக்கு மத்தியில் மஹிந்த அரசாங்கத்தின் அண்மைய நகர்வுகள் பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.



மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் பல இலங்கைக்கு உதவி வருகின்றன. குறிப்பாக ஈரான், லிபியா, சஊதி அரேபியா போன்ற நாடுகள் இவற்றில் முதலிடம் வகிக்கின்றன.

அண்மையில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கோடிக்கணக்காக கொட்டித் தீர்த்திருக்கும் ஈரான் நாடு,  இஸ்ரேலோடு நேரடியாக மோதுகின்ற, உலக வரைபடத்திலிருந்து  இஸ்ரேல் என்ற பெயரை அழித்து விட கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும்.

இலங்கையின் ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் உமா ஓய திட்டத்திற்கும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் ஈரான் பாரியளவில் உதவி செய்து வருகிறது.

கடந்த 12ம் திகதி இலங்கையின் தேசியக் கொடியும், இஸ்ரேலின் தேசியக் கொடியும் அருகருகே கம்பீரமாக பறந்த காட்சியின்  பின்னணியில் பல சந்தேகங்கள் உருவாகி வருகின்றன.

இஸ்லாமிய நாடுகளா? இஸ்ரேலா? தனது உண்மையான தோழன் என்று இலங்கை சிந்தித்தால் ... இஸ்ரேலை நிராகரித்து விட்டு இஸ்லாமிய நாடுகளை அரவணைக்க  வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கைக்கு இருக்கிறது. குறிப்பாக மஹிந்த ராஜபகஷவிற்கு இருக்கிறது.

இஸ்ரேலை நிராகரிக்க பல காரணங்கள் இருந்த போதும் முக்கிய  காரணமான இதனை முன்வைக்கலாம்...

இஸ்ரேலிய மொசாட் உளவுப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்று இஸ்ரேலின் இரத்தம் தோய்ந்த சதிகளுக்கு காரண கர்த்தாவாக இருந்து, பின்னர் அதிலிருந்து விலகி இஸ்ரேலின் அத்தனை சதிகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய  விக்றர் ஒஸ்றோவ்கி By way of deception: The making and unmaking of a Mossad Officer is a book written byVictor Ostrovsky எழுதிய நூலில் இலங்கைப் பற்றி ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும்  ஒரே இடத்தில் வெவ்வேறு பிரிவுகளில் ஆயுதப் பயிற்சியை இஸ்ரேல் வழங்கியதாக அவர் அந்ந நூலில் இஸ்ரேலை குற்றம் சுமத்தியிருந்தார்.

இஸ்ரேல் என்ற நாடு இரத்தத்தைக் குடித்து வாழும் ஒரு நாடு. அதற்கு சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறதா? இஸ்ரேல் என்பது பலஸ்தீன் மக்களின் தாயக பூமிக்கு பலஸ்தீன் மக்களின்  இரத்தத்தால் பலாத்காரமாக எழுதிய
எழுதிய பெயர்.

இஸ்ரேல் என்பது அபகரிக்கப்பட்ட பூமி. இது முழு உலகும் ஏற்றுக் கொண்ட உண்மை.   அத்தகைய சட்டவிரோத  நாடு இலங்கையில் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருப்பது பலஸ்தீன் தொடர்பான இலங்கை நிலைப்பாட்டில் பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

இனி இலங்கை விவகாரத்திற்கு வருவோம்.

கொழும்பு பல நூறு வருடங்கள் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் தாயக பூமி.

வதிவிடமாகவும், வர்த்தக தளமாகவும் தலைநகர  முஸ்லிம்களின் வாழ்வியலில் கொழும்பு பெரும் பங்கு கொண்டிருக்கிறது.  காலனித்துவத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் கொழும்பு முஸ்லிம் இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் இன்று கொழும்பு முஸ்லிம்கள் மீது அரச நெருக்குதல் பல்வேறு வடிவங்களில் பிரயோகிக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் உருவாகி வருவதாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


கடந்த மூன்று தசாப்த கால போர் காலத்தின் போது கூட படாத இன்னல்களை  இப்போது பட ஆரம்பித்திருக்கின்றார்கள்.


கொம்பனித் தெரு முஸ்லிம்கள் இருந்த வீடுகள் உரிமை ஆவணங்கள் உள்ள சட்டப்படி கட்டப்பட்ட வீடுகள் என்று கூறப்பட்டும். குறுகிய கால அவகாசத்தில் அவர்கள் அடித்து உதைத்து விரட்டப்பட்டது. இலங்கையின் நீதி, சட்டம் என்பவற்றையும், கொழும்பு முஸ்லிம்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...