Sunday, 18 December 2011

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!


முஅம்மர் அல் கதாபி கொலை செய்யப்பட்ட நாளை கத்தாரில் வாழும் கர்ளாவி அல்லாஹ்வின் தினமாக பிரகடனப்படுத்தினார்.

லிபியாவில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது கர்ளாவி அமெரிக்காவின் தினத்தைத் தான் வேறு வார்த்ததையில் அல்லாஹ்வின் தினம் என்று கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 17.12.2011 அன்று லிபியாவிற்கு விஐயம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் லியோன் பெனெட்டா லிபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு இருக்குமென்றும் லிபியாவை பாதுகாக்கும் நண்பனாக இனிமேல் அமெரிக்கா இருக்கும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தினத்தில் உதயமான லிபியாவின் விடுதலைக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்குவது பொருத்தமா?

இப்படி நீங்கள் நினைக்கலாம். கர்ளாவி போன்றவர்களுக்கு அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது என்பதைத்தான் அந்த வார்த்தை தெளிவுபடுத்துகிறது.

கிலாபத் சிந்தனையில் கட்டிஎழுப்பப்படவிருக்கும் லிபியாவிற்கு

 ''நாங்கள் உங்கள் நண்பனாகவும் பங்காளியாகவும் இருப்போம் '' என்று லிபியாவின் பிரதம அமைச்சர் அப்துல் றஹீம் அல் கிப் அவர்களை நோக்கி கூறியிருக்கிறார் லியோன் பெனெட்டா .

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன் வைத்திருக்கிறார்.

கர்ளாவியின் அமெரிக்கபா சார்பபான கிலாபத் கனவு லிபியாவிலும் நனவாகவிருக்கிறது. ஆப்கானைப் போல.

80களில் அமெரிக்காவினால் வடிவமைப்பட்ட ஆப்கான் பேராட்டம் வெற்றியடைந்த போது இதே நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருந்தது. தற்போதைய ஆப்கானின் நிலையை புரிந்து கொண்ட ஒருவரால் நாளை லிபியாவில் என்ன நிகழவிருக்கின்றது என்பதை அனுமானிக்க முடியும்.

லிபியாவைப் போன்றே, ரஷ்ய சார்பான ஆப்கனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து இயங்கிய உளவு நிறுவனங்களினால் ஐிஹாதிய வெறி ஊட்டப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அரபு, முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளிலிருந்து ஆப்கானுக்குள் கொண்டு சென்றது.

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...