Wednesday 1 December 2010
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் ஒன்று சர்வதேச காவல்துறையான இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும், அந்த வெறித்தனத்தால் உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தனது சுரண்டல் அரசியலுக்காக பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது. குறிப்பாக ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும் அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,
அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.
எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.
Saturday 30 October 2010
ஒரு சோகமான பாடல் ! இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
ஒரு சோகமான பாடல் !
இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
சிங்கள இனவாதம் தமிழர்களை நசுக்கிய போது அதற்கு எதிராக எழுந்த விடுதலைப் போராட்டம் தனது பூமியில் வாழ்ந்த சகோதர சிறுபான்மையான முஸ்லிம்கள் மீது தனது அடக்கு முறையை ஆயுத ரீதியாக பிரயோகிக்க ஆரம்பித்தது.
சிங்கள பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை அதே பாணியில் தமிழ் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மிக மோசமாக இழைத்தது.
இருபது வருடங்களுக்கு முன் முஸ்லிம்கள் தமது தாயக பூமியிலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.
Sunday 17 October 2010
ஈரானோடு மோத தாலிபான்களோடு இணங்கிப்போகிறது அமெரிக்கா?
ஈரானை தாக்குவதற்காக தனது நேச நாடான சஊதி அரேபியாவிற்கு கோடிக்கணக்கான டொலர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து சஊதியை இராணுவ மயப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானில் தனது வியுகத்தை தலை கீழாக மாற்றி இருக்கிறது. தாலிபான்கள் விடுதலை பேச்சுவார்த்தை என்ற பின்னணியில் அமரிக்காவிற்கு எதிராக இருக்கும் ஆப்கான் தளத்தை ஈரானுக்கு எதிராக திருப்பும் ஒரு முயற்சியாக இதை பார்க்க முடியும்.
அதன் முதற் கட்ட நடவடிக்கையாக தாலிபானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனியை பாகிஸ்தான் அரசு மூலம் விடுதலை செய்திருக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தாலிபான்களோடு போராடிய பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவின் தேவைக்காக அந்த அமைப்போடு சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்து வருகின்றது.
தாலிபான்களை அழித்து உலகையே பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றி விட்டே ஊர் திரும்புவோம் என்று சபதமிட்டு வந்த அமெரிக்கா வின் தாலிபான்கள்தொடர்பான போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் அண்மைய நிலைப்பாட்டில் பெரும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
அண்மைக்காலமாக தாலிபான்களின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நேட்டோ படைகள் திண்டாடுவது போன்ற ஒரு நிலையை மேற்கத்தைய ஊடகங்கள் பரப்பி வருகின்றன்.
பல ஆண்டுகள் போராடி ஒழித்த தாலிபான்களின் பலம் மீண்டும் புதிய வேகத்தில் வளர்வது போன்ற ஒரு பிரமையை அமெரிக்க ஊடக்ஙகள் ஏற்படுத்தி வருகின்றன.
எனவே அமைதியான ஆப்கான் ஒன்றின் உருவாக்கத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து தாலிபான்களின் பயங்கரவாதத்தை உட் பிளவுகளை வைத்து ஈரானுக்கு எதிராக திருப்பிவிடும் ஓரு சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது.
விடுதலை செய்யப்பட்டிருக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனியை வைத்து பேச்சுவார்த்தை நாடகத்தை ஆரம்பித்து அவர்களை அமைதி படுத்தி தனது பொது எதிரியான ஈரானோடு தனது யுத்தத்தை ஆரம்பிக்கவும் அதற்கேற்ற தளமாக ஆப்கானையும் ஏனைய முஸ்லிம் நாடுகளையும் உருவாக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
Thursday 7 October 2010
அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ... இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!
அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ...
Tuesday 28 September 2010
கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம் ?
கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம்?
பிரச்சாரப் பணிக்ககாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையூறு இன்றி இடம் கொடுக்கும் நாடு கத்தார் . எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் அடிக்கடி பிரச்சாரப் பணிக்காக கத்தருக்கு சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Thursday 2 September 2010
ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!
MupatjpAk; rt+jpapd; Mzp mறைjYk;;
KOg; g+rdpf;fhia Nrhw;wpy; kiwf;Fk; rt+jp J}jufk;!
,yq;ifg; gzpg;ngz; Mupatjpapd; clk;gpy; Vw;wg;gl;l Mzpfs; jkf;F re;Njfj;ij Vw;gLj;Jtjhf nfhOk;G rt+jp J}jufk; njuptpj;jpUg;gjhf Clfq;fs; nra;jp ntspapl;bUf;fpd;wd.
Rt+jp J}jufk; mk;gyj;jpw;F tUk; jdJ ehl;bd; mrpq;fq;fis rfpj;Jf;nfhs;s Kbahky; mtrug;gl;L ,e;j mwpf;ifia ntspapl;L ,Uf;fpwJ.
Mupatjpapd; tptfhuk; Mjhug+h;tkhdJ!
clypy; nrYj;jg;gl;bUe;j Mzpfs; mWit rpfpr;ir %yk; ntspnaLf;fg;gl;bUf;fpd;wd. itj;jpah;fs; mWit rpfpr;ir nra;Ak; fhl;rpfs; Clfq;fspd; %yk; KO cyfpw;Fk; fhl;lg;gl;bUf;fpd;wd.
Mupatjp xU kdNehahspah vd;W gupNrhjpj;j itj;jpau;fs; mtu; rpwe;j kdepiyapy; ,Ug;gjhf cWjpaspj;Jk; cs;sdu;. New;W rpur njhiyf;fhl;rp nra;jpapy; itj;jpaNu ,jid cWjpg;gLj;jpdhu;.
,J ,g;gbapUf;f
Saturday 28 August 2010
பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள். சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்
பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.
சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்.
அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான் மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும் வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள்.
ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
கர்பலாவின் கதையை கேட்டு கண்கள் பூத்துபோனதே! கர்பலாவின் கொடுமை கேட்டு நெஞ்சு வேர்த்து போனதே! இமாம் ஹுசைனை இழந்த நெஞ்சம் தீயில் வெந்து ...
-
பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்கள...