Showing posts with label இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா. Show all posts
Showing posts with label இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா. Show all posts

Sunday 18 May 2014

இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்படம் ?

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளதாக  தமிழ்வின் மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளங்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் நிறைய செய்தவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததாகவும் தமிழ்வின்  செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும் ஏற்கனவே வெளிவந்த படங்களை இலங்கை இராணுவம்  மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் யுத்தவெற்றியின் ஐந்தாம் ஆண்டை விமர்சையாக கொண்டாடும் நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் தேடு பொறியில் இந்தப்படத்தை தேடிப்பார்த்தேன். எனது கைக்கு அது கிட்டவில்லை.  மாறாக எனக்கு கிடைத்தது இருவரும் இறந்து கிடக்கும் இந்தப்படம்தான்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...