Friday, 25 March 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா (பகுதி2)



இந்தக் கட்டுரை மலேசிய தமிழ் இலக்கிய விழா (பாகம் 1) இன் தொடர்ச்சியாகும்

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?

மலேசியாவில் நடத்தப்படுவதாக குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினரால் “சர்வதேச மாநாடு” என்று முழக்கம் கொட்டப்படுகின்ற நிகழ்வானது ஒரு சர்வதேச மாநாட்டுக்குரிய வலுவான பின்னணிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதை மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா என்று அழைப்பதே பொருந்தும்.

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...