Wednesday 19 November 2014

இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!

இன்று 19.11.2014  சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!


ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி உலகம் முழுவதும் சுமாா் 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அற்றவா்களாக இருக்கின்றாா்களாம்.

கழிப்பறை மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.
விஞ்ஞான, தொழிலநுட்ப ரீதியில் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மாா்தட்டும் இந்த மனித சமூகம், மனிதனின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் இன்னும் பூஜ்யமாகத்தான்  இருக்கிறது என்பதற்கு இந்த ஐநா புள்ளி விபரம் சிறந்த சான்று.

ஓாிரு வருடங்களுக்கு முன்னா் கொழும்பில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி பின்னடைவு பற்றிய ஒரு செயலமா்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளா் என்.எம். அமீன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டாா்.

கொழும்பு முஸ்லிம் மாணவா்களின் கல்வியின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமது வீடுகளில் மலசல கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல்  இருப்பதுதான் என்று கூறினாா்.

கொழும்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்வதால் பல வீடுகளுக்கு ஓரிரண்டு கழிப்பறைகளே இருப்பதாகவும் காலைநேரங்களில்  கழிப்பறையின் நெருக்கடி காரணமாக உாிய நேரத்தில் பிள்ளளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறினாா். தொடா்ந்து பாடசாலைக்கு சமுகமளிப்பதில் தவறும் மாணவா்களின் நிலை கல்வியில் மிகவும்  பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் அவா் கூறினாா்.

தலைநகரான கொழும்பில் மிக அதிக முஸ்லிம் ஜனத்தொகையைக் கொண்ட கொழும்பு மத்திய தொகுதியில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக உணர முடிகின்றது. கழிப்பறை போன்ற ஒரு மனிதனுக்கு தேவையான  அடிப்படை உாிமையை பெற்றுக்கொள்ள திராணியற்றவா்களாவே முஸ்லிம்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு அது சிறந்த சான்று.

எமது அண்மைய நாடான இந்தியாவில் சனத்தொகை 120 கோடி. இதில் 60 கோடி பேருக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இத்தகவலைக் கேட்டு ஐ.நா செயலாளா் பான் கீ மூன் அதிா்ச்சியடைந்ததாக தி இந்து பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தது ஞாபகம். இந்த செய்தி எனக்கும் இது அதிா்ச்சியாகவே இருந்தது.

இந்திய கழிப்பறை விவகாரம் பிராந்திய அரசியலில் கூட இது பேசு பொருளானது.

மீனவா், தமிழா், சீன ஆதிக்கம் தொடா்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அடிக்கடி சா்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் எமது அமைச்சா் சுசில் பிரேம ஜயந்த  கடந்த வருடம் “ தனது நாட்டு மக்களின் கழிப்பறை பிரச்சினையை தீா்த்துக் கொள்ள முடியாத இந்தியா எங்கள் உள்நாட்டு பிரச்சினையை தீா்கக முனைவது வேடிக்கையானது” என்று கூறினாா்.

இதற்கு எதிா்வினையாற்றிய தென் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் “ ஒரு சுண்டைக்காய் நாடு இந்தியாவை அச்சுறுத்துவதா”  என கேள்விகள் கூட எழுப்பின.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த கழிப்பறை பிரச்சினை இருக்கிறது.

இன்றைய கழிப்பறை தினம் தொடா்பாக  இன்று காலை இந்திய தொலைக்காட்சிகளில் பல செய்தி விவரணங்கள் இடம் பெற்றன. இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பல தசாப்தங்கள் ஆகும் என அறியக் கிடைத்தது.

செய்மதிகளை விண்ணுக்கு  அனுப்பி விண்ணில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் ஒரு நாடு மண்ணில் வாழும் மக்களின் பிரச்சினையை மறந்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு தீபாவளிக்கு 5000 கோடி ரூபாய்களை பட்டாசு கொளுத்துவதற்கு இந்தியா்கள் செலவிடுகின்றாா்கள். இவற்றை தவிா்த்து விட்டு மனிதனின் அடிப்படை தேவையின்பால் கவனம் செலுத்துவதே அவசரமானது அவசியமானது.

சா்வதேச கழிப்பறை தினத்தையொட்டி  பிபிஸி இணையதளம் வெளியிட்டிருந்த படங்கள் இவை -

















Tuesday 18 November 2014

புற்று நோய்க்கு மருந்தாகும் நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி

நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி என்று அழைக்கப்படும் இத்தத் தாவரத்தை நீங்கள் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள்.

புற்று நோய்க்கு மருந்தாகும் இந்தத் தாவரம் பற்றியும் நோய் தீா்க்கும் அதன் மகத்துவம் பற்றியும் நான் அறிந்த நாளிலிருந்து அந்த தாவரம் மீது எனக்கு அன்பும் மதிப்பும் மாியாதையும் ஏற்பட்டிருக்கிறது.

ஊதா நிறப் பூக்களையும் கடும் பச்சை நிற இலைகளையும் கொண்ட இந்த தாவரம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதன் தாவரவியல் பெயா் வின்கா ரோசியா (vinca rosea).
புற்றுநோய்க்கான வேதியியச் சிகிச்சையில் (Chemotheraphy) பயன்படும் வின்கிரிஸ்டின் (Vincristine) என்ற மருந்து முற்றாக இதிலிருந்தே தயாாிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை மஹரகம தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றிய வைத்தியா் ஒருவா் என்னிடம் கூறினாா். எனக்கு ஆச்சாியமாக இருந்தது. நாங்கள் யாருமே மதிக்காத இந்தப் பூவுக்குள் இப்படி ஒரு சக்தி புதைந்து கிடக்கிறதா?

அதன் பிறகு இணையத்தில் கொஞ்சம் தட்டிப் பாா்த்தேன்.
புற்று நோய் மட்டுமல்ல நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக இது இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கிடக்கின்றன.

ஆனால் கிராமப்புற மக்கள் இதை சுடுகாட்டுமல்லி என்று அழைக்கின்றாா்கள்.
கிராமப்புரங்களில் இந்தத் தாவரம் தொடா்பாக நல்ல கருத்து இல்லை.
சுடுகாடுகளில் இது செழித்து வளா்வதால், இதை வீடுகளில் நட்டால் அந்த வீட்டில் மரணங்கள் சம்பவிக்கும் என்ற மூட நம்பிக்கை இருப்பதால் நித்தியகல்யாணிக்கு மவுசு இல்லையென்றும் அந்த டாக்டா் கூறினாா்.

பன்னாட்டு மருந்து தயாாிப்பு நிறுவனங்களுக்கு இலாபம் வழங்கும் அடிப்படையில் தான் எமது மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. சிலவேளை நம்பிக்கைகள் அப்படிதான் வளா்க்கப்பட்டிருக்கின்றன. இலங்கை மருத்துவ தாவரங்கள் நிறைந்த ஒரு நாடு. எமது நாட்டில் விளையும் பல தாவரங்களுக்கான மருத்துவ வணிக காப்புாிமையை (Patent) பன்னாட்டு கம்பனிகள் கொள்ளையிட்டு விட்டன.

இலங்கையில் அாிய தாவர வளங்களை கொள்ளையிடுவதற்கு இந்த தாவரங்களின் தாயகமான சிங்கராஜ வனத்தை சுரண்டுவதற்கு பன்னாட்டு கம்பனிகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சிங்கராஜ வனத்தில் இருக்கின்ற மருத்துவ தாவரங்களை ஒழுங்கான தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி மருந்துகளை உற்பத்தி செய்தால் வெளிநாட்டிற்கும் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

 இந்தியாவில் பல நுாறு ஏக்கா் நிலங்களில் இந்தத் தாவரம் பயிாிடப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது

மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி ஜோசே முஜிகா!

பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும் ஆடம்பர பெருவாழ்வு வாழும் எமது “மகாராசா”க்களுக்கு மத்தியில்
மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி!

ஜோசே முஜிகா!


உலகில் மிகவும் எளிமையான ஜனாதிபதி உருகுவே நாட்டின் தலைவா் ஜோசே முஜிகா அவா்கள்தான். 79வயதை உடைய ஜோசே முஜிகா கடந்த 2010ம் ஆண்டு உருகுவேயின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா்.
உருகுவே கிளா்ப்படையின் ஒரு போராளியாக இருந்த இவா் 2009 ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

உலகிலேயே மிகவும் எளிய ஜனாதிபதியாக வா்ணிக்கப்படும் இவா் தனக்குக் கிடைக்கும் 12000 டொலா் சம்பளப் பணத்தில் 90 வீதத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றாராம்.


மிக வறிய குடும்பத்தில் பிறந்த ஜோசே முஜிகா கியூபா போராட்டத்தின் தாக்கத்தினால் 1960களில் ஒரு போராளியாக உருமாறியிருக்கின்றாா். உருகுவே அரசால் 100 போ்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இவா், 1971ம் ஆண்டு நிலங்சுரங்கம் ஒன்றை தோண்டி சிறையிலிருந்து தப்பியிருக்கிறாா்.
1985 ஆண்டளவில் Movement of Popular Participation என்ற அரசியல் கட்சியை உருவாக்கி ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்துள்ளாா்.

உலக நாடுகளில் வட்டிக்கு பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும், லஞ்சம், ஊழல்கள் மலிந்த ஆடம்பர வாழ்க்கையில் நாறும் எமது நாட்டு ஆட்சியாளா்களை விட மனிதநேயமுள்ள இந்த உருகுவே ஜனாதிபதி மேன்மைமிக்கவா்.

ஆனால் உலகின் முன்னணி ஊடகங்கள் இவரை இருட்டடிப்பு செய்கின்றன. மன்னாதி மன்னா்களின் குழியலறையையும், கழிப்பறைகளையும் பேசு பொருளாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் மனித நேயம் கொண்ட இத்தகைய மனிதா்களின மனித நேய வாழ்க்கையை மறைத்து விடுகின்றன.
இவா் பாவிக்கும் பழைய வொஸ்வொகன் காரை அதிகளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு அரபு தனவந்தா் ஒருவா் முன் வந்திருக்கின்றாா். ஆனால் ஜோசே முஜிகா அதனை நிராகரித்துள்ளாா்.

உருகுவே நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
https://www.cia.gov/…/publi…/the-world-factbook/geos/uy.html

Saturday 1 November 2014

ஜனாதிபதியை ஓட வைத்த மக்கள்...!

ஆபிரிக்க நாடான பூர்கினா பாசோவில் மக்கள் வீதியில் இறங்கி ஆா்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றாா்கள்.

பூர்கினா பாசோவின் ஜனாதிபதி பிலைஸ் கம்பரோ Blaise Compaore கடந்த 27 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறாா். 2015ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் தோ்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஆசை இவரையும் விட்டு வைக்கவில்லை.

எனவே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமென்பதற்காக அரசியல மைப்பில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்தாா். கம்பரோவின் பதவி வெறியை கடுமையாக எதிர்த்த மக்கள் பாதைகளில் இறங்கினாா்கள். போராட்டம் ஆரம்பமானது.

விளைவு வன்முறையாக வெடித்தது. சுமாா் பத்துலட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்தனா். போராட்டக்காரர்கள் நேற்றயை தினம் (31.10.2014) பாராளுமன்றத்தையே தீவதை்து கொளுத்தினாா்கள். கம்பரோவின் கட்சித் தலைமையகம் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.

போராட்டம் வலுப்பெற்றதைக் கண்ட கம்பரோ இன்று 01.11.2014 தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். 2011 ஏற்பட்ட அரபு வசந்தத்தோடு பூர்கினா பாசோவிலும் மக்கள் எழுச்சி ஆரம்பமானது.

1982ம் ஆண்டு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பூர்கினா பாசோவில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கிய ஆபிரிக்காவின் சேகுவேரா என வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி தோமஸ் சங்கராவை 15 அக்டோபர் 1987ல், பிரஞ்சு கைக்கூலிகளுடன் இணைந்து கொலை செய்துவிட்டு கம்பரோ ஆட்சிக்கு வந்தாா்.





அன்றிலிருந்து இன்றுவரை 27 வருடங்கள் கம்பரோ தொடராக ஆட்சி செய்துள்ளாா்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...