Showing posts with label Sri Lanka Muslims. Show all posts
Showing posts with label Sri Lanka Muslims. Show all posts

Tuesday 11 March 2014

நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!


இலங்கையில் இடம் பெற்ற மற்றும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் , அடக்கு முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல்கள் வழங்குவதையும், வழங்குவோரையும்  நாட்டுக்கே துரோகம் இழைப்போராக  இன்று சிங்கள இனவாதிகள் அடையாளப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக   யாரும் எவருக்கும் எந்த தகவலும் வழங்கக் கூடாது அப்படி வழங்குவது இந்த நாட்டையே காட்டிக் கொடுப்பதற்கு நிகரானது என்று பிரசாரம் செய்யப்படுகின்றது.

1988 1989 களில் ஜேவிபி போராட்டத்தின் போது  ஐ.தே.க அரசின் இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படைகளால்  கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான  இலங்கையின் தென்பகுதி  சிங்கள இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ததை யாரும் தேசத் துரோகமாக பார்க்கவில்லை.

அதற்கு காரணம் 88, 89 காலப்பிரிவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் இருசாராரும் சிங்களவர்கள்.  சிங்கள அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் கிளர்ச்சி செய்த போது அதனை அடக்குவதற்காக சிங்கள அரசு மனித உரிமையை மீறியது.

அப்போதைய எதிர்க் கட்சி தரப்பிலிருந்த மகிந்த ராஜபக்ஸவின் சுதந்திரக் கட்சியினரின் இந்த செயற்பாட்டை ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டு வரும் ஒரு சாதாரண செயற்பாட்டாகவே சிங்கள மக்கள் பார்த்தனர்.



இந்த காணொளி பிரபல ஊடகவியலாளர் பில் ரீஸ் இலங்கை மோதல்கள் குறித்து  தயாரித்த  பிரிந்த தீவகம்  என்ற விவரணம். ஐ.தே.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் மனித உரிமை போராட்டம் தொடர்பாகவும் இது பேசுகிறது.

நாட்டுக்கு இழைக்கும் துரோகமாக யாரும் பார்க்கவில்லை. காரணம் மனித உரிமையை மீறி கொலை செய்யப்பட்டவர்களும், கொலையாளிகளும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள இனத்தவர்கள்.  எனவே இன்று போல் வேறு அர்த்தம் கற்பிப்பதற்கு காரணம் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போதுள்ள நிலைமை மிகவும் வித்தியாசமானது. மனித உரிமை மீறல் தொர்பாக அரசின் மீது குற்றம் சாட்டுபவர்கள் சிறுபான்மை இனத்தவர். குற்றம் சாட்டப்படுபவர்கள்  சிங்கள் பெரும்பான்மை இனத்தவர்கள்.

அன்று ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலுக்கு ஐ.தே.க அரசுக்கு எதிராக தகவல் கொடுக்கப் போன மஹிந்த ராஜபக்ஸவை ஒரு ஹீரோவாக  சிங்கள சமூகம் பார்த்தது.

இன்று சிறுபான்மை சமூகங்கள் தமது பிரச்சினைகளை ஐ.நா அரங்கிற்கு கொண்டு செல்வதை ஒரு துரோகமாக அதே சிங்கள சமூகம் பார்க்கின்றது. நீதியும் நியாயமும் இலங்கையில் இனங்களை வைத்துதான் எடைபோடப்படுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பெரும்பான்மை இனத்திற்கு அநீதி இடம்பெற்றால் அதனை ஐ.நாவிற்கு மட்டுமல்ல அதற்கு மேலும் கொண்டு செல்லலாம். அது வீர தீர செயல்.

சிறுபான்மைக்கு அநீதி இடம்பெற்றால், அதை யாரும் எவருக்கும் சொல்லக் கூடாது. அந்த அநீதியை எவரும் கண்டு கொள்ளவும் கூடாது.  இது தான் மஹிந்த அரசின் நிலைப்பாடு...!  நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...