Thursday, 12 June 2025

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

 


குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது.


ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் Popular Forces என்ற புதிய கூலிப்படை ஒன்றை இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட் காஸாவில் களமிறக்கி இருக்கிறது.

இந்த பொப்பியுலர் ஃபோர்ஸஸின் தலைவர் யாஸிர் அபூ ஷபாப்!


சீஐஏ மற்றும் மொசாட்டுக்கு மிகவும் பிரியமான “அபூ” என்ற அடைமொழியை வைத்தே இந்த அநியாயக்காரனை இஸ்ரேலிய ஊடகங்கள் போற்றிப் புகழ்ந்து வருகின்றன.


யாஸிர் அபூ ஷபாப் என்பவன், ஒரு முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரன். அதுமட்டுமல்லாமல், பல கிரிமினல் வேலைகளுக்கு சொந்தக்காரன். பலமுறை ஹமாஸினால் தண்டிக்கப்பட்டவன்.

பசியால் வாடிக்கொண்டிருக்கும், காஸா மக்களுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை இடைமறித்து, அபகரித்துச் செல்லும் “கொந்தராத்து“ வேலை இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று, காஸாவின் தெற்கு ரஃபா எல்லையின் கட்டுப்பாடு, இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவத்தின் உதவியுடன் இவனது கைகளுக்கு சென்றிருக்கிறது.


கடந்த 2024 மே மாதத்தில், யாஸிர் அபூ ஷபாபின்  கும்பல்  தனக்கு பொப்பியுலர் ஃபோஸஸ்  என்ற பெயரை சூடிக்கொண்டது.  ஹமாஸ் காசாவை தவறாக நிர்வகித்து  வருவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டு களத்தில் குதித்தது. குறுகிய காலத்தில் இஸ்ரேல் இராணுவத்துடனான  இந்த கும்பலுக்குள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.  காசா மக்கள் இந்த கும்பல்   இஸ்ரேலின் நாடகத்தை அரங்கேற்றும்  துரோகிகள் மற்றும் திருடர்கள் என்று குறிப்பிட்டனர். அவனது சொந்த குடும்பத்தினர் கூட அவனைத் துரோகி என்று வெளிப்படையாக தூற்றினர்..


யாஸிர் அபூ ஷபாபும் அவனது 300 பேர் கொண்ட கூலிப்படை கும்பலும், காஸாவுக்கு செல்லும் உணவு விநியோகத் திட்டத்தை இடைமறித்து தடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

பட்டினியால் வாடும் மக்களுக்குச் செல்ல வேண்டிய உதவிப்பொருட்களை கொள்ளையிட்டு அதிக விலைக்கு இந்த கூலிப்படை விற்பனை செய்தும் வருகிறது.


பட்டினியால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்கள் இந்த உதவிப் பொருட்களை பெற ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த போது, இந்த கூலிப்படை கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றுள்ளது.

காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் என்ற இந்த கூலிப்படைக்கு பூரண அனுசரணையை வழங்கி வருகின்றன.


காஸாவிற்கான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை இந்த கூலிப்படை கொள்ளையடித்து வருகிறது.

உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன சங்கத்தின் தலைவர் நஹிதார் என்பவா் கூறுகையில், "யாஸிர் அபூ ஷபாபின் அடியாட்கள் டிரக்குகளைத் தடுத்து, டிரைவர்களை மிரட்டுகின்றனர். எதிர்ப்பு காட்டினால், வாகனத்தின் டயர்களை குண்டு வீசி சேதப்படுத்துகின்றனர் " என்று குற்றம் சாட்டுகிறார்.

ஐ.நா.வின் ஆவணங்களும், யாஸிர் அபூ ஷபாபை "மனிதாபிமான உதவிகளை முறையாக கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவர்" என்று வர்ணித்திருப்பதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


"ஹமாஸை பலவீனப்படுத்த, காஸாவில் உருவாகும் மாற்று சக்திகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவுகளை வழங்குவோம்!" என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக இந்த கூலிப்படை தொடர்பாக குறிப்பிட்டுள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன.


ஜூன் 5 ஆம் திகதி, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவரும்,  வலதுசாரி இஸ்ரேல் கட்சியின் தலைவருமான அவிக்டோர் லிபர்மன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை காசாவில் குற்றம் செய்யும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டினார். அடுத்த நாள், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நெதன்யாஹு  இந்த நடவடிக்கை இஸ்ரேலிய வீரர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒரு வழியாகும் என்று கூறினார்.


"காஸாவில் எங்களுக்கு வேறு ஒரு அதிகாரம் தேவை, அங்கு வேறு ஒரு நிர்வாகம் தேவை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்  ஹமாஸைத் தோற்கடிப்பதே எமது முதல் பணியாக இருக்க வேண்டும்," என்று இஸ்ரேல் பிரதமர்  நெதன்யாஹு கூறியுள்ளார்.


2005 இல் காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய பிறகு ஹமாஸுக்கு எதிராக மக்களைத் திருப்புவதற்கான முயற்சியில் இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.   இந்த உத்தி இஸ்ரேலுக்கு புதிதல்ல. பாலஸ்தீனர்களைப் பிளவுபடுத்தி, ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதில் இஸ்ரேல் கடந்த காலங்களில் வெற்றி பெற்று வந்தும் உள்ளது.


அது மட்டுமல்லாமல், இஸ்ரேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் உணர்வுகள் மழுங்கிய ஒரு அரபு சமூகத்தை உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டு ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களில் அந்த சமூகம்  காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.


காஸாவில் வரலாறு காணாத அட்டகாசங்களை அரங்கேற்றி, ஐம்பதாயிரம் பேருக்கு அதிகமானோரை கொலை செய்து விட்டு, அந்த மக்களை பட்டினியால் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் உதவிப்பொருட்கள் விநியோகத்தில் அரங்கேற்றும் இந்த அரசியல் விளையாட்டு மற்றுமொரு மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்ற போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

 

அஸீஸ் நிஸாருத்தீன் 


Saturday, 24 May 2025

உணா்வுகள் மரத்துப் போன முஸ்லிம் உம்மத்..!

 

கேட்டானே ஒரு கேள்வி!

நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு ஐ.நா. சபை அலுவலகத்தின் முன்னால் இது நிகழ்ந்தது.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஅழிப்புப் போருக்கு எதிராக சிங்கள சகோதரர்களின் 'சேஞ்ச்' அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜே.வி.பி.யில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த சமத்துவ முன்னிலைக் கட்சியின் ஒரு கிளையாக இயங்கும் இந்த அமைப்பில், சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த பலா் ஆண், பெண் பாகுபாடின்றி உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வேளையில், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக மிகவும் உணர்வுபூர்வமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அணுகி உரையாடினேன்.

எங்கள் இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுதுபோக்கு என்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்த இளைஞன் காஸா மக்கள் மீது கொண்டிருந்த பரிவு என்னை ஆழமாக கவர்ந்தது.

அந்த இளைஞன் அந்த 'சேஞ்ச்' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவரது உரையாடலில் இருந்து புாிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கலந்துகொண்டோம்.

அதுவும் வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும் அதே “முஸல்மான்” முகங்கள்தான்.
அந்த இளைஞனிடம் புவியரசியல் பற்றி ஆழமான பாா்வை இருந்தது எனக்கு புாிந்தது.

"மத்திய கிழக்கின் பெட்ரோல் வளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலுக்காகவே அமெரிக்கா அரபு மண்ணில் இஸ்ரேலை உருவாக்கியது."

"அமொிக்கா இன்று வரை அதன் கொடுமைகளை ஆதரித்து வருகிறது. அது இழைக்கும் மனித உாிமை மீறல்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. அப்படியிருந்தும், அரபு நாடுகள் வெளிப்படையாக அமெரிக்காவை ஆதரித்து வருகின்றன."

"அமொிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஒற்றுமையாகவே மத்திய கிழக்கில் அரசியல் காய்களை நகா்த்தி வருகின்றன."
"இந்த கொடூரமான முக்கோண நட்புஅரசியலை முஸ்லிம்கள் ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்? "

முஸ்லிம்களின் உணர்வுகள் ஏன் மரத்துப்போய் இருக்கின்றன?
"பலஸ்தீனில் காஸாவில் நடக்கும் கொடுமைகளுக்காக இனமத பேதமின்றி உலகம் முழுவதும் அலையலையாக மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராடுவதை பார்த்தும் முஸ்லிம்கள் ஏன் அமைதியாக இருக்கிறாா்கள்.? " என்று கேட்டான்.

அந்த இளைஞனின் நேர்மையான கேள்வி என்னை சிலிா்க்க வைத்தது. ஒரு சிங்கள இளைஞன் காட்டும் அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும், நம் சமுதாயத்தின் அமைதியான மௌனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது.

அவனது கேள்வி இன்னும் என் காதுகளில் அலைகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்?
நமது பொறுப்பு என்ன?

நமது உணா்வுகள் மரத்துப் போவதற்கு காரணம் என்ன?




இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...