Tuesday 30 October 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை:வீடுகளை இழந்தோர் 22 ஆயிரம் பேர்- ஐ.நா!...


ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் புத்த தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலையில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இதில் கூடுதல் பாதிக்கப்பட்டோர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். கடந்த ஜூன் மாதம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து செல்லக் காரணமான மியான்மர் ராக்கேன் மாநிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை ஓய்ந்த நிலையில் மீண்டும் புத்த தீவிரவாதிகள் வன்முறையை துவக்கியுள்ளனர். ஒருவாரத்திற்குள் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராக்கேன் மாநிலத்திற்கு பார்வையிடச் சென்றுள்ள ஐ.நா குழுவினர் வன்முறையை தொடர வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 4665 வீடுகள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளன. 


வீடுகளை இழந்தவர்களில் 21,700 பேர் ரோஹிங்கியா மக்கள் ஆவர். இத்தகவலை ஐ.நா குழு தலைவர் அசோக் நிகாம் தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்தவர்கள் ராக்கேனை விட்டு வெளியேறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர, முன்னர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராக்கேன் தலைநகருக்கு புலன்பெயர்ந்துள்ளனர். ஜூன் மாதம் இனப்படுகொலை துவங்கியதில் இருந்து புலன்பெயர்ந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது உருவான கலவரம் ஆறு கிராமங்களை பாதித்துள்ளது. 


இதில் மின்பியா கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை எ.எஃப்.பி கூறுகிறது. இங்கிருந்து புலன்பெயர்ந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.நா தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிரபல மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஸ் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்திருந்தது.

காணொளி - அங்கவீனம் ஓர் இயலாமையல்ல..!

Sunday 28 October 2012

காணொளி! சிரியாவில் சீஐஏ ஜிஹாத்?

அமெரிக்க  சீ.ஐ.ஏ  சிரியாவைக் கைப்பற்ற அல் கைதாவிற்கும், சுதந்திர சிரிய இராணுவத்திற்கும் ஆயதப்பயிற்சி வழங்குவதாக   RT  தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கின்றது.

லிபியா, அவுஸ்திரேலியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து  கூலிப்படைகளை சிரியாவில் போராட சீஐஏ பயிற்று வித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.



Wednesday 24 October 2012

இஸ்ரேல் உயர்ந்த உன்னத நண்பனாம் ..! எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேலுக்கு புகழாரம்.



முர்சியால்  இஸ்ரேலுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் ஆங்கில வடிவம் 

இஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் உயர்ந்த உன்னத  நண்பன் என்று விழித்து எகிப்தின் தற்போதைய இஸ்லாமியவாத  (?) ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேல் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்களுக்கும், போராட்டங்களுக்கும், எழுச்சிகளுகும் உறுதுணையாக இருப்பது அமெரிக்க நலன் சார்ந்த அரசியலே.

முஹம்மத் முர்ஸியின் இஸ்ரேலை ஆதரிக்கும் கடிதத்திற்கும் இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் இருப்பது இஸ்லாமிய எழுச்சியல்ல மாறாக அமெரிக்காவின் காலடியில் சரணாகதி அடையும்  இஸ்லாமிய உலகத்தின் வீழ்ச்சியே. இந்தப் பின்னணியைதான் இப்பதிவு அலசுகிறது.

இரத்தக் கறைப்படிந்த இஸ்ரேல் நாட்டையும், அதன் தலைவரையும் உயர்ந்த சிறந்த நண்பன் என்று வர்ணித்திருக்கின்ற  முர்ஸியின் போக்கை பலஸ்தீன் போராட்ட அமைப்புகள் கடுமையாக சாடியுள்ளன.

இஸ்ரேலின் நண்பனாக இருந்த ஹுஸ்னி முபாரக்கை தாகூத் என்று வர்ணித்த இஹ்வானிகள் இன்று தாமே தாகூத்களாக மாறி வருவதைக் கண்டு எகிப்திய மக்கள் ஆச்சரியப்படத்தான் போகின்றார்கள்.

இன்று எகிப்தில் ஆட்சி பீடமேறியிருக்கும் இஹ்வான்கள், அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டு அன்வர் சாதாத்தைப் போன்று ஹுஸ்னி முபாரக்கைப் போன்று அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும்  நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதையே இந்த இஸரேலிய இஹ்வானிய “காதல் கடிதத் தொடர்பு“ வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் போக்கு,  பூகோள அரசியலின் மீது ஆதிக்கம் செலுத்தும்  அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் நலன்காக்கின்ற அமைப்பாக மாற்றமடைந்து வருவதையே அவர்களின் நிகழ்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன .

அவர்களின்  இறுக்கமான  இஸ்லாமிய கொள்கை ஏகாதிபத்திய சக்திகளின் திருப்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக உதித்ந்து வருகின்றது. தளர்ந்துவருகிறது.

அப்படி இல்லையென்றால்  இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் திணறிப் போயிருக்கும்  அமெரிக்கா,  எகிப்தில் இக்வான்கள் அடைந்த தேர்தல் வெற்றியை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டாது.

அமெர்க்காவின் ஆலோசனைப்படியே  எகிப்தை இஹ்வான்களால் ஆள முடியும். இஸ்ரேலை இனிய நண்பனாக ஏற்றுக்கொள்ளும் இஹ்வான்களின் நிலைக்கு இதுவும் காரணம். எகிப்தில் நடக்கப்போவது அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபத் ஒன்றுதான்.

அதற்கு வெகுமதியாகத்தான் இஹ்வான்களுக்கு எகிப்தின் ஆட்சி கைமாற்றப்பட்டுள்ளது.  இஹ்வான்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நண்பர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு  ஆட்சி செய்வதற்க்கு ஒருபோதும் அமெரிககா இடமளிக்கப்போவதில்லை. இதற்க்கு ஹமாஸ் இயக்கம் ஒரு சிறந்த உதாரணம்  2006ம்  ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கம் மக்கள் ஆணையைப் பெற்று அமோக வெற்றி பெற்றது.

 ஆனால் அமெரிக்கா அந்த மக்களின் தீர்ப்பை தனது கால்களின் கீழே போட்டு மிதித்தது.  இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு  பலஸ்தீனர்களை வற்புறுத்தியது.

உரிமையையும் தன்மானத்தையும் பாதுகாத்துக் கொண்டு  ஹமாஸ் இயக்கம் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்தது. முடிவ  வெற்றி பெற்ற அரசாங்கத்திற்கு  பாரிய நெருக்குதல்களைக் கொடுத்தது. பொருளாதார தடைகளை விதித்தது.

இன்றும் கூட அமெரிக்காவின் பொருளாதார தடையினால் அந்நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு திறந்த சிறை ஒன்றின் வாழ்க்கையை அவர்கள் தனது சொந்த நாட்டிலேயே அனுபவித்து வருகின்றார்கள்.

எகிப்தின் இன்றைய இக்வான்களைப்போன்று, பாலஸ்தீன் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல்  என்ற சட்ட விரோத ஒரு நாட்டை ஹமாஸ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அமெரிக்காவின் எந்த எஜண்டாவிட்கும் ஹமாஸ் ஒரு போதும் ஏஜென்டாக மாற மாட்டாது என்பதைப் புரிந்துக்கொண்ட அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வேதேச சட்டங்களையும் மீறி பலஸ்தீனை இன்று துன்புறுத்தி வருகின்றது.

இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக இருந்த கோட்டைகள்  உள்நாட்டு போர்கள் என்ற போர்வையில் சிதைந்து வருகின்றன .  லிபியாவும், சிரியாவும்  இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாடுகள். இன்று அந்த நாடுகள் பாரிய சிதை வுக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருக்கின்றன.

அரபுலக எழுச்சியை அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு சாதகமாக பயன் படுத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக அரணாக எழுந்து நிற்கும் ஹமாஸ் இயக்கத்தையும், ஹிஸ்புல்லாஹ் அமைப் பையும் மக்களிடமிருந்து ஓரம் கட்டும் முயற்சியில் அமெரிக்க சி ஐ ஏ தனது பிரசார உக்திகளை இன்று முடு க்கி விட்டிருக்கிறது.

சி ஐ எ இன் வேலைத்திட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்காவின்   அரசியல்  சதித் திட்டங்களை ஆதரித்து பத்வவாக வெளியிட கர்ளாவி போன்ற மூட முல்லாக்கள் முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர்.

அரபு அமெரிக்க பெட்ரோல் டொலர்களால் போஷிக்கப்படுகின்ற  அரச சார்பற்ற நிறுவனங்களாக தம்மை அழைத்துக் கொள்ளும் என்ஜீ ஓ  குஞ்சுகள் தான் வாழும் நாட்டு மக்களிடம் அமெரிக்காவின் அரசியல் நலன் சார்ந்த போராட்டங்களை இஸ்லாமாக போத்திது வருகின்றன.

அமெரிக்காவினால்  ஆயுதம் வழங்கி உயிரூட்டப்படும் உள்நாட்டுப் போர்களை இந்த அமைப்புகள் இஸ்லாமியப் போராட்டமாக, ஜிஹாதாக வர்ணித்து மகிழ்கின்றன.

லிபிய, சிரிய  போராட்டங்களை இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம் . தான் வெற்றிபெற்ற நாடுகளில் வளங்களை கொள்ளையிடுவதற்காக  போராட்டக் குழுக்களுக்கிடையிலான பகைமையை வளர்த்து மோத விட்டு தனது சுரண்டல் வியாபாரத்தை அமெரிக்கா அழகாக செய்து வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் இந்த இஸ்லாமிய (?) போராட்டங்கள் ஒபாமாவினதும் , மிட் ரோம்னி யினதும் வெற்றியை நிர்ணயிக்கும் போராட்டங்களாக மாறியிருக்கின்றன. சிரியா இந்த இஸ்லாமிய (?) போராளிகளின் கைக்கு வந்தால் அமெரிக்காவின் கைக்கு சிரியா வந்தைதைப் போன்று அமெரிக்கர்கள் மகிழ்ச்சி அடைந்து ஒபாமாவிற்கு வாக்களிப்பார்கள் என்று அவர் கனவு காணுகிறார்.

மிட் ரொம்னியோ தான் ஆட்சிக்கு வந்தால் சிரிய போராளிகளுக்கு அதிகமாக அயுதங்களை வழங்கி சிரிய போராட்டத்தை வெல்ல வைப்பதாகக் கூறி அமெரிக்க மக்களின் கரகோஷத்தைப் பெறுகிறார்.

இந்தப் பின்னணியைப் பார்க்கும் போது சிரியாவில் வைட்ஹவுஸ் கிலாபத் ஒன்றுக்கான  விதைகள் தூவப்படுகின்றன என்ற உண்மை புலனாகின்றது.

சிரியாவில்  நடக்கும்  போராட்டம் இதற்கு சிறந்த  உதாரணம்.  சிரியாவை பசார் அல் அசாத்திடமிருந்து மீட்டு எடுப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது மிட் ரொம்னியும், ஒபாமாவும் அடித்துக்கூறி தமது தேர்தல் பிரசாரத்தை சூடு பிடிக்க வைக்கின்றனர் .

அசாத்  இல்லாத உலகம் ஒன்றே அமைதிக்கு வழியென்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ அறைகூவல் விடுகின்றார். அஸாத் ஒழியட்டும் என்று அரபு நாடுகளும், அவற்றின் ஆஸ்தான முப்தியுமான கர்ளாவி முழங்குகிறார்.

மேற்கூறிய அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள், இக்வானிகள், கர்ளாவிகள் என்ற அத்தனை சக்திகளும் அமெரிக்க அரசியல் நலன் என்ற புதுயுகத்தை உருவாக்க (?) ஒரே தோணியில் வெள்ளை மாளிகையைநோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கின்றனர்.

ஆன்மீக, அரசியல், கருத்தியல் ரீதியாக அமெரிக்க, இஸ்ரேலிய கொள்ளைக் கூட்டத்தோடு கூத்தாடு போடும் இந்த ஜிஹாத் பேசும் குள்ளநரிக் கூட்டம் லிபியாவிலும், சிரியாவிலும் கிலாபத்திற்கான தளம் அமைப்பதாய்க் கூறிக் குப்ரிய்யத்திற்கு களம் அமைத்து வருகின்றனர்.

வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம் தேசங்களை கபளீகரம் செய்த கைகளோடு  கைக்குலுக்கிக் கொண்டு முஸ்லிம் தேசங்களையோ ஏனைய எந்த தேசத்தையோ  ஆக்கிரமிக்காத  சீனா, ஈரான், சிரியா, லிபியா போன்ற  நாடுகள் முஸ்லிம் உம்மத்தின் எதிரி நாடுகளாக இந்த அமெரிக்க சார்பு முல்லாக்களால் பிரகடனப்படுத்தப் படுகின்றன.

ஒரு இஸ்லாமியப் போராட்டத்தின் வெற்றி எப்படி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றியாக முடியும்?

இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலின் எதிரிகள் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவின் தூண்டுதலினால் இல்லதொழிக்கப்படுகின்றார்கள்.    தூனீசிய  மக்கள் புரட்சி தனது ஆதரவு நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு பாதகமாக எதுவும் நடந்து விடாமல் அமேரிக்கா மிக சாதுரியமாக பிரச்சினையை வேறுபக்கம் திசை திருப்பியது.

இன்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு நிலையை மத்திய கிழக்கில் அமரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் எழுதப்படாத மாநிலங்களாக இருக்கும் சவூதி அரேபியா , கத்தார் , பஹ்ரைன் , குவைத்  போன்ற நாடுகளில் ஏற்படுகின்ற எந்த மக்கள் எழுச்சியையும் அங்கீகரிக்க அமெரிக்கா தயாரில்லை.  இந்த நாட்டு மன்னர்கள் அமெரிக்கவிற்கு தேவையானவர்கள் . நண்பர்கள் .  ஏற்கனவே சொன்னது போல இஸ்ரேலை நேரடியாகவும் , சிலவேளை மறைமுகமாகவும் ஆதரிப்பவர்கள் . எனவே அரபுலக எழுச்சி மன்னராட்சிக்கு ஆபத்தாக வராமல் அமெரிக்கா தனது எதிரிகளை துவம்சம் செய்ய அதனை வேறுபக்கம் திசை திருப்பியது.

இஹ்வான்கள் ஆடசிபீடம் ஏறுவதற்கு முன்பாகவே இஸ்லாம் தான் அனைத்திற்கும் தீர்வு என்ற அந்த உயரிய வாசகத்தை தனது யாப்பிலிருந்து அகற்றியிருந்தனர். அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இஹ்வான்கள் இந்த உயரிய சுலோகத்தை தமது  யாப்பிலிருந்து தணிக்கைச் செய்தனர்.

இஹ்வான்களின் இஸ்லாம் தான் அனைத்திற்கும் தீர்வு என்ற இந்த உயரிய இலக்கிற்காக உயிர் நீத்த இஹ்வானிகளின் கல்லறைக் கூட இன்று கண்ணீர் வடிக்க வேண்டும்.

அன்று பலஸ்தீனுக்கு பைத்துல் முகத்தஸை தருசிப்பதைக் கூட மறைமுகமாக இஸ்ரேல் அங்கீகரிக்கப்படுகின்றது என்பதைக் காரணம் காட்டி பைத்துல் முகத்திஸுக்கு போகக் கூடாது என்று பத்வா வெளியிட்டார் “நவீன கிலாபத்தின் தாத்தா” வும் கத்தாரின் ஆஸ்தான இஸ்லாமிய அறிஞருமான(?)  யூசுப் கர்ளாவி.

இன்று இந்த இஹ்வானிய கர்ளாவியின் நிலை என்ன?

கர்ளாவி வாழும் கத்தார் நாடு இஸ்ரேலுக்கு கேஸ், பெற்றோல் அனைத்தையும் மிக குறைந்த விலையில் வழங்கி உதவி செய்கிறது. அப்படி உதவி செய்யும் கத்தார் மன்னனை போற்றிப் புகழ்ந்து பீற்றித் திரிகின்றார்  யூசுப் கர்ளாவி. ஆனால் இஸ்ரேலுக்கு எப்போதும் எதிராக இருந்த கதாபியை கொல்லுவதற்கு இந்தப் புல்லுருவியான  கர்ளாவி பத்வா வழங்கினார்.

இன்று இஸ்ரேலுக்கு இடையூறாக இருக்கும் சிரியாவை வீழ்த்துவதற்கும் அந்த நாட்டை  அமெரிக்காவின் கைக்கூலிகளின் கைகளில் சிக்க வைப்பதற்கும் தனது பத்வா வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.  அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான இந்தக் கர்ளாவியின் அடுத்த பத்வா வேட்டைக்கு ஈரான் பாடுபொருளாக மாறப் போகின்றது.

கதாபியும், பஸார் அல் அஸாத்தும் மோசமான தலைவர்களாக இருக்கலாம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.  மத்திய கிழக்கில் உள்ள அத்தனை தலைவர்களும் கதாபிக்கும், அஸாத்திற்கும் நிகரானவர்களே. மோசமானவர்களே. அவர்களைக் கொல்லுமாறு பத்வா வெளியிட இந்தக் கர்ளாவிக்கு ஏன் அறிவு வருவதில்லை.

பஸார் அல் அஸாத்தும், கடாபியும் மக்களை கொலை செய்தார்களாம் அது உண்மைதான். இஸ்ரேல் பலஸ்தீன் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததே!  அபபோது இஸ்ரேலிய தலைவர்களுக்கு இப்படி பகிரங்க கொலை பத்வா வழங்க கர்ளாவியால் ஏன் முடியாது போனது?
அதை விடுங்கள் கொலைகார இஸ்ரேலுக்கு உதவி வழங்கும் கத்தார் மன்னனுக்கும் கர்ளாவி கொலை பத்வாவை ஏன் வழங்கவில்லை.

லிபியாவிற்கு ஒரு ஷரீஆ, சிரியாவிற்கு ஒரு ஷரீஆ, கத்தாருக்கு ஒரு ஷரீஆவா? இந்த ஒரு பக்கச் சார்பு பத்வாவிற்கு ஆதாரத்தை கர்ளாவி எங்கிருந்து பெற்றார்.

இங்கு அமரிக்காவிற்கு விசுவாசமான மோசமான தலைவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள். அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தலைவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தலைவர்களை கொலை செய்யுமாறு பத்வா வழங்கும் கர்ளாவி,  அமெரிக்காவிற்கு ஆதரவான மோசமான தலைவர்களை தலையைத் தடவி தட்டிக்கொடுக்கிறார்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான நாடுகளையும், தலைவர்களையும் தனது பத்வா வேட்டையால் பதம் பார்ப்பதற்கு இந்தக் கர்ளாவி எப்போதும் முயற்சித்ததில்லை. ஏன் கத்தார் மன்னர் இஸ்ரேல் நாட்டின் ஆப்த நண்பன். இந்தக் கர்ளாவி அவரை ஒருபோதும் கண்டித்தது கூட கிடையாதே.

இந்தக் கர்ளாவியிடம்  ஏகாதிபத்திய “அமெரிக்க அரசியல் நலன் சார்ந்த கிலாபத்” பால் குடித்து வளர்ந்த முர்ஸியின் இஸரேல் காதலைக் கண்டு அதிர்ச்சியடைவதற்கு அவசியமேயில்லை.

இஸ்லாமியப் போராட்டத்தை ஏகாதிபத்திய அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடாத்திய கர்ளாவி போன்ற இஹ்வான்களின் கடந்த கால தலைமைகள் செய்த துரோகத்தனத்தின் இன்னொரு முகமே முர்ஸியின்  இஸ்ரேல் மீதான இந்தக் காதல் கடிதம்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக தனது பலத்தை பிரயோகித்து ஐ.நா சபையை ஆட்டங்காண வைத்த சீனாவையும், ரஷ்யாவையும்  அதனோடு சேர்த்து ஈரானையும் இஸ்லாமிய உம்மத்தின் எதிரி என்று இந்த கர்ளாவி என்ற பல் விழுந்த சிங்கம் கர்ஜித்திருக்கிறது.

நாளை கர்ளாவியின் வாயினால் இப்படியொரு பத்வா வெளிவரலாம்!
முர்ஸியின் வார்த்தையில் பதிக்கிறேன்..

“ இஸ்லாமிய உம்மத்தே இஸ்ரேலும் அமெரிக்காவும் எமது உயர்ந்த உன்னத நண்பர்கள்”

Monday 8 October 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்

நன்றி: கலையகம்

"The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
கேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்?
பதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.
2008  டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.
தற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா? அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா? முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா? சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள்  அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.  அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.
இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. ஐ.நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: "சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. ஐ.நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.
கேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா?
பதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.
கேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இஸ்ரேல் அதனை ஒரு "தாக்குதல்" என்று அழைத்துக் கொள்கின்றது.  உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள்.  அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன்? ஏனென்றால், இஸ்ரேல், தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது.

2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட  மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.  
கேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா?
பதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா  படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார்.  அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக்  கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா?
பதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது.   அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000  யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர்.  இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், "அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்"  என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை  அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.  இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.  
கேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்?
பதில்: பாலஸ்தீனர்களிடம் இருந்து.
அரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப்  பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது  தளர்நிலையில்  இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.  எப்படி? தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும்,  2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும். 
(நன்றி: Trouw, 2-10-2012)
(தமிழ் மொழிபெயர்ப்பு: கலையரசன்)
(மூலப்பிரதி:  'Israël heeft geen enkel recht om aan te vallen',   http://www.trouw.nl/tr/nl/4496/Buitenland/article/detail/3325343/2012/10/02/Israel-heeft-geen-enkel-recht-om-aan-te-vallen.dhtml, )

துருக்கி - நீரின் மேல் கோலம் !

துருக்கி - நீரின் மேல்  கோலம் !

வர்தகமயமான கிரிக்கட் விபரீதம் ! இருவர் தற்கொலை


நேற்று இடம்பெற்று முடிந்த 20-20 கிரிக்கற் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்துமனவேதனையுற்ற இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நெத் எப்.எம் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹெ ட்டன் குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞன் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து தனது தாயையும் சகோதரியையும் வீட்டை விட்டு வெளியெ போகுமாறு நிர்பந்தித்து வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

இவரின் மரண பரிசோதனை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இலங்கையின் தோல்வியை சகி;க்க முடியாத பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் காலிமுகத்திடலுக்குச் சென்று போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி வந்து மாமரத்தில் கழுத்துக்கு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு எச்சமாக விட்டுச்சென்றுள்ள இந்த கிரிக்கட் விளையாட்டு இன்று ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், பொருளாதார சமூகவியல் ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற ஒரு விளையாட்டாக மாற்றம் பெற்று வருகின்றது.

ஒரு பக்கம் சூதாட்டக் களமாக மாறி வருகின்ற இந்த விளையாட்டு மறுபுறம் உலக மக்களை உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாக்கி வருகின்றது. இந்த கிரிக்கட் மேனியாவினால் பாதிக்கட்ட பலரால் நூட்டின் அபிவிருத்தி நகர முடியாமல் நின்று போகின்றது.

பணத்தை பிரதான இலக்காகக் கொண்டு போட்டிப் போட்டுக்கொண்டு செயற்படும் ஊடகங்கள் கிரிக்கட் போட்டியை வைத்து தனது மடியை நிரப்பிக்கொள்கின்றன.

பணத்தை முதலாளிகளுக்கும் மன உளைச்சலை மக்களுக்கும் கொடுத்து வரும் இந்த விளையாட்டு இன்று உலகில் அபிவிருத்தியில் அதி முன்னணியில் இருக்கின்ற எந்த நாடுகளிலும் விiளாயடப்படுவதில்லை.

Friday 5 October 2012

வீடியோ - இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து தீமூட்டிகொண்ட இளைஞன்!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில்   இந்தியாவிற்கு விஜயம் செய்ததை  எதிர்த்து தமிழ்நாடு சேலத்தை  சேர்ந்த விஜயராஜ் என்ற இளைஞன் தனக்குத்தானே தீமூட்டி கொண்டான் .


வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்

வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி
கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்



அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான விளம்பரம் !


அமெரிக்காவின் நியுயோர்க் நகரின்  நிலக் கீழ் சுரங்கப்பாதைகளின் பயண தரிப்பு நிலையங்களில் இஸ்லாத்திற்கெதிரான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

American Freedom Defense Initiative (AFDI)  எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த விளம்பரங்கைளை அமெரிக்கா நீதித்துறை  கருத்துச் சுதந்திரமாக கணிக்கிறது.

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த விளம்பரங்களை அடுத்து அதே இடங்களில்  Rabbis for Human Rights – North America and the Sojourners Christian  மற்றும் united Methodist Women     என்ற அமைப்புகளால்  முஸ்லிம்களை ஆதரித்து அதற்க்கு பக்கத்தில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.


American Freedom Defense Initiative (AFDI)  எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பின  தலைவியாக தன்னை அறிமுகப்படுத்தும் Pamela Geller NBC செய்திச்சேவைக்கு கருத்துத் தெ ரிவித்திருக்கின்றார் . அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது 


Wednesday 3 October 2012

USAID சதிவலைகளின் சொந்தக்காரன்


லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA அமைப்பு , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் போர்வையில்; செயற்படும் அமெரிக்க உளவு அமைப்பான  USAID(United States Agency for International Development)என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.



அமரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயற்படாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும்  பலவீனப்படுத்தி அந்தந்த நாடுகளில் சிவில் சமூகங்களை மோதவிட்டு பிரச்சினைகளையும், உள்நாட்டுப்போர்களையும் உருவாக்கி பின்னர் அரசியல் ரீதியாக தனது நேரடியான தலையீடுகளை ஏற்படுத்தும் சூழலை USAID உருவாக்குவதாக அதன் மீது பலத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.

USAID இன் நயவஞ்சகத்தனமான மற்றும் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கரான ஜோன் பெர்கின்ஸ் தனது confessions of an economic hit-man என்ற நூலில் ஆதாரத்தோடு ஏழுதியுள்ளார்.

தன்னோடு இசைந்து போகும் மத மற்றும் ஆரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக பணத்தையும், பெண்களையும் USAID வழங்கி தனது வலையில் சிக்கவைப்பதாக  ஜோன் பெர்கின் USAID மீது தனது நூலில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பூகோள உருண்டையில் விரிக்கப்பட்டுள்ள சதிவலைகளின் சொந்தக்காரர்கள் USAID போன்ற அமெரிக்க உளவு அமைப்புகளாக செயற்படும் இத்தகைய நிறுவனங்கள்தான்.

USAID அமைப்பு அமெரிக்க ஆதிக்கத்தை உலகளவில் நிலைநிறுத்தும் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலுக்காகவே செயற்பட்டு வருகிறது.

மோசடி மிகுந்த இந்த நிறுவனத்தை தமது  உறுப்பு நாடுகளில் அனுமதிக்க  வேண்டாம்  என இந்த ALBA அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நிக்காரகுவா, கியூபா, போலிவியா, எக்குவடோர்,  வெனிசூலா,  டொமினிக்கா போன்ற  நாடுகள்  இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

வீடியோ - ஜிஹாத் என்ற போர்வையில் லிபியாவை விழுங்கிய கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸின் வாக்குமூலம்


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...